Tuesday, July 2, 2024

திரு பேயாரிடமிருந்து / தெய்வச் சேக்கிழாரிடமிருந்து சுட்ட நாமப்பேர்வழிகள்!!


"கூண்டில் பிறக்கும் பறவைகள் பறப்பதை நோயெனக் கருதுகின்றன"!! -- இச்சொற்றொடர் பலருக்கு / பல சூழ்நிலைகளுக்கு பொருந்தும்.

காண்பானை விட காணப்படும் காட்சியே மேலானது எனக் கருதிய மாயை & மாயோன் வழிபாட்டினர், மெய்யறிவுத் தேடலை பித்துப் பிடித்தல் எனவும், பகவான் திரு இரமண மாமுனிவர் போன்ற மெய்யறிவாளர்களை பித்தர்கள் என்றும் அழைத்தனர். இங்கு,

🔸 மாயை & மாயோன் வழிபாட்டினர் - கூண்டில் பிறந்தவர்கள்

🔸 மெய்யறிவுத் தேடல் - நோய்

ஆனால், பின்னாளில், மெய்யறிவுத் தேடல்தான் சரியென்று உணர்ந்த பிறகு,

🔸 "மெய்யறிவை வழங்குவதே அன்னைதான்" என்றனர் மாயை வழிபாட்டினர்! 😏 எ.கா.: சிக்கலில் சிங்காரவேலருக்கு அன்னை வேல் வழங்குதல். வேல் - மெய்யறிவு.

🔸 நாமப்பேர்வழிகள்: நித்திய சூரிகள் (மெய்யறிவாளர்கள்) பரமபதத்தில் இருந்துகொண்டு, பெருமாளை நோக்கி பல்லாண்டு இசைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

(இதை படித்ததும் 🙄/😵‍💫/🥴 என்ற உணர்வு தோன்றினால், இன்னும் உங்களுக்கு பட்டை நாமம் சாத்தப்படவில்லை என்பது பொருளாகும். 😁)

மேற்கண்ட அக்கார அடிசிலுக்கான பொருட்களை நாமப்பேர்வழிகள் சுட்டது... திரு பேயாரிடமிருந்து (காரைக்கால் அம்மையார்)!! பேயாரின், "நான் மகிழ்ந்து பாடி, அறவா, நீ ஆடும்போது உன் திருவடியின் கீழிருக்க" என்ற வேண்டுதலையே மேற்கண்ட அடிசிலாக கிண்டியுள்ளனர். பேயாரின் வேண்டுதலை, தெய்வச் சேக்கிழார் பெரிய புராணத்தில் பதிவு செய்துள்ளார். எனவே, சேக்கிழாரிடமிருந்து சுட்டிருக்கிறார்கள் என்றாலும் தகும்.

🌷 பேயார் (மெய்யறிவாளர்) - நித்திய சூரி
🌷 நிலைபேறு - பரமபதம்
🌷 மகிழ்ந்து பாடுதல் - பல்லாண்டு இசைத்தல்
🌷 அறவானின் ஆட்டம் - பெருமாளின் கனவு / லீலை

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

No comments:

Post a Comment