Thursday, February 27, 2025

தங்க புத்தர் சிலையை விற்று, திருவரங்கம் கோயிலை கட்டியுள்ளார்கள் - ஆ இராசா


இது இவரது கருத்தல்ல. திருவரங்கம் திருக்கோயில் பற்றிய செய்திகளை கொண்டுள்ள "கோயிலொழுகு" (நாமாசுரர்கள் (#) எழுதியது) நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளதைத்தான் இவர் கூறியிருக்கிறார். இது, பெரும்பாலும், உண்மையாக இருக்க வாய்ப்புள்ளது.

(# - ஆரியர்கள், குறிப்பாக, வைணவர்கள், தங்களது புருடாக்களில் திருநெறியத் தமிழர்களை அசுரர்களாக காண்பித்துள்ளதால், நான் அவர்களை அசுரர்கள் என்றழைக்கிறேன்.)

இன்று நாமம் போடும் தொழில் (வைணவம்) செய்து கொண்டிருக்கும் நாமாசுரர்கள், நேற்று மொட்டை போடும் தொழில் (பெளத்தம்) செய்து கொண்டிருந்தார்கள். திரு சீர்காழி பிள்ளையாரின் 🌺🙏🏽🙇🏽‍♂️ (அசுரத்தில், திருஞானசம்பந்தர்) திருப்பணியினால் மொட்டை, அம்மணம் போன்ற வடக்கிலிருந்து வந்த தொழில்கள் போணியாகாமல் போனதால், மொட்டாசுரர்களில் ஒரு பிரிவினர், இங்கிருந்த மாயோன் வழிபாட்டினருடன் கூட்டு சேர்ந்து (அல்லது, அதை விலைக்கு வாங்கி), நாமத்தொழிலாக மாற்றிக்கொண்டனர். அதற்காக அவர்களிடமிருந்த ஒரு தங்க புத்தர் சிலையை விற்று, அப்பணத்தை முதலீடாக பயன்படுத்தியுள்ளனர் என்று எடுத்துக் கொள்ளலாம்.

இன்று நாம விகாரையாக இருக்கும் திருவரங்கம், நேற்று, பௌத்த விகாரையாக இருந்திருக்கலாம். ஆனால், "அதற்கும் முன்னர் என்னவாக இருந்தது?" என்பதுதான் இன்னும் முகமையான கேள்வியாகும்!

oOo

இதற்கு விடையாக, திருச்சி மக்களிடையே நிலவும் ஒரு செய்தியை ஆராயலாம்: சமயபுரம் மாரியம்மன் சிலையும், திருவரங்கம் பெருமாள் சிலையும் [பானைகள் செய்யப் பயன்படும்] ஒரே வகை மண்ணாலானது.


இதைக் கேட்டவுடன் நாம், "அக்காலத்தில், இரு சிலைகளையும், ஒரே சிற்பி ஒரே இடத்து மண்ணைக் கொண்டு வடிவமைத்திருப்பார் போலிருக்கிறது" என்று நினைத்துக் கொள்வோம். இது தவறாகும்!

திருவரங்கம் பெருமாள் சிலைக்கு கீழேயிருப்பவர் திரு சட்டைமுனி பெருமானாவார் (அசுரத்தில், சித்தர்). சமயபுரம் மாரியம்மன் சிலைக்கு கீழேயிருக்கும் பெருமானின் பெயர் தெரியவில்லை. ஆனால், எது மேன்மையான பொருள் என்பது பற்றிய இருவரது கண்ணோட்டமும் ஒன்றாக இருந்துள்ளது. இதனால்தான், "... ஒரே வகை மண்ணாலானது" என்று பதிவு செய்திருக்கிறார்கள்.

வையகத்திலுள்ள யாவற்றையும் இரண்டாக பிரிக்கலாம்:

> காண்பவன்-காணப்படுவது
> உணருபவன்-உணரப்படுவது
> மாறாதது-மாறுவது
> அழியாதது-அழிவது
> அசையாதது-அசைவது

மேற்கண்ட இரு பெருமான்களும், மாறிக்கொண்டேயிருக்கும் மனதையும், உடலையும், வையகத்தையும் பெரிதாக கருதியுள்ளனர்.

மாறாததை போற்றினால் ஐயன் (சிவன்) வழிபாடு. மாறுவதை போற்றினால் அன்னை வழிபாடு. மாறுவதை ஆணாகக் கண்டால்... மாயோன் வழிபாடு! இவ்வழிபாடே சட்டைமுனி பெருமானின் திருவிடத்தில் (அசுரத்தில், சமாதியில்) நடந்திருக்கலாம். பின்னர், வடக்கிலிருந்து வந்த மொட்டாசுரர்களின் கைகளுக்கு சென்று, இன்று, நாமத்தொழிலின் தலைமையகமாக மாறியுள்ளது.

oOo

சீர்காழிப் பிள்ளையாரால் புவாவுக்கு லாட்டரி அடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட மொட்டாசுரர்களுக்கு அப்போதிருந்த தெரிவுகள் 2:

🥂 மீண்டும் தேவலோகத்திற்கு திரும்பி, அன்றைய அசோகன் முதல் இன்றைய தெய்வப்பிறவி வரை, தெற்கை கொள்ளையடித்துக் கொடுக்கும் தட்சிணையில் சோமபானம் குடித்துக் கொண்டு, ஊர்வசி, அரம்பை போன்ற ஐயிட்டங்களின் குத்தாட்டத்தை கண்டுகளித்துக் கொண்டிருத்தல். அல்லது,

🤑 இங்கேயிருக்கும் ஏதாவதொரு பிரிவினரோடு இணைந்து, தொழிலை தொடருதல்.

மொட்டாசுரர்களில் ஒரு பிரிவினர் 2வது தெரிவை தேர்ந்தெடுத்தனர். அவர்களே, இன்று, நாமாசுரர்களென்று (நாம மதத்தை வழிநடத்துபவர்கள்) அறியப்படுகின்றனர்.

(ஏன் பரந்து, விரிந்து, வலுவுடன் திகழ்ந்த அன்னை வழிபாட்டினருடன் இணையாமல், சிறிய அளவிலிருந்த மாயோன் வழிபாட்டை விலைக்கு வாங்கினர்? இதற்கான "கைங்கரியத்தை" வேறொரு நாள் வைத்துக் கொள்வோம்! ☺️)

oOo

இன்று,

💥 நாமம் போட்டுட்டாங்களா? = ஏமாற்றிவிட்டார்களா?
💥 நாமம் போட்டுட்டியா? = ஏமாற்றிவிட்டாயா?
💥 பட்டை நாமம் சாத்திவிட்டார்களா? = நன்றாக ஏமாற்றிவிட்டார்களா?

நேற்று,

💥 மொட்டை போட்டுட்டாங்களா? = முழுவதும் கறந்துவிட்டார்களா?
💥 மொட்டை போட்டுட்டியா? = முழுவதும் கறந்துவிட்டாயா?

இவ்வளவுதான் வைணவ & பௌத்த தொழில்களின் வரலாறு!! 👊🏽👊🏽

oOOo

அசுரம் தவிர். தமிழ் பயில். 💪🏽

அருள் நிறைவான அன்புக்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Tuesday, February 18, 2025

கும்பத் திருவிழா: சிறு விளக்கம்


😔 கும்பத் திருவிழா நெரிசலில் சிக்கி 30+ பேர் இறப்பு!


😔 டில்லி தொடரி நிலைய நெரிசலில் சிக்கி 18 பேர் இறப்பு!

😔 300 கிமீ நீளத்திற்கு போக்குவரத்து நெரிசல்!

😔 பிரயாக்ராஜ் ஆறுகள் குளிக்க தகுதியற்றவை - நடுவண் மாசுக் கட்டுப்பாடு வாரியம்

ஒரு குறிப்பிட்ட சமயத்தில், ஒரு குறிப்பிட்ட நீர் நிலையில் மூழ்கியெழுந்தால் வீடுபேறு கிட்டுமென்று நம்புவது முட்டாள்தனம்!!

🌷 கங்கை - வெள்ளை.
🌷 யமுனை - கருப்பு.
🌷 கங்கையும் யமுனையும் கலக்குமிடம் - வெள்ளையும் கருப்பும் கலக்குமிடம் - ஒளியும் இருளும் கலக்குமிடம்.
🌷 வெள்ளை / ஒளி - நாம் - நமது தன்மையுணர்வு (சிவம்).
🌷 கருப்பு / இருள் - நம்மைத் தவிர மீதமனைத்தும் - மனம், உடல், வையகம் என மொத்த படைப்பு (அன்னை).
🌷 கங்கை+யமுனை = வெள்ளை+கருப்பு = ஒளி+இருள் = உணர்வு+படைப்பு = நாமெடுத்திருக்கும் பிறவி. அல்லது, நாம் வாழும் வாழ்க்கை!

🌷 காளை வீடு (அசுரத்தில், ரிஷப இராசி) - நிலைத்த வீடுகளிலொன்று (அசுரத்தில், ஸ்திர இராசி).
🌷 வியாழன் (அசுரத்தில், குரு) - இறையருள் / மெய்யாயரின் அருட்பார்வை (அசுரத்தில், குருவின் அருட்பார்வை).

🌷 கூடுதுறையில் (அசுரத்தில், சங்கமத்தில்) மூழ்கியெழும்போது, அதுவரை உண்ட ஒரு காய்கறியை, "இனி உண்ணமாட்டேன்" என்று உறுதி பூண்டல்:

🔸 காய்கறி - காய் - அசுரத்தில், காயம் - உடல்.
🔸 காயை விடுதல் - காயத்தை விடுதல் - "நான் இவ்வுடல்" என்ற எண்ணத்தை விடுதல்.

(உறுதி பூணாமல் வெறுமனே மூழ்கியெழுந்தாலும் இவ்விளக்கம் பொருந்தும்.)

🌷 இறுதியாக, யாவற்றையும் இணைப்போம்: காளை வீடு + வியாழனின் பார்வை + மூழ்கியெழுதல்:

ஒரு சமயத்தில், இறையருளால், அல்லது, பகவான் திரு இரமண மாமுனிவர் போன்ற பெருமானின் அருட்பார்வையால், "நாம் இவ்வுடலல்ல" என்ற அறிவு தோன்றும். அப்போது அவ்வறிவை இறுகப் பற்றிக்கொண்டு, வாழ்வை உதறிவிடவேண்டும்.

"சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொன்னால்" என்பது போல, செய்யும் வினைமுறைகளின் (அசுரத்தில், சடங்குகளின்) பொருளுணர்ந்து செய்தால் பயன் விளையும். இல்லையெனில், பொருட்செலவு, வீண் அலைச்சல், உயிரிழப்பு, நோய் தொற்று... போன்றவைதான் விளையும்!!

oOOo

அருள் நிறைவான அமுதக்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻