தங்கள் முயற்சியில் சற்றும் மனம் தளராத நாமாசுரர், இம்முறை, திருவானைக்கா திருக்கோவிலின் வரலாற்றிலிருந்து ஒரு செய்தியை உட்டாலங்கடி செய்துள்ளனர்! 🤭
முதலில், அவர்களது உட்டாலங்கடி கைங்கரியத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு:
திரு காரைக்கால் அம்மையார், கயிலையின் அடிவாரத்திலிருந்து கண்டபோது, அம்மலை அவருக்கு ஓர் இறைச்சின்னமாக (அசுரத்தில், சிவலிங்கமாக) தோன்றியது. எனவே, அம்மலையை காலால் கடக்காமல், தலையால் கடந்து சென்று, அங்கிருந்த பெருமானை வணங்கினார்.
நாமாசுரரின் உட்டாலங்கடி:
தெலுங்கனான இராமானுஜர் திருமலையின் அடிவாரத்திலிருந்து கண்டபோது, அம்மலைத்தொடரானது, எகிப்திலிருந்து நாமாசுரர் சுட்டுக் கொண்டுவந்த பள்ளிகொண்ட பெருமாள் (1) போலத் தோன்றியது. எனவே, அம்மலைத்தொடரை காலால் கடக்காமல், முழங்காலால் கடந்து சென்று, [நாமாசுரரின் பித்தலாட்டங்களை தலையெழுத்தே 🤦🏽என்று தாங்கிக் கொண்டிருக்கும்] திரு கொங்கணவப் பெருமானை (திருமலைப் பெருமாள்) வணங்கினார்.
வேறுபாடு: அம்மையார் ஒரு மலையை கடந்தார். தெலுங்கர் ஏழு மலைகளை கடந்தார்.
🥹🥹🥹
திருவானைக்கா திருக்கோவிலின் வரலாற்றில் இடம் பெற்றுள்ள ஒரு செய்தி:
அங்குள்ள 4வது மதில்சுவரை, அங்கு உறையும் திரு நாவல் முனிவரே மனிதவடிவில் வந்து, பணியாளருக்கு திருநீற்றை கொடுத்துக் கட்டினார். பின்னர், அந்நீறு அவரவர் கூலிக்கேற்ற பொன்னாக மாறியது.
இப்போது, திருநாங்கூருக்கு வருவோம்:
இந்த விகாரையை பெருமாளே கட்டினார்.
(அங்கு திருநீறு கொடுக்கப்பட்டதற்கு நிகராக இங்கு செய்தியேதுமில்லை. அதாவது, Story Development சரியாக நடக்கவில்லை! 😜)
வேறுபாடு: திருவானைக்கா பெருமான் மதில்சுவரை மட்டுமே கட்டினார். திருநாங்கூர் பெருமான் கோவிலையே கட்டினார்.
🥹🥹🥹
பின் குறிப்புகள்:
1. எகிப்தில் கிடைத்திருக்கும் வரைபடத்தில், ஒரு மனிதர் நீரில் படுத்திருப்பார். அவரை சுற்றி 5 தலைகள் கொண்ட ஒரு பாம்பு இருக்கும். அதை சற்று மாற்றி, பள்ளி கொண்ட பெருமாளாக நம் தலையில் கட்டியுள்ளனர். எகிப்திய வரைபடத்தை பார்த்தவுடன், அதுதான் பள்ளிகொண்ட பெருமாளின் வேரென்ற உண்மை பளிச்சென்று விளங்கும். (வரைபடத்தில், நீல நிற கோடிட்ட குறியீடுகள் நீரை குறிக்கும்)
(திருநெறியை வீழ்த்துவதற்காக நாமாசுரர் எவ்வளவு "உழைத்திருக்கின்றனர்" 😪!! ஆனாலும், பெருமாள் அவர்களுக்கு வழங்கியுள்ள பட்டம்... ஏமாற்றுக்கூட்டம்! (\|/ = ஏமாற்றுவேலை) 😃)
2. "திருநாங்கூர் விகாரையை கோச்செங்கட் சோழர் கட்டினார்" என்றொரு பிட்-ஐ பதிவு செய்திருக்கின்றனர்!
"மறைக்காயர் நகர் கலவி நிலையத்தை கோச்செங்கட் சோழர் கட்டினார்"
"டுமீல் குப்பம் ஒப்பாரி நிலையத்தை கோச்செங்கட் சோழர் கட்டினார்"
மேற்கண்ட இரு சொற்றொடர்களை படித்தவுடன் என்னென்ன உணர்வுகள் தோன்றுகின்றனவோ, அதே உணர்வுகள் முதற்சொற்றொடரை படித்ததும் தோன்றவேண்டும். ஆனால், என்ன நடக்கிறது? கோவில் என்ற சொல்லுக்கு தகுதியான திருநெறி திருக்கோவிலுக்கு இணையாக ஒரு நாம விகாரையை காணும்படி கொம்பு சீவியிருக்கின்றனர்!! 🤬
எல்லாம், கடந்த 7+ நூற்றாண்டுகளாக தமிழரை தமிழரல்லாதோர் ஆண்டதின், பராமரித்ததின் விளைவாகும்! 😡😤
பொழுது இப்படியே போய்விடாது. நல்லது நடக்கும். யாவும் மீண்டும் நலமாகும்.
oOOo
அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽♂️
திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽♂️
🪷🪷🪷🪷🪷