Sunday, September 10, 2023

செப் 5 - ஆசிரியர் தினம் - சில சிந்தனைகள் ...


🔸 குரு (ஆரியம்) - தான் கற்றதைக் கொண்டு, நமது அறியாமை இருளை அகற்றுபவர்.

🔸 ஆச்சாரியார் (ஆரியம்) - குருவிற்கு மேலானவர். கற்றுக் கொடுப்பதோடு நிற்காமல், அதன் படி வாழ்ந்தும் காட்டுபவர். இச்சொல்லின் தமிழாக்கமே ஆசிரியர் ஆகும்!

🔸 ஆசிரியரைக் குறிக்கும் சில தூய தமிழ் சொற்கள்:

அண்ணாவி
ஆயன்
ஈவோன் (தொல்காப்பியம்)
நுவல்வோன் (நன்னூல்)
ஐயன்
ஓதுவான்
பணிக்கன் (மலையாளச் சொல்லல்ல)
புலவன்

🔸 தினம் என்பதும் ஆரியச் சொல்லாகும். தமிழில் "நாள்" என்றழைக்கலாம்.

🔸 ஆசிரியர் தினத்தை "ஆயர் திருநாள்" என்று தமிழில் அழைக்கலாம் என்பது எனது தாழ்மையான கருத்தாகும்.

🔸 ஆயர் என்பவர்...

- நுணுக்கமாக ஆராய்பவர்
- உள்ளதை விட்டுவிட்டு அல்லாததை பிரித்தெடுப்பவர்
- கூட்டத்தை பராமரித்து, வழிநடத்துபவர்

🔸 "ஆயர் என்பவர் மனித உருவில்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. ஒரு சொல்லாக, பொருளாக, குறியீடாக, நிகழ்வாகக்கூட இருக்கலாம்." என்பது பகவான் திரு இரமண மாமுனிவரின் 🌺🙏🏽🙇🏽‍♂️ வாக்காகும். நம்மை மேம்படுத்தும் யாவும் நமது ஆயர்களே!

🔸 இத்திருநாளை செப் 5 அன்று கொண்டாடுவதைவிட (இராதாகிருஷ்ணனை பற்றிய உண்மைகள் இன்று வெளிவந்துவிட்டன), தமிழர்களாகிய நாம் திருவள்ளுவர் திருநாளன்று கொண்டாடுவது பொருத்தமாகவிருக்கும்.

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

No comments:

Post a Comment