Tuesday, March 25, 2025

தொல்தமிழர்களின் வானவியல் பேரறிவுக்கு ஓர் எடுத்துக்காட்டு! 😍



செஞ்ஞாயிற்றுச் செலவும்
அஞ்ஞாயிற்றுப் பரிப்பும்
பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்
வளி திரிதரு திசையும்
வறிது நிலைஇய காயமும் என்றிவை சென்றளந்து அறிந்தோர்போல என்றும்
இனைத்து என்போரு முளரே

-- புறநானூறு #30

🔸 சிவந்த பகலவனிடமிருந்து வெளிப்படும் வெளிச்சமும் வெப்பமும்,
🔸 பகலவனின் இயக்கமும்,
🔸 அவ்வியக்கத்தால் ஏற்படும் [காந்த] மண்டலமும்,
🔸 சுழன்றடிக்கும் காற்றை கொடுக்கும் திசைகளும்,
🔸 நிலைப்பு என்ற பண்பைத் தவிர வேறெதுவும் இல்லாத வானமும்
🔸 ஆகிய எல்லாவிடங்களுக்கும் நேரில் சென்று, அளந்து பார்த்தவர் போன்று கணித்துச் சொல்லும் அறிஞர்கள் இருந்தனரே!!

பகலவனையே கோள்கள் சுற்றி வருகின்றன என்ற வானவியல் அரிச்சுவடியை வெ(கொ)ள்ளையன் கற்கத் தொடங்கியது சில நூற்றாண்டுகளுக்கு முன்னர். ஆனால், நாமோ, ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வானவியலில் முனைவர் பட்டமே பெற்றிருந்திருக்கிறோம்! 💪🏽

வாளோடு தோன்றிய மூத்தகுடி என்றுமே பகுத்தறிவோடு விளங்கியது என்பதற்கு இப்பாடலும் ஒரு சான்றாகும்.

(வேர்: திரு மாரிராஜனின் முகநூல் பதிவு)

oOOo

அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

No comments:

Post a Comment