Saturday, August 6, 2016

தலைவர் மாற்றிப் படித்துவிட்டார் என்று நினைக்கிறேன்!! 😉


(தினமலர் - சென்னை - 06/08/2016)

கடந்த 69 வருடங்களாக கடைபிடிக்கப்பட்டு வரும் மெக்காலே கல்வி மற்றும் இடஒதுக்கீடு திட்டங்களினால் ஏற்பட்டுள்ள விளைவுகளை பட்டியலிட்டுவிட்டார்!! 😂

💥 பல ஜாதி மாணவர்கள் கடினமாகப் போராடுகையில், சில ஜாதி மாணவர்கள் சுலபமாக கல்லூரிகளிலும், அரசு அலுவலகங்களிலும் இடம்பெற முடிவதால், மாணவர்களிடையே பாகுபாடு, சலிப்பு மற்றும் சோர்வு.
💥 பன்னாட்டு நிறுவனங்களுக்கு, மேலைநாட்டு கலாச்சாரத்திற்கு, மொழிக்கு இந்தியக் கதவுகளைத் திறந்துவிட்டதால் குருவந்தனம் என்ற வார்த்தைகளுக்கு பொருளில்லாமல் போய்விட்டது. ஆசிரியர்களுக்கு மரியாதையில்லாமல் போய்விட்டது. அடாவடி செய்யும் மாணவனை கண்டிக்க இயலாமல் அதே சமயம் தமது கண்ணியத்தை விட்டுக்கொடுக்க முடியாமல் ஆசிரியர்கள் சலிப்பும் சோர்வும் அடைந்துள்ளனர்.
💥 ஊரை அடித்து உலையில் போட்ட அரசியல்வியாதிகள் கையில் கல்வி மாட்டிக்கொண்டதால், அது வியாபாரமாகி, மீள முடியாத நிலைக்குச் சென்று, நமக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

தன்னைப் பற்றி தனது பெற்றோருக்குத் தெரியப்படுத்தியதால் ஆசிரியையைக் கொல்லும் மாணவனும், தன்னிடம் கல்வி கற்கும் மாணவனோடு ஓடிப்போகும் ஆசிரியையும், தன்னிடம் கல்வி கற்கும் மாணவியை கர்ப்பமாக்கும் ஆசிரியனும், 5வது மாடியிலிருந்து நாயை தள்ளிவிட்டு சிரித்து மகிழும் மருத்துவனும் தான் கடந்த 69 வருடமாக கடைபிடிக்கப்பட்டு வரும் மெக்காலே கல்வி திட்டத்தால் விளைந்த சிறந்த விளைவுகள்!! 😡😡😡

கல்வியைப் பற்றி சுவாமி விவேகானந்தரின் அருமையான விளக்கம்: கல்வி என்பது மனிதனிடம் ஏற்கனவே இருக்கின்ற பூரணத்துவத்தை வெளிப்படுத்துவது!! 👏👌👍

இந்த இரத்தின வார்த்தைகளை அடிப்படையாகக் கொள்ளாமல் உருவாக்கப்படும் எந்த கல்வி திட்டமும் வியாபாரமே - மெக்காலே திட்டமே!

posted from Bloggeroid

No comments:

Post a Comment