Thursday, August 28, 2025

கூமுட்டை கணியரால் (சோதிடரால்) முகமை வேட்பாளர் படும்பாடு! ☺️

"மனைவியை விட்டுப் பிரிந்து வாழ்ந்தால் மன்னராகலாம்" என்றொரு கூமுட்டை சொன்னதை நம்பி, மனைவியை விட்டுப் பிரிந்து வாழ்கிறாராம் ஒரு சிங்களத் தெலுங்கு நடிகர்! 😀

"3 துறவியரை வீட்டிற்குள் வரவழைத்து மரியாதை செய்தால், அரச பதவியை தக்க வைத்துக் கொள்ளலாம்" என்றொரு கூமுட்டை சொன்னதை நம்பி, 3 நாமாசுரரை வீட்டிற்குள் வரவழைத்து மரியாதை செய்திருக்கிறார் கொல்டியாள் முன்னேற்றக் கழகத்தின் (கொமுக) பட்டத்து இளவரசர்! 😃

"கையில் கருங்காலி வைத்திருந்தால் சிறப்பான எதிர்காலம் அமையும்" என்றொரு கூமுட்டை சொன்னதை நம்பி, கையும் கோலுமாக திரிகிறாராம் மதுரை தெலுங்கரின் மனைவி! 😄 இதே அறிவுரையை கேட்டு, காலை நடை பயணத்தின் போது, கருங்காலிக் கோலை பயன்படுத்துகிறாராம் தற்போதைய கொமுக மன்னர்! 😁

(அடியேனும் பிறப்பால் தெலுங்கன்தான். ஆனால், உணர்வால் திருநெறியத் தமிழன்! 🙏🏽)

oOo

🌷 மனைவியை விட்டுப் பிரிந்து வாழ்தல்

> கணவன் & மனைவி - அம்மையப்பர்
> கணவன் - அப்பன் (சிவன்) - நான் எனும் நமது தன்மையுணர்வு
> மனைவி - அம்மை - மனம்
> மனைவியை பிரிதல் - மனதை பிரிதல் 
> மனதை பிரிதல் - மனதை கண்டுகொள்ளாதிருத்தல்
> மனதை கண்டுகொள்ளாதிருந்தால் - மனமடங்கும். தொடர்ந்து கடைபிடித்தால், காலப்போக்கில், அழிந்தே போகும்.
> மனமழிந்தால் மீதமிருப்பது - நமது தன்மையுணர்வு மட்டுமே. இதுவே அரச பதவியெனும் வீடுபேறாகும்.

🌷 கையில் கருங்காலி வைத்திருத்தல்

கருங்காலி மரம் உறுதி யானதாகும். முதலில், கருங்காலி மரத்தின் ஒரு பகுதியை / ஒரு கிளையை வெட்டியெடுத்து, சீர் செய்து, கோடாலிக்கு பிடியாக பொருத்திக்கொண்டு, பின்னர் அதைக் கொண்டே மரத்தை வெட்டிச் சாய்ப்பார்கள். இந்த அடிப்படையில், தான் சார்ந்துள்ள குடும்பத்தை, நிறுவனத்தை, குழுவை, இனத்தை, நாட்டை அழிப்பவரை கருங்காலிகள் என்றும், அவர்களது செயலை கருங்காலித்தனம் என்றும் அழைக்கிறோம்.

இந்த வையகத்தில், எதையும் நாம் மனதின் வழியாகத்தான் அறிய முடியும். ஓர் எடுத்துக்காட்டிற்காக, திரு அருட்கடல் பெருமானின் (அசுரத்தில், பகவான் இரமணர்) "நான் யார்?" என்ற அறிவுரையை எடுத்துக் கொள்வோம்.

மேற்கண்ட அறிவுரையை பற்றி படிக்கிறோம்; அல்லது, கேள்விப்படுகிறோம். உடனே, அது நமது மனதின் ஒரு கூறாகிவிடும். அடுத்து, அதைப்பற்றி சிந்திக்க தொடங்குகிறோம். செயல்படுத்துகிறோம். ஒரு சமயத்தில் மனமழிந்து தெளிவு பெறுகிறோம். இவ்வாறு, மனதின் ஒரு கூறாகி, பின்னர் மனதையே அழிப்பதால், "நான் யார்?" என்ற அறிவுரை கருங்காலியாகிறது!

காலையில் கண் விழித்தது முதல், இரவு உறங்கும் வரை, தன்னை நாடும் பயிற்சியை ("நான் யார் ?" என்ற சிந்தனை) இடைவிடாது செய்யவேண்டும். விட்டு விட்டு செய்தால் பயன்படாது. இதையே, "கருங்காலிக் கோலை எப்போதும் கையில் வைத்திருக்கவேண்டும்" என்று பதிவு செய்திருக்கின்றனர்!

மனமழிந்த பிறகு அங்கு செய்வதற்கு ஒன்றுமிருக்காது. எதுவும் நம்மை பாதிக்காது. வருவதை வரவிட்டு, போவதை போக விட்டு, திரைப்படத்தை பார்க்கும் ஒரு பார்வையாளனை போன்று வாழ்க்கையை பார்த்துக் கொண்டிருப்போம். இதுவே கருங்காலியால் கிடைக்கும் "சிறப்பான எதிர்காலமாகும்"!

🌷 வீட்டிற்குள் 3 துறவியரை வரவழைத்தல்

முன்னர் கண்ட இரண்டும் நிலைபேற்றினை போற்றுகிறதெனில், இது அலைபேற்றினை போற்றுகிறது.

> அலைபேறு - மனதை அலைபாய விடுவது, பற்றுகளை சேர்த்துக் கொள்வது, பிறவி சுழற்சியில் இருப்பது. அதாவது, இப்போது நாமிருக்கும் நிலை.

> வீடு - நமது உள்ளம்
> 3 துறவிகள் - நனவு, கனவு, தூக்கம் என்ற 3 நிலைகள்

"அன்பே வா" திரைப்படத்தில் ஒரு ஒரு காட்சியில் கம்பிச்செய்தி (அசுரத்தில், தந்தி) வரும். அதைப் படித்துவிட்டு,

நாகேஷ்: நாளைக்கு முதலாளி வர்றார்
மனோரமா: (ஏற்கனவே அங்கிருக்கும் எம்ஜிஆர்தான் முதலாளி என்பது இவருக்கு தெரியும். எனவே...) என்னது? முதலாளி வர்றாரா?
நா: பின்ன என்ன இங்கயா இருக்குறாரு?

இந்த நகைச்சுவை காட்சிக்கு இணையானதுதான் நனவு, கனவு & தூக்கம் என்ற 3 துறவிகளை நமக்குள்ளே வர விடுவதென்பது! ஏற்கனவே அவர்களை உள்ளே வரவிட்டுத்தான் அல்லல் பட்டுக் கொண்டிருக்கிறோம்! 😁 மறுபடியும் எங்கிருந்து உள்ளே வரவிடுவது?

எனில், "அரச பதவியை தக்க வைப்பது" என்பது... நாம் ஏற்கனவே வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையை தக்க வைப்பதாகும்! 😆🤭 இது மட்டும் கொமுக-வின் பட்டத்து இளவரசருக்கு தெரிந்தால், அந்த கூமுட்டையின் நிலை... 😂! இது போன்று, மற்றவருக்கும் அவர்கள் பின்பற்றிக் கொண்டிருக்கும் முட்டாள்தனத்தின் உண்மைப் பொருள் தெரிந்தால், அந்த கூமுட்டைகளின் நிலை... 🤣🤣!

கணியரில் சிலர் மற்றவரிடமிருந்து தங்களை வேறுபடுத்தியும், உயர்த்தியும் காட்டுவதற்காக, உட்பொருளை உணராமல் மெய்யியல் சொற்றொடர்களை சோதிடத்திற்குள் புகுத்தி, அதை கெடுத்து, அதன் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை அழித்துக் கொண்டிருக்கின்றனர்!!

oOOo

அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Tuesday, August 19, 2025

திருக்கயிலாயக் காட்சி எனும் சூழ்ச்சியில்லாக் காட்சி!

அப்பர் பெருமான் 🌺🙏🏽🙇🏽‍♂️ திருக்கயிலாயக் காட்சியை கண்ட போது, அம்மையப்பரோடு சில அசுரர்களும் காட்சி கொடுத்தனர் போலிருக்கிறது! 😜

oOo

திருக்கயிலாயக் காட்சி:

ஒரு நீர் நிலையில், பாதியுடல் நீருக்குள் இருக்குமாறு, அப்பர் பெருமான் நின்று கொண்டிருப்பார். அவருக்கு எதிரே, விடை மீது அமர்ந்தவாறு திரு அம்மையப்பர் காட்சி கொடுத்துக் கொண்டிருப்பர்.

> அப்பன் + அம்மை + விடை = 
> அவன் + அவள் + அது = 
> காண்பான் + காட்சி + காணும் செயல் = 
> தன்மையுணர்வு + காட்சி (படைப்பு) + மனம்

நமது அன்றாட வாழ்வும் இத்தகையதே. நாமும் ஒரு காட்சியை காணும் போது உணர்வுடன் இருக்கிறோம். காட்சி தோன்றுகிறது. காணுதல் எனும் செயலும் நடக்கிறது. எனில், நாம் காணும் காட்சிக்கும், பெருமான் கண்ட திருக்கயிலாயக் காட்சிக்குமுள்ள வேறுபாடென்ன?

இதற்கான விடையை திரு திருவாதவூரடிகள் (அசுரத்தில், மாணிக்கவாசகர்) கொடுக்கிறார். அப்பர் பெருமான் பெற்ற அதே காட்சியை, அடிகளார் திருக்கழுக்குன்றத்தில் பெறுகிறார். அதை, "சூழ்ச்சியில்லாக் காட்சி" என்றழைக்கிறார்.

இப்போது நம்மிடம் வந்து, "நீ வேறு. உனது மனமும், உடலும், வையகமும் வேறு." என்று சொன்னால் ஏற்றுக் கொள்வோமா? ஏற்றுக்கொள்ள மாட்டோம். ஏன்? நமக்கு கிடைக்கும் நுகர்வு (அசுரத்தில், அனுபவம்) அத்தகையது. உண்மையை இம்மியளவு கூட உணர முடியாதவாறு காட்சிகள் திறம்படத் தோன்றுகின்றன. இதுவே அன்னை / பெருமாளின் சூழ்ச்சியாகும் (அசுரத்தில், மாயை).

திருக்கயிலாயக் காட்சியில் சூழ்ச்சிக்கே இடமிருக்காது. யாவற்றிலிருந்தும் நாம் விலகியிருப்போம். அக்காட்சியை காண்பதால் தெளிவு கிட்டும். தெளிவு கிட்டியதால்தான், "கண்டறியாதன கண்டேன்" என்று பாடினார் அப்பர் பெருமான்.

ஒவ்வொரு ஆண்டும் திருக்கயிலாயக் காட்சியை நினைவு கூறுவது எதற்காக? சிந்திப்பதற்காக. பெருமான் பெற்ற தெளிவை நாமும் பெறுவதற்காக. தெளிவு பெற்று, பிறவிச் சூழற்சியிலிருந்து மீள்வதற்காக.

எனில், சூழ்ச்சியில்லா காட்சியில் சூழ்ச்சியின் மனித வடிவங்களில் ஒன்றான அசுரருக்கென்ன வேலை? 👊🏽👊🏽😍😌

oOOo

அசுரம் தவிர். தமிழ் பயில். 💪🏽

அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Thursday, August 14, 2025

ஓமன் நாட்டில் கிடைத்துள்ள பானையோட்டுச் சில்லில் தமிழ்-"மாமி" எழுத்துகள்! 😜

செய்தி: ஓமன் நாட்டில் கிடைத்துள்ள பானையோட்டுச் சில்லில் தமிழ்-"பிராமி" எழுத்துகள் உள்ளன.

மாமி: ஏண்ணா, இது உங்களுக்கே நன்னாயிருக்கா? படி அளக்குறது வாராகி அம்பாள். அவளோட பேர வைக்காம பிராம்மி அம்பாள் பேர வெச்சிருக்குறேளே!

சாஸ்திரிகள்: (சற்று சிந்தித்து விட்டு) சரிடி. இனி கிடைக்கிற வஸ்துகளுக்கு தமிழ்-மகேஸ்வரி, தமிழ்-கௌமாரி, தமிழ்-வைஷ்ணவி, தமிழ்-வராகி, தமிழ்-இந்திராணி & தமிழ்-சாமுண்டி-ன்னு பேர் வெக்கிறேன்.

மாமி: இதுவும் செக்யூலரா இருக்குண்ணா. ஆனா, எல்லாத்துக்கும் முன்னாடியும் நீச பாஷைய Prefixஅ சேர்க்கணுமா?

சா: இது கலிகாலம்டி. மறுபடியும் அசோகன், கிருஷ்ணதேவராயர், திருமலை நாயக்கர் காலம் வரும்டி. அப்போ கம்ப்ளீட்டா சம்ஹாரம் பண்ணிடலாம். அது வரைக்கும் சித்த பொறுத்துக்கோடி.

😄😄😄

கரிகால் பெருவளத்தானை தங்களது இனத்தைச் சேர்ந்தவனாக காண்பித்து, தங்களுக்கு பெருமை சேர்த்துக் கொள்வார்கள் தெலுங்கர்கள். "எங்களது நாம விகாரைக்கு வந்து வழிபட்டுச் சென்ற பிறகே, வேள்வி செய்து அங்கயற்கன்னியை பெற்றெடுத்தார் பாண்டியர்" என்று புருடா விட்டு, நாமத்தொழிலானது திருநெறிக்கு இணையானது / முந்தையது என்று படங்காட்டுவார்கள் நாமாசுரர்கள். இவை போன்று, எங்கெல்லாம் பழந்தமிழரின் எச்சங்கள் கிடைக்கின்றனவோ, அங்கெல்லாம் அசுரத்தை சேர்த்து, தங்களை தொல்தமிழருக்கு இணையாகவோ / மேலானவராகவோ காட்டுவார்கள் அசுரர்கள்.

💥 2,300 ஆண்டுகளுக்கு முன்னர் தேவலோகத்தில் (அதாவது, பீடாவாயன்களின் மண்ணில்), மன்னன் முதல் குடியானவன் வரை ஒரு பயலுக்கும் கல்வியறிவு கிடையாது.

💥 1,800 ஆண்டுகளுக்கு முன்னர் அசுரத்திற்கு வரி வடிவம் கிடையாது.

💥 7ம் நூற்றாண்டில் கூட அன்னைத் தமிழிலிருந்து சொற்களை திருடிக் கொண்டிருந்தனர் என்பதை குமரில பட்டர் என்ற அசுர அறிஞரே பதிவு செய்திருக்கிறார். (அவர்களது மொழி பழமையானது, முழுமையானது எனில் ஏன் திருடிக் கொண்டிருந்தார்கள்? 😏)

💥 இதுவரை தேவலோகத்தில் ஓர் உரோமானிய, கிரேக்க காசு கூட கிடைக்கவில்லை! (பொருளியல் பற்றி தெரிந்திருந்தால் தானே! தெரிந்ததெல்லாம் படங்காட்டுதல், பீடாவை மென்று துப்புதல், தமிழரிடமிருந்து திருடுதல், பிடுங்குதல், சுரண்டுதல்...)

👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽

தமிழே மொழி. தமிழரது பண்பாடே பண்பாடு. தமிழரது திருநெறியே சமயம். 💪🏽🙏🏽

அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Tuesday, August 12, 2025

அகத்திய மாமுனிவர் பெருமாளை குறுகச் செய்ததால் தென்னாடுடையவருக்கு தலைவலி வந்ததாம்!! 😆

"உள்ளத்தை அள்ளித்தா" என்ற திரைப்படத்திலிருந்து ஒரு காட்சி:

சிறையில் இருந்து தம்பி-மணிவண்ணன் வெளியே வந்திருப்பார். அவரைப் பார்த்து செந்திலும் பாண்டுவும், "பாஸ், நீங்க ரொம்ப மாறிட்டீங்க. இங்கிலீஷ் பேசுறீங்க." என்று சொல்வர். அதற்கு மணிவண்ணன், "ஜெயிலுக்குள்ள 2 ஃபாரினர்ஸ வச்சிருந்தாங்கோ. ஸ்மக்ளர்ஸ். அவங்களோட பேசிப்பேசி, தமிழ் கொஞ்சம் கட்டாயிடுச்சு; இங்கிலீஷ் கொஞ்சம் ஏட் ஆயிடுச்சு" என்று பதில் சொல்வார்.

இக்காட்சியை போன்று, அறநிலையத் துறை அலுவலர்களும் அசுரர்களோடு பழகிப் பழகி, அவர்களை போன்று புருடா விடக் கற்றுக் கொண்டுள்ளனர் போலிருக்கிறது! 😁

oOo

அடுத்து, சில "பகுத்தறிவு" கேள்விகள் 😜:

😀 அகத்தியர் குறுகச் செய்தது பெருமாளை. எனில், பெருமாளுக்குத்தானே தலைவலி வரவேண்டும்? எப்படி சிவ பெருமானுக்கு தலைவலி வரும்?

😃 பெருமாளை குறுகச் செய்து சிவ பெருமானாக மாற்றிவிட்டால், ஏற்கனவேயிருக்கும் சிவபெருமானின் நிலை என்னவாகும்? 

😄 மேலும், பெருமாளின் வேலையை யார் பார்த்துக் கொள்வார்?

😁 பெருமாள் சிவனாக மாறிவிட்டால், உமையன்னைக்கு குழப்பமேற்படாதா? பெருமாளை காணாது மலர்மகள் அச்சமடையமாட்டாரா?

😆 யார் யாருக்கு பிறந்தார்கள் என்ற குழப்பம் வராதா? இதென்ன மாமாப்பயலின் பரம்பரையா? அல்லது, கொல்டியாள்களின் திராவிசம் கோளோச்சும் இடமா?

(ஜனகராஜின் ஒலிப்பில்) கன்ஃபியூஷன்!! 😂😂🤣

oOo

அகத்தியர், பெருமாள், சிவ பெருமான், சந்தனாதி தைலம் எல்லாம் மெய்யியல் குறியீடுகளாகும்.

🌷 அகத்தியர் - திருக்குற்றாலீசுவரர் என்ற இறைவடிவத்தின் கீழ் திருநீற்று நிலையில் (அசுரத்தில், சமாதியில்) இருக்கும் பெருமான்.

🌷 பெருமாள் - நமது மனம்.

🌷 பெருமாளை குறுகச் செய்வது - நமது மனதை அடக்குவது.

🌷 சிவ பெருமான் - உள்ளபொருள் / நமது தன்மையுணர்வு.

🌷 மனதை விரிய விட்டால் பெருமாளாவோம். மனதை அடக்கி / சுருக்கி / அழித்து விட்டால் சிவமாவோம்.

🌷 மெய்யறிவு பெற்ற பின்னரும், ஜிஎஸ்டி-சூழ் வையகத்தை சமாளிப்பதற்கு தெளிவு, பயிற்சி வேண்டும். இதையே "6 திங்கள்களுக்கு எண்ணெயை காய்ச்சி, இறைவடிவத்தின் மீது ஊற்றி, வழித்தெடுத்தல்" என்ற பகுதி குறிப்பிடுகிறது. (இதை விரிவாக விளக்கினால், இவ்விடுகையின் நோக்கம் சிதறிவிடும். திருவருள் விரும்பின் வேறொரு இடுகையில் விரிவாக பார்க்கலாம். 🙏🏽)

திருக்குற்றாலப் பெருமான் என்பது எந்த மாமுனிவரை குறிக்குமோ அப்பெருமான், தன்னை நாடி வந்தவர்களிடம், "மனதை அடக்கு / அழி. அது போதும். தக்க சமயத்தில் தெளிவு பிறக்கும். பின்னர், அன்றாட வாழ்வில் சந்திக்கும் தொல்லைகளை என்னிடம் கொண்டு வா. சமாளிக்க கற்றுக் கொடுக்கிறேன்." என்று அருளியிருப்பார். இதையே மேற்கண்ட தலைவலிக் கதையாக பதிவு செய்திருக்கிறார்கள். மறையாக்கம் (Encrypt) செய்யப்பட்டு வரும் தரவை மறைநீக்கம் (Decrypt) செய்து பயன்படுத்த வேண்டுமே தவிர, அப்படியே பயன்படுத்தக் கூடாது. 

oOOo

அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Friday, August 8, 2025

அடி செருப்பால! 👊🏽😡

மேற்கண்ட செய்தியை படித்தவுடன் எனக்கு தோன்றிய கருத்து: அடி செருப்பால! 👊🏽😡

எவ்வளவு கும்மாங்-👊🏽 கொடுத்தாலும், 🩴-ஐ சாணியில் தோய்த்து வீசினாலும், முகத்தில் காரியே துப்பினாலும், அனைத்தையும் துடைத்துவிட்டு, தில்லாலங்கடியை தொடரும் கூட்டங்களில் முகமையானது அசுரக் கூட்டமாகும்!!

புலப்படுச் சான்றுகளின் (Tangible Evidence) அடிப்படையிலேயே திருநெறியின் அகவை 5,000+ ஆண்டுகளாகும் (முனைவர் இரா செல்வகணபதி, சைவ சமயக் களஞ்சியம்)! எனில், செவிவழிச் செய்திகளின் அடிப்படையில்... "கல் தோன்றி மண் தோன்றா காலத்தே..." என்ற முதுமொழி குறிப்பிடும் பழமை எவ்வளவோ அவ்வளவு பழமையானது திருநெறியாகும்!!

ஆனால், ஆதிசங்கரர் வாழ்ந்ததாக கருதப்படும் பொழுதோ 7ம் நூற்றாண்டாகும். அவரைப் பற்றிய புனைவு எழுதப்பட்ட பொழுதோ 14-15ம் நூற்றாண்டாகும். அதாவது, 700+ ஆண்டுகளுக்குப் பிறகு! அது எப்படிப்பட்ட பொழுது?

காராம் பசுவின் நெய் கலந்த பருப்புச்சோறு சாப்பிட்டுவிட்டு, சோம பானம் குடித்துவிட்டு, அரம்பை, ஊர்வசி போன்ற அசுர ஐயிட்டங்களின் குத்தாட்டங்களை கண்டுகளித்துவிட்டு, செரிமானத்திற்காக சற்று காலாற நடந்துவிட்டு, அப்படி நடக்கும்போது "சத்" (அதாவது, டப்பு) விஷயங்களை பேசிவிட்டு, பிறகு "தொழில்" (அதாவது, புனைதல்) செய்த பொழுதாகும்.

எளிமையாக சொல்ல வேண்டுமானால்: ஆதிசங்கரரின் வரலாறு புனையப்பட்ட தெலுங்கு விஜயநகர - நாய்'க்கர் பொழுதென்பது அசுரருக்கு, குறிப்பாக, நாமாசுரருக்கு பொன்னானப் பொழுதாகும்.

புருடாவை வெளியிட்ட அடுத்த நொடியே செருப்பு பறக்கும் இன்றைய பொழுதிலும் உண்மையை திரிப்பவர், அவர்கள் வலுவாக இருந்தபோது எவ்வளவு திரித்திருப்பர் என்பது எல்லோருக்கும் உள்ளங்கை நெல்லிக்கனியாகும்.

சூழ்ச்சியின் வடிவான அந்த திரிபுக்கூட்டம் நமது கருவறைகளிலிருந்து விரட்டியடிக்கப்படும் பொழுது - அதாவது, நமக்கு பொன்னான பொழுது - வெகு தொலைவிலில்லை! 😍

oOOo

அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Monday, July 28, 2025

எத்தனுக்கு எத்தன் வையகத்திலுண்டு! 😀


அன்று, "திரு(ட்டு)மறைகள் ஓதப்படுவதை ஒரு தாழ்த்தப்பட்டவன் கேட்க நேர்ந்தால், அவனது காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றவும்!" என்றெழுதிய தெலுங்கரும், நாமாசுரருமான இராமானுஜரை பற்றிய புருடாவை தொடராக எழுதி, நல்லூழ் (அசுரத்தில், புண்ணியம்) சேர்த்துக் கொண்டார் கருணாநிதி.

நேற்று, "3 அசுரர்களை வீட்டிற்குள் வரவழைத்து மரியாதை செய்தால், அரச பதவி கிட்டும்." என்றொரு கூமுட்டை சோதிடன் சொன்னதை நம்பி, 3 நாமாசுரர்களை வீட்டிற்குள் வரவழைத்து, மரியாதை செய்து, வாழ்த்துப் பெற்றார் உதயநிதி.

இன்று, நாமாசுரர்களை வீட்டிற்கு வரவழைத்து, மரியாதை செய்து, அவர்களிடம் சோறு (அசுரத்தில், பிரசாதம்) பெற்று, அவர்கள் போடும் மஞ்சளரிசியை தலை தாழ்த்தி ஏற்று, அவர்களால் காப்புநாண் கட்டிவிடப் பெற்று, மனைவிக்கு காப்புநாணை கட்டிவிட்டு, வாழ்த்துரைப் பெற்றுள்ளார் இசுடாலின். (பகுத்தறிவு என்ற சொல்லுக்கு மட்டும் உயிரிருந்து, இக்காட்சிகளை கண்டிருந்தால்... 🤣)

மேற்கண்ட 3 நிகழ்வுகளையும் சுருக்கினால்: எத்தனுக்கு எத்தன் வையகத்திலுண்டு! 😀 

தமிழ், திராவிசம், சமூகநீதி, மதச்சார்பின்மை என மாநிலத்தையே, இனத்தையே ஏமாற்றிக் கொண்டிருக்கிற கூட்டமும், நாமாசுரர்களிடம் ஏமாந்துள்ளது! 😃

💥 நாமம் போட்டுட்டியா? = ஏமாற்றிவிட்டாயா?
💥 நாமம் போட்டுட்டாங்களா? = ஏமாற்றிவிட்டார்களா?
💥 நாமம் = ஏமாற்று வேலை!
💥 வைணவம் = ஏமாற்று வேலை!!

அசுரர்கள், அதிலும், குறிப்பாக நாமாசுரர்கள், காப்பாற்றுவார்கள் என்று நம்புவது... இலங்கை தமிழர்களை தெலுங்கு இனப்பற்றாளரான கருணாநிதி காப்பாற்றுவாரென்று நம்பியதற்கு நிகராகும்! 😏

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

Saturday, July 5, 2025

கும்பாபிஷேகம் எனும் காது குத்தல்!



(நாளை திருச்செந்தூரிலும், வரும் ஆகஸ்டில் திரு இரமணநிலையத்திலும் குடமுழுக்கு நடக்கவுள்ளன. நிலையத்தை வைத்து இவ்விடுகையை எழுதியிருந்தாலும், செந்தூருக்கும் இது பொருந்தும்.)

🤑 பாலாலயம்:

ஓம் மேபெக்காய நமஹ
ஓம் ஃபாண்டமாய நமஹ
ஓம் மெர்சிடீஸ்ஸாய நமஹ

அடுத்து, வாத்தியாரின் கட்டளை: பகவான், அழகம்மா எல்லாம் எழுந்து, இப்படி வந்து, இந்த வரைபடத்துல உக்காந்துக்கோங்கோ!

(பகவான் எழுவதை பார்த்து, அண்ணாமலை பெருமான், முருகனார் பெருமான் மற்றும் அங்கு குடி கொண்டிருக்கும் அனைத்து பெருமான்களும் எழத் தொடங்குகிறார்கள்.)

உடனே, வாத்தியார், "நீங்கெல்லாம் அப்படியே இருங்கோ. உங்களுக்கு ஜலம் மட்டுந்தான். அஷ்டபந்தனம் இல்லை. அப்படியே ஜலத்த ஏத்துக்கோங்கோ." என்று கட்டளையிடுகிறார்.

🤑 ஹோமம் & கலச ஆவாகனம்:

ஓம் பிஎம்டபிள்யூ-வாய நமஹ
ஓம் ஜகுவாராய நமஹ
ஓம் டெஸ்லாய நமஹ

அடுத்து, வாத்தியாரின் கட்டளை: பகவான், அழகம்மா! இரண்டு பேரும் எழுந்து வந்து, இந்த ஜலத்துல எறங்கிடுங்கோ!

🤑 கும்பாபிஷேகம்:

ஓம் போர்ஷாய நமஹ
ஓம் ஆடியாய நமஹ
ஓம் ஜீப்பாய நமஹ

(அடுத்து, அவர்கள் அழுக்கு செய்த நீரை நெடுமாடங்கள் மீதும், இறை வடிவங்கள் மீதும் ஊற்றுகிறார்கள்.)

வாத்தியார்: பகவானையும், அவரது தாயாரையும் அவங்கவங்க அதிஷ்ட்டானத்துல உக்கார வெச்சாச்சு. பவர் கொடுத்தாச்சு. சேனல் ஓபன் பண்ணியாச்சு. இனி, பக்தாள் அவாள நமஸ்காரம் பண்ணிக்கலாம்!

😄😄😁😁

அவனன்றி ஓரணுவும் அசையாது. ஒரு புல்லைக் கூட தன் விருப்பப்படி அசைக்க முடியாத திருட்டுக்கூட்டம், உள்ளபொருளுக்கு வலு சேர்க்கிறதாம்! தம்மையுணராத ஏமாற்றுக்கூட்டம் உள்ளபொருள் நம்மை காணவும், உள்ளபொருளை நாம் காணவும் வழி ஏற்படுத்திக் கொடுக்கிறதாம்!! 👊🏽 அவர்களது திரு(ட்டு)மறைகளிலேயே இது பற்றிய கதையுண்டு:

செருக்கு மிகுந்திருந்த அசுரக்கூட்டத்திற்கு பாடம் கற்பிப்பதற்காக, இறைவன் ஓர் ஒளிப்பிழம்பாக தோன்றுவார். அதுவரை அப்படியொரு காட்சியை கண்டிராத அக்கூட்டம், அது பற்றி தெரிந்து கொள்வதற்காக, முதலில் நெருப்பை (அக்னி) அனுப்பி வைக்கும். அவர் போய் தன்னைப் பற்றிச் சொல்ல, அப்பிழம்பிலிருந்து ஒரு துரும்பு வந்து விழும். அதை எரிப்பதற்காக நெருப்பு செய்த அனைத்து முயற்சிகளும் தோற்றுவிடும். அடுத்து, காற்றை (வாயு) அனுப்பி வைப்பார்கள். அவரால் அத்துரும்பை அசைக்கக்கூட முடியாது. இறுதியில், அக்கூட்டத்தின் தலைவனான மனம் (இந்திரன்) அப்பிழம்பை பணிவுடன் அணுகுவார். அவரிடம் செருக்கில்லாததால், தன்னைப் பற்றிய உண்மையை அப்பிழம்பே தெரிவிக்கும்.

இதுபோன்று இன்னும் சில கதைகள் உள்ளன. நமது முன்னோர்களும் பல பெருமான்களும் இவர்களது பித்தலாட்டத்திற்கு எதிரானவர்களாக இருந்துள்ளனர். கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான். இறைவனை வைத்து ஊரை ஏமாற்றும் கூட்டங்களை, அந்த இறைவனே ஒழித்துக் கட்டுவார்!

எப்படம் யார்யார்காட்ட காண்பினும் அப்படம்
மெய்ப்படம் காண்ப தறிவு!!

oOo

அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻