Friday, December 23, 2016

உச்சந் தொட்ட ஊழியம்

அப்படிப் போடு அரிவாளை!! 😂

என்னமாக ஊழியம் செய்திருக்கிறார்கள்! 😱 "டெசம்" என்ற பரங்கி வார்த்தையிலிருந்துத் தான் "தசம்" என்ற நம் வார்த்தை வந்ததாம். விட்டால், ஞானி யேசு பாரதம் வந்தது அத்வைதம் கற்க அல்ல, அத்வைதம் போதிக்க என்பார்கள் போலிருக்கிறது!! 😛

ஐரோப்பிய மொழிகள் இந்தோ-ஆரியப் பிரிவைச் சேர்ந்தவை. நமது மொழிகளை அடிப்படையாகக் கொண்டவை. நமது தசமம் தான் அங்கு டெசம் ஆகியிருக்கிறது.

மேலும், முற்காலத்தில் நமது வருடப்பிறப்புகளைப் போன்றே அவர்களது வருடப் பிறப்பும் ஏப்ரல் 1 அன்று துவங்கியிருக்கிறது. இதை ஜனவரி 1க்கு மாற்றிய பின்னரும் ஏப்ரல் 1ஐ வருடப்பிறப்பாகக் கொண்டாடியவர்களை கூலிக்கு ஆள் வைத்து "முட்டாள்கள்" என்று பறையடித்துள்ளார்கள் பரங்கி மன்னர்கள். எனில், டிசம்பர் எங்ஙனம் 10-வது மாதமாக இருந்திருக்க முடியும்?

ஒரு அறிவியலும் கிடையாது. ஒரு மன்னர் வருவாராம். தன் பெயரில் ஒரு மாதத்தை ஏற்படுத்துவாராம். அதிக நாட்களை ஒதுக்கிவிடுவாராம். நாய் வாந்தி எடுத்தது போன்றிருந்த அவர்களது வருட கணக்கு சரியானது நம்முடன் 13-ஆம் நூற்றாண்டு வாக்கில் மீண்டும் தொடர்பு ஏற்பட்ட பின்னரே. 😠

அவர்களது மொழி, மதம், கலாச்சாரம் என அனைத்தும் மேம்பட்டது நம்மிடமிருந்து சுட்ட விஷயங்களால் தான்.

சுட்டது தான் சுட்டார்கள். சரியாக சுட்டார்களா? நம் ஆத்மாவை ஆதாம் என்றாக்கினார்கள். ஜீவனை ஏவாள் ஆக்கினார்கள். பிப்பல மரத்தை ஆப்பிள் மரம் ஆக்கினார்கள். "உயிர் உடலை வைத்திருக்கிறது" என்பதை "உடல் உயிரை வைத்திருக்கிறது" என்றாக்கினார்கள். 😜

"அப்பனே முருகா" என்று நாம் அழைப்பது போல் இறையுணர்வை "தந்தையே" என்றார் ஞானி யேசு. இதை உணராமல், இறையுணர்வை பரம பிதா என்றும், இவரின் தந்தை என்றும் தவறாக (அல்லது தப்பாக) கடக்கால் போட்டுவிட்டார்கள். 😝

*"இயற்கைக்கு மாறாக எதுவுமே நடக்காது" என்பார் பகவான் ஸ்ரீ ரமணர். நாம் எப்படி பிறந்தோமோ அப்படித்தான் பகவான் ஸ்ரீரமணரும் பிறந்தார். பகவான் ஸ்ரீகிருஷ்ணரும் பிறந்தார். பகவான் புத்தரும் பிறந்தார். ஞானி யேசுவும் பிறந்தார். "ஆண் சம்பந்தமில்லாமல் பிறந்தார்" என்பதற்குப் பொருள், அவர் பிறந்தது கன்னி லக்கினத்தில். அந்நேரத்தில் அந்த லக்கினத்திலும் எந்த ஆண் கோள்கள் இல்லை. அந்த லக்கினத்தையும் எந்த ஆண் கோள்களும் பார்க்கவில்லை. ஆகையால், ஆண் சம்பந்தமில்லாமல் பிறந்தார்!!*

*மறுபிறவி கொள்கையை ஞானி யேசு போதிக்கவில்லை. ஏனெனில், மறுபிறவியை போதித்தால் பாவம், புண்ணியம் போன்றவற்றையும் போதிக்க வேண்டி வரும். மனிதப் பிறப்பின் குறிக்கோளாகிய ஞானமடைவதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று மனிதர்கள் மெத்தனமாக இருந்து விட வாய்ப்புள்ளது. அதற்கு வாய்ப்பளிக்கக் கூடாது என்பதற்காகத் தான் ஒரே பிறப்பு, இறுதி நாள் என்றெல்லாம் பயமுறுத்தினார். இவராவது மறுபிறவியை மறுத்தார். பகவான் புத்தரோ இவ்வுலகையே மறுத்தார்; உன்னை மட்டும் கவனி என்றார். கிடைத்தற்கரிய மனிதப் பிறவி வீணாகக் கூடாது என்பதற்காகவே இம்மகான்கள் இவ்வாறு போதித்தார்கள். ஆனால், விளைவு? இறுதி நாளை வைத்து ஹாலிவுட் பணம் சம்பாதித்தது தான். 😂😂*

(இணைப்பு: தினமலர் - சென்னை - 23/12/2016)

No comments:

Post a Comment