Showing posts with label ஐப்பசி. Show all posts
Showing posts with label ஐப்பசி. Show all posts

Tuesday, October 23, 2018

ஐப்பசி நிறைமதி நாள்! - சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம்!! 🌸🙏

ஐப்பசி நிறைமதி நாள்! - சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம் நடக்கும்.



"இந்த அண்டம் முழுவதும் உணவால் ஆனது" என்னும் பேருண்மை வெளிப்படுத்தப்பட்ட நாள்!!

லிங்கம் (அடையாளம்) - மொத்த உலகைக் குறிக்கும்
அன்னம் - உணவு

தாயின் கருப்பையில் முதல் செல் உருவானது முதல் இறுதி மூச்சு வரை, நம் உடலில் செல்கள் உருவாகிக் கொண்டும், இறந்து கொண்டும் இருக்கின்றன. இதற்கு வளர்சிதை மாற்றம் என்று பெயர்.

இந்த மாற்றம் நமக்கு மட்டும் நடப்பதில்லை. தாவரங்கள், விலங்குகள், பறவைகள் என அனைத்து உடல்களுக்கும் நடக்கின்றது. இறக்கும் செல்கள் என்னவாகின்றன? காற்றிலும், நிலத்திலும், நீரிலும் கலக்கின்றன. பின் என்னவாகிறது?

அவற்றை சில்லுயிரிகள் / நுண்ணுயிரிகள் உண்டு விடுகின்றன. உணவு என்று ஒன்று உள்ளே போனால், கழிவு என்று ஒன்று வெளியே வந்தாகவேண்டும். மேலும், அந்த நுண்ணுயிரிகளுக்கும் வளர்சிதை மாற்றம் நிகழும். அந்த செல்கள் என்னவாகும்? இந்த நுண்ணுயிரிகளின் கழிவையும், இறந்த செல்களையும் உணவாகக் கொள்ள வேறு வகை நுண்ணுயிரிகள் இருக்கும். இப்படி பல விதமான உயிரிகள் (ஜீவராசிகள்) காற்றிலும், நீரிலும், நிலத்திலும் உள்ளன. (முப்பத்து முக்கோடி தேவர்களில் பெரும்பாலான கோடிகள் இந்த நுண்ணுயிரிகள் தாம்!! 😉)

இவற்றை நமது கண்களால் காண இயலாது. ஒரு வேளை, இவற்றை காணும் திறனை இறைவன் நமக்குக் கொடுத்திருந்தால்? 🤔

நம் உள்ளும் வெளியும் கோடான கோடி நுண்ணுயிரிகள் பிறந்தும், இறந்தும், ஒன்றை மற்றொன்று விழுங்கியும், உண்டும், சார்ந்தும் வாழ்வதைக் காணுவோம். (வாந்தி வரலாம். பைத்தியம் பிடிக்கலாம். நெஞ்சும் வெடிக்கலாம். 😂 இதல்லாம் நிகழாதவாறு நம்மை காப்பது இறைவனின் ஐம்பெரும் தொழில்களில் ஒன்றான மறைத்தல் ஆகும். 🙏)

மொத்தத்தில், எங்கெங்கும் உடல்களாக (உணவாக) காண்போம். (ஒன்றின் உடல் இன்னொன்றின் உணவு)

இந்த பேருண்மையை விளக்குவது தான் அன்னாபிஷேகம். ஒவ்வொரு அரிசி பருக்கையும் ஓரு உடலை / ஒரு இனத்தைக் குறிக்கும். அனைத்தும் சேர்ந்து உலகைக் குறிக்கும். 👏👌👍

ஒவ்வொரு அரிசி பருக்கையும் ஒவ்வொரு விண்மீன் கூட்டமாக (Galaxy) எடுத்துக்கொண்டால், மொத்த லிங்கமும் அண்டத்தைக் குறிக்கும். 👏👏👌👌👍👍

இங்ஙனம், ஒரே உவமையைக் கொண்டு உடலுக்குள்ளேயும், இந்த உலகிலும் மற்றும் மொத்த அண்டத்திலும் நடக்கும் நிகழ்வுகளை நமக்கு உணர்த்திய மகான் எப்பேர்பட்டவராக இருக்கவேண்டும்! அவருக்கு நம் சிரம் தாழ்த்துவோம்!! 🌸🙏

அவர் யாரென்றுத் தெரியவில்லை. ஆனால், அவர் இந்தப் பேருண்மைகளை உணர்ந்த / வெளியிட்ட நாள் இன்று தான் என்று உறுதியாகக் கூற முடியும். மேலும், அவர் ஒரு தமிழர் என்றும் அறுதியிட்டுக் கூற இயலும். ஏனெனில் இது தமிழக சிவன் கோயில்களில் மட்டும் நடத்தப்படும் ஒரு விழாவாகும்.

🕉 வாருங்கள், சிவன் கோயிலுக்குச் சென்று வருவோம்.
🌸 அன்னாபிஷேகத்தை கண்குளிர காணுவோம்.
🙏 அந்த ஒப்பனை உணர்த்தும் பேருண்மைகளை உணர்ந்து மனமழிப்போம்.
🔥 எல்லாம் வல்லவனை சிக்கெனப் பிடிப்போம்.

🔯 திருச்சிற்றம்பலம் 🔯

🌸🏵🌹🌺💮🌻🌷🌼

💥 நம் மகான் எப்போது இந்தப் பேருண்மைகளை உணர்ந்திருப்பார்? நியூட்டன் தலையில் "ஆப்பிள் விழுந்த" பின்னர் தானே? மெகல்லன் உலகம் உருண்டை என்று "நிருபித்த" பின்னர் தானே? அந்தோனி வான் லீயு வென்ஹோயெக் நுண்ணுயிரிகளை "கண்டுபிடித்த" பின்னர் தானே? 👊💪 😛😜😝😂

💥 அன்னாபிஷேக அலங்காரத்தில் கண், காது, மூக்கு என சேர்ப்பது அண்மை காலத்தில் ஏற்பட்ட அலங்கோலமாகும். 😑

posted from Bloggeroid

Saturday, August 12, 2017

வருட பிறப்பு, ஆடிப்பெருக்கு, தீபாவளி & பொங்கல் – பின்னுள்ள நம் முன்னோரின் அறிவியல்! 👌🙏

கீழ்காணும் இடுகை வாட்ஸ்அப் மூலம் கிடைத்தது. எனது கருத்துக்களை இதற்குக் கீழ் பதிவிட்டுள்ளேன். நன்றி. 🙏

🌞☀🌞☀

சித்திரை 1, ஆடி 1, தை 1 எல்லாம் விழாவாக கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு / பழக்கம்ன்னு நினைச்சுக்கிட்டு இருக்கோம்...

நம் முன்னோர்கள் இதுக்கு பின்னாடி மிகப்பெரிய அறிவியல வச்சிருக்காங்க....!!!

Ok. Lets look at the science behind it...

"சூரியன் உதிக்கும் திசை கிழக்கு" னு school பசங்களுக்கு சொல்லித்தற்றோம்....

என்னைக்காச்சும் ஒரு #compass வச்சு சூரியன் உதிக்குறப்போ check பண்ணி இருக்கோமா???!!! கண்டிப்பாக இல்லை...
நம்ம education system design பண்ணின வெள்ளக்காரன், நம்ம கிட்ட இருந்த அறிவியல அழிச்சிட்டு, ஒரு முட்டாள்த்தனமான கல்வியை புகுத்திட்டு போயிருக்கான்றதுக்கு இதுவும் ஒரு சான்று....

சூரியன் ஒரு குறிப்பிட்ட நாள்ல மட்டும் தான் exactஆ கிழக்கே உதிக்கும்.... அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா வடகிழக்கு நோக்கி நகர்ந்து, ஒரு extreme pointல மறுபடியும் தெற்கு நோக்கி திரும்பும்... அப்பறம் மறுபடியும் ஒரு நாள் கிழக்கே உதிக்கும், அப்புறம் தென்கிழக்கு நோக்கி நகரும்...

இப்படி correctஆ கிழக்குல ஆரம்பித்து, வடகிழக்கு, தென்கிழக்கு னு போயிட்டு மறுபடியும் correctஆ கிழக்குக்கு வர ஆகிற time, Correctஆ "1 year"...!!!!

சரி... இதுக்கும் தமிழ் மாதத்துக்கும் என்ன சம்பந்தம்ன்னு தானே யோசிக்குறீங்க?

சூரியன் correctஆ கிழக்குல start ஆகுற நாள் தான் #சித்திரை 1 - புத்தாண்டு...!!! (In science it is called Equinox)

அப்புறம் extreme வடகிழக்கு point தான் #ஆடி 1 .... (Solstice)

மறுபடியும் கிழக்குக்கு வர்றது #ஐப்பசி 1 (Equinox)

Going to extreme தென்கிழக்கு is #தை 1 (Solstice)

இந்த வானியல் மாற்றங்கள், அதனை சார்ந்த பருவ கால மாற்றங்களை நன்கு உணர்ந்து இருந்த நம் முன்னோர்கள், இவற்றை அனைவரும் அறியும் வகையில் திருவிழாக்களாக கொண்டாடினார்கள்...

சித்திரை (equinox) - புத்தாண்டு
ஆடி (summer solstice) - ஆடிப்பிறப்பு, ஆடிப்பெருக்கு
ஐப்பசி (equinox) - தீபாவளி
தை (winter solstice) - பொங்கல்

நமது அடுத்த தலைமுறைக்கு நமது பாரம்பரியத்தை வெறும் சடங்காக மட்டும் அல்லாமல் அதன் அறிவியலையும் சேர்த்து கொண்டு சேர்ப்போம்...

🌞☀🌞☀

மேலுள்ள இடுகையில் "In science it is called Equinox" என்று எழுதியிருக்கிறார் அதன் சொந்தக்காரர். இது தவறு! "காலை" என்பதை "In science it is called Morning" என்று கூறுவதற்கு சமம்! 😛 நம்மையும் அறியாமல், நம் மரபணுவில் ஏற்றப்பட்டிருக்கும் அடிமைத்தனத்தினால் வெளிப்பட்டிருக்கும் வாக்கியம் இது!! 😡

ஒன்றை பரங்கியரின் மொழிகளில் (ஆங்கிலம், கிரேக்கம், லத்தீனம், ...)  சொன்னால் அறிவியலன்று. 👊

கிரேக்கம், லத்தீனம் செம்மொழிகளாக இருக்கலாம். தமிழ் மட்டுமே நிறைமொழியாகும். மற்றவை குறைமொழிகளாகும். 💪

கொடூரன் அலெக்ஸாண்டரின் வருகை-தோல்விக்குப் பின்னர் இந்தச் சாக்கடைகளால் ஏற்பட்ட சமூகச் சீரழிவை (பிள்ளைபேறுக்கு பெண் மனைவி. உடல் இன்பத்திற்கு சமூக மதிப்பிற்கு ஆண் மனைவி! 😲🤒😝) நம் முன்னோர்கள் மிகவும் பிரயத்தனப்பட்டு  நீக்கியிருக்கிறார்கள். அதற்கேற்றாற் போல் அன்றைய அரசுகள் இருந்தன. ஆனால், இன்று அப்படியில்லை. பரங்கி பொறுக்கி வாஸ்கோட காமாவின் வருகையினால் மீண்டும் ஆரம்பித்த சீரழிவு இன்று வரை தொடருகிறது.

அவர்களது அறிவியலால் உலகம் ஒவ்வொரு விநாடியும் மேன்மேலும் அழிந்து கொண்டேயிருக்கிறது. ஆகையால், அவர்களது அறிவியலை அழிவியல் என்று அழைப்பதே சரி! 👌

எனில், மேலுள்ள வாக்கியம் "In அழிவியல் it is called Equinox" என்று மாற்றப்பட்டால் பொருத்தமாக இருக்கும்!! 😜😁

Monday, November 14, 2016

ஐப்பசி பெளர்ணமி அன்னாபிஷேக விளக்கம்

இன்று #ஐப்பசி #பெளர்ணமி! #சிவன் கோயில்களில் #அன்னாபிஷேகம் நடக்கும்.

*"இந்த அண்டம் முழுவதும் உணவால் ஆனது"* என்னும் பேருண்மை வெளிப்படுத்தப்பட்ட நாள்!!

லிங்கம் (அடையாளம்) - மொத்த உலகைக் குறிக்கும்
அன்னம் - உணவு

தாயின் கருப்பையில் முதல் செல் உருவானது முதல் இறுதி மூச்சு வரை, நம் உடலில் செல்கள் உருவாகிக் கொண்டும், இறந்து கொண்டும் இருக்கின்றன. இதற்கு வளர்சிதை மாற்றம் என்று பெயர்.

இந்த மாற்றம் நமக்கு மட்டும் நடப்பதில்லை. தாவரங்கள், விலங்குகள், பறவைகள் என அனைத்து உடல்களுக்கும் நடக்கின்றது. இறக்கும் செல்கள் என்னவாகின்றன? காற்றிலும், நிலத்திலும், நீரிலும் கலக்கின்றன. பின் என்னவாகிறது?

அவற்றை சில்லுயிரிகள் / நுண்ணுயிரிகள் உண்டு விடுகின்றன. உணவு என்று ஒன்று உள்ளே போனால், கழிவு என்று ஒன்று வெளியே வந்தாகவேண்டும். மேலும், அந்த நுண்ணுயிரிகளுக்கும் வளர்சிதை மாற்றம் நிகழும். அந்த செல்கள் என்னவாகும்? இந்த நுண்ணுயிரிகளின் கழிவையும், இறந்த செல்களையும் உணவாகக் கொள்ள வேறு வகை நுண்ணுயிரிகள் இருக்கும். இப்படி பல விதமான உயிரிகள் (ஜீவராசிகள்) காற்றிலும், நீரிலும், நிலத்திலும் உள்ளன. (*முப்பத்து முக்கோடி தேவர்களில் பெரும்பாலான கோடிகள் இந்த நுண்ணுயிரிகள் தாம்!!* 😉)

இவற்றை நமது கண்களால் காண இயலாது. ஒரு வேளை, இவற்றை காணும் திறனை இறைவன் நமக்குக் கொடுத்திருந்தால்? 🤔

நம் உள்ளும் வெளியும் கோடான கோடி நுண்ணுயிரிகள் பிறந்தும், இறந்தும், ஒன்றை மற்றொன்று விழுங்கியும், உண்டும், சார்ந்தும் வாழ்வதைக் காணுவோம். (வாந்தி வரலாம். பைத்தியம் பிடிக்கலாம். நெஞ்சும் வெடிக்கலாம். 😂 இதல்லாம் நிகழாதவாறு நம்மை காப்பது இறைவனின் ஐம்பெரும் தொழில்களில் ஒன்றான மறைத்தல் ஆகும். 🙏)

*மொத்தத்தில், எங்கெங்கும் உடல்களாக (உணவாக) காண்போம். (ஒன்றின் உடல் இன்னொன்றின் உணவு)*

*இந்த பேருண்மையை விளக்குவது தான் அன்னாபிஷேகம். ஒவ்வொரு அரிசி பருக்கையும் ஓரு உடலை / ஒரு இனத்தைக் குறிக்கும். அனைத்தும் சேர்ந்து உலகைக் குறிக்கும்.* 👏👌👍

*ஒவ்வொரு அரிசி பருக்கையும் ஒவ்வொரு விண்மீன் கூட்டமாக (Galaxy) எடுத்துக்கொண்டால், மொத்த லிங்கமும் அண்டத்தைக் குறிக்கும்.* 👏👏👌👌👍👍

இங்ஙனம், ஒரே உவமையைக் கொண்டு உடலுக்குள்ளேயும், இந்த உலகிலும் மற்றும் மொத்த அண்டத்திலும் நடக்கும் நிகழ்வுகளை நமக்கு உணர்த்திய மகான் எப்பேர்பட்டவராக இருக்கவேண்டும்! அவருக்கு நம் சிரம் தாழ்த்துவோம்!! 🌸🙏

அவர் யாரென்றுத் தெரியவில்லை. ஆனால், *அவர் இந்தப் பேருண்மைகளை உணர்ந்த / வெளியிட்ட நாள் இன்று தான் என்று உறுதியாகக் கூற முடியும். மேலும், அவர் ஒரு தமிழர் என்றும் அறுதியிட்டுக் கூற இயலும். ஏனெனில் இது தமிழக சிவன் கோயில்களில் மட்டும் நடத்தப்படும் ஒரு விழாவாகும்.*

🕉 வாருங்கள், சிவன் கோயிலுக்குச் சென்று வருவோம்.
🌸 அன்னாபிஷேகத்தை கண்குளிர காணுவோம்.
🙏 அந்த அலங்காரம் உணர்த்தும் பேருண்மைகளை  உணர்ந்து மனமழிப்போம்.
🔥 எல்லாம் வல்லவனை சிக்கெனப் பிடிப்போம்.

🔯 திருச்சிற்றம்பலம் 🔯

(இணைப்பு: தினமலர் - வாரமலர் - 13/11/2016)

🌸🏵🌹🌺💮🌻🌷🌼

💥 பி.கு. #1: நம் மகான் எப்போது இந்தப் பேருண்மைகளை உணர்ந்திருப்பார்? நியூட்டன் தலையில் "ஆப்பிள் விழுந்த" பின்னர் தானே? மெகல்லன் உலகம் உருண்டை என்று "நிருபித்த" பின்னர் தானே? அந்தோனி வான் லீயு வென்ஹோயெக் நுண்ணுயிரிகளை "கண்டுபிடித்த" பின்னர் தானே? 👊💪 😛😜😝😂

💥 பி.கு. #2: இணைப்புக் கட்டுரையில் சிவப்பு கட்டமிட்டதை மட்டும் படித்தால் போதும். மீதம், பக்கம் நிரப்புவதற்காக, சென்ற வருட கட்டுரையிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக எழுதப்பட்டுள்ளது.

💥 பி.கு. #3: அன்னாபிஷேக அலங்காரத்தில் கண், காது, மூக்கு என சேர்ப்பது அண்மை காலத்தில் ஏற்பட்ட அலங்கோலமாகும். 😑