Tuesday, March 25, 2025

தொல்தமிழர்களின் வானவியல் பேரறிவுக்கு ஓர் எடுத்துக்காட்டு! 😍



செஞ்ஞாயிற்றுச் செலவும்
அஞ்ஞாயிற்றுப் பரிப்பும்
பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்
வளி திரிதரு திசையும்
வறிது நிலைஇய காயமும் என்றிவை சென்றளந்து அறிந்தோர்போல என்றும்
இனைத்து என்போரு முளரே

-- புறநானூறு #30

🔸 சிவந்த பகலவனிடமிருந்து வெளிப்படும் வெளிச்சமும் வெப்பமும்,
🔸 பகலவனின் இயக்கமும்,
🔸 அவ்வியக்கத்தால் ஏற்படும் [காந்த] மண்டலமும்,
🔸 சுழன்றடிக்கும் காற்றை கொடுக்கும் திசைகளும்,
🔸 நிலைப்பு என்ற பண்பைத் தவிர வேறெதுவும் இல்லாத வானமும்
🔸 ஆகிய எல்லாவிடங்களுக்கும் நேரில் சென்று, அளந்து பார்த்தவர் போன்று கணித்துச் சொல்லும் அறிஞர்கள் இருந்தனரே!!

பகலவனையே கோள்கள் சுற்றி வருகின்றன என்ற வானவியல் அரிச்சுவடியை வெ(கொ)ள்ளையன் கற்கத் தொடங்கியது சில நூற்றாண்டுகளுக்கு முன்னர். ஆனால், நாமோ, ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வானவியலில் முனைவர் பட்டமே பெற்றிருந்திருக்கிறோம்! 💪🏽

வாளோடு தோன்றிய மூத்தகுடி என்றுமே பகுத்தறிவோடு விளங்கியது என்பதற்கு இப்பாடலும் ஒரு சான்றாகும்.

(வேர்: திரு மாரிராஜனின் முகநூல் பதிவு)

oOOo

அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Saturday, March 22, 2025

ஊழ் / வினைப்பயன் என்பதின் ஆரியமாக்கமே கர்மா!! 😍🥳😎😘


"கர்மா என்பதின் தமிழாக்கமே ஊழ்" என்று எழுதியிருந்த ஒரு சோதிட நண்பருக்கு, நான் எழுதிய பதிலை, ஒரு இடுகையாக மாற்றியுள்ளேன்:

💪🏽 5,345 ஆண்டுகளுக்கு முன்பே, இரும்புக் கலன்களை பயன்படுத்தியிருக்கிறோம் என்பது உறுதியாகியுள்ளது. (எனில், அதற்கும் எத்தனையோ ஆயிரமாண்டுகளுக்கு முன்னர் இரும்பை கண்டுபிடித்திருக்கிறோம் என்பது உறுதியாகிறது!)

💪🏽 2,600 ஆண்டுகளுக்கும் முற்பட்ட பானை ஓடுகளிலிருந்து, இங்கு, குடியானவர்களுக்கும் கல்வியறிவு இருந்துள்ளது என்பது உறுதியாகியுள்ளது.

💪🏽 2,300 ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது கொடுங்கோலன் அசோகனுக்கு முன்னர், வடக்கில் கல்வியறிவு இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

💪🏽 1,800 ஆண்டுகளுக்கு முன்னர், அசுரத்திற்கு எழுத்து வடிவம் கிடையாது என்பது உறுதியாகியுள்ளது.

💪🏽 1,600 ஆண்டுகளுக்கு முன்னர், வடக்கில் எண் கணிதம் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. (500 ஆண்டுகளுக்கு முன்னர் வரை, ஐரோப்பியர்களுக்கு பின்னக் கணக்கே தெரியாது!)

💪🏽 தமிழ்நாட்டின் கற்காலம் - 15-17 இலட்சம் ஆண்டுகள். வடக்கின் கற்காலம்... வெறும், 2-2.5 இலட்சம் ஆண்டுகள் மட்டுமே!

💪🏽 தமிழ்நாட்டில் கிடைத்திருக்கும் பழமையான மரபணு - 65,000 ஆண்டுகள். இதுவே, வடக்கில்... வெறும், 22,000 ஆண்டுகள் மட்டுமே!

😍 பூம்புகார் அகழாய்வு முடிந்த பின்னர், தமிழக பண்பாட்டின் அகவை இன்னும் பல்லாயிரமாண்டுகள் முன்னோக்கிப் போகும்.

🤭 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த குமரில பட்டர் என்ற அசுரர், தனது நூலொன்றில், தமிழ்ச்சொற்களின் இறுதியில் வரும் 'ம்' & 'ன்' எழுத்துக்களை மட்டும் நீக்கிவிட்டு, 'ஆ' ஓசையை சேர்த்து, அசுரச் சொற்களாக மாற்றாதீர்கள் என்று அறிவுறுத்தியிருக்கிறார். அதாவது, தமிழ்ச்சொற்களை களவாடாதீர்கள் என்று அறிவுறுத்தியிருக்கிறார்!!

இத்தனை தரவுகள் கிடைத்த பிறகும், "கர்மா என்பதின் தமிழாக்கமே ஊழ்" என்று கொள்வதை விட, "ஊழ் / வினைப்பயன் என்பதின் ஆரியமாக்கமே கர்மா" என்று கொள்வதே சரியாகும்.

பிறப்பேடுகளின் தொடக்கத்தில் வரும் "ஜனனீ ஜென்ம..." என்ற அசுரச் செய்யுளுக்கு பதிலாக, "வகுத்தான் வகுத்த...", "ஊழிற் பெருவலி..." போன்ற திருக்குறள்களையோ, "தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்ற சங்கத்தமிழ் சொற்றொடரையோ பயன்படுத்துவதே நமக்கு பொருத்தமாகும். நமது கடமையுமாயாகும்.

எல்லா வகைகளிலும் தொல் தமிழ்நாடே, தென்தமிழர் பண்பாடே & திருநெறியத்தமிழே பழமையானதும், சிறந்ததும், மேன்மையானதும் ஆகும்! 💪🏽💪🏽

(மேலுள்ள தரவுகள் யாவும், எழுத்தாளரும் வரலாற்று ஆய்வாளருமான திரு மன்னர் மன்னனின் காணொலிகளிலிருந்து பெறப்பட்டவை.)

oOOo

அசுரம் தவிர். தமிழ் பயில். 💪🏽

அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Monday, March 17, 2025

ஆவதும் பெண்ணாலே! அழிவதும் பெண்ணாலே!!


(கடந்த மகளிர் திருநாளுக்காக ஒரு குழுவில் பதிவிட்டதை, சற்று மாற்றி, இங்கு பதிவிடுகிறேன்.)

🔸 ஆவது - உள்ளபொருளாய் ஆவது. மெய்யறிவு அடைவது. பிறவிப்பெருங்கடலை கடப்பது. தன்னிலைக்கு மீள்வது.

🔸 அழிவது - மற்றபொருளாய் ஆவது. மெய்யறிவை இழப்பது. பிறவிப்பெருங்கடலில் விழுவது. தன்னிலை தவறுவது.

எல்லாமே மனதின் (அன்னையின்) வேலையென்பதாலே "ஆவதும்... அழிவதும்..." என்று சொல்லி வைத்தார்கள்.

oOo

🔸 தாய் - தம்+ஆய் - என் இறைவி.

🔸 அன்னை - அ+ன்+ஐ

அ - தமிழ் எழுத்துகளின் முதல்.
ன் - தமிழ் எழுத்துகளின் இறுதி.
ஐ - வியப்பு

அதாவது, யாவுமானவளே என்ற வியப்பு!!

"வையக மகளிர் திருநாள்" என்று வெ(கொ)ள்ளையன் முடிவு செய்த ஒரு நாளை கொண்டாடுவதை விட,

🔸 செயற்கரிய செயல்களை செய்து, நாயன்மார்கள் வரிசையில் அமரும் பேறு பெற்ற ஒரே நாயன்மாரான திரு காரைக்கால் அம்மையார்

🔸 தொல் தமிழரது மொழியும், நெறியும், வாழ்வியலும் அழிந்திடாது காத்த திரு மங்கையர்க்கரசியார்

🔸 எளிய செய்யுள்களால் தென்தமிழையும் அறத்தையும் பரப்பிய ஒளவைப்பாட்டி

🔸 வெ(கொ)ள்ளையனை புறமுதுகிட்டு ஓடச் செய்த வேலு நாச்சியார்

🔸 சோழரது படைகள் போருக்கு சென்றிருந்த சமயத்தில், அவர்களது [நெற்] களஞ்சியங்களை, [உணவுப்பொருள்] சேமிப்புக் கிடங்குகளை அழிக்க வந்த சாளுக்கிய படைகளை, தன்னந்தனியாக, சிறு படை கொண்டு சிதறடித்து விட்டு, உயிர்துறந்த வீரப்பெண்மணி (இவரையே, இன்று, முண்டகக் கன்னியம்மன் என்று வணங்குகிறோம்)

போன்றோரது திருநாளை மகளிர் நாளாக கொண்டாடுவதே சிறப்பாகும்.

யாதுமாகி நின்றாய் கோடுடைச் செல்வி!
தீது நன்மை எல்லாம் கானமர் செல்வி!
பொருள் ஐந்துமானாய் காடுறைச் செல்வி!
அறிவாகி நின்றாய் செல்வ செல்வியே!!

(முண்டாசுக் கவிஞரின் பாடலிலிருந்து சில சொற்றொடர்களையும், அன்னையின் பழந்தமிழ் பெயர்களையும் இணைத்துள்ளேன்.)

oOOo

அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Saturday, March 15, 2025

முயல்+ஆமை கதையின் அடிப்படை மெய்யியலாகும்!


பொறுமையுடனும், விடாமுயற்சியுடனும், தொடர்ந்து ஒரு செயலில் ஈடுபட்டால், வெற்றியடையலாம் என்ற கருத்தை அறிவுறுத்துவதற்காக கூறப்படும் இக்கதையின் அடிப்படையானது மெய்யியலாகும்.

oOo

முதலில், முயல் வெற்றி பெறுவது போன்று தோன்றும். இறுதியில், ஆமையே வெற்றி பெறும்.

முயல் = முயற்சி
ஆமை = முயலாமை

மனிதப்பிறவியின் குறிக்கோளானது பிறவாமையாகும். இதற்காக வடக்கிருத்தல் (அசுரத்தில், தியானம், தவம்), ஓதுதல் (அசுரத்தில், பாராயணம்), மெய் வருத்துதல் என பல்வேறு முயற்சிகளை (முயல்) செய்கிறோம். முன்னேறவும் செய்கிறோம். ஆனால், ஒரு கட்டத்திற்கு மேல், எவ்வளவு முட்டி மோதினாலும் எதுவும் நடக்காது. அப்போது முயற்சிகளை கைவிடவேண்டும் (முயலாமை). மெய்யியலை பொறுத்தவரை, எப்போது தோற்கிறோமோ (முயற்சிகளை கைவிடுகிறோமோ) அப்போதே வெல்கிறோம்.

ஆனால், முயலாமை (ஆமை) என்ற இறுதி நிலையை அடைய, முதலில் முயற்சிகளை (முயல்) செய்தாகவேண்டும்.

இதையே, "முதலில் முயல் வெல்கிறது. இறுதியில், ஆமை வெல்கிறது." என்றொரு கதையாக புனைந்து வைத்துள்ளனர்.

oOo

ஒரு செய்தியை அப்படியே பதிவு செய்யாமல், ஏன் ஒரு கதையாக புனைந்தனர்?

எதை எளிதாக உள்வாங்கி, நினைவில் நிறுத்தி, சரியாக மற்றவர்களுக்கு கடத்த முடியும்? முயல்+ஆமை என்ற கதையையா? அல்லது, மேலுள்ள செய்தியையா?

oOo

முயலுதல் இல்லாமலிருக்க முயலுங்கள்

-- திரு அருட்கடல் பெருமான் (பகவான் திரு இரமண மாமுனிவர்) 🌺🙏🏽🙇🏽‍♂️

oOOo

அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻