Tuesday, June 18, 2024

திரு செவிடை நாயனார் 🌺🙏🏽🙇🏽‍♂️ - பெயர் விளக்கம்.


ஓசூரில் உள்ள ஒரு மலையில் குடி கொண்டிருப்பவர். 

🌷 இவரொரு தான்தோன்றி (அசுரத்தில், சுயம்பு) - அதாவது, மலைக்கோயில் கருவறையில் திருநீற்று நிலையிலிருக்கும் (அசுரத்தில், சமாதியிலிருக்கும்) பெருமான் யாரோ, அவர், பகவான் திரு இரமண மாமுனிவர் போன்று, யாருடைய வழிகாட்டுதலுமின்றி மெய்யறிவு பெற்றவராவார்.

வெகு பழமையான இத்திருக்கோயிலில், பேரரசர் முதலாம் இராஜேந்திர சோழரின் காலத்திலிருந்து கல்வெட்டுகள் கிடைக்கின்றன. அக்கல்வெட்டுகளில், "செவிடை நாயனார்" என்றே இங்கு குடி கொண்டிருக்கும் பெருமான் அழைக்கப்பட்டுள்ளார். இவ்வாறே, நம் திருநெறியத்தமிழ் மண்ணில் குடி கொண்டிருக்கும் அத்தனை பெருமான்களும், மேன்மையான தென்தமிழ் பெயர்களால் அழைக்கப்பட்டுள்ளனர். தெலுங்கு விஜயநகர / நாயக்கர்கள் ஆட்சி காலத்தில், நம் திருக்கோயில்களுக்குள் புகுந்த அசுரர்கள், நம் பெருமான்களின் பெயர்களை அசுரப்பெயர்களாக மாற்றிவிட்டனர்! அவ்வாறு, இங்கிருக்கும் பெருமானுக்கு அவர்கள் மாற்றிய பெயர் "திரு சந்திரசூடேசுவரர்" ஆகும்.

👎🏽 சந்திரசூடேசுவரர் - மனதை தரித்திருக்கும் பெருமான். இப்பெயரை செவிடை என்ற தென்தமிழ் பெயரை அடிப்படையாகக் கொண்டு ஆக்கியிருக்கிறார்கள்.

🌷 செவிடை - செ + விடை. விடை - மனம். செ - உயர்ந்த / எளிய.

அதாவது, அப்பெருமான் எளிய / உயர்ந்த மனதினை உடையவராய் இருக்கிறார்.

🔸 எளிய மனம் - அவரை அணுகுதல் எளிதாகும். கடுமையாக நோன்புகளை நோற்கத் தேவையில்லை. வெகுவாக உடலை வருத்திக் கொள்ளத் தேவையில்லை. உண்மையான தேடுதலிருந்தால் போதும். மெய்யறிவுப் பாதையில் திருப்பிவிடுவார்.

🔸 உயர்ந்த மனம் - எவ்வளவு கொடியவனாக இருந்தாலும், அவருக்கே தீங்கிழைத்திருந்தாலும், அவரை நாடினால் போதும், உய்வதற்கு வழிகாட்டிவிடுவார்.

🌷 செவிடு -> செவிடை என்றாகியிருக்கலாம்.

செவிடு என்பது 360 நெல் மணிகளை கொண்ட ஓர் அளவு.
360 நெல் மணிகள் - 360 பாகைகள்
360 பாகைகள் - ஒரு வட்டம்
வட்டம் - முழுமை
முழுமை - குறைவில்லாமை
குறைவில்லாமை - மாசில்லாமை

அதாவது, செவிடை நாயனார் ஒரு மாசிலாமணி ஆவார்.

இவ்வாறு, நமது பெருமான்களின் திருநெறியத்தமிழ் பெயர்களை சிந்தித்துக் கொண்டிருந்தாலே போதும், கரையேறிவிடலாம். ஆனால், இவ்வாறு ஏதும் நடந்துவிடக்கூடாது என்பதற்காகவே, நமது பெருமான்களின் பெயர்களை அசுரத்திற்கு மாற்றியுள்ளனர்!

oOo

2001/2002-ஆம் ஆண்டு வரை, இத்திருக்கோயிலின் நெடுமாடத்திற்கு (அசுரத்தில், கோபுரத்திற்கு) முன்புறம், ஏறக்குறைய 15 அடி உயரமுள்ள, சுண்ணாம்பால் செய்யப்பட்ட விடையின் சிலையிருந்தது. 


அச்சமயத்தில், அருகேயிருந்த டிவிஎஸ் நிறுவனத்தின் தொழில் சற்று தொய்வடைந்திருந்தது. அதை சரி செய்வதற்காக, அந்நிறுவனத்தின் முதலாளியான வேணு சீனிவாசன், ஒரு கூமுட்டை கேரள செய்வினைக்காரனை (அசுரத்தில், மந்திரவாதியை) வரவழைத்துள்ளார். அக்கூமுட்டை, விடையின் பார்வை தொழிற்சாலையின் மீது படுவதால்தான் தொய்வு ஏற்பட்டிருக்கிறது என்று கதை விட்டு, அதை நீக்கிவிடும்படி அறிவுருத்தியுள்ளான். இவரும் அதை நம்பி, தொன்மையான அப்பெரிய விடையை நீக்கிவிட்டு, கல்லாலான சிறிய விடையை நிறுவி, அதற்கொரு கூடமும் (அசுரத்தில், மண்டபம்) கட்டிக் கொடுத்துள்ளார்! அறிவாளி!!

சைவத்தில் விடை என்பது மாயோன் வழிபாட்டில் பெருமாளை குறிக்கும். அதாவது, மனமாகும். ஒருவேளை, விடைக்கு பதிலாக, அங்கு பெருமாள் சிலை இருந்திருந்தால் அகற்றியிருப்பாரா? 😏

"வேணு சீனிவாசன்" என்று அவரது பெற்றோர்கள் அவருக்கு பெயரிட்டதற்கு பதிலாக, "வேணு முட்டாள்வாசன்" என்று பெயர் வைத்திருக்கலாம். பொருத்தமாக இருந்திருக்கும்! 😄

oOOo

அசுரம் தவிர். தமிழ் பயில். 💪🏽

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

No comments:

Post a Comment