Showing posts with label உடையார். Show all posts
Showing posts with label உடையார். Show all posts

Thursday, February 3, 2022

அனைத்து சாதிப்பெயர்களும் உயர்ந்த பொருள் பொதிந்தவையே!!


பதில் கேள்வி 👌🏽!

ஆனாலும், ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்: பிராமணர் எனில் பிரம்மமாய் இருப்பவர் அல்லது பிரம்மத்தை அறிந்தவர். ஆரியப்பூசாரிகள் அல்லர். பகவான் போன்ற மெய்யறிவாளர்களுக்கு உரிய பட்டப்பெயர்.

19ம் நூற்றாண்டின் இறுதிவரை ஒன்றுக்கும் மேற்பட்ட சாதியினர் தங்களை பிராமணர்கள் என்றழைத்துக் கொண்டுள்ளனர். நூற்றாண்டின் இறுதியில், அன்றைய ஆந்திராவில் நடந்த ஒரு வழக்கின் முடிவில், பிராமணர் என்ற பெயரை பயன்படுத்தும் உரிமையை தங்களுடையதாக்கிக் கொண்டனர் ஆரியப்பூசாரிகள்.

🔸 முதலியார் - முதன்மையானவர்கள்
🔸 தேவர் - வடபுலத்தினர். பசி, மூப்பு, இறப்பு அற்றவர்கள்.
🔸 உடையார் - உடையவர். அனைத்தையும் உடையவர்கள். சுவாமி என்ற ஆரியச் சொல்லிற்கு சமமான தமிழ் சொல்லாகும்.
🔸 நாயக்கர் - சபையின் நாயகன் போன்றவர்கள்
🔸 வேளாளர் - மிகவும் தொன்மையான குலத்தவர். வேள் + ஆள்பவர். வேள் - ஆசை / காமம். எனில், மனதை அடக்கியாளத் தெரிந்தவர்.
🔸 செம்படவர் - சிவன் படையர்

எல்லா சாதிப்பெயர்களும் உயர்ந்த பொருள் பொதிந்தவையே. தன் மறுப்பும் (அகந்தை அழிப்பும்), தனது பணியினை செவ்வனே செய்தலுமே, ஒரு காலத்தில், எல்லா சாதியினரின் நோக்கமாகவிருந்தன! 😍

தாெடர்ந்த அரசியல் & மத படையெடுப்புகள், அந்நிய இனங்களின் ஊடுருவல்... "நாறோடு சேர்ந்த பூக்களும் நாறிப்போயின"!! 😔

நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகைஎன்ப வாய்மைக் குடிக்கு

-- குறள் #953