Showing posts with label வடபழனி ஆண்டவர். Show all posts
Showing posts with label வடபழனி ஆண்டவர். Show all posts

Sunday, October 26, 2025

வடபழனி ஆண்டவரின் வலது கால் சற்று முன்னே இருப்பதின் பொருள்


இறைவடிவம் என்பது மறையாக்கம் செய்யப்பட்ட சுருக்கிய கோப்பு (Encrypted Zip File) போன்றதாகும். மறைநீக்கம் செய்து, விரித்து, அதிலுள்ள கருத்துகளை புரிந்துகொண்டு, வாழ்வை செம்மையாக்கிக் கொள்ளவேண்டும்.

மெய்யியலில், இறைவடிவத்தின் வலதுபுறம் என்பது இறைவனை குறிக்கும்; இடப்புறம் என்பது அன்னையை குறிக்கும்.

> வலம் - இடம்
> இறைவன் - அன்னை
> மாறாதது - மாறுவது
> உள்ளபொருள் - படைப்பு
> அருள் - பொருள்

இங்கு இறைவடிவத்தின் வலதுகால், இடதுகாலை விட சற்று முன்னே உள்ளது. எனில், "பொருள் தேடலை விட அருள் தேடலை சற்று கூடுதலாக செய்" என்பது பொருளாகும்.

oOo

அசுரர்-சைத்தான்-சாத்தான் வருகைக்கு முன், ஓர் இறை வடிவத்தை ஒரு தமிழன் கண்டால்: அவ்வடிவம், அதன் பெயர், அதற்கு நடத்தப்படும் வழிபாடு ஆகியவை எதை உணர்த்துகிறது?

அசுரர்-சைத்தான்-சாத்தான் வருகைக்கு பின்: இறைவா, இதிலிருந்து என்னை காப்பாற்று. அதிலிருந்து என்னை காப்பாற்று. எனக்கு இது வேண்டும். அது வேண்டும். ...

அரசராக உயர்ந்திருந்தவரை இரப்பாளராக (அசுரத்தில், பிச்சைக்காரனாக) தாழ்த்திவிட்டனர்! 😞😢

(அசுரர்: பீடாவாயர் மண்ணிலிருந்து வந்த சமணம், பௌத்தம், நாமம், நூல் என யாவும்.)

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️