Showing posts with label சிவன். Show all posts
Showing posts with label சிவன். Show all posts

Monday, July 8, 2019

சிவ தத்துவத்தை கடைசியில் போட்ட நாமப் பேர்வழிகள்!! 😠😠



(இடுகைக்குள் நுழையும் முன்... சைவத்தையும் அத்வைதத்தையும் மட்டம் தட்டியே பிழைப்பு நடத்தும் நாமப்பேர்வழிகளைத் தான் எதிர்க்கிறேன். அவர்களிடம் மாட்டிக் கொண்டிருக்கும் பெருமாள்களை 🙏🏼🙏🏼 அல்ல.)

💮🌸🌹🌼🏵️

இவர்களது சரக்கை உயர்த்தி பேச இவர்களுக்கு உரிமையுள்ளது. மற்றவருடையதை தாழ்த்திக் காட்ட இவர்களுக்கு என்ன உரிமையுள்ளது? பரம்பொருளைப் பற்றி பேசக்கூட அருகதையற்றவர்கள். 1300 வருட பித்தலாட்டங்களினால் இவர்கள் சம்பாதித்தது என்ன? #நாமம் என்றால் ஏமாற்று வேலை என்ற பேறு மட்டுமே!!

திருஞானசம்பந்தரும், ஆதிசங்கரரும் கொடுத்த அடிகளிலிருந்து தலை தப்பிக்கவும், வயிற்றுப் பிழைப்புக்காகவும் அன்றிருந்த பெண் தெய்வ வழிபாட்டு கூடாரத்துக்குள் புகுந்து கொண்ட வட பாரத பௌத்த கூட்டத்தின் ஒரு பகுதியே பின்னாளில் நாமப்பேர்வழிகளாக மாறினர். பெண் தெய்வ வழிபாட்டின் அடிப்படை கொள்கை "உயிரை விட உயிரற்றது மேலானது" என்பதாகும். இதனால் தான் இந்த வழிபாடு பண்படாதவர்களின் கையில் இருந்தது. மயானக் கொள்ளை போன்ற அச்சமூட்டும் கொடூர விழாக்களும் அவர்களிடமிருந்தன. இவர்களின் கூடாரத்திற்குள் நுழைந்து தலை தப்பிய பின், தங்களது பித்தலாட்டங்களை அரங்கேற்ற ஆரம்பித்தனர்.

👊🏼 பெண் தத்துவத்தை (மாறுவதை, அழிவதை) ஆணாக்கினார்கள் (மாறாது, அழியாது என்றார்கள்). ஆண் தத்துவத்தை பெண்ணாக்கினார்கள். (இது இவர்களது ஆணாதிக்க புத்தியின் முதல் வெளிப்பாடு)

👊🏼 சைவத்தில் பெண் தத்துவத்திற்கு ஆணுக்கு சமமான இடத்தைக் கொடுத்திருப்பார்கள். இவர்கள் பெண்ணை ஆண் தத்துவத்தின் காலடியில் வைத்திருப்பார்கள். (இவர்களது ஆணாதிக்க புத்தியின் அடுத்த வெளிப்பாடு. இதற்கு "அறிவியல்" விளக்கம் வேறு (1)).

👊🏼 #லிங்கம் எனில் அடையாளம். #சிவலிங்கம் எனில் சிவனின் அடையாளம். #சிவன் என்பவர் சிவநிலையில் இருப்பவர். சிவநிலை என்பது இரண்டற்ற நிலை. #சிவம் என்பது பரம்பொருள். மெய்யறிவாளர்கள் சமாதியடைந்த பிறகு, அவர்களது சமாதியிடங்கள் தொலைந்து போகாமல் இருக்க, அடையாளத்திற்காக வைக்கப்பட்டவைதான் சிவலிங்கங்கள். இதனால் தான், வெடிகுண்டு மதத்தினரின் படையெடுப்புகளிலிருந்து தப்பிய பழம்பெரும் திருத்தலங்களின் சிவலிங்க மூலவர்கள் விதவிதமாக இருக்கக் காணலாம். உண்மை இவ்வாறிருக்க, சமண-பௌத்த மொட்டைகளின் கை ஓங்கியிருந்த காலத்தில், தமிழர்களின் சமயமாகிய சைவத்தை இழிவுபடுத்துவதற்காக லிங்கத்தை ஆண்குறியோடு சமன்படுத்தி ஒரு பிட்டை வெளியிட்டார்கள்!! 😠 இந்த மொட்டைகளிலிருந்து வந்த ஒரு பிரிவினர் தாம் நாமப்பேர்வழிகள். இவர்களது தலபுருடாக்களிலும் ஆண்குறி பிட்டை பதிவு செய்து வைத்திருக்கிறார்கள். பொய்யைச் சொல்லி சொல்லி, இவர்களது வழி வந்த ராமானுஜரே அது உண்மையென்று நம்பிவிட்டார். விளைவு... இவர்களது "புனிதச் சின்னம்" உருவானது. 🤢 ஆம், #ராமானுஜர் பெண்குறியை வைணவச் சின்னமாக அறிவித்தார். 🤮 சிவலிங்கத்தை இழிவுபடுத்துவதற்காக இவர்கள் போட்ட விதையை, பெண்குறியாக இவர்களே அறுவடை செய்திருக்கிறார்கள். 🤗 #பெருமாள் #பாதம் என்று ஊரை ஏமாற்றி, அந்த பெருமாளுக்கும் பெண்குறியை போட்டு விட்டுக் கொண்டிருக்கிறார்கள். 🤭

👊🏼 உயிரற்றதிலிருந்து உயிர் தோன்றியது என்று கடையை விரித்தவர்கள், அவ்வப்போது பறந்து வந்த அழுகின தக்காளி, பிய்ந்த செருப்புகளுக்கு ஏற்ப தங்களது சரக்கை மாற்றிக்கொண்டே வந்தனர். பள்ளி கொண்ட பெருமாள், பெருமாள்-தாயார்(கள்), பெருமாள்-தாயார்-அனுமன், பெருமாள்-தாயார்-அனுமன்-சிவலிங்கம்- மற்றும் பலர். இப்படி சிவலிங்கத்தை இறக்கி வைப்பதன் மூலம் சிவதத்துவத்தை மட்டம் தட்டுகிறார்களாம்! 😏 #சிவம் எனில் எதிலிருந்து அனைத்தும் தோன்றி, நிலைபெற்று, இயங்கி, ஒடுங்குகிறதோ அதுவே சிவம். #பெருமாள் இதற்கும் மேலானவராம்!! 🥴 ஆரம்பத்தில், பெருமாளின் பெயர் மால், மாயோன். மால் எனில் மயக்கம்/குழப்பம். மாயோன் எனில் மயங்க வைப்பவன். உடலல்லாத நம்மை உடலாகக் கருத வைப்பதே உலக தோற்ற-இயக்க-ஒழிவின் ஆரம்பம். இந்த மதி மயக்கும் ஆற்றலைத் தான் #திருமால் என்றனர். உலகின் பேரியக்கத்திற்கு இவ்வாற்றல் தான் அடிப்படை என்பதால் திரு எனும் மரியாதையைச் சேர்த்தனர். ஆனால், இன்றோ சிவத்தின் பொருளும் பெருமாளின் பொருளும் ஒன்றே. இதனால் தான் அவர்கள், சிறிதும் ஓசையில்லாமல், "திருமால்" என்பதலிருந்து "பெருமாள்" (பெரும் ஆள் / பெருமைக்குரிய ஆள்) என்பதற்கு மாறினார்கள். இந்த "Course Correction" 😜 வெற்றி பெற்றுவிட்டதால், இப்போது அடுத்த இலக்குக்கு தாவ முயல்கின்றனர்: பெருமாள் சிவத்திற்கும் மேல்!! அதாவது, சிவத்தின் நகல் சிவத்தை விட சிறந்ததாம்!!! 🤣🤣 இவர்களால் தான், "பேன பெருமாளாக்குவானுங்க. பெருமாள பேனாக்குவானுங்க." என்ற சொலவடை உருவானது. யாரும் "பேன சிவனாக்குவானுங்க" என்று சொல்லவில்லை. 😛 இவர்களது பித்தலாட்டம் அப்படி!! 👊🏼👊🏼👊🏼👊🏼👊🏼

👊🏼 இவ்வளவு வேலை செய்தும் ஏதும் சரியாக "போனி"யாகவில்லை (2). ஏனெனில், சேர்த்துக் கொண்ட கூட்டம் அப்படி. பண்படாதவர்களை எவ்வாறு தத்துவங்களால் கவர முடியும்? இப்படிப்பட்டவர்களை புலன்களை வைத்துத்தான் கவர முடியும் - பெரிய உருவச்சிலைகள், பெரிய நாமம், பெரிய லட்டு / தோசை / இட்லி, மார்கழியில் பெருமாளுக்கு வெந்நீர் குளியல் ("2000 வருசத்துக்கு முன்னாடி உன்ன அநியாயமாக் கொன்னுட்டாங்களேயா" என்ற பிட்டிற்கு சமம். இவ்விரு கூட்டங்களின் தில்லாலங்கடிகளில் அவ்வளவு ஒற்றுமைகளைக் காணலாம்!!)...

ஒரு தெய்வ உருவத்தை பின்புறம் தள்ளியதற்காகவா இவ்வளவு ஆர்ப்பாட்டம் 😲 என்று சிலருக்கு தோன்றலாம்.  அவர்களுக்காக...

👻 சமீப காலமாக இந்து சமய அடையாளங்கள் அனைத்தையும் கவர்வதாக நினைத்துக் கொண்டு தனது அடையாளங்களை இழந்து கொண்டிருக்கும் எம்.எல்.எம் மதம், ஒரு வேளை இந்த ஓவியத்தை போன்று ஒரு ஓவியத்தை வெளியிடுகிறது என்று வைத்துக் கொள்வோம். அரியணையில் இஸ்ரவேல் அத்வைதி யேசு மற்றும் அவரது மனைவி மேரி மேக்தலின் அமர்ந்திருப்பது போன்றும், இவர்களை சுற்றி அவர்களது இன குருமார்களும், தொழிலதிபர்களும், நாடாள்பவர்களும் நிற்பது போன்றும், பின் வரிசைகளில் நமது தெய்வங்கள் நிற்பது போன்றும் வெளியிடுகிறார்கள் என்று  வைத்துக் கொள்வோம். இதை எப்படி நாம் ஏற்றுக் கொள்ளுவோம்?

👺 அடுத்து, வெடிகுண்டு மதத்தினர். வெட்டு, குத்து, சீவு, பிடுங்கு, வெடிகுண்டு என்றே 1300 வருடங்களாக வயிற்றைக் கழுவியவர்கள், இப்போது தான் எம்.எல்.எம் மதத்தினர் போன்று தொழில் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். ஒரு வேளை, இவர்களும் ஒரு ஓவியத்தை வெளியிடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அரியணையில் ஒரு வெள்ளை சுவர், அதை சுற்றிலும் அவர்களது இன குருமார்கள், தொழிலதிபர்கள், நாடாள்பவர்கள் நிற்பது போன்றும், பின் வரிசைகளில் நமது தெய்வங்கள் நிற்பது போன்றும், வரைந்து வெளியிடுகிறார்கள் என்று வைத்துக் கொள்ளுவோம். இதை ஏற்றுக் கொள்ளுவோமா?

ஏற்றுக்கொள்ள மாட்டோம். வெகுண்டு எழுவோம். அவ்வாறே தான் இணைப்பு படத்தையும் ஏற்றுக்கொள்ளாமல், வெகுண்டு எழ வேண்டும். #எம்மதமும் #சம்மதம் என்பது எவ்வாறு ஒரு மாபெரும் ஏமாற்று வேலையோ, அவ்வாறே சைவ-வைணவ இணைப்பும்!!! 🤬😡😠

💮🌸🌹🌼🏵️

27-06-1946 அன்று பகவான் ஸ்ரீரமணர் தனது அன்பர்களுடன் பேசியதிலிருந்து... ("அனுதினமும் பகவானுடன்", தேவராஜ முதலியார், ஸ்ரீரமணாச்சரமம்)

💥 நாலாயிர பிரபந்தத்தில் அருமையான அத்வைதப் பாடல்கள் உள்ளன. ஆனால், எல்லாவற்றிற்கும் வைணவர்கள் வேண்டுமென்றே துவைதப் பொருள் காட்டியிருப்பார்கள்.

💥 ஆரம்பத்தில் (பகவான் திருவருணை வந்த புதிதில்; இன்னமும் புகழ் பெறாத காலத்தில்), வடகலை வைணவர்கள் வந்து அவர்களது U நாமத்தைப் போட்டுவிட்டுப் போவார்கள். பின்னர், தென்கலை வைணவர்கள் வந்து அவர்களது Y நாமத்தைப் போட்டுவிட்டுப் போவார்கள். அவரவர் விரும்பியதை செய்ய விட்டு அமைதியாக இருப்பேன் (இங்ஙனமே தான் நம்மாழ்வாரையும் காப்புரிமை கொண்டாடுகிறார்களோ? யாரும் அறியாவண்ணம், அவ்வளவாக புகழ் பெறாத போது, முதலில் சென்று காப்புரிமை போட்டு விடுவது இவர்களது தொழில் உத்திகளில் ஒன்றோ?)

💥 (நம்மாழ்வாரின் "யானே என்னை அறியகிலாதே" என்ற பாடலைப் பற்றி விளக்குகிறார்) இது சுத்த அத்வைதத்தைப் பாடலாகும். ஆனால், வைணவ உரையாசிரியர்கள் திரித்து துவைதப் பொருள் கூறியிருப்பார்கள். இவர்களுக்கு தாங்களும் அப்படியே இருக்கவேண்டுமாம். பெருமாளும் அப்படியே இருக்கவேண்டுமாம். என்றென்றும் பெருமாளுக்கு கைங்கர்யம் செய்து கொண்டிருக்கவேண்டுமாம். இது எப்படி சாத்தியம்? பெருமாள் கேட்கிறாரா? எல்லோரும் கைங்கர்யம் செய்வதானால் வைகுண்டத்தில் நிற்க கூட இடம் இருக்காதே? 😁

💥 திருவாய்மொழியின் 8வது பதிகத்தின் 3வது பாடலைப் பற்றியும், திருவாசகத்தின் பாடலொன்றோடு அது ஒத்துப் போவதைப் பற்றியும் பேசுகிறார்.

💮🌸🌹🌼🏵️

வாது செய்து மயங்கும் மனத்தராய்
ஏது சொல்லுவீர் ஆகிலும் ஏழைகாள்
யாதோர் தேவர் எனப்படுவார்க்கு எல்லாம்
மாதேவன் அல்லால் தேவர் மற்று இல்லையே

-- #அப்பர் #தேவாரம் 🌺🙏🏼

மரணபய மிக்குள அம்மக்கள் அரணாக
மரணபவ மில்லா மகேசன் - சரணமே
சார்வர் தம் சார்வொடு தாம் சாவுற்றார் சாவெண்ணம்
சார்வரோ சாவாதவர் நித்தர்

-- #பகவான் #ஸ்ரீரமணர் 🌺🙏🏼, உள்ளது நாற்பது

💮🌸🌹🌼🏵️

குறிப்புகள்:

1. பெண்களின் கைகளில் சுக்கிரன் உள்ளதாம். 😛 ஆண்களின் கால்களில் சனி உள்ளதாம். 😝 சனியை சுக்கிரன் இதப்படுத்தினால் செல்வம் பெருகுமாம். 😜 இந்த உத்தியை கையாண்டு தான் மகாலட்சுமி தாயார் செல்வங்களுக்கு அதிபதியாக உள்ளாராம். 🤣

உடலில் கால்களை சனி ஆட்சி செய்வதாக ஏன் சொன்னார்கள் என்றால் சனி வேலைக்காரனையும், குப்பையான அசுத்தமான இடங்களையும் குறிக்கும். இது ஆணுக்கு மட்டுமல்ல. பெண்ணின் கால்களுக்கும் பொருந்தும். அடுத்து, பெண்களின் கைகளில் சுக்கிரன் ஆட்சி செய்வதாக ஏன் சொன்னார்கள் என்றால் சுக்கிரன் அழகையும், நளினத்தையும் குறிக்கும். ஆண்களின் கைகளை விட பெண்களின் கைகள் பொதுவாக அழகானவை & நளினமானவை. ஆக, பெண் ஆணின் கால்களை பிடித்து விட வேண்டும். இதை நேரடியாக சொன்னால் பூரிக்கட்டை பறந்து வரும். 🤕😁 எனவே, சுக்கிரன், சனி என்று பிட் தயாரித்திருக்கிறார்கள். எப்படி பட்ட நப்பாசை!! 🥴

ஆண் என்ற ஒரே காரணத்திற்காக இவன் ஊரை மேய்ந்து விட்டு வருவானாம். மீதமுள்ள அனைத்தையும் பராமரித்து விட்டு, பெண்ணானவள் தன்னையும் பராமரித்துக் கொண்டு, "ஆம்படையான்" திரும்பியவுடன் அவனுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுத்து, அவன் உண்ட களைப்பு போக சயனித்திருக்கும் போது, அவனது கால்களை சற்று பிடித்து விட வேண்டுமாம். இப்படி பிடித்து விட்டால், அவன் மகிழ்ச்சியடைந்து அவளுக்கு நகைகளை (செல்வம்) வாங்கி கொடுப்பானாம். இதற்கு வெடிகுண்டு மதமே மேல் என்று சொல்லாம். 😏

வெடிகுண்டு மதமாவது பெண்ணடிமைத்தனம் மற்றும் அடுத்த மதத்தினரிடமிருந்து பறித்து வாழ்தல் என்ற இரு "உயரிய" கொள்கைகளை வெளிப்படையாகக் கொண்டவை!! 😁 இவர்களிடம் எச்சரிக்கையாக இருப்போம். ஆனால், இந்த நாமப்பேர்வழிகளிடம் ஏமாந்துவிடுவவோம்.

வெடிகுண்டு மதத்திற்கும் நாம மதத்திற்கும் ஒரு ஒற்றுமை உண்டு - இரண்டும் அருகருகே உருவானவை (7ஆம் நூற்றாண்டு). எம்.எல்.எம். மதத்தின் டுபாக்கூர் கையேடு கூட 633க்கு பின்னர் தான் உருவானது என்று வெளிப்படையாக அண்மையில் செய்தி  வெளியிட்டிருந்தார்கள். ஆக, 7ஆம் நூற்றாண்டு உலகின் மற்றுமொரு கெட்ட காலத்தின் ஆரம்பமாக இருந்திருக்கிறது. 😒

2. #பவானி என்பதே #போனி என்று மருவியுள்ளது. நாளின் முதல் விற்பனையின் மூலம் கிடைக்கும் லாபம் பவானி அம்மனுக்கு காணிக்கையாக்கும் வழக்கம் ஈரோடு பகுதியில் உருவானது. ஒரு விற்பனையாவது செய்து விட வேண்டும் என்ற வேகத்தில் "பவானிக்கு குடு/பண்ணு" என்று கூவுவர். நாளடைவில் இது மருவி "போனி பண்ணு" என்றாகிவிட்டது.

Tuesday, October 23, 2018

ஐப்பசி நிறைமதி நாள்! - சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம்!! 🌸🙏

ஐப்பசி நிறைமதி நாள்! - சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம் நடக்கும்.



"இந்த அண்டம் முழுவதும் உணவால் ஆனது" என்னும் பேருண்மை வெளிப்படுத்தப்பட்ட நாள்!!

லிங்கம் (அடையாளம்) - மொத்த உலகைக் குறிக்கும்
அன்னம் - உணவு

தாயின் கருப்பையில் முதல் செல் உருவானது முதல் இறுதி மூச்சு வரை, நம் உடலில் செல்கள் உருவாகிக் கொண்டும், இறந்து கொண்டும் இருக்கின்றன. இதற்கு வளர்சிதை மாற்றம் என்று பெயர்.

இந்த மாற்றம் நமக்கு மட்டும் நடப்பதில்லை. தாவரங்கள், விலங்குகள், பறவைகள் என அனைத்து உடல்களுக்கும் நடக்கின்றது. இறக்கும் செல்கள் என்னவாகின்றன? காற்றிலும், நிலத்திலும், நீரிலும் கலக்கின்றன. பின் என்னவாகிறது?

அவற்றை சில்லுயிரிகள் / நுண்ணுயிரிகள் உண்டு விடுகின்றன. உணவு என்று ஒன்று உள்ளே போனால், கழிவு என்று ஒன்று வெளியே வந்தாகவேண்டும். மேலும், அந்த நுண்ணுயிரிகளுக்கும் வளர்சிதை மாற்றம் நிகழும். அந்த செல்கள் என்னவாகும்? இந்த நுண்ணுயிரிகளின் கழிவையும், இறந்த செல்களையும் உணவாகக் கொள்ள வேறு வகை நுண்ணுயிரிகள் இருக்கும். இப்படி பல விதமான உயிரிகள் (ஜீவராசிகள்) காற்றிலும், நீரிலும், நிலத்திலும் உள்ளன. (முப்பத்து முக்கோடி தேவர்களில் பெரும்பாலான கோடிகள் இந்த நுண்ணுயிரிகள் தாம்!! 😉)

இவற்றை நமது கண்களால் காண இயலாது. ஒரு வேளை, இவற்றை காணும் திறனை இறைவன் நமக்குக் கொடுத்திருந்தால்? 🤔

நம் உள்ளும் வெளியும் கோடான கோடி நுண்ணுயிரிகள் பிறந்தும், இறந்தும், ஒன்றை மற்றொன்று விழுங்கியும், உண்டும், சார்ந்தும் வாழ்வதைக் காணுவோம். (வாந்தி வரலாம். பைத்தியம் பிடிக்கலாம். நெஞ்சும் வெடிக்கலாம். 😂 இதல்லாம் நிகழாதவாறு நம்மை காப்பது இறைவனின் ஐம்பெரும் தொழில்களில் ஒன்றான மறைத்தல் ஆகும். 🙏)

மொத்தத்தில், எங்கெங்கும் உடல்களாக (உணவாக) காண்போம். (ஒன்றின் உடல் இன்னொன்றின் உணவு)

இந்த பேருண்மையை விளக்குவது தான் அன்னாபிஷேகம். ஒவ்வொரு அரிசி பருக்கையும் ஓரு உடலை / ஒரு இனத்தைக் குறிக்கும். அனைத்தும் சேர்ந்து உலகைக் குறிக்கும். 👏👌👍

ஒவ்வொரு அரிசி பருக்கையும் ஒவ்வொரு விண்மீன் கூட்டமாக (Galaxy) எடுத்துக்கொண்டால், மொத்த லிங்கமும் அண்டத்தைக் குறிக்கும். 👏👏👌👌👍👍

இங்ஙனம், ஒரே உவமையைக் கொண்டு உடலுக்குள்ளேயும், இந்த உலகிலும் மற்றும் மொத்த அண்டத்திலும் நடக்கும் நிகழ்வுகளை நமக்கு உணர்த்திய மகான் எப்பேர்பட்டவராக இருக்கவேண்டும்! அவருக்கு நம் சிரம் தாழ்த்துவோம்!! 🌸🙏

அவர் யாரென்றுத் தெரியவில்லை. ஆனால், அவர் இந்தப் பேருண்மைகளை உணர்ந்த / வெளியிட்ட நாள் இன்று தான் என்று உறுதியாகக் கூற முடியும். மேலும், அவர் ஒரு தமிழர் என்றும் அறுதியிட்டுக் கூற இயலும். ஏனெனில் இது தமிழக சிவன் கோயில்களில் மட்டும் நடத்தப்படும் ஒரு விழாவாகும்.

🕉 வாருங்கள், சிவன் கோயிலுக்குச் சென்று வருவோம்.
🌸 அன்னாபிஷேகத்தை கண்குளிர காணுவோம்.
🙏 அந்த ஒப்பனை உணர்த்தும் பேருண்மைகளை உணர்ந்து மனமழிப்போம்.
🔥 எல்லாம் வல்லவனை சிக்கெனப் பிடிப்போம்.

🔯 திருச்சிற்றம்பலம் 🔯

🌸🏵🌹🌺💮🌻🌷🌼

💥 நம் மகான் எப்போது இந்தப் பேருண்மைகளை உணர்ந்திருப்பார்? நியூட்டன் தலையில் "ஆப்பிள் விழுந்த" பின்னர் தானே? மெகல்லன் உலகம் உருண்டை என்று "நிருபித்த" பின்னர் தானே? அந்தோனி வான் லீயு வென்ஹோயெக் நுண்ணுயிரிகளை "கண்டுபிடித்த" பின்னர் தானே? 👊💪 😛😜😝😂

💥 அன்னாபிஷேக அலங்காரத்தில் கண், காது, மூக்கு என சேர்ப்பது அண்மை காலத்தில் ஏற்பட்ட அலங்கோலமாகும். 😑

posted from Bloggeroid

Thursday, October 4, 2018

மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் மாறுபட்ட கற்பனைகள்!!

கலையார்வம், மேலான கற்பனைத்திறன், மற்றவர்களிடமிருந்து தனித்து நிற்கவேண்டும் போன்ற காரணங்களால், பின் விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் எதையாவது செய்து வைக்கிறார்கள். அது "எம்மதமும் சம்மதம்" போன்ற கூமுட்டைத்தனத்தில் போய் முடிந்துவிடுகிறது!! 🙁 (சாப்பாடும் சாக்கடைகளும் எவ்வாறு ஒன்றாகும்? 😠)

இணைப்புப் படத்தில் சிவபெருமானையும் அனுமாரையும் சமமாக்கியிருக்கிறார்கள். சிவபெருமான் மனமழிந்த மெய்ஞானியைக் குறிக்கிறார். அனுமார் மனதைக் குறிக்கிறார். எவ்வாறு மனமும், மனமழிந்து வெளிப்படும் மெய்யறிவும் ஒன்றாகும்? முன்பெல்லாம் இது போன்று மாறுபட்ட படைப்புக்களை உருவாக்குபவர்கள் தங்களது வேலையைத் துவங்கும் முன்னர் அப்பகுதி சமயப் பெரியோர்களை சந்தித்து, அவர்களது கருத்துக்களைத் தெரிந்து கொண்டு, அதற்கேற்ப அவர்களது படைப்புக்களை மாற்றிக் கொள்வர். இன்று? 😰

சைவத்தில் பெண் தத்துவமாகக் கொள்ளப்படுவது வைணவத்தில் ஆண் தத்துவமாகிவிடும். சைவத்தைச் சார்ந்த மதுரை ஸ்ரீமீனாட்சி அம்மன் பச்சைப்பட்டு உடுத்துவார். வைணவத்தைச் சார்ந்த ஸ்ரீகள்ளழகர் பச்சைப்பட்டு உடுத்துவார்.

பச்சை நிறத்தை அனுமாருக்குத் தந்து, அனுமன் சிவாம்சம் உடையவர் என்று கதை விட்டு, சிவதத்துவத்தை அனுமார் அளவிற்கு இறக்க முயற்சி செய்தது எல்லாம் பிற்காலத்தில் தான். சைவர்கள் அறிவை உருவகப்படுத்த பிள்ளையாரை உருவாக்கினார்கள். இம்முயற்சி பெரும் வெற்றி பெறவே, போட்டிக்காக வைணவர்கள் உருவாக்கியது தான் அனுமார். எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ முடித்துவிட்டார்கள். இதைத் தான், "பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் முடிந்தது" என்ற பழமொழி வாயிலாக பதிவு செய்து வைத்தார்கள். 👏👌👍💪

இந்த அடிப்படைச் செய்திகள் எதுவும் தெரிந்து கொள்ளாமல், வெறுமனே இருவரும் சம்மணமிட்டு வடக்கிருக்கிறார்கள் என்பதை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு, இரு தத்துவங்களையும் அருகருகே வைத்துவிட்டார் இந்த படைப்பாளி என்று தோன்றுகிறது. மேலும், பெரும்பாலான மனிதர்களைப் போன்று, இறையுருவங்களை தத்துவங்களாகக் காணாமல் உயிருள்ள உடல்களாகக் காணும் தவற்றையும் செய்திருக்கிறார் என்றும் தோன்றுகிறது. இந்த ஒரு தவறை நாம் செய்யாதிருந்தாலே போதும், உறுதியாக கரையேறி விடுவோம். நமது சமயமும் வலுப்பெற்று விடும். 💪

🌸 திருச்சிற்றம்பலம் 🌸

கூகுள்+ பயனர்களுக்கு:

🔥 சிவ உருவத்தைப் பற்றி:

🔥 அனுமார் உருவத்தைப் பற்றி:

முகநூல் பயனர்களுக்கு:

🔥 சிவ உருவத்தைப் பற்றி:

🔥 அனுமார் உருவத்தைப் பற்றி:

🌸🏵🌹🌻🌺🌷🌼

posted from Bloggeroid

Wednesday, February 15, 2017

திரிபுரம் எரித்தது சிவன் அல்ல! அம்பு!! 😂

இணைக்கப் பட்டிருக்கும் அல்வாவை சுவைத்து விட்டு வாருங்கள்... 😀

முப்புரம் எரித்தது சிவபெருமான் இல்லையாம்! பெருமாள் கொடுத்த அம்பு தான் எரித்ததாம்!! அறிவாளிகள்!!! 😜

அப்படியானால், இராவணனைக் கொன்றது இராமன் இல்லை போலிருக்கிறது. இராமன் எய்த அம்பு. இப்படியே இதை வளர்த்துக் கொண்டு போகலாம். நாட்டில் ஏதாவது கருவியை வைத்து கொலை நடந்தால், அந்தக் கருவியைக் கைது செய்தால் போதும். 😝

"நாங்க அதுக்கும் மேல" என்று படம் காட்டுவதற்காக இப்படி ஒரு பிட்டைப் போட்டிருக்கிறார்கள். *முதலில், சிவன், பெருமாள், சக்தி என்று யாருமில்லை. இவையெல்லாம் தத்துவங்கள். பேருண்மைகளின் வடிவங்கள்.  அண்டத்திலும் பிண்டத்திலும் இயங்குபவை.* பெருமாள் தத்துவத்தை முன்னிறுத்துவதற்காக இப்படிக் கதை விட்டிருக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளலாம். பெருமாள் என்ற வார்த்தை ஒரு காலத்தில் சிவ தத்துவத்தைத் தான் குறித்தது. எப்படி பள்ளிவாசலை முகம்மதியர்களிடமும், மாதாவை சர்ச்சியர்களிடமும் இழந்தோமோ, அப்படியே பெருமாளை வைணவர்களிடம் இழந்தோம். 🙁

*மூன்று கோட்டைகள் (முப்புரம்) என்பது தூல, சூக்கும, காரண உடல்கள் அல்லது கனவு, நனவு, தூக்கம் என்ற நிலைகள் அல்லது ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்கள் ஆகும்.* "மூன்று கோட்டைகளும் ஒரு நேர்கோட்டில் வரும் போது ஒரே அம்பினால் மூன்றையும் சிவபெருமான் அழித்தார்" என்பதெல்லாம் உவமானம் தான். *ஒரு ஜீவன் ஞானமடையும் (சிவநிலையை அடையும்) நிகழ்வைத் தான் இப்படி சித்தரித்திருக்கிறார்கள்.* "மூன்று மனைவிகளுடைய ஓர் ஆண் இறந்தால், அவனது மனைவியர் ஒவ்வொருவராக கைம்பெண் ஆவரா? அல்லது மூவரும் ஒரே நேரத்தில் கைம்பெண்கள் ஆவரா?" என்று கேட்பார் பகவான் ஸ்ரீரமணர். 👌 🙏 உண்மையில் அழிக்கப்படுவது "நான் இவ்வுடல்" என்ற பொய்யறிவு. இந்தப் பொய்யறிவு அழியத் தேவையான அம்பு - சரியான அறிவு.

*மங்கலான வெளிச்சத்தில், சுருட்டி வைக்கப்பட்டிருக்கும் கயிறு பாம்பு போல தோற்றமளிக்கும். நமக்கு பயத்தைக் கொடுக்கும். சரியான வெளிச்சத்தைப் பாய்ச்சியவுடன் கயிறு என்ற உண்மைத் தெரியவரும். நமது பயமும் போய்விடும். இவ்வாறே இந்த உலகம் உன்மையென்றும், நாம் இவ்வுடல் என்றும், நாம் தேடும் நிம்மதி இவ்வுலகில் உள்ள பொருட்களில் உள்ளதென்றும் புறத்தே தேடித்தேடி அல்லல் படுகிறோம். "நாம் இவ்வுடல் அல்ல" என்ற சரியான வெளிச்சம் பட்டவுடன் நம் தேடுதல் நின்று போகிறது. அகத்தே திரும்பி, "நாம் இது வரை தேடியது நம்மையே" என்றுணர்ந்து  தேடுதலும் நின்று போகிறது. தேடுபவனும் அழிந்து போகிறான். இதுவே ஞானம், முக்தி, சமாதி எனப் பலவாறு அழைக்கப்படுகிறது. அந்த சரியான வெளிச்சம் - சரியான அம்பு - ஒரு வார்த்தையாக, வாக்கியமாக, காட்சியாக, நினைவாக, எண்ணமாக, சிந்தனையாக என எது வேண்டுமானாலும் இருக்கலாம்.*

இந்த அம்பு உயிரற்றது (ஜடம்; வார்த்தை, வாக்கியம், ... உயிரற்றவைத் தானே). ஆகையால், இது பெருமாளின் அம்சம் எனக் கணக்கிட்டுள்ளனர் (சிவன் - உயிர், பெருமாள் - உயிரற்றது). இதே கணக்கை வைத்து, "அர்ஜுனன் தெளிவு பெற்றது ஸ்ரீகிருஷ்ணரால் அல்ல. அவரின் வார்த்தைகளால் தான். ஆகையால், பகவத் கீதையைப் போற்றினால் போதும். ஸ்ரீகிருஷ்ணரை வணங்கத் தேவையில்லை." என்றால் ஏற்றுக் கொள்வார்களா? 😁

"நீங்க கேக்குற கேள்வியெல்லாம் சரிதான்னா, ஏன் திருவதிகை திரிபுரம் எரிப்பு திருவிழாவில் திருசரநாராயணப் பெருமாளிடம் திருவீரட்டானேஸ்வரர் சரம் (அம்பு) வாங்குகிறார்?" என்று கேள்வி எழலாம். 🤔

*இதற்கு ஒரே பதில்: தலையெழுத்து!!* சமூக ஒற்றுமைக்காக, சைவ-வைணவ ஒற்றுமைக்காக நம் பெரியோர் தலையெழுத்தே என்று தங்களை தாழ்த்திக் கொண்டிருப்பார்கள். 😞

நம் நாட்டுக்கு, சமயத்துக்கு, மொழிக்கு, கலாச்சாரத்துக்கு, வாழ்க்கைக்கு, செல்வங்களுக்கு "எவ்வளவோ நல்லது" செய்த ஆரியர்களை, சமண பெளத்தர்களை, முகம்மதியர்களை, பரங்கி மதத்தவர்களை நாம் ஏற்றுக் கொண்டுவிட்டோம். வைணவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டோமா? என்ன, மற்றவர்களோடு ஒப்பிடுகையில் இவர்கள் கொஞ்சம் குறைவாக "நல்லது" செய்திருக்கிறார்கள். பரவாயில்லை. 😂😝

🌸🏵🌹💮🌺🌷🌼

*அடுத்து, வக்ராசுரனை வதைத்த களைப்பு போக போக சயனத்தில் இருக்கிறாராம் ஸ்ரீ நரசிம்ஹர்!* 😂

இதைப் படித்துவிட்டு பள்ளிகொண்ட பெருமாளும், அவரது படுக்கையான ஆதிசேஷனும், ஸ்ரீகிருஷ்ணரும்,  ஸ்ரீநப்பின்னை பிராட்டியாரும் ஸ்ரீபோக நரசிம்ஹரிடம் வந்து, "எங்க வம்புக்கு ஏன் வருகிறீர்?" என்று சண்டைக்கு வந்துவிடப் போகிறார்கள்!! 😂😂

🔥 *முதலில் பள்ளிகொண்ட பெருமாள். இந்த வடிவம் சிவலிங்கத்துக்கு சமம்.* சிவலிங்கம் ("சிவநிலையிலுள்ள ஒரு மகானின் சமாதியின் அடையாளம்" என்கிற பொருளுக்கு அடுத்தபடியாக) மொத்த அண்டத்தைக் குறிக்கும். அண்டம் என்பது உயிர்கள் மற்றும் உயிரற்றவைகளின் கலவை. இதை வைணவத்தில் தனித்தனியாகக் காண்பித்துள்ளனர். *ஆதிசேஷன் (5 தலைகள் - ஐம்பூதங்கள்) உயிரற்றப் பகுதியைக் குறிக்கும். பெருமாள் உயிர்ப் பகுதியைக் குறிப்பார்.*

🔥 *அடுத்து, ஸ்ரீநரசிம்ஹர். இந்த வடிவம், ஞானமடைதலின் கடைசி நிலையான சரணாகதியின் போது உள்ளிருந்து வெளிப்படும் இறை சக்தியைக் குறிக்கும். சடாரென்று வெளிப்பட்டு நம் தனித்துவத்தை (அகந்தையை - வக்ராசுரனை) கபளீகரம் செய்துவிடும்.* ஆகையால், சிங்கமுகம் (மேற்கொண்டு இவரைப் பற்றி அறிய https://plus.google.com/+SaravananG_Enum_Dhasaman/posts/Sbx4S7jWGhN).

🔥 *இறுதியாக, ஸ்ரீகிருஷ்ணர் மற்றும் நப்பின்னை பிராட்டியார். ஸ்ரீகிருஷ்ண வடிவம் அஞ்ஞான இருள் விலகிய ஞானியைக் (சிவனை) குறிக்கும். ஞானமடைந்த பின், பூத உடல் இறக்கும் வரை, அவ்வுடலின் ஐம்புலன்களின் வழியே கிடைக்கும் இன்ப துன்பங்களை (நப்பின்னையை) ⭐ஆனந்தமாக⭐ அனுபவித்துக் கொண்டிருப்பார் அந்த ஸ்ரீகிருஷ்ணர். புலன் அனுபவம் = நப்பின்னை பிராட்டியார்.* (மேற்கொண்டு பிராட்டியைப் பற்றி அறிய https://plus.google.com/+SaravananG_Enum_Dhasaman/posts/akrUTZKEUMo)

ஆக, மூன்று பேர் செய்யக் கூடிய வேலைகளை ஸ்ரீநரசிம்ஹரே செய்து விட்டு ஜாலியாக போக சயனத்தில் படுத்திருந்தால், வேலை பறி போனவர்களுக்கு கோபம் வரத்தானே செய்யும்!! 😂😂😂

🌸🏵🌹💮🌺🌷🌼

*இனி, திருவதிகை வீரட்டானம் என்னும் பழம் பெரும் தலத்தைப் பற்றி சிறிது பார்ப்போம்.*

🔥 அப்பர் பெருமான் ஆட்கொள்ளப்பட்டத் தலம் என்ற ஒரு சிறப்பு போதுமே இத்தலத்தின் சிறப்பை அறிய. 😅

🔥 நால்வராலும் பாடல் பெற்றத் தலம் என்பதை படிக்கும் போதே உற்சாகம் பொங்கும். 😍

🔥 வீரட்டானம் எனில் வீரச் செயல் நிகழ்ந்த இடம். இது போன்று 8 தலங்கள் உண்டு. *இங்கு சமாதியாகியிருக்கும் மகான்கள் செயற்கரிய செயல் ஏதேனும் செய்திருப்பர் அல்லது மிகப் பெரும் உண்மை(களை)யை உணர்ந்து வெளிப்படுத்தியிருப்பர்.* உதாரணத்திற்காக இந்தத் தலத்தையே எடுத்துக் கொள்வோம். *புகழ் பெற்ற நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை உருவாக்கியது இங்கு சமாதியில் உறையும் மகான் (சிவன்) தான்.* 🌸🙏

🔥 *மேலும், இப்பெருமான் "ஒரு புன்சிரிப்பினாலேயே முப்புரத்தையும் எரித்தார்" என்கிறது தல புராணம் (அதாவது, ஒரு கணப்பொழுதில் ஞானமடைந்திருக்கிறார்).* "இது எப்படி செயற்கரிய செயலாகும்?" என்று கேட்கலாம். தொன்று தொட்டு வரும் "நான் இன்னார்" என்ற எண்ணத்தை சுட்டெரிப்பது அவ்வளவு சுலபமல்ல. இதற்காக புத்த பிரான் மாட்டுச்சாணியை உண்டு பார்த்திருக்கிறார். ஸ்ரீராமகிருஷ்ணர் ஒரு சுகாதாரப் பணியாளர் ஒருவரின் இல்லத்துக் கழிவறையை தன் கைகளால் சுத்தம் செய்து, தனது தலைமுடியால் துடைத்துப் பார்த்திருக்கிறார். ஒன்றும் நடக்கவில்லை. இம்மகான்களின் போராட்டத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால் புரியும் திருவதிகை மகானின் முப்புர எரிப்பு ஏன் செயற்கரிய செயலாகக் கருதப்படுகிறதென்று. திருவதிகை மகானை உயர்த்திக் காட்டுவதற்காக மற்றவர்களை தாழ்த்திக் காட்டவில்லை. *இம்மகான்கள் போராடியது நாம் போராடாமல் இருக்கவே.* திருவதிகை மகான் அனைத்தையும் முயற்சி செய்துவிட்டு, இறுதியில் "அட, இவ்வளவு தானா?" என புன்முறுவலுடன் ஞானத்தை அடைந்திருக்கலாம். அல்லது, செய்ய வேண்டிய தவங்களை முற்பிறவியில் முடித்துவிட்டு இப்பிறவியில் ஒரு நொடியில் சிவநிலையை அடைந்திருக்கலாம். இதற்கு உதாரணமாக பகவான் ஸ்ரீரமணரின் பதிலை மேற்கோள் காட்டலாம். பகவான் 16 வயதில் யாருடைய வழிகாட்டுதலும் இல்லாமல், எந்த தவமும் செய்யாமல் ஞானமடைந்தவர். பின்னாளில் பக்தர்கள் இதுபற்றி கேட்ட போது, "நீங்கள் குறிப்பிடும் தவ முயற்சிகளை முற்பிறவிகளிலே முடித்துவிட்டேன்" என்று பதிலளித்தார்.

*திருவதிகை சிவன் ஒரு புன்சிரிப்பினால் முப்புரத்தை எரித்ததோடு நிற்காமல், மற்றவர்களும் அங்ஙனமே சிவ நிலையை கணப்பொழுதில் அடைந்திட வழிவகுத்து விட்டேச்சென்றார் - சிதறு தேங்காய் உடைத்தல் எனும் சடங்கின் வழியாக.* 👍

*ஆம், சிதறு தேங்காய் உடைக்கும் வழக்கம் இத்தலத்திலிருந்தே பிறந்துள்ளது.* தேங்காய் உடைத்தல் நமது கர்வத்தை (அகந்தை - அகங்காரம் - உள்+உடல்) அழித்தலுக்குச் சமம். தேங்காய்க்கு உள்ளிருக்கும் வெளியும், வெளியே இருக்கும் வெளியும் ஒன்று தான். தேங்காயை உடைக்க (நமது தனியிருப்பை அழிக்க), இரண்டும் வேறில்லை என்ற உண்மை புலப்படும். ஞானம் ஒன்றும் புதிதாக அடையப்பட வேண்டியதில்லை. ஏற்கனவே நம்மிடம் இருப்பது தான். அதை உணராமல் தடுப்பது நம் அகங்காரம் தான். அதை அழித்தால் போதும். 👏

🌸🏵🌹💮🌺🌷🌼

*வெளிவிட்டேன் உன் செயல் வெறுத்திடாது*
*உன் அருள் வெளிவிட்டு எனைக்கா அருணாசலா*
-- பகவான் ஸ்ரீரமணர் 🌼🙏

🔯 ஓம் நமோ பகவதே ஸ்ரீரமணாய 🔯

*தென்னாடுடைய சிவனே போற்றி*
*எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி*

🔯 திருச்சிற்றம்பலம் 🔯

(இணைப்பு: தினமலர் - ஆன்மிக மலர் - சென்னை - 11/02/2017)

🌸🙏🌼🙏🌼🙏🌸

Wednesday, December 28, 2016

அனுமன் பிறந்த நாள்

முதலில் கீழே இணைக்கப்பட்டிருக்கும் புருடாவைப் படியுங்கள். பின்னர் இதைப் படிக்கவும்.

இன்று அனுமன் ஜெயந்தி. இதையொட்டி ஒருவர் எனக்கு கீழேயுள்ள புருடாவை அனுப்பினார். அவருக்கு நான் கொடுத்த பதிலடி தான் இந்த இடுகை.

அனுமன் என்று எந்த Neanderthal-லும் இல்லை.  அனுமன் என்ற உவமை உருவாக்கப்பட்ட நாள் இது. பிறந்த நாள்.

முதலில் சைவர்கள் பிள்ளையாரை உருவாக்கினர். பிள்ளையார் அறிவைக் குறிப்பவர். அறிவுக்கு அடிப்படை ஞாபக சக்தி. அறிவுடையவன் பலம் பொருந்தியவன். இதற்கு அடையாளமாக யானை முகத்தைக் கொடுத்தனர். யானைக்கு ஞாபக சக்தி மிக அதிகம். மேலும், பலம் பொருந்தியது. சத்தியத்திற்குக் கட்டுப்பட்டது.

இது மன்னரிடமும், மக்களிடமும் ஹிட் ஆனது. இதைக் கண்ட வைணவர்கள், நாங்களும் செய்து காட்டுகிறோம் என்று எதையோ செய்யப் போய் அனுமனை உருவாக்கினார்கள். "பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் மாறிற்று" என்ற முதுமொழி இவர்களின் பித்தலாட்டத்தைக் காட்டும்.

அனுமன் மனதைக் குறிப்பவர். மனம் வாயு பூதத்தை அடிப்படையாகக் கொண்டது. வாயு ஓரிடத்தில் நிற்காது. மனமும் சதா சலித்துக் கொண்டே இருக்கும். இதைக் குறிக்க குரங்கை எடுத்துக் கொண்டனர். குரங்கும் ஓரிடத்தில் இருக்காது. கிளைக்கு கிளை தாவும். மனம் பலம் பொருந்தியது. "மனம் நினைத்தால்", "மனது வைத்தால்" ஆகிய சொற்றொடர்கள் மனதின் பலத்தைக் காட்டும். அனுமனும் பலம் உள்ளவராகக் காட்டப்படுவது இதனாலேயே. மனம் நினைத்தால் அடுத்த விநாடி நாம் இமய மலையில் இருக்கலாம். அனுமன் ஒரு அடியில் இலங்கைக்கு தாவியது போல.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

சாதாரணமாக ஒருவர் ஏமாந்தால் நாம் கூறுவது, "நாமம் போட்டுட்டாங்களா உனக்கு". ஏமாற்றியவரிடம் நாம் கூறுவது, ''நாமம் போட்டுட்டியா அவனுக்கு". ஆக, நாமம் ஏமாற்று வேலை. அதாவது,  வைணம் என்பது ஏமாற்று வேலை.

இந்த ஏமாற்றுகாரர்களுக்கு மன்னனின் (சோழர்கள்) அங்கீகாரமும் கிடைக்கவில்லை. பெருவாரியான மக்களின் ஆதரவும் கிடைக்கவில்லை. அந்த வயிற்றெரிச்சலில் அவர்களது "புனித நூல்களில்" (?)  சிவ தத்துவத்தை தாழ்த்தி எழுதி மகிழ்ந்து கொண்டார்கள்.

சிவம் - சக்தி என்பது வைணவத்தில் லஷ்மி - விஷ்ணு என்று மாறும். அதாவது, சைவர்கள் உயிர் - மெய் என்பதை வைணவர்கள் மெய் - உயிர் என்பர். உயிரிலிருந்து உயிரற்றது தோன்றிற்று என்பது சைவம். உயிரற்றதிலிருந்து உயிர் உண்டாயிற்று என்பது வைணவம். இதனால் தான் வைணவம் ஏமாற்று வேலை என்று சொல்லப்பட்டது.

சைவர்கள் வைத்திருந்ததை, உருவாக்கியதை வைணவர்கள் சிறிது மாற்றி அல்லது எதையாவது சேர்த்து "நாங்க ஒசத்தியாக்கும்" என்றனர். உ.ம். சைவத்தில் 5 பிரகாரம் என்பது வைணவத்தில் 7 பிரகாரம்.

சிதம்பரம் தல வரலாற்றில் நடராஜ பெருமானின் திருநடனத்தை நினைத்துப் பார்த்ததால் மகா விஷ்ணுவின் எடை அதிகமாயிற்று என்று வரும். இதற்குப் போட்டியாகத் தான் சிவபெருமான் பெருமாளுக்கு சேவை செய்ய நினைத்ததாகவும், அதனால் அனுமனாக அவதரித்தார் என்றும் பிட்டைப் போட்டிருக்கிறார்கள். இந்த பிட்டின் மூலம் சிவ தத்துவத்தை ஒரு படி இறக்கி மன தத்துவத்தோடு (அனுமனோடு) சமப்படுத்தியிருக்கிறார்கள். Criminals!!

வைணவத்தில் மகாலட்சுமி தான் சிவதத்துவம். ஏற்கனவே, மகாலட்சுமியை இறக்கி மகாவிஷ்ணுவின் பாதத்தில் வைத்திருக்கிறார்கள். அது போதாது என்று மேலும் கீழிறக்க முயற்சிக்கிறார்கள். மகாலட்சுமி எழுந்து உதைக்காமல் இருந்தால் சரி. 😂😂

"பொய்யைச் சொல். திரும்பத் திரும்பச் சொல். உண்மையாகும்." என்பதே வைணவர்களின் அடிப்படை யுக்தியாகும்.

ஒரு காலத்தில் தீண்டத்தகாத மதமானது இன்று இந்து மதத்தின் பெரும் பிரிவு. வெட்கக்கேடு. 😡

தீண்டத்தகாத மதம் எப்படி இன்று எல்லோராலும் ஏற்றுக் கொள்ளும்படியானதாக மாறிற்று என்று பரங்கியர் ஆராய்ச்சி செய்து வருவதாக கேள்விப்பட்டேன். ஏதற்கு என்பதை உங்களின் கற்பனைக்கு விட்டுவிடுகிறேன். 😉

🌸🌹🍀🍁🌺🌻🌼

அனுமன் ஜெயந்தி 09-01-2016

குங்குமப் பொட்டு: வாலில் குங்குமம் வைத்து வழிபடுவதின் தாத்பர்யம் என்னவென்றால், அனுமாருக்கு வாலில் தான் சக்தி அதிகம்.   பக்தி சிரத்தையுடன் ராமநாமத்தை ஜபித்துக் கொண்டு இடுப்பில் வால் தோன்றும் திருவிடத்தில் இருந்து தினமும் சந்தனம் சாத்தி   குங்குமத் திலகம் வைத்துக் கொண்டு வரவேண்டும். வாலின் நுனியை அடைந்ததும், கலைத்துவிட்டு மறுபடியும் பொட்டு வைக்க   வேண்டும். வால்முனையில் பொட்டு பூர்த்தி பெறுகின்ற சுபதினத்தில், எம்பெருமானுக்கு வடைமாலை சாத்தி, உப்பிலியப்பனுக்கு   நிவேதிப்பது போல் உப்பில்லா திருவமுது நிவேதிக்க வேண்டும்.காரியம் சித்தியாகும் வரை இவ்வண்ணம் பொட்டு வைத்துக் கொண்டே   வர வேண்டும்.

அனுமன் ராமனுக்கு தூதனாக இருந்தாலும், இவர் சிவனின் அம்சமாக தோன்றியவர். ராமாயணத்தில் ஒவ்வொருவரும் ஒரு வேடம்   ஏற்றனர். அதில் மகாவிஷ்ணு ராமனாகவும், மகாலட்சுமி சீதாதேவியாகவும், ஆதிசேஷன் லட்சுமணனாகவும் பாத்திரமேற்றனர். இந்த   ராமாயணத்தில் பங்குபெற எல்லாம் வல்ல சிவனுக்கும் ஆசை ஏற்பட்டது. அத்துடன் மகாவிஷ்ணுவுக்கு சேவை செய்யவேண்டும் என்ற   எண்ணமும் இருந்து வந்தது. இதனால் சிவபெருமான் ஆஞ்சநேயராக அவதரித்து ராமாயணத்தில் ராமருக்கு சேவை செய்தார் என்பது   முக்கியமான செய்தியாகும். ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும் பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.   ஆஞ்சநேயனின் ஜெயந்தி, ஜெயந்திக்கெல்லாம் ஜெயந்தி. அந்த ஜெயந்தியை நாம் கொண்டாடுவதால் நமக்கு சகல மங்கலங்களும்   உண்டாகும். நினைத்த காரியம் கைகூடும். துன்பம் விலகும்; குடும்பத்தில் இன்பம் பெருகும்.

ஆஞ்சநேயரை ராம நாமத்தால் சேவிப்பதோடு,  வடைமாலை சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் சாத்தி, ஆராதிக்க   வேண்டும். வாலில் குங்குமப்பொட்டு வைத்து தியானித்தும் பூஜிக்கலாம். ராமருக்கு அத்யந்த பக்தராகவும் அரிய தொண்டராகவும் பாத   சேவை புரியும் பரம பக்தராகவும் விளங்குபவர் ஆஞ்சநேய மகாப்பிரபு! ராமாயணம் என்னும் மணிஹாரத்தில் நடுநாயகமாக  விளங்குபவர்  ஆஞ்சநேயர்! அவல், சர்க்கரை, தேன், பானகம், நீர்மோர், கதலிப்பழம், கடலை முதலிய நிவேதனப் பொருட்களை அவர்  விரும்பி அமுது  செய்து மகிழ்வார். இப்படி கண்ணனும், மாருதியும் ஒற்றுமையோடு இணைந்திருப்பதால் தான் வெண்ணெயை  மாருதிக்கு சாத்தி  வழிபடுகிறார்கள். ஸ்ரீராம நவமி உற்சவம் கொண்டாடும் இடங்களில் எல்லாம் ஆஞ்சநேயர் நேரில் வந்து  அடியார்களுள்  அடியாராய்-பக்தருள் பக்தராய் அமர்ந்து உபன்யாசத்தைப் பேரானந்தத்துடன் ரசித்து அனைவருக்கும் சலக  சந்தோஷங்களையும்  சுபிட்சங்களையும் வாரி வழங்கிப் பேரருள் புரிகிறார். இதனால் தான் துளசி தாசர் ராமாயண பிரவசனம்  தொடங்கும் முன்னர் பக்தர்களை  ப்ரதட்சணமாக வருவார். அந்த பக்தர்களோடு  பக்தராக மாருதியும் எழுந்தருளி இருப்பார் என்பது  அவருக்கு தெரியும்.