Friday, July 19, 2019

அத்திவரதர் வரலாறு - ஓர் ஆய்வு & இந்த ஆதி அடையாளத்தை வணங்கலாமா?

"நாளொன்றுக்கு 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பத்திமர்கள் காஞ்சி வரதராஜப் பெருமாள் திருக்கோயிலின் ஆதி அடையாளத்தை (ஆதி மூலவரை) வந்து வணங்கிச் செல்கின்றனர்"

(இந்த இடுகை முழுக்க அத்திவரதரை சிலை அல்லது அடையாளம் என்றே குறிப்பிட்டுள்ளேன். சமாதியல்லாத தலங்களில் சிலைகள் உணர்த்தும் பேருண்மைகளை உணராது, சமாதி திருத்தலங்களில் சிலைகள் அடையாளப்படுத்தும் மகான்களை உணராது, வெறும் சிலை வணங்கிகளாகவே நாமிருப்பதை உணரவேண்டும் என்பதற்காகவும், வடிவம், ஒப்பனை, ஆரியம், மணம், சுவை என புலன்களுக்கு கட்டுப்பட்டவர்களாகவும் நாமிருப்பதை உணரவேண்டும் என்பதற்காகவும் இவ்வாறு எழுதியுள்ளேன்.)

-- இச்செய்தியால் ஒரு புறம், தமிழ்நாடு சமூக, இந்து சமய, தேச விரோத சக்திகளின் ஆரம்பமாகிய வளர்ப்பு மகளை மணந்தவனின் மண் இல்லை 💪🏽 என்று பெருமை கொள்கின்றனர். மறு புறம், தங்களது முட்டாள்தனம் வளர்க்கப்படுவதை அறியாமல் எல்லையில்லா பெருமகிழ்ச்சி கிடைத்துவிட்டதைப் போல்  உருகுகின்றனர். 😒

அத்தி மரத்தினாலான ஆதி அடையாளத்தை வைத்து, பலவிதமான பலகாரங்கள் தினம் தினம் வெளிவந்த வண்ணம் இருக்கின்றது. 😁 அதில் ஒன்றுதான் இந்தக் காணொளி: https://youtu.be/KwaYdmZy_c0. பலகாரத்தை சுவைத்து 😋 விட்டு வாருங்கள். பிறகு, அதில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்களைப் பற்றி ஆராய்வோம்.

🍝 பிரம்மதேவர் - இவரின் 4 முகங்கள் 4 திசைகளைக் குறிக்கும். படைப்பாற்றலின் அடிப்படை 4 திசைகளிலிருந்தும் வரும் செய்திகள், காணும் காட்சிகள் மற்றும் இவற்றால் கிடைக்கும் பட்டறிவு. ஒரு காலத்தில் பிரம்மாவிற்கு 5 முகங்கள் இருந்தன என்றும் வானோக்கிய முகத்தை சிவன் கொய்தார் என்றும் கேள்விப்பட்டிருப்போம். இதன் பொருள், முன்னொரு காலத்தில் நம் முன்னோர்கள் வானையும் ஒரு திசையாக தவறாக கணக்கிட்டுள்ளனர். பின்னர், காரைக்கால் அம்மையார் 🌺🙏🏼, நந்தனார் 🌺🙏🏼, ஒளவையார் 🌺🙏🏼 போன்ற ஒரு மெய்யறிவாளர் (சிவன்), இந்த தவற்றை சரி செய்துள்ளார். (இதன் பிறகு சிவபெருமானை பிரம்மஹத்தி பிடித்தது, அன்னபூரணித் தாயாரால் தீர்ந்தது என்பது வேறொரு பேருண்மையைப் பற்றியது)

🍝 வேள்வி - வேள்வி எனில் குண்டம் வைத்து, தீ வளர்த்து, ஆரிய செய்யுள்கள் ஓதி, உணவு தானியங்களை தீக்குள் இடுவது மட்டுமல்ல. வயிறு எனும் குண்டத்தினுள் உணவிடுவது, மனம் எனும் குண்டத்தினுள் எண்ணங்களை வளரவிடுவது, உலகம் எனும் குண்டத்தினுள் செயல்களை புரிவது, மனைவி எனும் குண்டத்தினுள் விந்துநீரை இடுவது என எல்லாமே வேள்வி தான்.

இங்கு, காஞ்சி எனும் நகரை (குண்டத்தை) உருவாக்கி, அரசு எனும் வேள்வியை நடத்துகிறார் அதன் மன்னர் / தலைவர் (பிரம்மா)

🍝 சரசுவதி / வேகவதி - சரஸ்+வதி - நீரில் இருப்பவள். வெண்மை நிறமுடையவர். பொதுவாக, நமது மூளையைக் குறிக்கும். இங்கு வேகவதி நதியாக உருவகப்படுத்தியிருக்கிறார்கள். இந்நதி காஞ்சிக்கு அருகிலுள்ள பிரம்மதேசம் எனும் பகுதியில் சற்று திரும்பி, காஞ்சியை விட்டு விலகிச்செல்கிறது. அப்படி விலகிச் செல்லாமல், தொடர்ந்து பாய்ந்திருந்தால் காஞ்சியைத் தாக்கியிருக்கும். நதியின் போக்கை மாற்றிய நிலப்பரப்பை விஷ்ணுவாக உருவகப்படுத்தியிருக்கிறார்கள். வைணவம் தோன்றிய போது (சுமார் 7ஆம் நூற்றாண்டின் இறுதி; திருஞானசம்பந்தர் 🌺🙏🏼 மற்றும் ஆதிசங்கரரின் 🌺🙏🏼 மறைவுக்குப் பின்னர்) பெருமாளின் பொருள்: தோன்றி மறைவது / அழிவது / சுய ஒளியற்றது. இதன் படி, அந்நிலபரப்பு விஷ்ணுவாகிறது.

வேள்வி நடத்த மனைவி வேண்டும் என்பது என்னவெனில் எந்த ஒரு செயலையும் செய்ய ஒர் ஆண் தத்துவமும் ஒரு பெண் தத்துவமும் தேவை என்பது தான். அண்டத்தின் இயக்கமே இவ்வடிப்படையில் தான். வேள்வி நடத்த மனைவி ஒத்து வரவில்லையெனில் வேறு துணைவியரை சேர்த்துக் கொண்டு வேள்வி நடத்தலாம் என்பது பாலைவன மதங்களின் அடித்தளங்களில் ஒன்றான ஆணாதிக்கம் மற்றும் பெண்ணடிமைத் தனத்தின் வெளிப்பாடு!!

🍝 "அத்திவரதர் ஒரு சித்திரை மாதம் அஸ்தம் நாள்மீனுடன் கூடிய பதினான்மையன்று (சதுர்த்தசி) தோன்றினார்" என்பதின் பொருள்:

🔶 அத்தி மரத்திலான இந்த சிலையை மேற்சொன்ன நாளன்று நிறுவியிருப்பார்கள்
🔶 இப்படி ஒரு சிலையை செதுக்கலாம் என்ற எண்ணம் மேற்சொன்ன நாளன்று தோன்றியிருக்கும்
🔶 வைணவம், பௌத்தத்திலிருந்து பெண் தெய்வ வழிபாடு வழியாக வந்தது. இன்று வேண்டுமானால் திரு வரதராஜப்பெருமாள் கோயில் வைணவத் தலமாக இருக்கலாம். இதற்கு முன்னர் அது பெண் தெய்வ வழிபாட்டுத் தலமாகவோ, பெளத்த தலமாகவோ இருந்திருக்கும். மேற்சொன்ன நாள் அது வைணவத் தலமாக மாறிய நாளாக இருக்கலாம்.
🔶 இன்று தான் வியக்க வைக்கும் கட்டிடங்களும், அழகுச் சிலைகளும், அவற்றிற்கு மனதைக் கொள்ளை கொள்ளும் ஒப்பனைகளும், விரிவான வேள்விகளும், தெளிவான உச்சரிப்புடன் கூடிய ஆரிய செய்யுள்களும் இருந்தால் போதும் அவை புனிதத் தலங்களாகிவிடும். 😏 அன்று இப்படியல்ல. மேற்சொன்ன எதையுமே ஒரு பொருட்டாக மக்கள் கருதவில்லை. அவர்கள் தேடிச் சென்றது உயிர்ப்புள்ள திருத்தலங்களை - அதாவது, திரு தாயுமானவ சுவாமிகள் 🌺🙏🏼 போன்ற மெய்யறிவு பெற்ற மகான்களை அல்லது அவர்களது சமாதிகளை. பழமையான சிவத்தலங்களின் மூலவர்களை (சமாதி அடையாளங்களை) கவனித்தாலே இதை உணரமுடியும். அன்று இருந்தவை சமாதி அடையாளங்கள் மட்டுமே. திரு வரதராஜப்பெருமாள் கோயிலும் இது போன்றொரு சமாதித் தலமாகத்தான் இருக்கும். எனில், மேற்சொன்ன நாளன்று அங்கிருந்த மகான் 🌺🙏🏼 சமாதியாகி இருக்கலாம்.

(இந்த அத்திமர ஆதி அடையாளத்தைப் பற்றிய சில வரலாற்று குறிப்புகள் குறிப்பு #1ல் கொடுத்துள்ளேன்)

🍝 "குளத்தில் இருக்கும் அத்திவரதரை சுற்றி 16 நாகர்கள் காவலிருக்கின்றன" - இச்செய்தி இணைப்புக் காணொளியில் இல்லாவிட்டாலும் இணையத்தில் சுற்றி வந்து கொண்டு தான் இருக்கிறது.

பழமையான திருத்தலங்கள் பெரும்பாலும் மகான்களின் சமாதிகள் என்று பார்த்தோம். ஒரு மகான் உடலுடன் இருக்கும் போதும், உடலை விட்ட பிறகும் அவரைத் தேடி பல மெய்யன்பர்கள் வருவர். அவர் காட்டிய வழியில் வடக்கிருப்பர் (தவமியற்றுவர்). அங்கேயே சமாதியும் அடைவர் (மெய்யறிவு பெறுவர் & உடலையும் உகுப்பர்). அவர்களது சமாதிகளை அடையாளங்கள் வைத்து பாதுகாப்பர். இவ்வடையாளங்கள் ஒரு காலத்தில் நீள் உருளைக் கற்களாகவும், பின்னர் 3 அல்லது 5 பின்னல்கள் கொண்ட பாம்புகள் இருக்கும் புடைப்பு சிற்பங்களாக செதுக்கப்பட்ட பட்டைக் கற்களாகவும் (மேல் பின்னலில் சிவலிங்கம் (2) இருக்கும்), அல்லது 3/5 தலைகள் கொண்ட பாம்புகள் உடலைச் சுருட்டி, ஆசனமிட்டு, சிவலிங்கங்களை படமெடுத்துக் காப்பது போன்றும் வடித்திருப்பார்கள். இந்த அடையாளங்களை விட, அவை நடப்பட்ட இடங்கள் தாம் முக்கியமானவை. ஏனெனில், அவை சமாதிகள் - உயிர்ப்புள்ள இடங்கள். ஆனால், தொடர்ந்த படையெடுப்புகளாலோ அல்லது குறுகிய சிந்தனை கொண்ட சிலராலோ இவ்வறிவை நம் முன்னோர் இழந்துவிட்டனர். திருத்தல வளாகத்தில் ஆங்காங்கே இருந்த சமாதி அடையாளங்களை எல்லாம் திருச்சுற்றில் வைத்துவிட்டனர். பழத்தை தூக்கி எறிந்து விட்டு தோலை உண்ணும் அறிவுஜீவிகளாயினர்!! 😔 இன்றோ நாம் அவர்களையும் மிஞ்சிவிட்டோம். தலமரங்களைச் சுற்றி, ரெடிமேட் நாகர்களை வைத்து, செவ்வாய், வெள்ளி கிழமைகளில் அம்மன் பாடல்களை ஒலிக்க விட்டு, நாகர்களுக்கு பாலூற்றி... உவ்வே!! 🤢🤮

திரு வரதராஜப்பெருமாள் கோயில் வளாகத்திலும் பலர் வடக்கிருந்து சமாதியாகி இருப்பார்கள். மேற்சொன்ன அடையாளங்களால் அவர்களது சமாதிகளும் பாதுகாக்கப்பட்டிருக்கும். காலப்போக்கில், பிற தலங்களில் நடந்தது போலவே இங்கும் சமாதியிடங்களை ஒதுக்கிவிட்டு அடையாளங்கள் மட்டும் பாதுகாக்கப்பட்டிருக்கும். இப்படி பாதுகாக்கப்பட்ட 16 அடையாளங்களைத் தான் அத்திவரதர் சிலை மீது சாத்தி வைத்து, வரதர் சிலை நீரின் மேலெழும்பாமல் பாதுகாக்கிறார்கள். அதாவது, வெறும் எடைகற்களாக பயன்படுத்துகின்றனர்!! 😮

🍝 "அத்திவரதரை ஐராவத யானை தாங்கி நின்றது. பின்னர் மலையாக மாறியது."

ஐராவதம் என்பதே சிறுபிள்ளைத்தனம் தான்!! 😀 பள்ளிக்கூடம் செல்லும் இரண்டு பிள்ளைகள் விடுமுறைக்கு பின் மீண்டும் சந்திக்கின்றன என்று வைத்துக் கொள்வோம். ஒரு பிள்ளை, "டே, நேத்து நான் வி.ஆர். மால் போயிருந்தேன்டா. அங்க பெரிய கோயில் மணி தொங்க விட்டிருந்தாங்கடா", என்று சொல்கிறது என்று வைத்துக் கொள்வோம். இது இன்னொரு பிள்ளைக்கு தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கிவிடும். அப்பிள்ளை எங்குமே சென்றுவரவில்லை என்றாலும், "நானும் ஃபீனிக்ஸ் மால் போயிட்டு வந்தேன்டா. அங்க காப்பான் சூட்டிங் நடந்திட்டிருந்ததுடா. நம்ப சூர்யாவ பார்த்தேன்டா." என்று ஒரே போடாக போடும். உண்மையில் மால் சென்று வந்த பிள்ளை அமைதியாகிவிடும். எங்கும் போகாத பிள்ளை காலரைத் தூக்கி விட்டுக்கொள்ளும். இது போன்றது தான் ஐராவதம் கதை. 😁

இன்று ரஷ்யா எனப்படும் ரிஷிவர்ஷாவின் வடக்குப் பகுதிகளிலிருந்து வந்தவர்கள் தாம் ஆரியர்கள். ஒரு பிரிவு பாரதத்திற்குள்ளும், இன்னொரு பிரிவு ஈரானுக்கும் சென்றது. அன்றைய பட்டுப்பாதை நெடுகிலும் உள்ள நாடுகளையும் ஆக்ரமித்தது. பாரதத்தில் தான் இக்கூட்டம் முதன் முதலில் யானைகளைப் பார்க்கிறது. யானைகளின் உருவம், உயரம், பலம், நினைவுத்திறன், அவற்றின் பல்வேறு பயன்பாடுகள் போன்றவை இவர்களுக்கு தாழ்வு மனப்பான்மையை கொடுத்துவிட்டது. இதன் விளைவு: உங்க லோகத்துல கருப்பு யான தான். எங்க லோகத்துல வெள்ள யான இருக்குதாக்கும்!!! 😝😂😂🤣

அத்திவரதர் கதையில் வரும் ஐராவதம் என்பது நமது மூளையைக் குறிக்கும்.

நமது திருத்தலங்கள் யாவும் பெரும்பாலும் ஒரு மனிதர் படுத்திருப்பதை போலவும்,  சிறு கோயில்கள் ஒரு மனிதர் அமர்ந்திருப்பதை போன்றும், சில கோயில்கள் தேர் போன்றும் வடிவமைத்திருப்பார்கள். வெகு சில கோயில்கள் சற்று மாறுபடும். தில்லைக் கருவறை மனிதனின் இதயத்திற்கு சமமாகும். கேரள சபரிமலைக் கோயில், ஒரு மனிதர் பத்மாசனத்தில் அமர்ந்திருப்பதைப் போன்றும் (கட்டுமலை), அவரது சகஸ்ரார சக்கிரத்தில் பரம்பொருள் வீற்றிருப்பது போன்றும் வடிவமைத்திருப்பார்கள். வரதராஜப் பெருமாள் கோயிலும் ஒருவர் அமர்ந்திருப்பது போன்று வடிவமைத்திருக்கிறார்கள். கீழுள்ள குடைவரைக் கருவறை இதயத்தைக் குறிக்கும். நம்முள்ளிருந்து சடாரென வெளிப்பட்டு "நாம் இவ்வுடல் எனும் பொய்யறிவை" அழிக்கும் தெளிவை சிங்கப்பெருமாளாக உருவகப்படுத்தி வைத்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் இந்த தெளிவான அறிவு நிலைபெற்று நிற்காது. தொடர் முயற்சியால், சிறிது காலம் கழித்து இது நிலைபெறும். அவ்வாறு நிலைபெற்று நிற்கும் அறிவை வரதராஜப் பெருமாளாகவும், அவர் நிற்கும் சகஸ்ரார சக்கிரத்தை (மூளையை) ஐராவத யானையாகவும் உருவகப்படுத்தியிருக்கிறார்கள்.

(இங்கே, வைணவத்தின் டிரேட்மார்க்கைக் மீண்டும் காணலாம்: தோன்றி மறையும் தெளிவும் பெருமாளாம்! என்றுமே இருக்கும் தூய அறிவும் பெருமாளாம்!! 😁)

🍝 "பிரம்மா மறுமுறை செய்த வேள்வியால் அத்திவரதர் பாதிக்கப்பட்டார்"

கருவறையில் எப்போதும் நிலவும் வெப்பத்தாலோ, பல நூறு வருட தொடர் வழிபாட்டின் காரணமாகவோ, வழிபாடு செய்து வைப்போரின் கவனக்குறைவாலோ சிலையில் பழுது ஏற்பட்டிருக்கிறது. மேற்கொண்டு வழிபாட்டில் வைத்திருக்க அவர்களது வழிபாட்டு நூல்கள் இடம் கொடுத்திருக்காது. ஆகையால், குளத்திற்குள் விட்டுவிட்டார்கள். நிலத்தை விட நீருக்குள் மரம் பாதுகாப்பாகவும் வலுவாகவும் இருக்கும். ஐரோப்பிய நகரிங்களில் சில நீரோட்டத்திலேயே, மரத்தால் அடித்தளமிட்டு கட்டப்பட்டவை. 200-300 ஆண்டுகளாகியும் இன்றும் அடித்தள மரங்கள் வலுவாகவுள்ளன.

40+/- ஆண்டுகளுக்கு ஒரு முறை சிலையை வெளிக்கொணரக் காரணம் - குளத்து நீர்!! மேற்சொன்ன ஐரோப்பிய நகரங்கள் ஓடும் நீரில் கட்டப்பட்டவை. நீரிலுள்ள உயிர்வளி குறைய வாய்ப்பில்லை. சேறும் சேர வாய்ப்பில்லை. ஆனால், குளத்து நீரில் உயிர்வளி குறைவாகவும், சேறு மிகுதியாகவும் இருக்கும். ஆகையால், இத்தனை வருடங்களுக்கு ஒரு முறை எனக் கணக்கு வைத்து சுத்தம் செய்துவிடுகிறார்கள்.

🍝 "அத்தி வரதரை ஒரு முறை வணங்கினால் மோட்சம் கிடைக்கும். இரண்டாம் முறை வணங்கினால் வைகுண்டம் கிடைக்கும்."

அத்திமர அடையாளத்தின் வரலாறு என சுற்றி வரும் தகவல்களில் இது தான் நெற்றிசுட்டி போன்றது!! 😃 முதல் முறை வணங்கிய சீவர்கள், சீவத்துவத்திலிருந்து விடுதலை பெற்று, பல லோக முனையத்தில் காத்திருப்பார்கள் போலிருக்கிறது. 😄 அடுத்த முறை வணங்கியவுடன், புஷ்பக விமானம் வந்து வைகுண்டம் அழைத்துச் செல்லும் போலிருக்கிறது. 😆 ஒரு வேளை, விமானத்தை தவிர்த்து விட்டு, மூன்றாம் முறையும் வணங்கி விட்டால்... "பெருமாள், உங்க டைம் ஓவர். இப்பத்திலேர்ந்து நான் தான் பெருமாள்."!!! 😂😂🤣

நாம் இவ்வுடல் என்ற பொய்யறிவிலிருந்து விடுதலை பெறுவதே மோட்சம். நாம் நாமே என்ற மெய்யறிவில் நிலைபெறுவதே வைகுண்டம். இந்த அண்டமே பெருமாள்.

அத்திவரதர் மட்டுமல்ல. இமயத்தில் வீற்றிருக்கும் பத்ரிநாத் பெருமாள் 🌺🙏🏼 முதல் பாரதத்தின் தென்னகத்தில் இருக்கும் திரு அனந்தபத்மநாப பெருமாள் (அகத்திய மாமுனிவர்) 🌺🙏🏼 வரை யாரை வணங்கினாலும், எத்தனை முறை வணங்கினாலும், எவ்வளவு மனமுருகி வணங்கினாலும் வைகுண்டவாசம் கிட்டாது. பார்ப்பவனை பார்த்தால் ஒழிய, பார்ப்பவனே வைகுண்டவாசன் என்று தெளிந்தால் ஒழிய வைகுண்டவாசம் (நிலைபேறு) கிட்டாது. அத்தனை பெருமாள்களையும் சென்று வணங்குவதின் பயன் இதுவே!!

அத்திவரதரை ஒரு காட்சி பொருளாக பார்த்து விட்டு, கருவறைக்குச் செல்லுங்கள். அங்கு, அடையாளத்திற்கு பூசை செய்பவர்கள், அவர்களது உழைப்பு வீணாகி விடக் கூடாது என்பதற்காக, "உடையார நல்லா பாத்துக்கோங்கோ" என்பர். 😁 எவ்வளவு நன்றாக பார்த்தாலும், எவ்வளவு நேரம் பார்த்தாலும் ஒரு பயனுமில்லை என்பதை உணருங்கள். கருவறையிலுள்ள அடையாளத்தைக் கண்டதும் கண்கள் தானாக மூடும். மூட விடுங்கள். ஒரு கணமாவது, நீங்கள் நீங்களாக இருங்கள். பின்னர், சடாரியை தலையில் வைத்து எடுப்பார்கள். நன்றாக வைத்துவிட்டு எடுக்கும் போது, ஒரு கணம், "நாம் இவ்வுடல்" என்ற பொய்யறிவு நம்மை விட்டு அகலும். (3) இவ்வுணர்வை உறுதியாக பற்றிக் கொள்ளுங்கள். திருச்சுற்றில் அமர்ந்து இதைப் பற்றி சிந்தியுங்கள், வடக்கிருங்கள்.

"கடவுளைக் காண்பது என்பது கடவுளை அறிவதே. கடவுளை அறிவது என்பது கடவுளாய் இருத்தலே. கடவுளாய் இருத்தல் என்பது கடவுளாய் ஆதலே." -- பகவான் ஸ்ரீரமணர் 🌺🙏🏼

🏵️🌼🌻💮🏵️

குறிப்புகள்:

1. அத்திமர ஆதி அடையாளத்தைப் பற்றிய சில வரலாற்று குறிப்புகள்:

✳️ 1487 வரை அத்திமர அடையாளம் தான் கருவறையில் இருந்துள்ளது. பின்னர், பழைய சீவரத்திலிருந்து கல் அடையாளம் கொண்டு வரப்பட்டு நிறுவப்பட்டுள்ளது. இதன் பின்னர், அத்திமர அடையாளத்தை எங்கு வைத்து பாதுகாத்தனர் என்பது பற்றிய தகவல் ஏதுமில்லை.

✳️ 1688ல் உலக கொல்லிகளுக்கும் (பரங்கியர்களுக்கும்) காட்டுமிராண்டிகளுக்கும் போர் மூண்டுள்ளது. அச்சமயம் இக்கோயிலின் விழாநாதர் (உற்சவ சிலை) திருச்சிக்கு அருகிலுள்ள உடையார்பாளையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. அப்போது இந்த அத்திமர அடையாளம் கோயில் குளத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டிருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து. 1710ல் விழாநாதர் சிலை மீண்டும் காஞ்சிக்கு கொண்டு வரப்பட்டது. அது சமயம் அத்திமர அடையாளத்தை குளத்திலிருந்து வெளிக்கொண்டு வந்தனரா என்பது பற்றிய தகவல் ஏதுமில்லை.

✳️ 1781ல் அத்திமர அடையாளம் குளத்திலிருந்து வெளியே எடுக்கப்பட்டது என்பதற்கான தெலுங்கு கல்வெட்டு ஒன்று கோயில் வளாகத்திலேயே உள்ளது. இதன் பின்னர் ஒவ்வொரு 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை இவ்வாறு நடந்துள்ளது என்பதற்கான சான்றும் ஏதுமில்லை. மேலும், 40 ஆண்டுகள் என்பது ஒரு தோராய கணக்கு தான். 42 ஆண்டுகளும் அகியிருக்கின்றன. 35 ஆண்டுகளிலும் இவ்விழாவை நடத்தியிருக்கிறார்கள். (40 ஆண்டுகள் என்பது 500 பிறைகளுக்கு சமம். "ஆயிரம் பிறை கண்ட அரசு" எனும் சொற்றொடர் வாயிலாக அப்பர் பெருமான் 80 ஆண்டுகள் பருஉடல் தாங்கியிருந்தார் என்று அறிகிறோம்.)

-- காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 2 வைணவ பேராசிரியர்கள் யு-டியூப் காணொளிகளில் பேசியதிலிருந்து தொகுத்துள்ளேன்

2. சைவத்தில் முதல் பாம்பு பின்னலில் சிவலிங்கம் இருக்கும். வைணவத்தில் நடனமாடும் கண்ணன் இருப்பார். வேகவதி நதியின் போக்கை மாற்றிய "உயிரற்ற" நிலப்பரப்பை விஷ்ணு என்றவர்கள், இங்கு, எல்லாம் அடங்கி மீதமிருக்கும் "நான் எனும் உணர்வை" விஷ்ணு என்கிறார்கள்!! 😏

நம் இந்து சமயத்தின் அடையாளங்கள் அனைத்தையும் வெட்கமேயில்லாமல் ஒவ்வொன்றாக திருடிக் கொண்டிருக்கும் எம்.எல்.எம் மதம், இந்த நாகர்களை எப்படி மாற்றிக்கொள்ளும்? சிவலிங்கத்திற்கு பதில் குறுக்கை? 😁 அல்லது, கண்ணபிரானுக்கு பதில் வெஸ்டர்ன் டான்ஸ் ஆடும் இஸ்ரவேல் அத்வைதி யேசு? 😆 குறுக்கை உயிரற்ற பிணம் போன்ற உடலைக் குறிக்கும். பிணக்குறியீடு என்றே அழைக்கலாம்!! யேசு அழியும் மனதைக் குறிக்கும். இவ்விரண்டில் எதை அவர்கள் பயன்படுத்தினாலும் காமெடியில் தான் முடியும். ஏனெனில், பாம்பு பின்னல்கள் ஏற்கனவே அவற்றைத் தான் குறிக்கின்றன:

✳️ 3 பின்னல்கள் - தூல, சூக்கும & காரண உடல்கள்.

✳️ 5 பின்னல்கள் - ஆன்மாவை போர்த்தியுள்ள உணவு, உயிர்வளி, மனம், அறிவு & எல்லையில்லா மகிழ்ச்சி எனும் 5 உறைகள்.

குறுக்கை, யேசு என எம்.எல்.எம். மதம் ஒரு விதமாக சப்பைக்கட்டு கட்டினாலும், இவர்கள் வழியை தற்போது பின்பற்ற ஆரம்பித்திருக்கும் வெடிகுண்டு மதத்தினர் என்ன உருவத்தை வைப்பர்? சுவரை குறிக்க சதுரம் / செவ்வகம்? 😂🤣🤣

(அடையாளங்களைத் தான் இம்மதங்களால் திருட முடியுமே அன்றி ஒரு மெய்யறிவாளரையும் உருவாக்க இயலாது 💪🏽)

3. இந்த சடாரி உத்தியை கண்டுபிடித்தது திரு நம்மாழ்வார் 🌺🙏🏼. இதனால் தான் சடாரிக்கு சடகோபன் என அவரது பெயரையே வைத்திருக்கிறார்கள். இந்த உத்தியால் நமக்கு கிடைப்பதென்னவோ இரண்டற்ற அத்வைத நிலை. ஆனால், அதை மறைத்து, அதற்கு "பெருமாளின் பாதம்" என பெயர் வைத்து, நம்மை த்வைத நிலையிலேயே வைத்திருக்கிறார்கள். ஓட்டையில்லா சட்டதிட்டங்கள், செவ்வனே இயங்கும் சட்டம்-ஒழுங்கு, குப்பையில்லா வாழுமிடங்கள், போதுமென்ற மனம் கொண்ட மக்கள்... பொருளாதாரம் என்னாவது? 🤔 தலீவர்கள் சமூக அநீதி காப்பது எவ்வாறு? 😏 சமூகப் போராளிகள் பிழைப்பது எவ்வாறு? 😉 எல்லோரும் பெருமாள் ஆகிவிட்டால் யார் வந்து அத்திவரதரை வணங்குவது? 🤭

Monday, July 8, 2019

சிவ தத்துவத்தை கடைசியில் போட்ட நாமப் பேர்வழிகள்!! 😠😠



(இடுகைக்குள் நுழையும் முன்... சைவத்தையும் அத்வைதத்தையும் மட்டம் தட்டியே பிழைப்பு நடத்தும் நாமப்பேர்வழிகளைத் தான் எதிர்க்கிறேன். அவர்களிடம் மாட்டிக் கொண்டிருக்கும் பெருமாள்களை 🙏🏼🙏🏼 அல்ல.)

💮🌸🌹🌼🏵️

இவர்களது சரக்கை உயர்த்தி பேச இவர்களுக்கு உரிமையுள்ளது. மற்றவருடையதை தாழ்த்திக் காட்ட இவர்களுக்கு என்ன உரிமையுள்ளது? பரம்பொருளைப் பற்றி பேசக்கூட அருகதையற்றவர்கள். 1300 வருட பித்தலாட்டங்களினால் இவர்கள் சம்பாதித்தது என்ன? #நாமம் என்றால் ஏமாற்று வேலை என்ற பேறு மட்டுமே!!

திருஞானசம்பந்தரும், ஆதிசங்கரரும் கொடுத்த அடிகளிலிருந்து தலை தப்பிக்கவும், வயிற்றுப் பிழைப்புக்காகவும் அன்றிருந்த பெண் தெய்வ வழிபாட்டு கூடாரத்துக்குள் புகுந்து கொண்ட வட பாரத பௌத்த கூட்டத்தின் ஒரு பகுதியே பின்னாளில் நாமப்பேர்வழிகளாக மாறினர். பெண் தெய்வ வழிபாட்டின் அடிப்படை கொள்கை "உயிரை விட உயிரற்றது மேலானது" என்பதாகும். இதனால் தான் இந்த வழிபாடு பண்படாதவர்களின் கையில் இருந்தது. மயானக் கொள்ளை போன்ற அச்சமூட்டும் கொடூர விழாக்களும் அவர்களிடமிருந்தன. இவர்களின் கூடாரத்திற்குள் நுழைந்து தலை தப்பிய பின், தங்களது பித்தலாட்டங்களை அரங்கேற்ற ஆரம்பித்தனர்.

👊🏼 பெண் தத்துவத்தை (மாறுவதை, அழிவதை) ஆணாக்கினார்கள் (மாறாது, அழியாது என்றார்கள்). ஆண் தத்துவத்தை பெண்ணாக்கினார்கள். (இது இவர்களது ஆணாதிக்க புத்தியின் முதல் வெளிப்பாடு)

👊🏼 சைவத்தில் பெண் தத்துவத்திற்கு ஆணுக்கு சமமான இடத்தைக் கொடுத்திருப்பார்கள். இவர்கள் பெண்ணை ஆண் தத்துவத்தின் காலடியில் வைத்திருப்பார்கள். (இவர்களது ஆணாதிக்க புத்தியின் அடுத்த வெளிப்பாடு. இதற்கு "அறிவியல்" விளக்கம் வேறு (1)).

👊🏼 #லிங்கம் எனில் அடையாளம். #சிவலிங்கம் எனில் சிவனின் அடையாளம். #சிவன் என்பவர் சிவநிலையில் இருப்பவர். சிவநிலை என்பது இரண்டற்ற நிலை. #சிவம் என்பது பரம்பொருள். மெய்யறிவாளர்கள் சமாதியடைந்த பிறகு, அவர்களது சமாதியிடங்கள் தொலைந்து போகாமல் இருக்க, அடையாளத்திற்காக வைக்கப்பட்டவைதான் சிவலிங்கங்கள். இதனால் தான், வெடிகுண்டு மதத்தினரின் படையெடுப்புகளிலிருந்து தப்பிய பழம்பெரும் திருத்தலங்களின் சிவலிங்க மூலவர்கள் விதவிதமாக இருக்கக் காணலாம். உண்மை இவ்வாறிருக்க, சமண-பௌத்த மொட்டைகளின் கை ஓங்கியிருந்த காலத்தில், தமிழர்களின் சமயமாகிய சைவத்தை இழிவுபடுத்துவதற்காக லிங்கத்தை ஆண்குறியோடு சமன்படுத்தி ஒரு பிட்டை வெளியிட்டார்கள்!! 😠 இந்த மொட்டைகளிலிருந்து வந்த ஒரு பிரிவினர் தாம் நாமப்பேர்வழிகள். இவர்களது தலபுருடாக்களிலும் ஆண்குறி பிட்டை பதிவு செய்து வைத்திருக்கிறார்கள். பொய்யைச் சொல்லி சொல்லி, இவர்களது வழி வந்த ராமானுஜரே அது உண்மையென்று நம்பிவிட்டார். விளைவு... இவர்களது "புனிதச் சின்னம்" உருவானது. 🤢 ஆம், #ராமானுஜர் பெண்குறியை வைணவச் சின்னமாக அறிவித்தார். 🤮 சிவலிங்கத்தை இழிவுபடுத்துவதற்காக இவர்கள் போட்ட விதையை, பெண்குறியாக இவர்களே அறுவடை செய்திருக்கிறார்கள். 🤗 #பெருமாள் #பாதம் என்று ஊரை ஏமாற்றி, அந்த பெருமாளுக்கும் பெண்குறியை போட்டு விட்டுக் கொண்டிருக்கிறார்கள். 🤭

👊🏼 உயிரற்றதிலிருந்து உயிர் தோன்றியது என்று கடையை விரித்தவர்கள், அவ்வப்போது பறந்து வந்த அழுகின தக்காளி, பிய்ந்த செருப்புகளுக்கு ஏற்ப தங்களது சரக்கை மாற்றிக்கொண்டே வந்தனர். பள்ளி கொண்ட பெருமாள், பெருமாள்-தாயார்(கள்), பெருமாள்-தாயார்-அனுமன், பெருமாள்-தாயார்-அனுமன்-சிவலிங்கம்- மற்றும் பலர். இப்படி சிவலிங்கத்தை இறக்கி வைப்பதன் மூலம் சிவதத்துவத்தை மட்டம் தட்டுகிறார்களாம்! 😏 #சிவம் எனில் எதிலிருந்து அனைத்தும் தோன்றி, நிலைபெற்று, இயங்கி, ஒடுங்குகிறதோ அதுவே சிவம். #பெருமாள் இதற்கும் மேலானவராம்!! 🥴 ஆரம்பத்தில், பெருமாளின் பெயர் மால், மாயோன். மால் எனில் மயக்கம்/குழப்பம். மாயோன் எனில் மயங்க வைப்பவன். உடலல்லாத நம்மை உடலாகக் கருத வைப்பதே உலக தோற்ற-இயக்க-ஒழிவின் ஆரம்பம். இந்த மதி மயக்கும் ஆற்றலைத் தான் #திருமால் என்றனர். உலகின் பேரியக்கத்திற்கு இவ்வாற்றல் தான் அடிப்படை என்பதால் திரு எனும் மரியாதையைச் சேர்த்தனர். ஆனால், இன்றோ சிவத்தின் பொருளும் பெருமாளின் பொருளும் ஒன்றே. இதனால் தான் அவர்கள், சிறிதும் ஓசையில்லாமல், "திருமால்" என்பதலிருந்து "பெருமாள்" (பெரும் ஆள் / பெருமைக்குரிய ஆள்) என்பதற்கு மாறினார்கள். இந்த "Course Correction" 😜 வெற்றி பெற்றுவிட்டதால், இப்போது அடுத்த இலக்குக்கு தாவ முயல்கின்றனர்: பெருமாள் சிவத்திற்கும் மேல்!! அதாவது, சிவத்தின் நகல் சிவத்தை விட சிறந்ததாம்!!! 🤣🤣 இவர்களால் தான், "பேன பெருமாளாக்குவானுங்க. பெருமாள பேனாக்குவானுங்க." என்ற சொலவடை உருவானது. யாரும் "பேன சிவனாக்குவானுங்க" என்று சொல்லவில்லை. 😛 இவர்களது பித்தலாட்டம் அப்படி!! 👊🏼👊🏼👊🏼👊🏼👊🏼

👊🏼 இவ்வளவு வேலை செய்தும் ஏதும் சரியாக "போனி"யாகவில்லை (2). ஏனெனில், சேர்த்துக் கொண்ட கூட்டம் அப்படி. பண்படாதவர்களை எவ்வாறு தத்துவங்களால் கவர முடியும்? இப்படிப்பட்டவர்களை புலன்களை வைத்துத்தான் கவர முடியும் - பெரிய உருவச்சிலைகள், பெரிய நாமம், பெரிய லட்டு / தோசை / இட்லி, மார்கழியில் பெருமாளுக்கு வெந்நீர் குளியல் ("2000 வருசத்துக்கு முன்னாடி உன்ன அநியாயமாக் கொன்னுட்டாங்களேயா" என்ற பிட்டிற்கு சமம். இவ்விரு கூட்டங்களின் தில்லாலங்கடிகளில் அவ்வளவு ஒற்றுமைகளைக் காணலாம்!!)...

ஒரு தெய்வ உருவத்தை பின்புறம் தள்ளியதற்காகவா இவ்வளவு ஆர்ப்பாட்டம் 😲 என்று சிலருக்கு தோன்றலாம்.  அவர்களுக்காக...

👻 சமீப காலமாக இந்து சமய அடையாளங்கள் அனைத்தையும் கவர்வதாக நினைத்துக் கொண்டு தனது அடையாளங்களை இழந்து கொண்டிருக்கும் எம்.எல்.எம் மதம், ஒரு வேளை இந்த ஓவியத்தை போன்று ஒரு ஓவியத்தை வெளியிடுகிறது என்று வைத்துக் கொள்வோம். அரியணையில் இஸ்ரவேல் அத்வைதி யேசு மற்றும் அவரது மனைவி மேரி மேக்தலின் அமர்ந்திருப்பது போன்றும், இவர்களை சுற்றி அவர்களது இன குருமார்களும், தொழிலதிபர்களும், நாடாள்பவர்களும் நிற்பது போன்றும், பின் வரிசைகளில் நமது தெய்வங்கள் நிற்பது போன்றும் வெளியிடுகிறார்கள் என்று  வைத்துக் கொள்வோம். இதை எப்படி நாம் ஏற்றுக் கொள்ளுவோம்?

👺 அடுத்து, வெடிகுண்டு மதத்தினர். வெட்டு, குத்து, சீவு, பிடுங்கு, வெடிகுண்டு என்றே 1300 வருடங்களாக வயிற்றைக் கழுவியவர்கள், இப்போது தான் எம்.எல்.எம் மதத்தினர் போன்று தொழில் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். ஒரு வேளை, இவர்களும் ஒரு ஓவியத்தை வெளியிடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அரியணையில் ஒரு வெள்ளை சுவர், அதை சுற்றிலும் அவர்களது இன குருமார்கள், தொழிலதிபர்கள், நாடாள்பவர்கள் நிற்பது போன்றும், பின் வரிசைகளில் நமது தெய்வங்கள் நிற்பது போன்றும், வரைந்து வெளியிடுகிறார்கள் என்று வைத்துக் கொள்ளுவோம். இதை ஏற்றுக் கொள்ளுவோமா?

ஏற்றுக்கொள்ள மாட்டோம். வெகுண்டு எழுவோம். அவ்வாறே தான் இணைப்பு படத்தையும் ஏற்றுக்கொள்ளாமல், வெகுண்டு எழ வேண்டும். #எம்மதமும் #சம்மதம் என்பது எவ்வாறு ஒரு மாபெரும் ஏமாற்று வேலையோ, அவ்வாறே சைவ-வைணவ இணைப்பும்!!! 🤬😡😠

💮🌸🌹🌼🏵️

27-06-1946 அன்று பகவான் ஸ்ரீரமணர் தனது அன்பர்களுடன் பேசியதிலிருந்து... ("அனுதினமும் பகவானுடன்", தேவராஜ முதலியார், ஸ்ரீரமணாச்சரமம்)

💥 நாலாயிர பிரபந்தத்தில் அருமையான அத்வைதப் பாடல்கள் உள்ளன. ஆனால், எல்லாவற்றிற்கும் வைணவர்கள் வேண்டுமென்றே துவைதப் பொருள் காட்டியிருப்பார்கள்.

💥 ஆரம்பத்தில் (பகவான் திருவருணை வந்த புதிதில்; இன்னமும் புகழ் பெறாத காலத்தில்), வடகலை வைணவர்கள் வந்து அவர்களது U நாமத்தைப் போட்டுவிட்டுப் போவார்கள். பின்னர், தென்கலை வைணவர்கள் வந்து அவர்களது Y நாமத்தைப் போட்டுவிட்டுப் போவார்கள். அவரவர் விரும்பியதை செய்ய விட்டு அமைதியாக இருப்பேன் (இங்ஙனமே தான் நம்மாழ்வாரையும் காப்புரிமை கொண்டாடுகிறார்களோ? யாரும் அறியாவண்ணம், அவ்வளவாக புகழ் பெறாத போது, முதலில் சென்று காப்புரிமை போட்டு விடுவது இவர்களது தொழில் உத்திகளில் ஒன்றோ?)

💥 (நம்மாழ்வாரின் "யானே என்னை அறியகிலாதே" என்ற பாடலைப் பற்றி விளக்குகிறார்) இது சுத்த அத்வைதத்தைப் பாடலாகும். ஆனால், வைணவ உரையாசிரியர்கள் திரித்து துவைதப் பொருள் கூறியிருப்பார்கள். இவர்களுக்கு தாங்களும் அப்படியே இருக்கவேண்டுமாம். பெருமாளும் அப்படியே இருக்கவேண்டுமாம். என்றென்றும் பெருமாளுக்கு கைங்கர்யம் செய்து கொண்டிருக்கவேண்டுமாம். இது எப்படி சாத்தியம்? பெருமாள் கேட்கிறாரா? எல்லோரும் கைங்கர்யம் செய்வதானால் வைகுண்டத்தில் நிற்க கூட இடம் இருக்காதே? 😁

💥 திருவாய்மொழியின் 8வது பதிகத்தின் 3வது பாடலைப் பற்றியும், திருவாசகத்தின் பாடலொன்றோடு அது ஒத்துப் போவதைப் பற்றியும் பேசுகிறார்.

💮🌸🌹🌼🏵️

வாது செய்து மயங்கும் மனத்தராய்
ஏது சொல்லுவீர் ஆகிலும் ஏழைகாள்
யாதோர் தேவர் எனப்படுவார்க்கு எல்லாம்
மாதேவன் அல்லால் தேவர் மற்று இல்லையே

-- #அப்பர் #தேவாரம் 🌺🙏🏼

மரணபய மிக்குள அம்மக்கள் அரணாக
மரணபவ மில்லா மகேசன் - சரணமே
சார்வர் தம் சார்வொடு தாம் சாவுற்றார் சாவெண்ணம்
சார்வரோ சாவாதவர் நித்தர்

-- #பகவான் #ஸ்ரீரமணர் 🌺🙏🏼, உள்ளது நாற்பது

💮🌸🌹🌼🏵️

குறிப்புகள்:

1. பெண்களின் கைகளில் சுக்கிரன் உள்ளதாம். 😛 ஆண்களின் கால்களில் சனி உள்ளதாம். 😝 சனியை சுக்கிரன் இதப்படுத்தினால் செல்வம் பெருகுமாம். 😜 இந்த உத்தியை கையாண்டு தான் மகாலட்சுமி தாயார் செல்வங்களுக்கு அதிபதியாக உள்ளாராம். 🤣

உடலில் கால்களை சனி ஆட்சி செய்வதாக ஏன் சொன்னார்கள் என்றால் சனி வேலைக்காரனையும், குப்பையான அசுத்தமான இடங்களையும் குறிக்கும். இது ஆணுக்கு மட்டுமல்ல. பெண்ணின் கால்களுக்கும் பொருந்தும். அடுத்து, பெண்களின் கைகளில் சுக்கிரன் ஆட்சி செய்வதாக ஏன் சொன்னார்கள் என்றால் சுக்கிரன் அழகையும், நளினத்தையும் குறிக்கும். ஆண்களின் கைகளை விட பெண்களின் கைகள் பொதுவாக அழகானவை & நளினமானவை. ஆக, பெண் ஆணின் கால்களை பிடித்து விட வேண்டும். இதை நேரடியாக சொன்னால் பூரிக்கட்டை பறந்து வரும். 🤕😁 எனவே, சுக்கிரன், சனி என்று பிட் தயாரித்திருக்கிறார்கள். எப்படி பட்ட நப்பாசை!! 🥴

ஆண் என்ற ஒரே காரணத்திற்காக இவன் ஊரை மேய்ந்து விட்டு வருவானாம். மீதமுள்ள அனைத்தையும் பராமரித்து விட்டு, பெண்ணானவள் தன்னையும் பராமரித்துக் கொண்டு, "ஆம்படையான்" திரும்பியவுடன் அவனுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுத்து, அவன் உண்ட களைப்பு போக சயனித்திருக்கும் போது, அவனது கால்களை சற்று பிடித்து விட வேண்டுமாம். இப்படி பிடித்து விட்டால், அவன் மகிழ்ச்சியடைந்து அவளுக்கு நகைகளை (செல்வம்) வாங்கி கொடுப்பானாம். இதற்கு வெடிகுண்டு மதமே மேல் என்று சொல்லாம். 😏

வெடிகுண்டு மதமாவது பெண்ணடிமைத்தனம் மற்றும் அடுத்த மதத்தினரிடமிருந்து பறித்து வாழ்தல் என்ற இரு "உயரிய" கொள்கைகளை வெளிப்படையாகக் கொண்டவை!! 😁 இவர்களிடம் எச்சரிக்கையாக இருப்போம். ஆனால், இந்த நாமப்பேர்வழிகளிடம் ஏமாந்துவிடுவவோம்.

வெடிகுண்டு மதத்திற்கும் நாம மதத்திற்கும் ஒரு ஒற்றுமை உண்டு - இரண்டும் அருகருகே உருவானவை (7ஆம் நூற்றாண்டு). எம்.எல்.எம். மதத்தின் டுபாக்கூர் கையேடு கூட 633க்கு பின்னர் தான் உருவானது என்று வெளிப்படையாக அண்மையில் செய்தி  வெளியிட்டிருந்தார்கள். ஆக, 7ஆம் நூற்றாண்டு உலகின் மற்றுமொரு கெட்ட காலத்தின் ஆரம்பமாக இருந்திருக்கிறது. 😒

2. #பவானி என்பதே #போனி என்று மருவியுள்ளது. நாளின் முதல் விற்பனையின் மூலம் கிடைக்கும் லாபம் பவானி அம்மனுக்கு காணிக்கையாக்கும் வழக்கம் ஈரோடு பகுதியில் உருவானது. ஒரு விற்பனையாவது செய்து விட வேண்டும் என்ற வேகத்தில் "பவானிக்கு குடு/பண்ணு" என்று கூவுவர். நாளடைவில் இது மருவி "போனி பண்ணு" என்றாகிவிட்டது.

Tuesday, July 2, 2019

அத்திவரதர் நீருக்குள் ஏன் வைக்கப்படுகிறார்? 40 வருடங்களுக்கு ஒரு முறை ஏன் வெளிக்கொணரப்படுகிறார்?

https://tamil.news18.com/news/spiritual/athi-varadar-festival-at-kanchipuram-varadaraja-perumal-temple-begins-on-july-1st-vin-173515.html

மேலுள்ள கட்டுரையை படித்ததும் எனக்கு நினைவுக்கு வந்தது கரகாட்டக்காரன் படத்தில் வரும் ஒரு சிரிப்புக் காட்சி:

அமெரிக்காவுல மைக்கேல் ஜாக்ஸன் கூப்டாகோ... ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்டாகோ... என்னடி கலர்கலரா ரீல் உடரே?

😝😂😂🤣

சைவ-வைணவ பகைமையின் போது பகைவர்களிடமிருந்து (1) காப்பதற்காக குழி தோண்டி அத்திவரதரை புதைத்தார்களாம்! அவ்வாறே, மொகலாயரிடமிருந்தும் பரங்கியரிடமிருந்தும் காப்பாற்றினார்களாம்!!

இந்த அத்தி மரத்தாலான ஆதிமூலவரை மணவாள மாமுனிகள் வரை வணங்கியிருக்கிறார்கள். இவர் காலம் 1446 வரை. இதற்குள் மெய்-பொய் சண்டையெல்லாம் பெரும்பாலும் முடிவுக்கு வந்துவிட்டது. பொய் நன்றாக வேரூன்றிவிட்டது. காரணம் தமிழர்களின் நேரடி ஆட்சி சோழர்களோடு முடிந்துவிட்டது (குறிப்பாக, முதலாம் இராஜேந்திர சோழரின் மகன்களின் வீரமரணத்தோடு). விஜயநகர காலத்திலிருந்து தமிழ்நாட்டை ஆண்டவர்கள் அனைவரும் வைணவர்களே.

காட்டுமிராண்டி மாலிக்காபூரும் 1312க்குள் சீரழித்து விட்டு திரும்பிவிட்டான். விஜயநகரம் தோன்றிய பின் இங்கு எஞ்சியிருந்த காட்டுமிராண்டிகளும் விரட்டப்பட்டுவிட்டனர். மீதமிருப்பது உலகக்கொல்லிகளான பரங்கியர்கள் மட்டும் தான். அவர்களும் இந்த சிலையை நாடு கடத்த முயற்சித்திருப்பரா என்பது ஐயமே.

பின்னர் ஏன் இந்த சிலை வழிபாட்டிலிருந்து விளக்கப்பட்டது?

கருவறையில் எப்போதும் நிலவும் வெப்பத்தாலோ, பல நூறு வருட தொடர் வழிபாட்டின் காரணமாகவோ, வழிபாடு செய்து வைப்போரின் கவனக்குறைவாலோ சிலையில் பழுது ஏற்பட்டிருக்கிறது. மேற்கொண்டு வழிபாட்டில் வைத்திருக்க அவர்களது வழிபாட்டு நூல்கள் இடம் கொடுத்திருக்காது. ஆகையால், குளத்திற்குள் விட்டுவிட்டார்கள். நிலத்தை விட நீருக்குள் மரம் பாதுகாப்பாகவும் வலுவாகவும் இருக்கும். ஐரோப்பிய நகரிங்களில் சில நீரோட்டத்திலேயே, மரத்தால் அடித்தளமிட்டு கட்டப்பட்டவை. 200-300 ஆண்டுகளாகியும் இன்றும் அடித்தள மரங்கள் வலுவாகவுள்ளன.

40 ஆண்டுகளுக்கு ஒரு முறை சிலையை வெளிக்கொணரக் காரணம் - குளத்து நீர்!! மேற்சொன்ன ஐரோப்பிய நகரங்கள் ஓடும் நீரில் கட்டப்பட்டவை. நீரிலுள்ள உயிர்வளி குறைய வாய்ப்பில்லை. சேறும் சேர வாய்ப்பில்லை. ஆனால், குளத்து நீரில் உயிர்வளி குறைவாகவும், சேறு மிகுதியாகவும் இருக்கும். ஆகையால், இத்தனை வருடங்களுக்கு ஒரு முறை எனக் கணக்கு வைத்து சுத்தம் செய்துவிடுகிறார்கள்.

திருத்தலங்கள் என்பது வடக்கிருக்க (தவமியற்ற) வேண்டிய புனிதமான பகுதிகள். ஆனால், இன்று வடக்கிருத்தலை தவிர மற்றனைத்தும் அங்கு நடைபெறுகின்றன. வடக்கிருத்தல் என்றால் என்ன என்று கேட்கும் நிலையில்தான் நம்மை வைத்திருக்கிறார்கள். சிலைகள் உணர்த்தும் பேருண்மைகளை உணராது, மூலவர்கள் அடையாளபடுத்தும் மகான்களை வணங்காது சிலை வணங்கிகளாகவே நம்மை வைத்திருக்கிறார்கள். திருத்தலங்கள் இன்று சுற்றுலாத் தலங்களாகவும், பொருளாதாரத் தலங்களாகவும் தான் உள்ளன. மக்களை மாக்கள் ஆக்கியதன் விளைவு, ஏதாவது படம் காட்டித்தான் மக்களைக் கவர வேண்டியுள்ளது.

யானே என்னை அறியகிலாதே
யானே என் தனதே என்றிருந்தேன்
யானே நீ என் உடைமையும் நீயே
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே

-- அத்வைதம் மிளிரும் நம்மாழ்வாரின் 🌺🙏🏼 பாடல்

💮🏵️🌼🌻🌸

குறிப்புகள்:

1. திருடனுக்கும் காவல்காரன் பகைவன் தான். பொய்க்கும் உண்மை பகை தான். இன்று நமது அடையாளங்களை எம்.எல்.எம் மதம் திருடுவதைக் கண்டு எவ்வாறு கோபப்படுகிறமோ, அவ்வாறே அன்று சைவத்திலிருந்து வைணவர்கள் திருடுவதைக் கண்டு நம் தமிழ் முன்னோர்கள் பொங்கி எழுந்திருப்பார்கள். இந்த தலத்தில் கூட ஆதி சங்கரரின் கனகதாரா தோத்திர வரலாறு, சீர்காழி கோயிலமைப்பு, தில்லைக் கோயிலுள்ள காலக் கணக்கு, சிதம்பர மறைபொருள் என பல விடயங்கள் "பயன்படுத்த"ப்பட்டுள்ளன. 😏