Showing posts with label நாமம். Show all posts
Showing posts with label நாமம். Show all posts

Saturday, November 15, 2025

பெருமாளின் கையிலுள்ள வாள் பேயாழ்வாராக பிறந்ததாம்! 😁


> வாள் - அறிவு.
> வாளோடு பிறந்த மூத்தக்குடி - அறிவோடு பிறந்த மூத்தக்குடி.

சிலர் பொருள் சேர்க்க பிறந்திருப்பர். சிலர் ஊர் சுற்ற பிறந்திருப்பர். சிலர் யாவற்றையும் நுகர பிறந்திருப்பர். இது போன்று, பேயாழ்வார் சிந்திக்கப் பிறந்திருப்பார். அதாவது, அறிவின் வடிவமாகிறார்.

இப்படி எளிமையாக சொல்லாமல், ஏன் "பெருமாளின் கையிலுள்ள வாள்" என்று பிட் போடுகின்றனர்?

ஏனெனில், ஒரு பயலுக்கும் தெளிவு கிடைத்துவிடக்கூடாது. தெளிவு கிடைத்துவிட்டால், படங்காட்டும் தொழில் படுத்துவிடுமே! பிறகு, சேஃபா, கம்ஃபர்ட்டா, செக்யூர்டா, வாழையடி வாழையா நன்னா போஜனம் செய்வதெப்படி?

👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽

> நாமம் போட்டுட்டியா? = ஏமாற்றிவிட்டாயா?
> நாமம் போட்டுட்டாங்களா? = ஏமாற்றிவிட்டார்களா?
> நாமம் = ஏமாற்று வேலை!
> வைணவம் = ஏமாற்று வேலை!!

அறிவின் வடிவாக வாழ்ந்த ஒருவர், எவ்வாறு ஏமாற்று வேலையை பின்பற்றமுடியும்?

அல்லது, அவர் பின்லேடன்-வகை அறிவாளியாக இருக்கலாம். பின்லேடன், அமெரிக்காவை நிலைகுலைய வைத்தான், USD10B செலவு செய்யவைத்தான் & 10 ஆண்டுகள் பாடுபட வைத்தான். பின்னரே சிக்கினான். எனில், அவன் எப்படிப்பட்ட அறிவாளியாக இருந்திருக்க வேண்டுமென்று கற்பனை செய்து கொள்ளலாம். அவனை போன்றொரு சிறந்த அறிவாளியாக பேயாழ்வார் இருந்திருக்கலாம்! 😏

அல்லது, திரு நம்மாழ்வாரை போன்று பேயாழ்வாரும் திருநெறியராக இருந்திருக்கலாம். நம்மாழ்வாருக்கு பெண்குறி (நாமம்) சாத்தி, அவரை தங்களவராக காட்டுவது போன்று, பேயாழ்வாருக்கும் பெண்குறி சாத்தி, காப்புரிமை கொண்டாடுகின்றனர் என்று கொள்ளலாம். இதற்கான குறிப்பையும் அவர்களே கொடுத்துள்ளனர்

"ஐசுவரியம் உண்டாக, எதிரிகள் குறைய இங்கு வேண்டிக் கொள்ளலாம்" என்று எழுதியிருக்கிறார்கள். மெய்யியலில், ஐசுவரியம் எனில் மெய்யறிவாகும்; எதிரிகள் எனில் பற்றுகளாகும். அதாவது, பேயாழ்வரின் அருள் பெற்றால் பற்றுகள் குறைந்து, மெய்யறிவு கிட்டும் என்பது பொருளாகும். ஆனால், நாம மதமோ இரண்டிற்குமே எதிரானதாகும். மெய்யறிவை தூற்றும். பற்றுகளை சேர்த்துக் கொள்ளச் சொல்லும். எனில், எப்படி பேயாழ்வார் நாம மதத்தை சார்ந்தவராக முடியும்?

👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽

திரு சீர்காழி பிள்ளையாரின் (அசுரத்தில், திருஞானசம்பந்தர்) திருப்பணிகளுக்கு பின்னர், வடக்கிலிருந்து வந்த சமணம், பௌத்தம் போன்ற நச்சுக் கூட்டங்களால் தொழில் செய்ய முடியாமல் போனது. அப்போது, மொட்டையரில் ஒரு பிரிவினர், "நம்மாளாண்டதான் கம்ப்ளீட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் இருக்கே. கண்டன்ட்ட மாத்தி பிசினஸ் செஞ்சா என்ன?" என்று சிந்தித்து, அப்போது சிறியளவில் இருந்த மாயோன் வழிபாட்டை விலைக்கு வாங்கி, இன்றுள்ள நாமத் தொழிலாக வளர்த்தெடுத்தனர்.

💥 பள்ளிகொண்ட பெருமாள் - எகிப்திலிருந்து சுடப்பட்டது.
💥 பெண்குறி (நாமம்) - பாலைவன மதங்களிலிருந்து சுடப்பட்டது. அங்கு பயன்பாட்டிலருந்த 'n' வடிவத்தையெடுத்து, தலைகீழாக்கி ('u'), அதன் நடுவில் சிவப்புக் கோட்டை சேர்த்தது தெலுங்கனனா இராமானுஜர்.
💥 சடாரி - பாலைவன மதங்களிலிருந்து சுடப்பட்டது. அவர்களது குல்லா, இங்கு சடாரியானது.
💥 சக்கிரத்தாழ்வார் - யூதரிடமிருந்து சுடப்பட்டது. அவரது தாவீது விண்மீன் (David's Star), இங்கு சக்கிரத்தாழ்வாரானது.
💥 திரங்கன்முகவன் (குரங்கு) - ஆனைமுகனுக்கு போட்டியாக வடிவமைக்கப்பட்டது
💥 கோளரிப் பெருமாள் கதை - திருக்கடவூர் கதையின் உல்டா.
💥 தெலுங்கனான இராமானுஜர் 7 மலைகளை முழங்கால்களால் கடந்தது - திரு காரைக்கால் அம்மையார் திருக்கயிலாய மலையை தலையால் கடந்த வரலாற்றின் உல்டா.

oOOo

கண்ணனே சொன்னான். கண்ணனே எழுதினான். (இங்கு கண்ணன் என்பது மனமாகும். 5,125 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பெருமானல்ல. 🌺🙏🏽🙇🏽‍♂️)

அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Thursday, February 27, 2025

தங்க புத்தர் சிலையை விற்று, திருவரங்கம் கோயிலை கட்டியுள்ளார்கள் - ஆ இராசா


இது இவரது கருத்தல்ல. திருவரங்கம் திருக்கோயில் பற்றிய செய்திகளை கொண்டுள்ள "கோயிலொழுகு" (நாமாசுரர்கள் (#) எழுதியது) நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளதைத்தான் இவர் கூறியிருக்கிறார். இது, பெரும்பாலும், உண்மையாக இருக்க வாய்ப்புள்ளது.

(# - ஆரியர்கள், குறிப்பாக, வைணவர்கள், தங்களது புருடாக்களில் திருநெறியத் தமிழர்களை அசுரர்களாக காண்பித்துள்ளதால், நான் அவர்களை அசுரர்கள் என்றழைக்கிறேன்.)

இன்று நாமம் போடும் தொழில் (வைணவம்) செய்து கொண்டிருக்கும் நாமாசுரர்கள், நேற்று மொட்டை போடும் தொழில் (பெளத்தம்) செய்து கொண்டிருந்தார்கள். திரு சீர்காழி பிள்ளையாரின் 🌺🙏🏽🙇🏽‍♂️ (அசுரத்தில், திருஞானசம்பந்தர்) திருப்பணியினால் மொட்டை, அம்மணம் போன்ற வடக்கிலிருந்து வந்த தொழில்கள் போணியாகாமல் போனதால், மொட்டாசுரர்களில் ஒரு பிரிவினர், இங்கிருந்த மாயோன் வழிபாட்டினருடன் கூட்டு சேர்ந்து (அல்லது, அதை விலைக்கு வாங்கி), நாமத்தொழிலாக மாற்றிக்கொண்டனர். அதற்காக அவர்களிடமிருந்த ஒரு தங்க புத்தர் சிலையை விற்று, அப்பணத்தை முதலீடாக பயன்படுத்தியுள்ளனர் என்று எடுத்துக் கொள்ளலாம்.

இன்று நாம விகாரையாக இருக்கும் திருவரங்கம், நேற்று, பௌத்த விகாரையாக இருந்திருக்கலாம். ஆனால், "அதற்கும் முன்னர் என்னவாக இருந்தது?" என்பதுதான் இன்னும் முகமையான கேள்வியாகும்!

oOo

இதற்கு விடையாக, திருச்சி மக்களிடையே நிலவும் ஒரு செய்தியை ஆராயலாம்: சமயபுரம் மாரியம்மன் சிலையும், திருவரங்கம் பெருமாள் சிலையும் [பானைகள் செய்யப் பயன்படும்] ஒரே வகை மண்ணாலானது.


இதைக் கேட்டவுடன் நாம், "அக்காலத்தில், இரு சிலைகளையும், ஒரே சிற்பி ஒரே இடத்து மண்ணைக் கொண்டு வடிவமைத்திருப்பார் போலிருக்கிறது" என்று நினைத்துக் கொள்வோம். இது தவறாகும்!

திருவரங்கம் பெருமாள் சிலைக்கு கீழேயிருப்பவர் திரு சட்டைமுனி பெருமானாவார் (அசுரத்தில், சித்தர்). சமயபுரம் மாரியம்மன் சிலைக்கு கீழேயிருக்கும் பெருமானின் பெயர் தெரியவில்லை. ஆனால், எது மேன்மையான பொருள் என்பது பற்றிய இருவரது கண்ணோட்டமும் ஒன்றாக இருந்துள்ளது. இதனால்தான், "... ஒரே வகை மண்ணாலானது" என்று பதிவு செய்திருக்கிறார்கள்.

வையகத்திலுள்ள யாவற்றையும் இரண்டாக பிரிக்கலாம்:

> காண்பவன்-காணப்படுவது
> உணருபவன்-உணரப்படுவது
> மாறாதது-மாறுவது
> அழியாதது-அழிவது
> அசையாதது-அசைவது

மேற்கண்ட இரு பெருமான்களும், மாறிக்கொண்டேயிருக்கும் மனதையும், உடலையும், வையகத்தையும் பெரிதாக கருதியுள்ளனர்.

மாறாததை போற்றினால் ஐயன் (சிவன்) வழிபாடு. மாறுவதை போற்றினால் அன்னை வழிபாடு. மாறுவதை ஆணாகக் கண்டால்... மாயோன் வழிபாடு! இவ்வழிபாடே சட்டைமுனி பெருமானின் திருவிடத்தில் (அசுரத்தில், சமாதியில்) நடந்திருக்கலாம். பின்னர், வடக்கிலிருந்து வந்த மொட்டாசுரர்களின் கைகளுக்கு சென்று, இன்று, நாமத்தொழிலின் தலைமையகமாக மாறியுள்ளது.

oOo

சீர்காழிப் பிள்ளையாரால் புவாவுக்கு லாட்டரி அடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட மொட்டாசுரர்களுக்கு அப்போதிருந்த தெரிவுகள் 2:

🥂 மீண்டும் தேவலோகத்திற்கு திரும்பி, அன்றைய அசோகன் முதல் இன்றைய தெய்வப்பிறவி வரை, தெற்கை கொள்ளையடித்துக் கொடுக்கும் தட்சிணையில் சோமபானம் குடித்துக் கொண்டு, ஊர்வசி, அரம்பை போன்ற ஐயிட்டங்களின் குத்தாட்டத்தை கண்டுகளித்துக் கொண்டிருத்தல். அல்லது,

🤑 இங்கேயிருக்கும் ஏதாவதொரு பிரிவினரோடு இணைந்து, தொழிலை தொடருதல்.

மொட்டாசுரர்களில் ஒரு பிரிவினர் 2வது தெரிவை தேர்ந்தெடுத்தனர். அவர்களே, இன்று, நாமாசுரர்களென்று (நாம மதத்தை வழிநடத்துபவர்கள்) அறியப்படுகின்றனர்.

(ஏன் பரந்து, விரிந்து, வலுவுடன் திகழ்ந்த அன்னை வழிபாட்டினருடன் இணையாமல், சிறிய அளவிலிருந்த மாயோன் வழிபாட்டை விலைக்கு வாங்கினர்? இதற்கான "கைங்கரியத்தை" வேறொரு நாள் வைத்துக் கொள்வோம்! ☺️)

oOo

இன்று,

💥 நாமம் போட்டுட்டாங்களா? = ஏமாற்றிவிட்டார்களா?
💥 நாமம் போட்டுட்டியா? = ஏமாற்றிவிட்டாயா?
💥 பட்டை நாமம் சாத்திவிட்டார்களா? = நன்றாக ஏமாற்றிவிட்டார்களா?

நேற்று,

💥 மொட்டை போட்டுட்டாங்களா? = முழுவதும் கறந்துவிட்டார்களா?
💥 மொட்டை போட்டுட்டியா? = முழுவதும் கறந்துவிட்டாயா?

இவ்வளவுதான் வைணவ & பௌத்த தொழில்களின் வரலாறு!! 👊🏽👊🏽

oOOo

அசுரம் தவிர். தமிழ் பயில். 💪🏽

அருள் நிறைவான அன்புக்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Thursday, May 23, 2024

நித்ய சாசுவத அசுராசுர யுத்தம்! 😜


இன்று, பெண்குறியை (நாமம்) வரைவதில் தொடங்கி, பலவற்றிற்கு அடித்துக் கொள்ளும் இவர்கள், இதற்கு முன்னர், பௌத்த மொட்டைகளாக இருந்தபோது எதற்கு அடித்துக் கொண்டிருப்பார்கள்? யாரை, எப்படி மொட்டையடிப்பதென்றா? 😀

அதற்கும் முன்னர், வாயில் போடவேண்டியதை நெருப்பில் போட்டு (வேள்வி), கரியாக்கி கொண்டிருந்தபோது, எதற்கு அடித்துக் கொண்டிருப்பார்கள்? யாரிடம், எப்படி படங்காட்டலாம் என்றா? அல்லது, அசுரச் செய்யுட்களை (அசுரத்தில், மந்திரம்) உருட்டுவதிலா? 😃

எல்லாவற்றிற்கும் முன்னர், அவர்களது தாயகமான ரிஷிவர்ஷாவில் சுற்றிக் கொண்டிருந்தபோது, எதற்கு அடித்துக் கொண்டிருப்பார்கள்? வேட்டையாடிய பனிச்சிறுத்தை, பனிக்கரடிகளை பங்கு போட்டுக் கொள்வதிலா? 😄

😆

💥 நாமம் போட்டுட்டியா? = ஏமாற்றி விட்டாயா?
💥 மொட்டை போட்டுட்டியா? = முழுவதும் கறந்துவிட்டாயா?
💥 நாம & மொட்டை மதங்கள் = ஏமாற்று வேலைகள்!

வடக்கிலிருந்து வந்த அம்மணம் (சமணம்), மொட்டை (பெளத்தம்), மொட்டையிலிருந்து தோன்றிய பெண்குறி (நாமம்) & கரியாக்குதல் (வைதீகம்) என எதுதான் ஏமாற்று வேலையில்லை? 👊🏽👊🏽

oOOo

அசுரம் தவிர். தமிழ் பயில். 💪🏽

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

Sunday, July 16, 2023

பூரி ஜெகந்நாதர் திருக்கோயில் இறையுருவங்கள்!


வையகக் காட்சி விலகி, திருநீற்று நிலை (ஆரியத்தில், சமாதி) தொடங்கியதும், சில தெளிவில்லாத காட்சிகளை அன்னை மாயை (அல்லது, மாயக்கண்ணன்) தோற்றுவித்து, நம்மை மீண்டும் வையகத்திற்குள் தள்ள முயற்சிப்பார். அந்த தெளிவில்லாத காட்சிகளை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டவைதாம் இந்த இறையுருவங்கள்.

இப்போது நாம் காணும் முத்திரட்சிக் (ஆரியத்தில், முப்பரிமாணம்) காட்சிகளை போலல்லாது, திருநீற்று நிலைக் காட்சிகள் இருதிரட்சிக் காட்சிகளாக இருக்கும். பழைய கருப்பு-வெள்ளைத் திரைப்படங்களை காணும்போது, படச்சுருள் முடியும் தருவாயில், சில கீறல்கள் தெளிவில்லாமல் திரையில் ஓடுவதைப் பார்த்திருப்போம். இவ்வண்ணமே திருநீற்று நிலைக் காட்சிகள் இருக்கும். இக்காட்சிகளே பூரி இறையுருவங்களின் அடிப்படையாகும்.

திருநீற்று நிலையின் தொடக்கமே இறுதிநிலை என்று கணக்கிட்டு, அப்போதுள்ள காட்சியை படம்பிடிப்பது போன்று கருவறை இறையுருவங்களை உருவாக்கியுள்ளனர். உடன், அவர்களது வைணவ நம்பிக்கைகளையும் சேர்த்துள்ளனர்:

🔸 இருளே பெரிது. எக்கணமும் இடைவிடாது இருப்பது.

திரு கண்ணபிரான் - கருப்பு நிறம். பெரிய உருவம். வட்டவடிவக் கண்கள். இடைவிடாது எக்கணமும் இருப்பதைக் குறிக்கும்.

🔸 இருளிலிருந்து ஒளி பிறந்தது. ஒளி தோன்றி மறையக்கூடியது.

திரு பலராமர் - வெள்ளை நிறம். கண்ணபிரானை விட சற்று சிறிய உருவம். முட்டைவடிவக் கண்கள். ஒரு புறம் குவிந்தும், மறுபுறம் விரிந்துமிருக்கும். தோன்றி மறைவதைக் குறிக்கும்.

🔸 இறுதியாக காட்சிகள் பிறந்தன. காட்சிகளும் தோன்றி மறையக்கூடியவை.

திரு சுபத்திரை - மஞ்சள் நிறம். விளையாட்டுப் பிள்ளையை நினைவுபடுத்தும் சிறிய உருவம். பலராமரைப் போன்ற முட்டைவடிவக் கண்கள்.

இம்மூன்று உருவங்களையும் சற்று மாற்றி சிந்தித்தால்... இறை-உயிர்-தளை (ஆரியத்தில், பசு-பதி-பாசம்கிடைத்துவிடும்! ☺️

மேலும், பூரி இறையுருவங்கள் வைக்கப்பட்டிருக்கும் வரிசையை சிந்தித்தால்... உமைமுருகுஈசர் (ஆரியத்தில், சோமாஸ்கந்தர்) கிடைத்துவிடுவார்! 😏

🌷 உமைமுருகுஈசர்: கணவன் + விளையாட்டுப் பிள்ளை + மனைவி

🌷 பூரி: அண்ணன் + விளையாட்டுத் தங்கை + தம்பி

ஆனால், ஒரு பெரிய வேறுபாடுள்ளது. நம் பெரியவர்கள் இறை-உயிர்-தளை என்று மூன்று முடிவில்லாத பொருட்களை வரையறுத்திருந்தாலும், உமைமுருகுஈசர் என்ற இறையுருவை வடித்திருந்தாலும், கருவறையில் வைத்தது சிவலிங்கமென்ற ஓர் இறையுருவை மட்டுமே! ஏனெனில், இருப்பது ஒரு பொருளேயாகும். திருநீற்று நிலையின் தொடக்கத்தில் வேண்டுமானால் 2 அல்லது 3 பொருட்கள் இருப்பதுபோன்று தோன்றலாம். ஆனால், அந்நிலை தொடரும்போது, இருப்பது ஒரு பொருளே என்பது தெளிவாகும்.

🌷 சிவலிங்கத்தின் வளைந்த மேல்பகுதி - உள்ளபொருள் முடிவற்றது

🌷 சிவலிங்கத்தின் சீரான தண்டுப்பகுதி - உள்ளபொருள் மாற்றமடையாதது

oOo


வைணவத்தின் சின்னமாக பெண்குறியை மட்டும் இராமானுஜர் அறிவித்தார். ஆனால், மற்ற பகுதிகளில் வாழ்ந்த வைணவர்கள், தங்களது தனித்தன்மையை காட்டுவதற்காக அதில் சில மாற்றங்களை செய்துகொண்டனர். பூரி பகுதியில் வாழ்ந்தோர், பெண்ணுறுப்பின் வெளித்தோற்றத்தோடு, பெண்ணுடலின் உட்புறத்தில், இரு பக்கங்களிலுமுள்ள கருமுட்டைப் பைகளையும் சேர்த்துக்கொண்டனர். கருமுட்டைப் பைகளை இறையுருவின் காதணிகளாகவும், பெண்ணுறுப்பின் வெளிப்புறத்தோற்றத்தை கழுத்தணியாகவும் காட்டியுள்ளனர்.

குருவாயூர் பகுதியில் வாழ்ந்தோர், பெண்ணுறுப்பின் உட்புறத்தோற்றத்தை, குறிப்பாக கருப்பையையும், கருமுட்டைப் பைகளையும் எடுத்துக்கொண்டுள்ளனர். இவற்றை குருவாயூர் உடையவரை சுற்றியுள்ள ஒப்பனையில் காட்டியுள்ளனர்.

oOo

இராமானுஜருக்கு முன்னர் நாமச்சின்னம் கிடையாது. 1,300 ஆண்டுகளுக்கு முன்னர் வைணவமே கிடையாது. ஆனால், பூரி திருக்கோயில் வெகு பழமையானதாக கருதப்படுகிறது. எனில், 1,300 ஆண்டுகளுக்கு முன்னர் அக்கருவறையில் இருந்த இறையுரு எது?

வடக்கிலிருந்து வந்த பெளத்தம் போனியாகாத நிலை ஏற்பட்ட பிறகு, அதிலிருந்து ஒரு பகுதியினர் வைணவத்தை உருவாக்கி, தொழிலைத் தொடர்ந்தனர் என்பது வரலாறு. எனில், 1,300 ஆண்டுகளுக்கு முன்னர் பூரி திருக்கோயில் பௌத்தக் கோயிலாக இருந்ததா?

ஆனால், அத்திருக்கோயிலின் கருவறை பல்லாயிரமாண்டுகள் பழமையானது என்கிறார்கள். பௌத்தத்தின் வயதோ 2,500 ஆண்டுகள் மட்டுமே. இதிலும், 500-700 ஆண்டுகள் கழித்தே அது தெற்கில் பரவத்தொடங்கியது. எனில், பௌத்தத்திற்கு முன்னர் அக்கருவறையில் இருந்த இறையுரு எது? அக்கருவறையின் கீழ் திருநீற்று நிலையிலிருக்கும் பெருமானின் கண்ணோட்டம்தான் யாது?

உடலாக (பூரி) உலகைக் (ஜெகம்) கொண்ட தலைவனாக (நாதன்) வைணவர்கள் போற்றும் அந்த பூரி பெருமானுக்கே வெளிச்சம்! 🙏🏽

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌼🌼🌼🌼🌼

Wednesday, March 29, 2023

வைணவ கைங்கரியத்திற்கு எதிர் கைங்கரியம்!! 👊🏽👊🏽



இணைப்புப்படம், ராமகிருஷ்ண விஜயத்தின் சித்திரை 2023 இதழின் பின்னட்டைப்படமாக வந்துள்ளது.

திரு கண்ணபிரானுக்கும் 🌺🙏🏽🙇🏽‍♂️, அர்ஜுனனுக்கும் நாமத்தை போட்டிருக்கிறார்கள். துரியோதனனுக்கு பட்டையை போட்டிருக்கிறார்கள். அதாவது, சைவர்களை கொடூரர்களாகவும், நாமப் பேர்வழிகளை நல்லவர்களாகவும் காட்டியிருக்கிறார்கள்!

> நாமச் சின்னத்தை இராமானுஜர் வரைந்தது ஏறக்குறைய 850 ஆண்டுகளுக்கு முன்னர்.

> வைணவம் என்றொரு மதம் தோன்றத் தொடங்கியது திருஞானசம்பந்தப் பெருமானின் 🌺🙏🏽🙇🏽‍♂️ மறைவுக்குப் பின்னர். அது முழுவடிவம் பெற்றது இன்னும் சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர். 

> கண்ணபிரான் வாழ்ந்ததும், மகாபாரதம் நிகழ்ந்ததும் 5,000 ஆண்டுகளுக்கு முன்னர்.

> எனில், பிரானுக்கும் அர்ஜுனனுக்கும் எப்படி நாமத்தை போட்டுவிடலாம்?

நாமம் ஒன்றும் இராமானுஜரின் தனிப்பட்ட படைப்பல்ல! அதற்கு முன்னரே பாலைவன மதங்களில் வெகுவாக பயன்படுத்தப்பட்ட பெண்குறி திறப்பு எனும் குறியீட்டை, தலைகீழாக்கி, நடுவில் சிவப்பு கோட்டைச் சேர்த்து வெளியிட்டார். பாலைவன மதங்களில், பெண்குறி, 'n' என்ற வடிவில் பயன்படுத்தப்பட்டிருக்கும். இவர், அதை 'U' என்றாக்கி, நடுவில் கோடு சேர்த்து, அச்சு அசல் பெண்குறியாக்கிவிட்டார். |/

> நாமம் போட்டுட்டாங்களா? = உன்னை ஏமாற்றிவிட்டார்களா?

> நாமம் போட்டுட்டியா? = ஏமாற்றிவிட்டாயா?

>> நாமம் = வைணவம் = ஏமாற்றுவேலை!!

அடிப்படையில், இவர்கள் வடக்கிலிருந்து வந்த பௌத்தர்களாவர். அப்போது இவர்களது தொழில் மொட்டைப் போடுதலாகும். 

> மொட்டப் போட்டுட்டாங்களா? = முழுவதும் கறந்துவிட்டார்களா?

> மொட்டப் போட்டுட்டியா? = முழுவதும் கறந்துவிட்டாயா?

>> மொட்டை = பௌத்தம் = திருட்டு வேலை!!

ஆக மொத்தம், இவர்களது தொழில் ஊரையேமாற்றிப் பிழைப்பதாகும்!!

இவ்வாறு, இவர்களது திருட்டுத்தனங்களை பக்கம் பக்கமாக தோலுரித்துக் கொண்டே போகலாம். இப்போதைக்கு இது போதும். 👊🏽👊🏽

என்றும் வாய்மையே வெல்லும்!!

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌸🌸🌸🌸

Tuesday, February 8, 2022

வைணவ நாமம் - சில குறிப்புகள்


(சமய அடையாளங்கள், சின்னங்கள் பற்றி ஒரு சிறிதும் அறியாதவர்களுக்கு இந்த இடுகை முதலில் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தும்!)

🔸 வைணவத்தின் அடையாளங்களுள் ஒன்றான திருமண் எனப்படும் நாமத்தை, ஏறக்குறைய 900 ஆண்டுகளுக்கு முன்னர் திரு ராமானுஜர் உருவாக்கினர்

🔸 7ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோற்றுவிக்கப்பட்ட வைணவ மதத்தின் அடிப்படை பெண்தெய்வ வழிபாடாகும் - மருள்வழி. இந்த வழிபாட்டில், தன்னிலை மறந்து பேசுவதை இன்று "அருள்வாக்கு" என்றழைத்தாலும், அன்று "மருள்வாக்கு" என்றேயழைத்தனர். அப்படி பேசுவோரை "மருளாளிகள்" என்றும் அழைத்தனர். மருள் வழிபாட்டினரின் சில நம்பிக்கைகள்:

> உயிரற்றதிலிருந்து உயிர் தோன்றியது
> காட்சிகளில்லாமல் காண்பான் தன்னை உணரமுடியாது
> பெண்ணுறுப்பு இல்லாமல் ஆணுறுப்பு இயங்கமுடியாது; உயிர்கள் தோன்றாது; உலகம் இயங்காது.

🔸 இவற்றையெல்லாம் இணைத்து, பெண்ணுறுப்பை நாமமாக - வைணவத்தின் முகமை அடையாளமாக - அறிவித்தார் ராமானுஜர்.

🔸 நாமத்திலுள்ள வெள்ளை வெளிப்புறக் கோடு உயிரற்றதைக் குறிக்கும். உட்புற சிவப்புக்கோடு உயிரைக் குறிக்கும். உயிரற்றதினுள்ளே உயிரடங்கும் என்ற அவர்களது நம்பிக்கையைக் குறிக்கும்.

🔸 மூன்று கோடுகளும் ஒரு சிறு வெள்ளைக் கோட்டில் தொடங்கி, பின்னர் விரியும். உயிரற்றதிலிருந்தே அனைத்தும் உருவானது என்ற அவர்களது நம்பிக்கையைக் குறிக்கும்.

🔸 பெண்ணுறுப்பை சமயச்சின்னமாக முதன் முதலில் ராமானுஜர்தான் பயன்படுத்தினார் என்று சொல்லமுடியாது.

> காலத்தால் முந்திய பெண்தெய்வப் பெயரான "அங்காளி" என்ற பெயரிலேயே பெண்ணுறுப்பு இடம் பெற்றுள்ளது: [பெண்] அங்கமாகிய காளி!
> ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோன்றிய முகம்மதியத்தின் தலையாயக் குறியீடுகளில் ஒன்று பெண்ணுறுப்பாகும். அவர்களது பள்ளிவாசலின் நுழைவாயில் பெண்ணுறுப்புக்கு சமமாகும்.
> முகம்மதியம் தனியாக & தானாகத் தோன்றிவிடவில்லை. அதன் முன்னோடிகளில் ஒன்றான கிறித்தவத்தின் மிகப்பெரிய குறியீடே பெண்ணுறுப்புத்தான்! மதிப்பில் குறுக்கை பெரிதாக இருந்தாலும், எண்ணிக்கையில் பெண்ணுறுப்பே இவர்களது கட்டிடங்களில் மிகுதியாகவிருக்கும்.
> கிறித்தவத்தின் குறியீடுகள் யாவும் அவர்களுடையதல்ல. ரோமானிய குருமார்கள் உருவாக்கிக் கொடுத்தவை.
> படையெடுப்பு, வேலைவாய்ப்பு, கல்வி, வணிகம் என பல வழிகளில் இவர்கள் யாவரும் நம்மோடு தொடர்பிலிருந்தவர்களே!

🔸 ஏனையோர் பெண்ணுறுப்பை தலைகீழாக்கி 'n' வடிவில் பயன்படுத்தினர். ராமானுஜர் நேராக பயன்படுத்தினார். நடுவில் ஒரு சிவப்புக்கோட்டை சேர்த்து, அச்சு அசல் பெண்ணுறுப்பாக்கிவிட்டார். இவைதாம் ராமானுஜரின் தனிப்பட்ட பங்களிப்பாகின்றன.

🔸 வைணவர்களின் அடிப்படை (பெளத்தம் -> மருள்வழி) & கொள்கைகளை (தோன்றி மறைகின்ற & அறிபடுபொருளாகிய மால் / மாயையை வணங்குதல்) நன்கு உணர்ந்திருந்த அக்காலப் பெரியோர்கள் & பண்பட்ட குடிகள் வைணவத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால், தங்களை வளர்த்து, நிலைநிறுத்திக் கொள்ள இன்றைய மதமாற்றிகள் பயன்படுத்தும் "ஊழியங்களை" பயன்படுத்தினர். விளைவு...

அன்றிலிருந்து இன்றுவரை நாமம் எனில் ஏமாற்றுதல் என்றாகிவிட்டது!

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Wednesday, October 20, 2021

தில்லை திருத்தலத்திற்குள் கோவிந்தராசர் சிலை நுழைந்த வரலாறு!!



("The Aravidu dynasty" (வரலாற்று ஆய்வு நூல்) மற்றும் திரு கா வெள்ளைவாரணரின் "தில்லை பெருங்கோயில்" ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வரலாற்று நிகழ்வுகளைத் தழுவி எழுதப்பட்டுள்ளது இச்சிறுகதை.)

இரத்தப்படுக்கை

-- சிவதீபன் (9585756797)

தில்லை கோபுரங்கள் நான்கும் மங்கலான சூரிய வெளிச்சத்திலுங்கூட மின்னிக் கொண்டிருந்தன. இன்று நிகழவிருக்கும் காட்சிகளைக் காண விரும்பாத கதிரவன், தனது கண்களை மூடிகொண்டே கிழக்கே அடி எடுத்து வைத்துள்ளான் போலும்! பொழுது புலராத அந்த வேளையில் தீட்சிதர்கள் யாவரும் கீழசன்னதி வாசலில் கூடிநின்று பரபரப்புடன் விவாதித்துக் கொண்டிருந்தனர்.

அந்த அதிகாலை வேளையிலும் விரைவாக அகத்து வேலைகளை நிறைவுசெய்து கொண்டு, ஈரக்கைகளுடன், மடிசார் சரசரக்க, பெண்களும்கூட வந்துசேரத் தொடங்கினர்.

"எப்படியும் இன்று ஒரு பிரச்சனை இருக்கிறது!!" என்று ஊகித்தவர்களாக ஆலயத்தில் பணிபுரியும் சிற்பிகளும் எடுபிடிகளும் மெல்ல ஒதுங்கி கோயிலுக்குள் சென்று கொண்டிருந்தனர்.

அவர்களை பார்க்கப் பார்க்க தீட்சிதர்கள் பலருக்கு மனம் வெகுண்டது. "காலங்காலமாக நமக்கு பாத்தியப்பட்ட கோயில் வாசலில் இன்று நாமே அகதிகள் போல நிற்க வேண்டியிருக்கிறதே!!" என்று சிலர் விம்மினர்!

அதிலொரு தீட்சிதர்,

பொங்கிய திருவில் நீடும்
பொற்புடைப் பணிக ளேந்தி
மங்கலத் தொழில்கள் செய்து
மறைகளால் துதித்து மற்றுந்
தங்களுக் கேற்ற பண்பில்
தகும்பணித் தலைநின் றுய்த்தே
அங்கணர் கோயி லுள்ளா
அகம்படித் தொண்டு செய்வார்

என்ற பெரிய புராணப் பாடலை உரக்க கூறியவராய், "நடராஜா! நடராஜா!! உனக்கு அடிமை செய்யவே பிறந்தவர்கள் நாங்கள் என்று திருமுறைகள் போற்றுகிறதே!! இன்று எங்களுக்கே இந்த நிலைமையா?" என்று வாய்விட்டே அழுதார்!!

அதைக் கேட்ட சிலர் வெகுண்டெழுந்து கீழகோபுர வாசல் வழியே உட்செல்ல முயற்சித்தபோது, செஞ்சியிலிருந்து வந்திருந்த சிறப்பு தெலுங்கு வீரர்கள், "எவரு ராக்கூடாதையா!! ஸ்தானிகாலு மாத்ரம்! ஸ்தானிகாலு மாத்ரம்!!" என்று தடுத்தனர்.

"நாங்கள் மூவாயிரம் பேரும் எங்கள் சுவாமிக்கு ஸ்தானிகம்தானடா!! எங்களை தடுக்க நீங்கள் யார்?" என்றார் ஒரு தீட்சிதர்.

இந்த கேள்விக்கு அங்கு யாரும் பதில் அளிக்கவில்லை. மாறாக, நெற்றியில் திருமண் சாற்றிகொண்ட வைணவர்கள் சிலரின் வேதாகம கோஷங்கள் மட்டுமே பதிலாக எழுந்தது. அவர்களுக்கு அருகிலேயே பெரிய பள்ளிகொண்ட திருமாலின் சிற்பம் ஒன்று ஸ்ரீதேவி பூதேவி தயார்களுடன் வடிவமைக்கப்பட்டு தயாராய் கிடந்தது.

அச்சிற்பம், வெறும் கல்லாக இங்கு வந்து இறக்கப்பட்ட காலத்திலிருந்து பூக்கத் தொடங்கிய பிரச்சனை அது! அன்றிலிருந்து தீட்சிதர்களும் எத்தனையோ முறை முயற்சித்தும் பலனில்லாமல், கல்லாய் தொடங்கிய பிரச்சினை இன்று மாலாய் மாறிக் கிடக்கிறது!!

(சற்று பின்னோக்கி செல்வோம்)

தீட்சிதர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். திருமங்கையாழ்வாரின் பேச்சைக் கேட்டு என்றோ நந்திவர்ம பல்லவன் வைத்துச் சென்ற புள்ளியில் இன்று வைணவ மதவெறி பிடித்த தெலுங்கன் செஞ்சி கிருஷ்ணப்ப கொண்டம நாயக்கன் கோலம் போடுகிறான்.

நந்திவர்மன் தெற்றியம்பலமாக ஸ்தாபித்த சித்திரக்கூடத்து கோவிந்தராசரை, "தில்லைநகர்த் திருச்சித்திரக் கூடந் தன்னுள் அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த அணிமணி ஆசனத்து இருந்த அம்மான் தானே" என்று குலசேகர ஆழ்வாரும், "மூவாயிரம் நான்மறையாளர் நாளும் முறையால் வணங்க அணங்கு ஆய சோதித் தேவாதி தேவன் திகழ்கின்ற தில்லைத் திருச்சித்திரக்கூடம் சென்று சேர்மின்களே" என்று திருமங்கையாழ்வாரும் பாடியதனை நாயக்கனிடம் தீட்சிதர்கள் எடுத்துக் கூறினர்.

"நீங்கள் கோயில் வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளுங்கள். ஆனால், பூசிக்கும் உரிமையை எங்களிடம் விட்டுவிடுங்கள். உங்கள் வைணவ ஆகமப் பூசை முறைகள் உள்ளே வரவேண்டாம். நாங்கள் எங்கள் முறைப்படி உங்கள் கோவிந்தராசரை பூசிக்கிறோம். அதனைத்தானே உங்கள் பாசுரங்களும் குறிப்பிடுகின்றன." என்று இறங்கி கேட்டபோது
முழுதாக தமிழ் புரியாத நாயக்கன் அவனுக்கருகில் அமர்ந்திருந்த அவனது வைணவ குருவினை பார்த்தான்.

அதற்கு அவர், "கூடாது! கூடாது!! பெருமாளை நம் முறையில் நம்மவர்கள் தான் பூசிக்கவேண்டும். முன்னர் இவர்கள் பூசித்தப்போதுதானே சோழ மன்னர் பெருமாளை கோயிலைவிட்டே வெளியேற்றினார். மேலும், அப்போது வெளியே சென்ற பெருமாள், வைணவஸ்ரீபாத நாயக்க மன்னர்கள் வந்தபின்னர்தான் இந்த கோயிலுக்குள்ளே வந்திருக்கார். இப்போது, ராஜா, உங்களது புண்ணியத்தால் பெருமாள் பெரிய கோயிலுக்குள் மீண்டும் பள்ளி கொள்ளப்போகிறார். இவ்வளவு பெரிய சிலையை செய்து வைத்துவிட்டு, பூசையை இவர்களிடம் விட்டுச்செல்வதா?" என்று தெலுங்கில் கிசுகிசுத்தார். கொண்டம நாயக்கனுக்கு சினம் மிகுந்தது. 

அவனது சினத்தையும், தெலுங்கில் வைணவர் கூறிய கிசுகிசுப்பையும் புரிந்து கொண்ட தீட்சிதர்கள், "நாயக்கரே! அது என்றோ பழையகாலத்தில் நடந்தது. தவிர அன்றும் இப்படி சில வைணவர்கள் தாெல்லை கொடுத்ததால்தான், அம்பலத்தை விரிவாக்க எண்ணிய சோழ மன்னருக்கு கோபம் வந்து, அப்படி ஒரு முடிவெடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இன்றும் தெற்றியம்பலத்தில் சிறியதாக இருந்த கோவிந்தராசரை பெரிதாக்கி, எங்கள் சபாநாயகர் ஆடுமிடத்தில் முக்கால் பங்கு காெள்ளைபோவதற்கும் இப்படிப்பட்ட தீயவர்கள்தான் காரணம்." என்று காேபத்தில் அரசன் முன்பே ஒரு தீட்சிதர் ஆதங்கத்தை வெளிப்படுத்திவிட்டார்.

அவ்வளவுதான்! நாயக்கனுக்கு ஆத்திரம் பீறிட்டது. "தீட்சிதர்களே! நீங்கள் அமைதியாக இருந்து எங்கள் சுவாமிக்கு நாங்கள் செய்யும் திருப்பணிக்கு ஒத்துழைத்தால் நல்லது. இல்லையென்றால் விளைவுகளுக்கு நான் ஒன்றும் அஞ்சியவனில்லை. குறித்த நாளில் சித்சபைக்கு எதிரில் புதிதாக கட்டப்பட்ட சித்திரக்கூடத்தில் பெரியபெருமாளை படுக்க வைத்தே தீருவேன்!!" என்று தெலுங்கு கலந்த தமிழில் முழங்கினான். அனுசரித்து பேசப்போன பஞ்சாயத்தும் நாயக்கனிடம் செல்லுபடியாகவில்லை.

அவன் சொன்னபடி சிற்றம்பலத்துக்கு எதிரே உள்ள திருமுறைக் கைக்கொட்டி மேடையின் மேல்பகுதியை ஆக்கிரமித்து சித்திரக்கூடத்தை கட்டினான். நந்திவர்ம பல்லவன் காலத்தில் நிறுவப்பட்ட தெற்றியம்பலத்து கோவிந்தராசர் சிலை சிறியதாக இருந்ததால் அதற்கு பதில் பெரியதாக சிலைசெய்யக் கல்லை கொண்டுவந்து கீழவாசலில் நிறுத்தினான்.

அதுமுதல் தீட்சிதர்கள் கோயிலுக்குள் சரளமாக சென்றுவர தடைவிதித்தான். நடராசரை பூசிக்கும் முறைக்காரர் மற்றும் கோயில் பணியாளர்களைத் தவிர, மற்ற தீட்சிதர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் யாரும் கோயிலுக்குள் வரக்கூடாது என்று உத்தரவிட்டான்.

அந்த ஆண்டு ஆனித்திருமஞ்சனம் கூட நாயக்கனின் காவல் வீரர்களின் கெடுபிடியால் பெரும் இடைஞ்சலுக்கு உள்ளானது. சுவாமியை யாத்ராதானம் செய்த போது தேருக்கு அழைத்து வரக்கூடாது என்று உத்தரவு போட்டான். தீட்சிதர்கள் தேவசபையிலேயே சுவாமியை எழுந்தருள செய்துவிட்டு, பிறகு, ஒருவழியாக ராஜசபைக்கு அழைத்து வந்து திருமஞ்சனம் செய்து முடித்தனர். அனைவரது மனமும் கனத்து இருந்தது!

இப்படியாக நாயக்கனின் கெடுபிடியில் காலம் சென்றதே தவிர மாற்றம் ஒன்றும் நிகழவில்லை. வந்திறங்கிய கல்லும் கோவிந்தராசராக உருமாறிவிட்டது.

(மீண்டும் அன்றைய நிகழ்வுக்கு வருவோம்)

இன்று சிலை கோயிலுக்குள் செல்ல இருக்கிறது. இன்னும் ஒருவாரத்தில் குடமுழுக்கும் செய்ய இருக்கிறார்கள். அதற்கான பூசையை வைணவ பட்டர்கள் வந்து தொடங்கிவிட்டனர். "இதனை தடுக்க ஏதேனும் வழி கிடைக்காதா? எங்கள் சுவாமியின் இடமும் கோயிலும் இப்படி பறிபோகிறதே!" என்ற ஆற்றமையால்தான் அந்த அதிகாலையில் தீட்சிதர்கள் கூட்டங்கூட்டமாக கீழசன்னதி வாசலில் கூடியிருந்தனர்.

அதுவரை ஆரவாரத்துடன் நின்றிருந்த அந்தணர்கள் கொண்டம நாயக்கன் வருகிறான் என்ற கட்டியங்கேட்டு அமைதியானார்கள்.

அவனது இரதம் பெரும் இறைச்சலுடன் கீழவாசலில் வந்து நின்றது. தீட்சிதர்களை ஏளனமாக பார்த்துவிட்டு, பட்டர்கள் கொடுத்த பூரணகும்பத்தை தொட்டு வணங்கிய நாயக்கனிடம் தீட்சிதர் ஒருவர் "நாயக்கரே!" என்று அனுசரனையாக பேசத் தொடங்கினார்.

அதனை சட்டைசெய்யாத நாயக்கன், காேவிந்தராசர் சிலை நோக்கி கும்பிட்டபடி நடக்கத் தொடங்கினான்.
அதனை கண்ட இளம்வயது தீட்சிதர்கள் சிலர், "நாயக்கரே! நாங்கள் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் எங்கள் சைவக்கோயிலை சிதைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறீர்கள். இதனை எங்கள் உயிர் இருக்கும் வரை அனுமதிக்க மாட்டோம்!!" என்று உரக்கக் கத்தினர்.

அதுசமயம் அங்கு கூடியிருந்த சிவனடியார் பெருமக்களும் தங்களது எதிர்ப்பை உரத்த குரலை பதிவு செய்தனர். அதனை கேட்ட நாயக்கன் மதம் பிடித்த யானையாய் தலையாட்டி, "நீங்கள் இறந்தாலும் ஏதும் நின்றுவிடாது. இன்று எங்கள் பெருமாள் உள்ளே போவது உறுதி!" என்று அலட்சியமாக பதிலளித்தான்.

"பீடையே! உன்னை பிரம்மஹத்தி பிடிக்கப் போகிறதடா!" என்று கத்தியவர்களாய் சில தீட்சிதர்கள் கீழகோபுரத்தின் மீது ஏறத்தொடங்கினர். அவர்களை தடுக்க முயற்சித்த தெலுங்கு வீரர்களை நாயக்கன் தடுத்தான். தீட்சிதர்கள் வரிசையாக மேலே ஏறி நின்று கொண்டனர்.

அவர்களது வீட்டுப் பெண்களும் சிவனடியார்களும் கதறியழுதனர். ஆனாலும், எதனையும் பொருட்படுத்தாத நாயக்கனை மேலிருந்து அழைத்த தீட்சிதர் ஒருவர், "நாயக்கனே! உனது மதவெறிக்கு தண்டனை நிச்சயம் உண்டு. எங்கள் கோயிலை காக்க எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. நீ எத்தனை பிறவியெடுத்தாலும் இந்த பிரம்மஹத்தி விடாது. நடராஜா! நடராஜா!! எங்களுக்கு வேறு வழி தெரியலையப்பா!! இனி எந்த பிறவியில் உன்னைப் பார்ப்பேனோ!" என்று உரக்க கத்தியவராய் கோபுரத்தின் உச்சியிலிருந்து தடாலென்று தரையை நோக்கிப் பாய்ந்து உயிரைத் துறந்தார். அதைக் கண்ட ஏனையோரும் அடுத்தடுத்து விழுந்து மாண்டனர். 😭🙏🏽😡

பெண்களும் குழந்தைகளும் சிவனடியார்களும் கதறிக்கதறி அழுதனர். இப்படியாக அடுத்தடுத்து இருபது பேர் தமது இன்னுயிரை தியாகம் செய்த பின்னர், நாயக்கன் வாய்திறந்து, "இனி யாராவது கோபுரத்தில் ஏறினால் சுட்டுத்தள்ளுங்கள்" என்று ஆணையிட்டான். "படீர்!" "படீர்!" என்று வெடித்த துப்பாக்கி குண்டுகளுக்கு இரண்டு தீட்சிதர்கள் பலியாகினர்.

கீழவாசல் முழுக்க சிவப்பானது. இரத்தம் ஆறாகப் பெருகி, அங்கு கிடக்கும் கோவிந்தராசர் சிலைக்கு கீழேயும் சென்றது. அந்த சிலையில் வடிக்கப்பட்டிருக்கும் ஆதிசேசனுக்கு உயிர் இருந்திருப்பின், இந்த அநீதியை பொறுக்காமல் அவனும் சற்று நெளிந்திருப்பான்! எங்கும் எழுந்த அழுகுரல்களுக்கு மத்தியில், தீட்சிதர் வீட்டைச் சேர்ந்த பெண்மணி ஒருவர், வீரத்துடன், அருகில் நின்ற வீரன் ஒருவனின் குத்துவாளை பிடுங்கிக் கொண்டு நாயக்கனை நோக்கி ஆவேசத்துடன் பாய்ந்தார்!

"அடேய்! பிரம்மஹத்தி பிடித்த நாயக்கனே!! உன்னை இப்படியே குத்தி கொல்லவேண்டும் என்றுதான் இந்த வாளை உருவினேன். அதற்கு எனக்கு பலமில்லை. ஆனால், உனது பாவக்கணக்கு இன்னும் பெருகட்டும். பிரம்மஹத்தியோடு ஸ்த்ரீஹத்தியும் சேரட்டும். எத்தனை பிறவிகள் எடுத்தாலும் உனக்கும் உன் கூட்டத்தாருக்கும் விடிவு இல்லையடா, பாவி!!" என்றபடி குத்துவாளால் தன் கழுத்தை கீறிக்கொண்டு, இரத்த வெள்ளத்தில் விழுந்தார் அந்த வீரப்பெண்மணி!

இத்தனை உயிர்கள் சென்றபின்னும் மதம்பிடித்த நாயக்கனுககு மனம் மாறவில்லை. "இவற்றை அப்புறப்படுத்திவிட்டு, விரைவாக பெருமாளை உள்ளே இழுத்துச் செல்லுங்கள்" என்று கட்டளையிட்டான்.

அழுகுரல்களுக்கு இடையில் எதிர்த்து வந்த தீட்சிதர்களின் குரல் அடங்கிற்று. இரத்தபெருக்கு கழுவிவிடப்பட்டது. ஆயினும், கோவிந்தராசருக்கு அடியில் புகுந்த இரத்தத்தை வைணவர்கள் மறந்திருந்தனர். பெரிய உருட்டுக் கட்டைகளுக்கு மேலே ஏற்றி, அவற்றை மெல்ல மெல்ல உருட்டி, உள்ளே எடுத்துச் செல்லப்பட்ட கோவிந்தராசர் சென்ற வழியெல்லாம் இரத்தக்கறை படிந்து கிடந்தது; காற்றில் இரத்தவாடை அடித்தது.

எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டே ஆடிக் கொண்டிருக்கும் அம்பலக்கூத்தனின் புன்னகை மட்டும் அன்றும் மாறவில்லை. அதற்கான பொருளை யார்தான் விளக்க முடியும்?

- முற்றும் -

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

(மூலம்: https://www.facebook.com/100001999617640/posts/4383196351756975/?app=fbl)

(பி.கு.: மூல இடுகையின் சாரத்தையும் வேகத்தையும் மாற்றாமல், அதிலிருந்த எழுத்து & சொற்பிழைகளை முடிந்தவரை நீக்கி, நடையை சீராக்குவதற்காக சிற்சில மாற்றங்களை மட்டும் செய்துள்ளேன். 🙏🏽)

oOOo

👊🏽 பெளத்தத்தின் கதை தமிழ்நாட்டில் முடிவுக்கு வந்த பின், அதிலிருந்த ஒரு பிரிவினர், பெண்தெய்வ வழிபாட்டுக்குள் புகுந்து தங்களை காப்பாற்றிக் கொண்டு, வயிற்றுப் பிழைப்புக்காக பெண் தத்துவத்தை ஆண் தத்துவமாக்கி விரித்த கடைதான் வைணவம்.

இவர்கள் பௌத்தர்களாக இருந்த போது:

- மொட்ட போட்டுட்டியா? (முழுவதும் கறந்துவிட்டாயா?)
- மொட்ட போட்டுட்டாங்களா? (முழுவதும் கறந்துவிட்டார்களா?)

இவர்கள் வைணவர்களாக மாறிய பின்னர்:

- நாமம் போட்டுட்டியா? (ஏமாற்றிவிட்டாயா?)
- நாமம் போட்டுட்டாங்களா? (ஏமாற்றிவிட்டார்களா?)

ஆக, பௌத்தம் = கொள்ளை; வைணவம் = ஏமாற்றுவேலை!! 👊🏽👊🏽👊🏽

👊🏽 "பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் முடிந்தது" என்ற சொலவடை இவர்களது ஆஞ்சநேயர் எப்படி மற்றும் யாரை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டவர் என்பதைக் காட்டும்.

👊🏽 இவர்களிடம் இருக்கும் பெரும்பாலானவற்றிற்கு அடிப்படை சைவமும் அத்வைதமும்தான். இவையிரண்டும் இல்லையெனில் புருடா விடுவதற்குக்கூட இவர்களிடம் பொருளில்லை.

👊🏽 வைணவம் உருவாக்கப்பட்டது பொ.ஆ. 7ம் நூற்றாண்டின் பிற்பாதியில் என்றாலும், இவர்களது நாமச்சின்னம் உருவாக்கப்பட்டது 12ம் நூற்றாண்டின் இடையில்தான். பெண்குறியைக் குறிக்கும் இச்சின்னத்தை திரு ராமானுஜர் உருவாக்கினார் என்று இவர்கள் கதைவிட்டாலும், இச்சின்னத்திற்கு அடிப்படை பாலைவன மதமான முகம்மதியத்திலுள்ள குறியீடுகளாகும்!

முகம்மதியத்திற்கு அந்த பகுதியில் ஏற்கனவேயிருந்த பல சமயங்களும் & மதங்களும் அடிப்படையாக இருந்தாலும் ஆண் & பெண் குறிகளை வைத்தே அனைத்தையும் விளக்குவதென்பது இதன் தனிச்சிறப்பாகும். இதனை குறி மதம் என்றழைத்தாலும் தகும். அவ்வளவு தூரம் இவர்களது குறியீடுகளில் குறிகள் இடம் பிடித்திருக்கும். இதன் தாக்கம் உலகம் முழுவதுமுள்ளது.

நுழைவாயிலாக இம்மதத்தில் பயன்படுத்தப்படும் பெண்குறியை தலைகீழாக்கி, தனித்துவத்திற்காக, நடுவில் ஒரு கோட்டைப் போட்டு (பெண்குறியின் திறப்பு) தங்களது சின்னமாக அறிவித்துவிட்டார்கள் வைணவர்கள்.

👊🏽 திரு ராமபிரான் 🌺🙏🏽🙇🏽‍♂️, திரு கண்ணபிரான் 🌺🙏🏽🙇🏽‍♂️ போன்ற மெய்யறிவாளர்கள் வைணவர்களே அல்லர். அவர்களது காலத்தில் வைணவமே இல்லை. "அவங்க எல்லாம் எங்க ஆளுங்களாக்கும்" என்ற கணக்கில் அவர்களுக்கு பெண்குறியை போட்டுவிட்டு உரிமை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

👊🏽 வைணவர்கள் மொட்டைகளாக (பெளத்தர்களாக) இருந்த போது ஆரியத்தைத் தூக்கிப்பிடித்தனர். பெளத்தம் இங்கு சரியாக போனியாகாமல் போனதற்கு முகமையான காரணங்களில் இதுவும் ஒன்றாகும். இதிலிருந்து பாடம் கற்ற இப்பேர்வழிகள் வைணவம் என்ற பெயரில் மீண்டும் கடையை விரித்த போது தமிழை முன்னிறுத்திக் கொண்டார்கள்.

👊🏽 எத்தனையோ "கைங்கர்யங்கள்" செய்த பின்னரும் "நாமம் = ஏமாற்றுவேலை" என்ற சமன்பாட்டை இவர்களால் மாற்றமுடியவில்லை. ஆகவே, தமது தரத்தை உயர்த்துவதற்குப் பதிலாக மக்களை முட்டாளாக்கும் பணியில் ஈடுபட்டனர். இதன் விளைவு: பெரிய நாமம், திவ்ய மங்கள ரூபம், விசுவரூபம், பெரிய லட்டு / வடை / தோசை / இட்லி, பக்தி ரசம் / சாம்பார் / காரக்குழம்பு சொட்டும் பாடல்கள்... அதாவது, புலன்களை கவர்ந்து மனதை மயக்கி தொழிலை வளர்த்துக் கொண்டனர்.

👊🏽 வைணவம் உரிமை கொண்டாடும் ஆழ்வார்கள் அனைவரும் வைணவரல்லர். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு திரு நம்மாழ்வார் 🌺🙏🏽🙇🏽‍♂️ ஆவார். இவரது பல பாடல்களில் அத்வைதம் மிளிர்கிறது. பகவான் திரு ரமண மாமுனிவரும் 🌺🙏🏽🙇🏽‍♂️ இவரது பாடல்களை மேற்கோளாக பயன்படுத்தியிருக்கிறார். இதனால்தான் இவர்களிடையே "நம்மைக் கெடுத்தான் நம்மாழ்வான்" என்ற சொலவடை இருக்கிறது.

👊🏽 தில்லை கோவிந்தராசர் வரலாற்றிலிருந்து நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய முகமையான செய்திகள்: 

- ஆழ்வார்களால் பாடப்பெற்ற இறையுருவங்கள் அனைத்தும் உயிர்ப்புள்ள சமாதிகளை குறிக்கவில்லை.

- ஓர் இனத்தை அந்த இனமேதான் ஆளவேண்டும். களப்பிரர்கள், பல்லவர்கள், முகம்மதியர்கள், தெலுங்கர்கள், கிறித்தவர்கள் (வெள்ளையர்கள்), தற்போது வடக்கத்தியர்கள் போன்ற அயலாரால் நாம் பட்ட துன்பங்கள், இழந்த செல்வங்கள் & அடையாளங்களை என்றும் நினைவில் கொள்ளவேண்டும்.

👊🏽 வைணவத்திலுள்ள மதவெறி பிடித்த நயவஞ்சக பேர்வழிகளைத்தான் எதிர்க்கிறேனே தவிர இவர்களிடம் சிக்கிக் கொண்டுள்ள பெருமாள்களை அல்ல. நான் வணங்கும் மெய்யறிவாளர்களில் ஒருவர் கொங்கண சித்தராவார் 🌺🙏🏽🙇🏽‍♂️ (திருமலைப் பெருமாள் எனும் அடையாளத்தின் கீழ் சமாதியாகியிருப்பவர்). இவரின் காலம் சுமார் 2,300 ஆண்டுகளுக்கு முன்னராகும். அன்று வைணவமுமில்லை. நாமமுமில்லை.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Monday, July 8, 2019

சிவ தத்துவத்தை கடைசியில் போட்ட நாமப் பேர்வழிகள்!! 😠😠



(இடுகைக்குள் நுழையும் முன்... சைவத்தையும் அத்வைதத்தையும் மட்டம் தட்டியே பிழைப்பு நடத்தும் நாமப்பேர்வழிகளைத் தான் எதிர்க்கிறேன். அவர்களிடம் மாட்டிக் கொண்டிருக்கும் பெருமாள்களை 🙏🏼🙏🏼 அல்ல.)

💮🌸🌹🌼🏵️

இவர்களது சரக்கை உயர்த்தி பேச இவர்களுக்கு உரிமையுள்ளது. மற்றவருடையதை தாழ்த்திக் காட்ட இவர்களுக்கு என்ன உரிமையுள்ளது? பரம்பொருளைப் பற்றி பேசக்கூட அருகதையற்றவர்கள். 1300 வருட பித்தலாட்டங்களினால் இவர்கள் சம்பாதித்தது என்ன? #நாமம் என்றால் ஏமாற்று வேலை என்ற பேறு மட்டுமே!!

திருஞானசம்பந்தரும், ஆதிசங்கரரும் கொடுத்த அடிகளிலிருந்து தலை தப்பிக்கவும், வயிற்றுப் பிழைப்புக்காகவும் அன்றிருந்த பெண் தெய்வ வழிபாட்டு கூடாரத்துக்குள் புகுந்து கொண்ட வட பாரத பௌத்த கூட்டத்தின் ஒரு பகுதியே பின்னாளில் நாமப்பேர்வழிகளாக மாறினர். பெண் தெய்வ வழிபாட்டின் அடிப்படை கொள்கை "உயிரை விட உயிரற்றது மேலானது" என்பதாகும். இதனால் தான் இந்த வழிபாடு பண்படாதவர்களின் கையில் இருந்தது. மயானக் கொள்ளை போன்ற அச்சமூட்டும் கொடூர விழாக்களும் அவர்களிடமிருந்தன. இவர்களின் கூடாரத்திற்குள் நுழைந்து தலை தப்பிய பின், தங்களது பித்தலாட்டங்களை அரங்கேற்ற ஆரம்பித்தனர்.

👊🏼 பெண் தத்துவத்தை (மாறுவதை, அழிவதை) ஆணாக்கினார்கள் (மாறாது, அழியாது என்றார்கள்). ஆண் தத்துவத்தை பெண்ணாக்கினார்கள். (இது இவர்களது ஆணாதிக்க புத்தியின் முதல் வெளிப்பாடு)

👊🏼 சைவத்தில் பெண் தத்துவத்திற்கு ஆணுக்கு சமமான இடத்தைக் கொடுத்திருப்பார்கள். இவர்கள் பெண்ணை ஆண் தத்துவத்தின் காலடியில் வைத்திருப்பார்கள். (இவர்களது ஆணாதிக்க புத்தியின் அடுத்த வெளிப்பாடு. இதற்கு "அறிவியல்" விளக்கம் வேறு (1)).

👊🏼 #லிங்கம் எனில் அடையாளம். #சிவலிங்கம் எனில் சிவனின் அடையாளம். #சிவன் என்பவர் சிவநிலையில் இருப்பவர். சிவநிலை என்பது இரண்டற்ற நிலை. #சிவம் என்பது பரம்பொருள். மெய்யறிவாளர்கள் சமாதியடைந்த பிறகு, அவர்களது சமாதியிடங்கள் தொலைந்து போகாமல் இருக்க, அடையாளத்திற்காக வைக்கப்பட்டவைதான் சிவலிங்கங்கள். இதனால் தான், வெடிகுண்டு மதத்தினரின் படையெடுப்புகளிலிருந்து தப்பிய பழம்பெரும் திருத்தலங்களின் சிவலிங்க மூலவர்கள் விதவிதமாக இருக்கக் காணலாம். உண்மை இவ்வாறிருக்க, சமண-பௌத்த மொட்டைகளின் கை ஓங்கியிருந்த காலத்தில், தமிழர்களின் சமயமாகிய சைவத்தை இழிவுபடுத்துவதற்காக லிங்கத்தை ஆண்குறியோடு சமன்படுத்தி ஒரு பிட்டை வெளியிட்டார்கள்!! 😠 இந்த மொட்டைகளிலிருந்து வந்த ஒரு பிரிவினர் தாம் நாமப்பேர்வழிகள். இவர்களது தலபுருடாக்களிலும் ஆண்குறி பிட்டை பதிவு செய்து வைத்திருக்கிறார்கள். பொய்யைச் சொல்லி சொல்லி, இவர்களது வழி வந்த ராமானுஜரே அது உண்மையென்று நம்பிவிட்டார். விளைவு... இவர்களது "புனிதச் சின்னம்" உருவானது. 🤢 ஆம், #ராமானுஜர் பெண்குறியை வைணவச் சின்னமாக அறிவித்தார். 🤮 சிவலிங்கத்தை இழிவுபடுத்துவதற்காக இவர்கள் போட்ட விதையை, பெண்குறியாக இவர்களே அறுவடை செய்திருக்கிறார்கள். 🤗 #பெருமாள் #பாதம் என்று ஊரை ஏமாற்றி, அந்த பெருமாளுக்கும் பெண்குறியை போட்டு விட்டுக் கொண்டிருக்கிறார்கள். 🤭

👊🏼 உயிரற்றதிலிருந்து உயிர் தோன்றியது என்று கடையை விரித்தவர்கள், அவ்வப்போது பறந்து வந்த அழுகின தக்காளி, பிய்ந்த செருப்புகளுக்கு ஏற்ப தங்களது சரக்கை மாற்றிக்கொண்டே வந்தனர். பள்ளி கொண்ட பெருமாள், பெருமாள்-தாயார்(கள்), பெருமாள்-தாயார்-அனுமன், பெருமாள்-தாயார்-அனுமன்-சிவலிங்கம்- மற்றும் பலர். இப்படி சிவலிங்கத்தை இறக்கி வைப்பதன் மூலம் சிவதத்துவத்தை மட்டம் தட்டுகிறார்களாம்! 😏 #சிவம் எனில் எதிலிருந்து அனைத்தும் தோன்றி, நிலைபெற்று, இயங்கி, ஒடுங்குகிறதோ அதுவே சிவம். #பெருமாள் இதற்கும் மேலானவராம்!! 🥴 ஆரம்பத்தில், பெருமாளின் பெயர் மால், மாயோன். மால் எனில் மயக்கம்/குழப்பம். மாயோன் எனில் மயங்க வைப்பவன். உடலல்லாத நம்மை உடலாகக் கருத வைப்பதே உலக தோற்ற-இயக்க-ஒழிவின் ஆரம்பம். இந்த மதி மயக்கும் ஆற்றலைத் தான் #திருமால் என்றனர். உலகின் பேரியக்கத்திற்கு இவ்வாற்றல் தான் அடிப்படை என்பதால் திரு எனும் மரியாதையைச் சேர்த்தனர். ஆனால், இன்றோ சிவத்தின் பொருளும் பெருமாளின் பொருளும் ஒன்றே. இதனால் தான் அவர்கள், சிறிதும் ஓசையில்லாமல், "திருமால்" என்பதலிருந்து "பெருமாள்" (பெரும் ஆள் / பெருமைக்குரிய ஆள்) என்பதற்கு மாறினார்கள். இந்த "Course Correction" 😜 வெற்றி பெற்றுவிட்டதால், இப்போது அடுத்த இலக்குக்கு தாவ முயல்கின்றனர்: பெருமாள் சிவத்திற்கும் மேல்!! அதாவது, சிவத்தின் நகல் சிவத்தை விட சிறந்ததாம்!!! 🤣🤣 இவர்களால் தான், "பேன பெருமாளாக்குவானுங்க. பெருமாள பேனாக்குவானுங்க." என்ற சொலவடை உருவானது. யாரும் "பேன சிவனாக்குவானுங்க" என்று சொல்லவில்லை. 😛 இவர்களது பித்தலாட்டம் அப்படி!! 👊🏼👊🏼👊🏼👊🏼👊🏼

👊🏼 இவ்வளவு வேலை செய்தும் ஏதும் சரியாக "போனி"யாகவில்லை (2). ஏனெனில், சேர்த்துக் கொண்ட கூட்டம் அப்படி. பண்படாதவர்களை எவ்வாறு தத்துவங்களால் கவர முடியும்? இப்படிப்பட்டவர்களை புலன்களை வைத்துத்தான் கவர முடியும் - பெரிய உருவச்சிலைகள், பெரிய நாமம், பெரிய லட்டு / தோசை / இட்லி, மார்கழியில் பெருமாளுக்கு வெந்நீர் குளியல் ("2000 வருசத்துக்கு முன்னாடி உன்ன அநியாயமாக் கொன்னுட்டாங்களேயா" என்ற பிட்டிற்கு சமம். இவ்விரு கூட்டங்களின் தில்லாலங்கடிகளில் அவ்வளவு ஒற்றுமைகளைக் காணலாம்!!)...

ஒரு தெய்வ உருவத்தை பின்புறம் தள்ளியதற்காகவா இவ்வளவு ஆர்ப்பாட்டம் 😲 என்று சிலருக்கு தோன்றலாம்.  அவர்களுக்காக...

👻 சமீப காலமாக இந்து சமய அடையாளங்கள் அனைத்தையும் கவர்வதாக நினைத்துக் கொண்டு தனது அடையாளங்களை இழந்து கொண்டிருக்கும் எம்.எல்.எம் மதம், ஒரு வேளை இந்த ஓவியத்தை போன்று ஒரு ஓவியத்தை வெளியிடுகிறது என்று வைத்துக் கொள்வோம். அரியணையில் இஸ்ரவேல் அத்வைதி யேசு மற்றும் அவரது மனைவி மேரி மேக்தலின் அமர்ந்திருப்பது போன்றும், இவர்களை சுற்றி அவர்களது இன குருமார்களும், தொழிலதிபர்களும், நாடாள்பவர்களும் நிற்பது போன்றும், பின் வரிசைகளில் நமது தெய்வங்கள் நிற்பது போன்றும் வெளியிடுகிறார்கள் என்று  வைத்துக் கொள்வோம். இதை எப்படி நாம் ஏற்றுக் கொள்ளுவோம்?

👺 அடுத்து, வெடிகுண்டு மதத்தினர். வெட்டு, குத்து, சீவு, பிடுங்கு, வெடிகுண்டு என்றே 1300 வருடங்களாக வயிற்றைக் கழுவியவர்கள், இப்போது தான் எம்.எல்.எம் மதத்தினர் போன்று தொழில் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். ஒரு வேளை, இவர்களும் ஒரு ஓவியத்தை வெளியிடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அரியணையில் ஒரு வெள்ளை சுவர், அதை சுற்றிலும் அவர்களது இன குருமார்கள், தொழிலதிபர்கள், நாடாள்பவர்கள் நிற்பது போன்றும், பின் வரிசைகளில் நமது தெய்வங்கள் நிற்பது போன்றும், வரைந்து வெளியிடுகிறார்கள் என்று வைத்துக் கொள்ளுவோம். இதை ஏற்றுக் கொள்ளுவோமா?

ஏற்றுக்கொள்ள மாட்டோம். வெகுண்டு எழுவோம். அவ்வாறே தான் இணைப்பு படத்தையும் ஏற்றுக்கொள்ளாமல், வெகுண்டு எழ வேண்டும். #எம்மதமும் #சம்மதம் என்பது எவ்வாறு ஒரு மாபெரும் ஏமாற்று வேலையோ, அவ்வாறே சைவ-வைணவ இணைப்பும்!!! 🤬😡😠

💮🌸🌹🌼🏵️

27-06-1946 அன்று பகவான் ஸ்ரீரமணர் தனது அன்பர்களுடன் பேசியதிலிருந்து... ("அனுதினமும் பகவானுடன்", தேவராஜ முதலியார், ஸ்ரீரமணாச்சரமம்)

💥 நாலாயிர பிரபந்தத்தில் அருமையான அத்வைதப் பாடல்கள் உள்ளன. ஆனால், எல்லாவற்றிற்கும் வைணவர்கள் வேண்டுமென்றே துவைதப் பொருள் காட்டியிருப்பார்கள்.

💥 ஆரம்பத்தில் (பகவான் திருவருணை வந்த புதிதில்; இன்னமும் புகழ் பெறாத காலத்தில்), வடகலை வைணவர்கள் வந்து அவர்களது U நாமத்தைப் போட்டுவிட்டுப் போவார்கள். பின்னர், தென்கலை வைணவர்கள் வந்து அவர்களது Y நாமத்தைப் போட்டுவிட்டுப் போவார்கள். அவரவர் விரும்பியதை செய்ய விட்டு அமைதியாக இருப்பேன் (இங்ஙனமே தான் நம்மாழ்வாரையும் காப்புரிமை கொண்டாடுகிறார்களோ? யாரும் அறியாவண்ணம், அவ்வளவாக புகழ் பெறாத போது, முதலில் சென்று காப்புரிமை போட்டு விடுவது இவர்களது தொழில் உத்திகளில் ஒன்றோ?)

💥 (நம்மாழ்வாரின் "யானே என்னை அறியகிலாதே" என்ற பாடலைப் பற்றி விளக்குகிறார்) இது சுத்த அத்வைதத்தைப் பாடலாகும். ஆனால், வைணவ உரையாசிரியர்கள் திரித்து துவைதப் பொருள் கூறியிருப்பார்கள். இவர்களுக்கு தாங்களும் அப்படியே இருக்கவேண்டுமாம். பெருமாளும் அப்படியே இருக்கவேண்டுமாம். என்றென்றும் பெருமாளுக்கு கைங்கர்யம் செய்து கொண்டிருக்கவேண்டுமாம். இது எப்படி சாத்தியம்? பெருமாள் கேட்கிறாரா? எல்லோரும் கைங்கர்யம் செய்வதானால் வைகுண்டத்தில் நிற்க கூட இடம் இருக்காதே? 😁

💥 திருவாய்மொழியின் 8வது பதிகத்தின் 3வது பாடலைப் பற்றியும், திருவாசகத்தின் பாடலொன்றோடு அது ஒத்துப் போவதைப் பற்றியும் பேசுகிறார்.

💮🌸🌹🌼🏵️

வாது செய்து மயங்கும் மனத்தராய்
ஏது சொல்லுவீர் ஆகிலும் ஏழைகாள்
யாதோர் தேவர் எனப்படுவார்க்கு எல்லாம்
மாதேவன் அல்லால் தேவர் மற்று இல்லையே

-- #அப்பர் #தேவாரம் 🌺🙏🏼

மரணபய மிக்குள அம்மக்கள் அரணாக
மரணபவ மில்லா மகேசன் - சரணமே
சார்வர் தம் சார்வொடு தாம் சாவுற்றார் சாவெண்ணம்
சார்வரோ சாவாதவர் நித்தர்

-- #பகவான் #ஸ்ரீரமணர் 🌺🙏🏼, உள்ளது நாற்பது

💮🌸🌹🌼🏵️

குறிப்புகள்:

1. பெண்களின் கைகளில் சுக்கிரன் உள்ளதாம். 😛 ஆண்களின் கால்களில் சனி உள்ளதாம். 😝 சனியை சுக்கிரன் இதப்படுத்தினால் செல்வம் பெருகுமாம். 😜 இந்த உத்தியை கையாண்டு தான் மகாலட்சுமி தாயார் செல்வங்களுக்கு அதிபதியாக உள்ளாராம். 🤣

உடலில் கால்களை சனி ஆட்சி செய்வதாக ஏன் சொன்னார்கள் என்றால் சனி வேலைக்காரனையும், குப்பையான அசுத்தமான இடங்களையும் குறிக்கும். இது ஆணுக்கு மட்டுமல்ல. பெண்ணின் கால்களுக்கும் பொருந்தும். அடுத்து, பெண்களின் கைகளில் சுக்கிரன் ஆட்சி செய்வதாக ஏன் சொன்னார்கள் என்றால் சுக்கிரன் அழகையும், நளினத்தையும் குறிக்கும். ஆண்களின் கைகளை விட பெண்களின் கைகள் பொதுவாக அழகானவை & நளினமானவை. ஆக, பெண் ஆணின் கால்களை பிடித்து விட வேண்டும். இதை நேரடியாக சொன்னால் பூரிக்கட்டை பறந்து வரும். 🤕😁 எனவே, சுக்கிரன், சனி என்று பிட் தயாரித்திருக்கிறார்கள். எப்படி பட்ட நப்பாசை!! 🥴

ஆண் என்ற ஒரே காரணத்திற்காக இவன் ஊரை மேய்ந்து விட்டு வருவானாம். மீதமுள்ள அனைத்தையும் பராமரித்து விட்டு, பெண்ணானவள் தன்னையும் பராமரித்துக் கொண்டு, "ஆம்படையான்" திரும்பியவுடன் அவனுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுத்து, அவன் உண்ட களைப்பு போக சயனித்திருக்கும் போது, அவனது கால்களை சற்று பிடித்து விட வேண்டுமாம். இப்படி பிடித்து விட்டால், அவன் மகிழ்ச்சியடைந்து அவளுக்கு நகைகளை (செல்வம்) வாங்கி கொடுப்பானாம். இதற்கு வெடிகுண்டு மதமே மேல் என்று சொல்லாம். 😏

வெடிகுண்டு மதமாவது பெண்ணடிமைத்தனம் மற்றும் அடுத்த மதத்தினரிடமிருந்து பறித்து வாழ்தல் என்ற இரு "உயரிய" கொள்கைகளை வெளிப்படையாகக் கொண்டவை!! 😁 இவர்களிடம் எச்சரிக்கையாக இருப்போம். ஆனால், இந்த நாமப்பேர்வழிகளிடம் ஏமாந்துவிடுவவோம்.

வெடிகுண்டு மதத்திற்கும் நாம மதத்திற்கும் ஒரு ஒற்றுமை உண்டு - இரண்டும் அருகருகே உருவானவை (7ஆம் நூற்றாண்டு). எம்.எல்.எம். மதத்தின் டுபாக்கூர் கையேடு கூட 633க்கு பின்னர் தான் உருவானது என்று வெளிப்படையாக அண்மையில் செய்தி  வெளியிட்டிருந்தார்கள். ஆக, 7ஆம் நூற்றாண்டு உலகின் மற்றுமொரு கெட்ட காலத்தின் ஆரம்பமாக இருந்திருக்கிறது. 😒

2. #பவானி என்பதே #போனி என்று மருவியுள்ளது. நாளின் முதல் விற்பனையின் மூலம் கிடைக்கும் லாபம் பவானி அம்மனுக்கு காணிக்கையாக்கும் வழக்கம் ஈரோடு பகுதியில் உருவானது. ஒரு விற்பனையாவது செய்து விட வேண்டும் என்ற வேகத்தில் "பவானிக்கு குடு/பண்ணு" என்று கூவுவர். நாளடைவில் இது மருவி "போனி பண்ணு" என்றாகிவிட்டது.

Saturday, April 20, 2019

தமிழ்நாடு இந்து கோயில் எரிப்பு துறை உதயம்!! 😁

🔷 கடந்த சனிக்கிழமை அன்று பாரிஸ் நகரில் உள்ள #நோட்ரே #டாம் (Notre Dame) கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் மரக்கூரை முழுவதுமாக எரிந்து விழுந்துள்ளது.


இது போன்றொரு நிகழ்வு நம் நாட்டிலுள்ள பழம்பெரும் திருத்தலமொன்றில் நிகழ்ந்திருக்குமேயானால், இந்நேரம் வேசி ஊடகங்களும், ஒழுக்கங்கெட்ட கருங்காலி புளுத்தறிவுவாதிகளும் பொரை  சம்பாதித்துக் கொண்டிருப்பர்! 😏 "இவனுக்குப் பிறந்தேன். இவனோடு வாழ்கிறேன்" என்று கூட சொல்ல முடியாத ஒரு ஜென்மம், "தன் இருப்பிடத்தை கூட காப்பாற்றிக் கொள்ள முடியாத இந்த பொம்மையா உலகைக் காக்கப் போகிறது?", என்று மூலவரைப் பற்றி செய்தி வெளியிட்டு பெரிய பொரை சம்பாதித்திருக்கும்!! 😁


🔷 நோட்ரே டாம் கட்டிடத்தை சரி செய்ய நிதி திரட்டப்படுகிறது. இரண்டே நாட்களில் சுமார் ரூ. 8,000 கோடி பணம் (1 பில்லியன் யூரோக்கள்) சேர்ந்துள்ளது!!


இங்கு இவ்வளவு பணம் சேராது. அப்படி சேர்வதாக இருந்தால் நம் கருங்காலி அரசியல்வியாதிகள், பழம்பெரும் தலங்களை எரித்து, மீண்டும் அவற்றை சீர் செய்வதை தலைமுறை தொழிலாக, குலத்தொழிலாக ஆக்கிவிடுவர்!! 😜 அல்லது சிலை திருட்டு துறை போன்று கோயில் எரிப்பு துறை ஒன்றை உருவாக்கி விடுவர்!!! 😝


(வெள்ளையர்களை விட நாம் எண்ணிக்கையில் அதிகம் இருந்தும், அதிகம் உழைத்தும் ஏன் நம்மிடம் அதிக பணம் தங்குவதில்லை? இருப்பதையும் ஏன் நாம் கொடுக்க முன் வருவதில்லை? இதைப் பற்றி இன்னொரு இடுகையில் பார்ப்போம்.)

🔷 தீ விபத்தில் நோட்ரே டாம் கட்டிடத்திற்கு பெரும் சேதம் ஏற்பட்டிருந்தாலும், பல புராதன பொருட்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளன. அங்கிருந்த ஒரு பெரிய #குறுக்கை (#சிலுவை) குறியீட்டிற்கு எந்த சேதமும் ஏற்படாமல் போனது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.


முதலில் குறுக்கையைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். பொதுவில், குறுக்கை ஐம்பூதங்களால் ஆன உயிரற்ற உடலைக் குறிக்கும். உயிரற்ற உடல் பிணத்திற்கு சமம். இவ்வகையில், குறுக்கை ஒரு பிணக்குறியீடாகும். மேலும், இஸ்ரவேல் மெய்யறிவாளர் இயேசுவிற்கு முன்னரும் பின்னரும் குறுக்கை, குற்றவாளிகளை தண்டிக்க பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இவ்வகையில், குறுக்கை குற்றவாளிகளை குறிக்கும் குறியீடாகிறது. இப்படிப்பட்ட பொருள்களைத் தரும் ஒரு குறியீட்டையா அவர்களது முன்னோர்கள் வணங்கச் சொல்லி இருப்பார்கள்?


குறுக்கை முழுமையடைவது அதில் அறையப்பட்டிருக்கும் இயேசுவின் உருவத்தோடு. அறையப்பட்டிருக்கும் இயேசு அழிக்கப்பட்ட மனதைக் குறிப்பார். (உண்மையில் மனது, மாயை இவைதான் சாத்தானாகும். இங்கு அறையப்பட வேண்டியது சாத்தானாகும்.) உடலெனும் குறுக்கையில் மனமெனும் சாத்தானை அறைந்தால் வெளிப்படுவது (உயிர்த்தெழுவது) இறைவனாகும். (மனம், இறைவன் இரண்டிற்கும் இயேசு என்னும் ஒரே உருவத்தை பயன்படுத்தியதால்தான் எல்லாக் குழப்பங்களும்!! ஆனால், மட சாம்பிராணிகளான பரங்கியரிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? 🤬 தானும் கெட்டு உலகையும் கெடுக்கத்தான் இவர்களுக்கு தெரியும். 🥴)


மீண்டும் நோட்ரே டாமுக்கு திரும்புவோம். 


இயேசு அறையப்படாத குறுக்கை மேலான பொருளல்ல. பத்தோடு பதினொன்றாக, அழிந்து போகாமல் கிடைத்த பொருட்களில் ஒன்று. அவ்வளவே. வேண்டுமானால், அங்கிருந்த புராதன பொருட்களில் ஒன்று என்று எடுத்துக் கொள்ளலாம்.

🔷 இணைப்பு படங்களில் ஒன்று, நோட்ரே டாமின் நுழைவாயிலைக் காட்டுகின்றது. 

எல்லா வழிபாட்டுத் தலங்களின் கட்டிடங்களும் ஒன்று உயிரற்ற உடலைக் குறிக்கும் அல்லது பெண்மையை குறிக்கும். நோட்ரே டாம், பெண்மையை குறிக்கிறது. இந்த நுழைவாயில் தலைகீழாக்கப்பட்ட பெண்குறிக்கு சமம்!! கட்டிடத்திற்குள் நுழைவது என்பது பெண்ணின் குறிக்குள் நுழைவதற்கு சமம்!!! கட்டிடம் பெண் என்றால், கட்டிடத்திற்குள் இருக்கும் வெளி ஆணாகும். இவையெல்லாம், இவர்களிடம் இருந்த பெண் தெய்வ வழிபாட்டின் மிச்சங்களாகும்.

(நம்மூர் வைணவமும் பெண் தெய்வ வழிபாட்டில் இருந்து தான் வந்தது. அவர்களது நாம சின்னம் பெண்குறியை தான் குறிக்கிறது. வெள்ளைப் பகுதி உயிரற்றதையும், சிகப்புக் கோடு உயிரையும் குறிக்கும். இவர்கள் பெண் தத்துவத்தை ஆணாக எடுத்துக்கொண்டதால், வெள்ளைப் பகுதியை பெருமாளின் பாதம் என்று சொல்லிவிட்டார்கள்!!)