Showing posts with label திருஞானசம்பந்தர் திரு நாள். Show all posts
Showing posts with label திருஞானசம்பந்தர் திரு நாள். Show all posts

Thursday, May 27, 2021

திருஞானசம்பந்தர் 🌺🙏🏽🙇🏽‍♂️ திருநாள்!!

வைகாசி - மூலம் (28/05/21)

திருஞானசம்பந்தர் திருநாள்!!

வம்பறா வரிவண்டு மணம்நாற மலரும்
மதுமலர்நற் கொன்றையான் அடியலால் பேணாத
எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்!!

🌺🙏🏽🙇🏽‍♂️

oOOo


சீர்காழி திரு தோணியப்பர் திருக்கோயிலில் உள்ள பெருமானின் விழா வடிவம்


சீர்காழியில் உள்ள பெருமான் பிறந்த இல்லம்


பெருமான் பிறந்த அறை


சீர்காழி திரு தோணியப்பர் திருக்கோயில்

பெருமான் மெய்யறிவு பெற்ற (ஞானப்பால் குடித்த) திருக்குளம் & முதல் பதிகம் பாடிய திருத்தலம்.

தோடுடைய செவியன் விடையேறி ஓர் தூவெண்மதிசூடிக்
காடுடைய சுடலைப்பொடிபூசி என் உள்ளங்கவர்கள்வன்
ஏடுடைய மலரான் முனைநாட் பணிந்தேத்த அருள்செய்த
பீடுடைய பிரமாபுரமேவிய பெம்மான் இவனன்றே!!


திருக்கோலக்கா திருத்தாளமுடையார் திருக்கோயில்

பெருமான் பொற்றாளம் பெற்ற திருத்தலம்.


திருநெல்வாயில் அரத்துறை திரு உச்சிநாதர் திருக்கோயில்

பெருமான் முத்துச்சிவிகை, மணிக்குடை & பொற்சின்னங்களைப் பெற்ற திருத்தலம்.


திருமறைக்காடு (வேதாரண்யம்) திருமறைக்காடர் திருக்கோயில் (விசுவாமித்திர மாமுனிவரின் 🌺🙏🏽🙇🏽‍♂️ சமாதித்தலம்)

அப்பர் பெருமான் 🌺🙏🏽🙇🏽‍♂️ பதிகம் பாடி மறைக்கதவை திறக்க, சம்பந்த பெருமான் பதிகம் பாடி திரும்பவும் மூடிய திருத்தலம்; கோளறு பதிகம் பாடிய திருத்தலம்.


கூடல் மாநகரம்

பெருமானின் பிறவிநோக்கம் ஈடேறிய திருத்தலம். இருள் சமயத்தினரை வென்று நம் மொழி, சமயம் & கலாச்சாரத்தைக் காத்த தலம். பெருமான் மட்டும் தோன்றாமல் போயிருந்தால்... நாம் பிறந்தமேனியர்களாக / மொட்டைகளாக கதியற்று என்றோ வடக்கத்தாருக்கு அடிமைகளாகியிருப்போம்!!

அன்னை தமிழைக் காப்பாற்றிய காரணத்தினால்தான் வடலூர் பெருமானும் 🌺🙏🏽🙇🏽‍♂️ திருவாசகத்தை தனது வழிகாட்டி நூலாகக் கொண்டாலும், தனது மானசீக மெய்யாசிரியராக சம்பந்த பெருமானையேக் கொண்டார்.


திருமயிலை கபாலீச்சுரம்

என்றோ பாம்பு தீண்டி இறந்து சாம்பலாகிப் போயிருந்த பூம்பாவை அம்மையாரை பதிகம் பாடி உயிர்ப்பித்த திருத்தலம்.

(ஆனால், அவர் பதிகம் பாடியது இன்றிருக்கும் திருத்தலத்தில் அல்ல. பரங்கி பொறுக்கி வாஸ்கோட காமா உடைத்தெறிந்த மூலவரைக் கொண்டுவந்து, இன்றிருக்கும் இடத்தில் வைத்துக் கட்டப்பட்டது தான் தற்போதைய திருக்கோயில். உண்மையான கபாலீச்சுரத்தின் (ஒரு மாமுனிவரின் சமாதியின்) மேல்தான் பரங்கியரின் தோமையர் பேராலயம் கட்டப்பட்டுள்ளது. உண்மையான தோமையர் பாரதத்திற்கு வரவேயில்லை என்பதும், அவரது சமாதி இத்தாலியில் உள்ளது என்பதும் உறுதியான பின்னரும் இன்னமும் காட்சிகள் மாறவில்லை!)


திருநல்லூர் பெருமணம் (ஆச்சாள்புரம்) பெருமணமுடையார் திருக்கோயில்

பெருமானுக்கு திருமணம் நடந்த திருத்தலம். திருமணம் முடிந்தவுடன், மனதை கொள்ளை கொள்ளும் "காதலாகி கசிந்து..." பதிகத்தை அருளியவாறு, தனது மனைவி சொக்கியார், நாயன்மார்கள் திருநீலநக்கர், திருநீலகண்டர், முருகனார் ஆகியோருடன் மற்றும் வினைப்பயன் முடிந்திருந்த சிவனடியார்கள் சிலரோடு பெருமான் சிவசோதியுள் கலந்த திருத்தலம்.

🌺🌺🌺🙏🏽🙏🏽🙏🏽🙇🏽‍♂️🙇🏽‍♂️🙇🏽‍♂️


பெருமானின் மணக்கோலம்

காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்நெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது
நாதன் நாமம் நமச்சிவாயவே!!

🌺🙏🏽🙇🏽‍♂️


பெருமானுக்கு உமையன்னை அமுதூட்டும் ஓவியம்

பரந்தெழுந்த சமண்முதலாம் பரசமய இருள்நீங்கச்
சிரந்தழுவு சமயநெறித் திருநீற்றின் ஒளிவிளங்க
அரந்தைகெட புகலியர்கோன் அமுதுசெயத் திருமுலைப்பால்
சுரந்தளித்த சிவகாம சுந்தரிபூங் கழல்போற்றி

-- உமாபதி சிவாச்சாரியார் 🌺🙏🏽🙇🏽‍♂️

சிவாச்சாரியார் அருளிச்செய்த இந்த ஒரு பாடல் போதும் பெருமானின் அருமை பெருமைகளை உணர!

இது உமையன்னையின் துதி பாடலாகும். ஆனால், அன்னைக்கு 1.25 அடி தான்! பிள்ளைக்குத்தான் 2.75 அடி!!

வடக்கிலிருந்து வந்த மதங்களினால் ஏற்பட்ட இருளைப் (அறியாமை, மடமை) போக்கவும், பேருண்மைகளைக் (திருநீறு) காக்கவும், வடக்கத்தாரால் ஏற்பட்ட துன்பங்களை (அரந்தை) நீக்கவும் பிறவியெடுத்த காழியூர் பிள்ளை பசியாறிட திருமுலைப்பால் அளித்ததினால்தான் அன்னை போற்றுதலுக்கு உரியவராகிறாராம்!! ☺️

oOOo

பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

💮🌻🏵️🌸🌼