Showing posts with label பேர்ஒளியாய். Show all posts
Showing posts with label பேர்ஒளியாய். Show all posts

Saturday, July 4, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு - பாடல் #52 - சோதிர்லிங்கம், தொல்மறை - சிறு விளக்கம்

தில்லைவனம் காசி திருவாரூர் தென்மதுரை
நெல்லையிலும் பேர்ஒளியாய் நின்றமலை - தொல்லைமறை
பாடுமலை சந்ததமும் பத்தர்அகம் மேவிநடம்
ஆடுமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #52

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙏🏽

🔸தில்லைவனம் ... பேர்ஒளியாய் நின்றமலை

தில்லை, காசி, திருவாரூர், மதுரை மற்றும் நெல்லை ஆகிய இத்திருத்தலங்களில் சமாதியடைந்திருக்கும் திருமூலர் 🌺🙏🏽, நந்திதேவர் 🌺🙏🏽, கமலமுனி 🌺🙏🏽, சுந்தரானந்தர் 🌺🙏🏽 மற்றும் நெல்லையப்பர் 🌺🙏🏽 (உண்மையான பெயர் தெரியவில்லை) ஆகிய மாமுனிவர்கள் சகஜ சமாதியில் இருந்தவர்கள் என்று பாடுகிறார் குருநமச்சிவாயர் 🌺🙏🏽.

பேர்ஒளியாய் - ஒளிமயமாய் - மெய்ப்பொருளாய் (மெய்ப்பொருளே ஒளி எனப்படும்). மெய்ப்பொருளாகவே இருந்தவர்கள். சகஜ சமாதியில் இருந்தவர்கள். ஒளியுடல் கொண்டவர்கள். ஆரியத்தில், சோதிர்லிங்கங்கள் எனப்படும் (சோதி - ஒளி, லிங்கம் - உடல்).

சோதிர்லிங்கம் எனில் நமக்கு 12 என்ற எண் நினைவுக்கு வரும். உடன், "தமிழகத்தில் உள்ள ஒரேயொரு சோதிர்லிங்கத் தலம் இராமேச்சுரம்" என்ற வரியும் நினைவுக்கு வரும். 😁 இந்த பட்டை நாமம் வடக்கிலிருந்து போடப்பட்டது. மிகவும் தொன்மையானதும், உலக மதங்களின் தாயாகிய இந்து சமயத்தின் பிறப்பிடமுமாகிய தமிழகம் ஒரேயொரு ஒளியுடலாரைத் தான் பெற்றெடுத்தது என்பதை ஏற்கமுடியாது! (விட்டால், ரிஷிவர்ஷாவிலிருந்து அவர்கள் வந்துசேர்ந்தபோது, இங்கு தமிழர்களில் ஒருவர்தான் கோவணமே கட்டியிருந்தார் என்று சொன்னாலும் சொல்வார்கள்!! 😏)

சில திருத்தல வகைகள்:

🔹சுயம்புத் தலங்கள் - எந்த மெய்யாசிரியரின் வழிகாட்டுதல் இல்லாமல் தாமாகவே மெய்யறிவைப் பெற்ற மாமுனிவர்களின் சமாதிகள்

🔹குருத்தலங்கள் - இத்தலங்களில் சமாதி அடைந்துள்ள மாமுனிவர்கள், தாங்கள் உடல் தாங்கியிருந்த காலத்தில் கல்விச்சாலைகளை நடத்தியிருப்பார்கள்; சிறந்த ஆசிரியர்களாக இருந்திருப்பார்கள்.

🔹வீரட்டத் தலங்கள் - இத்தலங்களில் சமாதியடைந்துள்ள மாமுனிவர்கள், அறியாமை இருள் விலகி நிலைபேறு அடையும் வரை தமக்குள் நடந்த நிகழ்வுகளை மிக நுணுக்கமாக கண்டுணர்ந்து வெளியிட்டிருப்பார்கள். அவர்கள் வெளியிட்ட பேருண்மைகள் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கும். திருக்கடவூரில் சமாதியாகி இருக்கும் திரு மார்கண்டேய மாமுனிவர் 🌺🙏🏽 இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாவார். மெய்யறிவு வெளிப்படும் விதத்தைக் கண்டுணர்ந்து இவர் வெளியிட்ட பேருண்மை தான் சிங்கப்பெருமாள், முருகப்பெருமான், சிவனுமைமுருகு (சோமாஸ்கந்தர்) ஆகிய திருவுருவங்களுக்கு அடிப்படையாகின்றது.

அண்மையில் நம்மிடையே வாழ்ந்த பகவான் திரு ரமணர் 🌺🙏🏽 ஒரு சிறந்த ஒளியுடலார் ஆவார். யாருடைய வழிகாட்டுதலும் இல்லாமல் நிலைபேற்றினை அடைந்ததால் இவர் சுயம்புத் திருமேனி உடையவராகிறார்.

🔸தொல்லைமறை பாடுமலை

தொல்லைமறை - பழமையான ஆரிய மறை நூல்கள். அணு, பிண்டம், அண்டம் என எல்லாவற்றின் தோற்றம், இயக்கம், மறைவு பற்றி, பன்னெடுங்காலமாக, நமது மாமுனிவர்கள் கண்டுணர்ந்து வெளியிட்ட தகவல்களை மறைத்து வைத்திருக்கும் தொகுப்பு. ஒரு எடுத்துக்காட்டு. காஷ்யப முனிவர் எல்லா உயிர்களுக்கும் தந்தை என்று பதிவு செய்திருப்பார்கள். இதன் உண்மையான பொருள் ஈரப்பதமே (காஷ்யபர்) உயிர்கள் தோன்றுவதற்கு அடிப்படை என்பதாகும்!! மேற்கத்திய அ'ழி'வியல் கடந்த 300 ஆண்டுகளில் "கண்டுபிடித்த" கோட்பாடுகளை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் மாமுனிவர்கள் கண்டுணர்ந்துள்ளனர். 💪🏽

திருமறைகளுக்குள் பல பகுதிகள் அடங்கியிருந்தாலும், அவற்றிற்கு மங்காத புகழ் சேர்ப்பது ஆன்ம அறிவியலைப் பற்றிய உபநிடதங்களே. இந்த வெண்பா பாடலில் "மறை" என்ற சொல்லின் மூலம் ஆசிரியர் குறிப்பது இந்த உபநிடதங்களைத் தான்!

ஏனெனில், இதன் பின்னர் "பாடும்" என்று தான் பாடியிருக்கிறாரே தவிர "பாடிய" என்று பாடவில்லை. பாடும் என்ற சொல் நிகழ்காலத்தையும் குறிக்கும்; எதிர்காலத்தையும் குறிக்கும். முன்னொரு காலத்தில் தனக்குள் மூழ்கிய ஒரு மாமுனிவர் "நீயே அது" (தத்வமஸி) என்ற முத்தையெடுத்துக் கொடுத்தார். சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த ரமண மாமுனிவர் "தன்மையின் உண்மையை தான் ஆய தன்மை அறும்" என்ற முத்தையெடுத்துக் கொடுத்தார். இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் சரி, தனக்குள் மூழ்கும் ஒரு மாமுனிவர் இதே போன்றொரு முத்தைத்தான் வெளிக் கொணருவார். எனவே தான் "பாடும் மலை" என்று பாடினார் ஆசிரியர்.

தொல்லை மறை பாடும் மலை - என்றும் ஆன்மாவை/மெய்ப்பொருளை/நிலைப்பேற்றைப் பற்றியே பாடும் சிவம்! 🙏🏽

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽