Saturday, September 3, 2022

புத்தர்தான் பிள்ளையாராம்! பௌத்தத்திலிருந்து வந்ததுதான் பிள்ளையார் வழிபாடாம்!! 🤦🏽‍♂️

(பான்பராக் / கூவஞ்சட்டைகள் கூலிக்கு மாரடித்த (அதாவது, எழுதிய) ஓர் இடுகைக்கு நான் கொடுத்த 👊🏽)

பான்பராக் & கூவஞ்சட்டைகளுக்கு இதே வேலை. பொரை கிடைத்ததும், ஏன் குலைக்கிறோம், எதற்கு குலைக்கிறோம், யாரை நோக்கி குலைக்கிறோம் என்ற சிந்தனையற்று, கண்டபடி குலைத்து கல்லடி வாங்குவதே இவர்களது பிழைப்பாகவுள்ளது. 🤬


- பௌத்த மதத்திலும் பிள்ளையார் வழிபாடு இருந்ததே தவிர, இது அவர்களுடையது என்று சொல்வதற்கு எந்த பற்றுக்கோடும் இதுவரை கிடைக்கவில்லை. பிள்ளையார் பௌத்தத்திலிருந்து வந்திருந்தால், வைணவம் தோன்றும்போதே அதில் இருந்திருப்பார். "பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காய் முடிந்தது" என்பது பழமொழி. சைவர்களின் பிள்ளையாருக்கு போட்டியாக உருவாக்கப்பட்டவர் வைணவத்தின் அனுமன். பௌத்தத்தில் ஏற்கனவே பிள்ளையார் இருந்திருந்தால், இந்த பழமொழி தோன்றியிருக்க வாய்ப்பில்லை. அனுமனை உருவாக்கிய பின்னரும், பிள்ளையார் வழிபாட்டை ஒன்றும் செய்ய முடியாததால், வேறு வழியின்றி, பிள்ளையாருக்கு "தும்பிக்கையாழ்வார்" என்று பெயரிட்டு தங்களது மதத்திற்குள் சேர்த்துக்கொண்டனர்.

- சங்க காலத்தில் பிள்ளையார் வழிபாடு இல்லை என்பது பொய். இதை உடைக்க அதியமான் காலத்து ஒளவையாரின் பாடல்களே போதும்.

- எத்தனையோ வகை வழிபாடுகள் நம் மண்ணிலிருந்தன. அவற்றில், பிள்ளையார் வழிபாடும் ஒன்றாகும். சிந்திப்பதற்கு எளிதாக இருந்ததால் மக்களிடையே பெரும் புகழ் பெற்றுவிட்டது. எனவே, அனைத்து மதத்தினரும் தங்களது மதத்திற்குள் சேர்த்துக் கொண்டனர்.

- பிள்ளையார் வழிபாடு ஒருவரை மெய்யறிவிற்கு (ஒளி) கொண்டுபோகும். பௌத்தர்களின் குறிக்கோள் பாழ் (சூனியம் / இருள்). இரண்டும் எப்படி ஒன்றாகும்?

- விநாயகர் என்பது ஆரியப் பெயர். இதற்கு ஆரியத்தில் பொருள் காணவேண்டுமே தவிர, "வினா நாயகர்" என்று பிரித்து, தமிழில் பொருள் காண முற்படுவது பெரியார்தனமாகும் = முட்டாள்தனமாகும் = பகுத்தறிவாகும்!! 👊🏽

oOOo

அடுத்து, பிள்ளையாரின் திருவுருவம் உணர்த்தும் மெய்மைகளைப் பார்ப்போம்:

🌷 யானை உருவம் - "நினைவுகளே நாம்" என்பதை குறிப்பதற்காக நினைவாற்றலுக்கு பெயர் போன யானை உருவைக் கொடுத்துள்ளனர்.

🌷 பாசம் - உடல்-உலக சிறைக்குள் சிக்கிக்கொள்வதும் நாமே

🌷 அங்குசம் - அச்சிறையிலிருந்து விடுபட்டுக்கொள்வதும் நாமே

🌷 அங்குசத்திற்கு பதில் மழு இருப்பின் - பற்றுகளை அறுத்தெரிந்துவிட்டு, உடல்-உலக சிறையிலிருந்து விடுபட்டுக்கொள்வதும் நாமே

🌷 ஒடித்த தந்தம் - நம் வாழ்க்கை எனும் மகாபாரதத்தை எழுதுவது நாமே

🌷 சிவலிங்கம் / இனிப்பு / கொழுக்கட்டை - மெய்யறிவும் நம்மிடமே உள்ளது. இருந்தாலும், நம் நோக்கம் மகாபாரதத்தின் (நம் வாழ்க்கையின்) மேலிருப்பதால், தந்தத்திற்கு வலது கையும், மெய்யறிவிற்கு இடது கையும் கொடுத்துள்ளனர்.

🌷 மூஞ்சுறு - அறியாமை எனும் இருள். அது கொறிக்கும் இனிப்பு / கொழுக்கட்டை - நமது மெய்யறிவு. எக்கணமும் தன்மையுணர்வை விடாது பிடிக்கவேண்டும். சற்றே விட்டாலும், இருளின் (அறியாமையின்) பிடிக்குள் மாட்டிக்கொள்வோம். மெய்யறிவை இழந்துவிடுவோம்.

oOo

இப்போது கேள்விகள்

- மேற்கண்ட விளக்கம் எந்த வகையில் பெளத்தத்திற்கு பொருந்துகிறது? 

- தம்மிடம் வருபவர்களை நன்கு "மொட்டையடித்து", தின்று, கொழுத்துக் கிடப்பதே வடக்கிலிருந்து வந்த பெளத்தர்களின் கொள்கையாகும் (வடக்கிலிருந்து வருவதெல்லாம் வேறெதற்கு வருகின்றன?) இவர்களுக்கும் பிள்ளையாருக்குமுள்ள ஒரேயொரு ஒற்றுமை: கொழுத்த உருவம்! எனில், பிள்ளையார் எப்படி புத்தராகிறார்? 👊🏽👊🏽

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌸🌸🌸🌸

No comments:

Post a Comment