"கர்மா என்பதின் தமிழாக்கமே ஊழ்" என்று எழுதியிருந்த ஒரு சோதிட நண்பருக்கு, நான் எழுதிய பதிலை, ஒரு இடுகையாக மாற்றியுள்ளேன்:
💪🏽 5,345 ஆண்டுகளுக்கு முன்பே, இரும்புக் கலன்களை பயன்படுத்தியிருக்கிறோம் என்பது உறுதியாகியுள்ளது. (எனில், அதற்கும் எத்தனையோ ஆயிரமாண்டுகளுக்கு முன்னர் இரும்பை கண்டுபிடித்திருக்கிறோம் என்பது உறுதியாகிறது!)
💪🏽 2,600 ஆண்டுகளுக்கும் முற்பட்ட பானை ஓடுகளிலிருந்து, இங்கு, குடியானவர்களுக்கும் கல்வியறிவு இருந்துள்ளது என்பது உறுதியாகியுள்ளது.
💪🏽 2,300 ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது கொடுங்கோலன் அசோகனுக்கு முன்னர், வடக்கில் கல்வியறிவு இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
💪🏽 1,800 ஆண்டுகளுக்கு முன்னர், அசுரத்திற்கு எழுத்து வடிவம் கிடையாது என்பது உறுதியாகியுள்ளது.
💪🏽 1,600 ஆண்டுகளுக்கு முன்னர், வடக்கில் எண் கணிதம் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. (500 ஆண்டுகளுக்கு முன்னர் வரை, ஐரோப்பியர்களுக்கு பின்னக் கணக்கே தெரியாது!)
💪🏽 தமிழ்நாட்டின் கற்காலம் - 15-17 இலட்சம் ஆண்டுகள். வடக்கின் கற்காலம்... வெறும், 2-2.5 இலட்சம் ஆண்டுகள் மட்டுமே!
💪🏽 தமிழ்நாட்டில் கிடைத்திருக்கும் பழமையான மரபணு - 65,000 ஆண்டுகள். இதுவே, வடக்கில்... வெறும், 22,000 ஆண்டுகள் மட்டுமே!
😍 பூம்புகார் அகழாய்வு முடிந்த பின்னர், தமிழக பண்பாட்டின் அகவை இன்னும் பல்லாயிரமாண்டுகள் முன்னோக்கிப் போகும்.
🤭 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த குமரில பட்டர் என்ற அசுரர், தனது நூலொன்றில், தமிழ்ச்சொற்களின் இறுதியில் வரும் 'ம்' & 'ன்' எழுத்துக்களை மட்டும் நீக்கிவிட்டு, 'ஆ' ஓசையை சேர்த்து, அசுரச் சொற்களாக மாற்றாதீர்கள் என்று அறிவுறுத்தியிருக்கிறார். அதாவது, தமிழ்ச்சொற்களை களவாடாதீர்கள் என்று அறிவுறுத்தியிருக்கிறார்!!
இத்தனை தரவுகள் கிடைத்த பிறகும், "கர்மா என்பதின் தமிழாக்கமே ஊழ்" என்று கொள்வதை விட, "ஊழ் / வினைப்பயன் என்பதின் ஆரியமாக்கமே கர்மா" என்று கொள்வதே சரியாகும்.
பிறப்பேடுகளின் தொடக்கத்தில் வரும் "ஜனனீ ஜென்ம..." என்ற அசுரச் செய்யுளுக்கு பதிலாக, "வகுத்தான் வகுத்த...", "ஊழிற் பெருவலி..." போன்ற திருக்குறள்களையோ, "தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்ற சங்கத்தமிழ் சொற்றொடரையோ பயன்படுத்துவதே நமக்கு பொருத்தமாகும். நமது கடமையுமாயாகும்.
எல்லா வகைகளிலும் தொல் தமிழ்நாடே, தென்தமிழர் பண்பாடே & திருநெறியத்தமிழே பழமையானதும், சிறந்ததும், மேன்மையானதும் ஆகும்! 💪🏽💪🏽
(மேலுள்ள தரவுகள் யாவும், எழுத்தாளரும் வரலாற்று ஆய்வாளருமான திரு மன்னர் மன்னனின் காணொலிகளிலிருந்து பெறப்பட்டவை.)
oOOo
அசுரம் தவிர். தமிழ் பயில். 💪🏽
அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽♂️
திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽♂️
🪻🌼🪷🌼🪻