பொறுமையுடனும், விடாமுயற்சியுடனும், தொடர்ந்து ஒரு செயலில் ஈடுபட்டால், வெற்றியடையலாம் என்ற கருத்தை அறிவுறுத்துவதற்காக கூறப்படும் இக்கதையின் அடிப்படையானது மெய்யியலாகும்.
oOo
முதலில், முயல் வெற்றி பெறுவது போன்று தோன்றும். இறுதியில், ஆமையே வெற்றி பெறும்.
முயல் = முயற்சி
ஆமை = முயலாமை
மனிதப்பிறவியின் குறிக்கோளானது பிறவாமையாகும். இதற்காக வடக்கிருத்தல் (அசுரத்தில், தியானம், தவம்), ஓதுதல் (அசுரத்தில், பாராயணம்), மெய் வருத்துதல் என பல்வேறு முயற்சிகளை (முயல்) செய்கிறோம். முன்னேறவும் செய்கிறோம். ஆனால், ஒரு கட்டத்திற்கு மேல், எவ்வளவு முட்டி மோதினாலும் எதுவும் நடக்காது. அப்போது முயற்சிகளை கைவிடவேண்டும் (முயலாமை). மெய்யியலை பொறுத்தவரை, எப்போது தோற்கிறோமோ (முயற்சிகளை கைவிடுகிறோமோ) அப்போதே வெல்கிறோம்.
ஆனால், முயலாமை (ஆமை) என்ற இறுதி நிலையை அடைய, முதலில் முயற்சிகளை (முயல்) செய்தாகவேண்டும்.
இதையே, "முதலில் முயல் வெல்கிறது. இறுதியில், ஆமை வெல்கிறது." என்றொரு கதையாக புனைந்து வைத்துள்ளனர்.
oOo
ஒரு செய்தியை அப்படியே பதிவு செய்யாமல், ஏன் ஒரு கதையாக புனைந்தனர்?
எதை எளிதாக உள்வாங்கி, நினைவில் நிறுத்தி, சரியாக மற்றவர்களுக்கு கடத்த முடியும்? முயல்+ஆமை என்ற கதையையா? அல்லது, மேலுள்ள செய்தியையா?
oOo
முயலுதல் இல்லாமலிருக்க முயலுங்கள்
-- திரு அருட்கடல் பெருமான் (பகவான் திரு இரமண மாமுனிவர்) 🌺🙏🏽🙇🏽♂️
oOOo
அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽♂️
திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽♂️
🪻🌼🪷🌼🪻
No comments:
Post a Comment