Wednesday, August 18, 2021

சைவத்தின் மீது தற்போது வீசப்பட்டுள்ள கல்: ஆப்கானிஸ்தான், சரியத் & முகம்மதியம் இவற்றிலிருந்து நமது கவனத்தை திசை திருப்புவதற்காக!!

உலகின் கவனம் தற்போது ஆப்கானிஸ்தான் மீதுள்ளது. அங்கு மீண்டும் அரங்கேறும் தாலிபானின் அட்டூழியங்களால் அன்பு மார்க்கத்தின் மீதுள்ள மதிப்பும் மரியாதையும் இறங்குமுகமாகிவிட்டது (ஏற்கனவே ஏதே உச்சத்தில் இருந்தது போல 😏). இதை தடுக்க, உலகின் கவனத்தை ஆப்கானிஸ்தானிலிருந்து மாற்ற, தமிழ்நாட்டில் அரங்கேற்றப்பட்டுள்ள இறைத்தொண்டுதான் சைவம்-பௌத்தம்-நாகர்கள் பிட்டு!

எப்போதெல்லாம் நாசகார & நயவஞ்சக மதங்கள் அடி வாங்குகின்றனவோ அப்போதெல்லாம் இத்தகைய இறைத்தொண்டும் ஊழியமும் அரங்கேறும். அன்னை ஆண்டாள், திருமலைப் பெருமாள், கந்தசஷ்டி கவசம் வரிசையில் இப்போது சைவம்.

இவற்றிற்கெல்லாம் பெரும் பொரை கிடைப்பதால் தலைவர்களே நேரடியாக குலைக்கிறார்கள். "கீழடியில் பூசைப் பொருட்கள் ஏதும் கிடைக்கவில்லை. ஆகையால், தமிழர்கள் இறைநம்பிக்கை இல்லாதவர்கள்." போன்ற பிட்டுகளுக்கு பொரை குறைவு என்பதால் துண்டு, துக்கடாக்களிடம் தள்ளிவிடுகிறார்கள்.

oOOo

பகவான் திரு ரமண மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️ திருவருணை வந்துசேர்ந்து 100 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, சென்ற 1996ஆம் ஆண்டு திரு ரமணாச்சிரமம் சிறப்பு மலர் ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் அண்ணாமலையாரின் மலைவலப் பாதையிலுள்ள எட்டு திசை லிங்கங்களைப் பற்றிய செய்தியொன்று இருந்தது:

விண்மீன்களை வைத்து நிறுவப்பட்ட திசை லிங்கங்கள் யாவும் அதனதன் திசையிலிருந்து 3° விலகியிருக்கின்றன. இதற்கு காரணம் நமது பகலவன் குடும்பத்தின் நகர்வு!! எவ்வாறு நமது பூமி தன்னைத்தானே சுற்றிக் கொண்டும், தனது தலைவனான பகலவனையும் சுற்றி வருகிறதோ, இவ்வாறே நமது பகலவன் குடும்பமும் பால்வெளியில் சுழன்றுகொண்டும், நகர்ந்துகொண்டும் இருக்கிறது. 1° நகர்வதற்கு சுமார் 10,000 ஆண்டுகள் ஆகிறது. இதன்படி 3° நகர்வதற்கு 30,000 ஆண்டுகள் ஆகியிருக்கும். எனில், திசை லிங்கங்களின் வயது குறைந்தது 30,000 ஆண்டுகளாகும்.

திசை லிங்கங்களின் வயதே 30,000 ஆண்டுகள் எனில் மூலவர் திரு அண்ணாமலையாரின் வயது எவ்வளவு இருக்கும்?

இவ்வளவு பழமையும், கணக்கிட முடியாத பெருமையும் கொண்ட இந்த மண்ணின் அருமைப்பெருமைகளை கிடைக்கும் சில பொரைகளுக்காக சிறுமைப்படுத்த முயற்சிக்கிறது ஒரு கேடுகெட்டக் கூட்டம்!!

oOOo

நம் சமயத்தின் மீது சாணி வீசும் ஊழியத்தின் ஒரு பகுதி: நமது இலக்கியங்களை வடக்கிலிருந்து வந்த வெட்கங்கெட்ட சமணத்தோடும், நம்மை மொட்டையடித்துக் கொழுத்துக் கிடந்த பெளத்தத்தோடும் அடையாளப்படுத்துவது!

- நாசகார மதத்தின் வயது 1,400 ஆண்டுகள்.
- நயவஞ்சக மதத்தின் வயது சுமார் 1,700 ஆண்டுகள். (2,000 ஆண்டுகளல்ல. ரோமாபுரி மன்னன் கான்ஸ்டன்டைன் காலத்தில்தான் இம்மதம் நிலைபெறுகிறது.)
- வடக்கத்திய அம்மண & மொட்டை மதங்களின் வயது சுமார் 2,500+ ஆண்டுகள்.

இவர்கள் வருவதற்கு முன் நாம் என்ன செய்துகொண்டிருந்தோம்? 10 வயதில் ஆசிரியையின் இடுப்பைக் கிள்ளி, செருப்படி பெற்று, வளர்த்த மகளை மணந்து கொண்டு, என்றாவது ஒரு நாள் குளித்து, தாசிமகன்களை சுற்றி வைத்துக்கொண்டு, வீட்டில் மனைவி இருக்கும் போதே பரத்தையை அழைத்துவந்து கூத்தடித்துக் கொண்டிருந்தோமா? வடக்கத்தியர் வந்துதான் நம்மை பக்குவப்படுத்தினார்களா? யார் யாரால் பக்குவமானார்கள்? இன்றைய சைபீரியா-ரஷ்யா பகுதிகளிலிருந்து காட்டுமிராண்டிகளாக வந்த வடக்கத்தியர்தாம் நம்மால் பக்குவமானார்கள்.

நம்மை காட்டுமிராண்டிகள் என்று அழைத்தவன் பெளத்த அசோகன்! இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்று குவித்தவர்கள் பௌத்தர்கள்!! சயாம் தொடரிப்பாதையிலுள்ள ஒவ்வொரு குறுக்குக் கட்டைக்கும் ஒரு தமிழனை பலி கொடுத்தவர்கள் பெளத்தர்கள்!!!

இன்றும் வடக்கை வாழவைத்துக் கொண்டிருக்கும் சில மாநிலங்களில் ஒன்று நம் தமிழ்நாடு. ஒரு ரூபாயை வரியாக இழந்து, வெறும் 15 பைசாவை திரும்பப்பெற்றுக் கொண்டிருக்கிறோம்!!

oOOo

நமது முன்னோர்களிடம் இறை நம்பிக்கை இருந்தது என்பதற்கும், அந்நம்பிக்கை எப்படிப்பட்டதாக இருந்தது என்பதற்கும் சில சங்க கால இலக்கிய சான்றுகளைப் பார்ப்போம்.

🔹திருக்குறள்

பாயிரத்தில் இறைவனைக் குறிக்க வள்ளுவப்பெருந்தகை பயன்படுத்தியிருக்கும் சொற்களை / சொற்றொடர்களைக் கொண்டே நம் முன்னோர்களின் இறை நம்பிக்கையைப் பற்றிய பல செய்திகளை வெளிக் கொணரலாம்:

- வாலறிவன்
- மலர்மிசை ஏகினான்
- வேண்டுதல் வேண்டாமை இலான்
- இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
- பொறிவாயில் ஐந்தவித்தான்
- தனக்குவமை இல்லாதான்
- அறவாழி அந்தணன் (எவ்வுயிரையும் தம் உயிர்போல் கருதுபவர்)
- எண்குணத்தான்
- இறைவன்

🔹புறநானுறு

இந்நூலின் கடவுள் வாழ்த்து சிவப்பரம்பொருளை நேரடியாக, இன்று நாம் அறிந்திருக்கும் வண்ணம் புனைந்துரைக்கிறது (கொன்றை மலர், விடை ஊர்தி...).

("கண்ணி கார்நறுங் கொன்றை" என்று தொடங்கும் அப்பாடலை, தயவு செய்து, இணையத்தில் தேடிப் படித்துக் கொள்ளவும்.)

🔹தொல்காப்பியம் (சங்க காலத்திற்கும் முற்பட்டது)

>> வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதல் நூலாகும்

"செயலை நான் செய்கிறேன்" என்ற தவறான அறிவு நீங்கியவர் (மெய்யறிவு பெற்றவர்) எழுதும் நூலே முதல் நூல் எனப்படும். பகவான் ரமணரிடமிருந்து வெளிப்பட்ட "உள்ளது நாற்பது" ஒரு சிறந்த முதல் நூலாகும்.

(நாம் பயன்படுத்தும் முனைவர் என்ற சொல் இந்த செய்யுளில் இருந்துதான் எடுக்கப்பட்டது.)

>> மாயோன் மேய காடு உறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே

இப்பாடல் நிலப்பரப்பின் வகைகளைப் பற்றிக் கூறுகிறது. இப்பாடலில் மாயோன் என்பது பெருமாளையும், சேயோன் என்பது முருகப்பெருமானையும் குறிக்கும்.

>> கொடிநிலை கந்தழி வள்ளி என்ற
வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே

- கொடிநிலை - உலகம் உண்மை என்று கருதும் மனநிலை
- கந்தழி - தன்மையுணர்வை விடாது பிடித்துக் கொண்டு, மற்றனைத்தையும் ஒதுக்கிக் கொண்டிருத்தல். வடக்கிருத்தல்.
- வள்ளி - முழுமை

(இம்மூன்று சொற்கள்தாம் திருக்குறளின் பாயிரப் பகுதிக்கு அடிப்படை என்பது கற்றறிந்தோரின் கருத்தாகும்)

>> காமப்பகுதி கடவுளும், வரையார்,
ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர்

இப்பாடலில் உள்ள "கடவுள்" என்ற ஒரு சொல் போதுமே நமது முன்னோர்களின் இறை நம்பிக்கை மற்றும் இறைவனைப் பற்றிய அவர்களது புரிதல் எப்படிப்பட்டதாய் இருந்தது என்பதை தெரிந்துகொள்ள!

கடவுள் - கட + உள் - எல்லாவற்றையும் கடந்து இருப்பவர். உள் - இரு.

🔹கலித்தொகை, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என பல சங்க கால நூல்களில் சிவபெருமானை நேரடியாகவும், குறிப்பாலும் உணர்த்தும் பல பாடல்கள் உள்ளன.

oOOo

"நல்லதை விலக்கி, அல்லாததை உயர்த்தி" என்ற ஏமாற்று வேலையால் பல நாடுகள் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன. இன்னும் ஒரு தலைமுறைக்குள் இந்நிலை மாறும். "அல்லாததை விலக்கி, நல்லதை உயர்த்தி" என்ற நம் முன்னோர்களின் கொள்கைதான் என்றுமே நிலைத்து நிற்கும்.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

No comments:

Post a Comment