Monday, November 18, 2024
துலாக்கோல் திங்கள் சோற்று முழுக்கு (அசுரத்தில், ஐப்பசி மாத அன்னாபிடேகம்)
Tuesday, November 3, 2020
ஐப்பசி நிறைமதி நாள் & சோறு கண்ட இடம் சொர்க்கம்
(தஞ்சை பெருவுடையார் 🌺🙏🏽)
ஐப்பசி நிறைமதி நாள் - சிவத்திருத்தலங்கள் அன்னாபிஷேகம் காணும் நாள்! "நாம் காணும் இவ்வுலகம் உணவுமயம்" என்ற பேருண்மையை நமது முன்னோர்கள் உணர்ந்த நாள்!!
சிவ அடையாளத்தின் மீது கொட்டப்படும் (*) சோற்றிலிருக்கும் ஒவ்வொரு பருக்கையும் ஒர் உயிரை/உயிரினத்தைக் குறிக்கும். நுண்ணோக்கி வழியாக காண்பது போன்ற திறனைப் பெற்றிருந்தோமானால் நம் முன்னே கோடான கோடி உயிரிகள் ஒன்றையொன்று அண்டியும், சார்ந்தும், கொன்றும், தின்றும் வாழ்ந்து கொண்டிருப்பதைக் காணலாம். ஒர் உயிரியின் உடலோ கழிவோ இன்னோர் உயிரியின் உணவாக மாறுவதைக் காணலாம். நம் உடலுக்குள்ளும் இதே நிகழ்வு தான். மொத்தத்தில் எங்கும் உணவுமயம் தான்!
இந்த உண்மையை நமது முன்னோர்கள் ஒர் ஐப்பசி நிறைமதி நாளன்று உணர்ந்திருக்கிறார்கள். இவ்வுண்மையை உணர்வதால் அகந்தை அடங்குவதையும் / அழிவதையும் கண்டிருக்கிறார்கள். எனவே, அவர்கள் உணர்ந்ததை அன்னாபிஷேகம் என்ற திருவிழாவின் மூலம் பதிவு செய்து, வரும் தலைமுறைகளுக்கு விட்டுச் சென்றிருக்கிறார்கள். இத்திருவிழா தமிழகத்திற்கே உரியதாவதால், ஒரு தமிழ் பெரியோனே மேற்கண்ட உண்மையை முதன்முதலில் உணர்ந்திருக்கிறார் என்று உறுதியாக கருதலாம்.
(* - ஒரு 25+ ஆண்டுகளாகத்தான் உணவுப்பண்டங்களைக் கொண்டு உடையவருக்கு ஒப்பனை செய்கிறார்கள். அதற்கு முன்னர், உடையவர் மேல் சோற்றைக் கொட்டிவிட்டு வெளியே வந்துவிடுவார்கள். திருவிழாவின் பெயர் அன்னாபிஷேகம். அன்ன அலங்காரமன்று.)
oOOo
எல்லாம் சரி. 1600களில் தான் உலகக் கொல்லிகளான பரங்கியர்களால் நுண்ணோக்கி "கண்டுபிடிக்கப்பட்டது". எனில், எவ்வாறு "உலகம் உணவுமயம்" என்ற உண்மையை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே நம் முன்னோர்களால் உணரமுடிந்தது? ஹாலிவுட் திரைப்படங்களில் வருவது போன்று, 1600களில் வாழ்ந்த பரங்கியர்கள் நேரப்பயணத்தின் மூலம் முற்காலத்திற்கு சென்று காட்டுமிராண்டிகளாக இருந்த நமது முன்னோர்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கவேண்டும். வேறு வழியே இல்லையல்லவா? 😁
oOOo
(கங்கை கொண்ட சோழபுர பெருவுடையார் 🌺🙏🏽)
சோறு எனில் வெந்த அரிசி என்பது இன்றைய பொதுவான பொருள். ஆனால், கம்பஞ்சோறு, பனஞ்சோறு (நுங்கு), கற்றாழைச் சோறு போன்ற பயன்பாடுகளும் உண்டு. இவற்றிலிருந்து சோறு எனில் "உள்ளிருப்பது. பக்குவமடைந்தது. நன்மை தரக்கூடியது." என்று பொருள் கொள்ளலாம்.
இந்த கணக்கில், மேற்கண்ட நெல்லின் உமி, பனங்காயின் ஓடு, கற்றாழையின் தோலுக்கு நம் உடல் சமமானால், உடலின் உள்ளிருக்கும் ஆன்மா (தன்மையுணர்வு) சோறுக்கு சமமாகிறது. எப்போது? பக்குவமடைந்த பிறகு!
பக்குவமடைதல் என்றால் என்ன? நாம் இவ்வுடலல்ல என்பதை உணர்ந்து, நாம் யாரென்று தெளிந்து, நாம் நாமாக நிலை பெறுவதே பக்குவமடைதல். இவ்வாறு பக்குவமடைந்த பிறகு கவலை, துன்பம், தொல்லை என எதுவும் நம்மை அண்டாது. எப்போதும் பேரமைதியில் திளைப்போம். இந்நிலையை சொர்க்கம் என்று வைத்துக்கொண்டால், பக்குவமடைந்த நம்மை சோறு என்று வைத்துக்கொண்டால், நம்மை நாம் உணர்ந்த இடம் - நம்மை நாம் கண்ட இடம் - சோறு கண்ட இடம் சொர்க்கமாகிவிடுகிறது!! ☺️
தீதீல்லை மாணி சிவகருமம் சிதைத்தானைச்
சாதியும் வேதியன் தாதைதனைத் தாளிரண்டுஞ்
சேதிப்ப ஈசன் திருவருளால் தேவர்தொழப்
பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம்
-- திருத்தோணோக்கம், திருவாசகம்
மேலுள்ள பாடலில் வரும் "சோறு பற்றினவா" என்ற சொற்களை மணிவாசகப் பெருமான் 🌺🙏🏽 பயன்படுத்திய விதத்தை வைத்து, இவ்விடுகையின் "சோறு" பகுதியை எழுதியுள்ளேன்.
(சோறு என்ற சொல்லுக்கு வீடு பேறு, நிலைபேறு, விடுதலை (ஆரியத்தில், முக்தி/மோட்சம்) என்ற பொருள்களும் உண்டு)
oOOo
ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி 🌺🙏🏽
கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽♂️
திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽
🌸🌼🌻🏵️💮
Tuesday, October 23, 2018
ஐப்பசி நிறைமதி நாள்! - சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம்!! 🌸🙏
"இந்த அண்டம் முழுவதும் உணவால் ஆனது" என்னும் பேருண்மை வெளிப்படுத்தப்பட்ட நாள்!!
லிங்கம் (அடையாளம்) - மொத்த உலகைக் குறிக்கும்
அன்னம் - உணவு
தாயின் கருப்பையில் முதல் செல் உருவானது முதல் இறுதி மூச்சு வரை, நம் உடலில் செல்கள் உருவாகிக் கொண்டும், இறந்து கொண்டும் இருக்கின்றன. இதற்கு வளர்சிதை மாற்றம் என்று பெயர்.
இந்த மாற்றம் நமக்கு மட்டும் நடப்பதில்லை. தாவரங்கள், விலங்குகள், பறவைகள் என அனைத்து உடல்களுக்கும் நடக்கின்றது. இறக்கும் செல்கள் என்னவாகின்றன? காற்றிலும், நிலத்திலும், நீரிலும் கலக்கின்றன. பின் என்னவாகிறது?
அவற்றை சில்லுயிரிகள் / நுண்ணுயிரிகள் உண்டு விடுகின்றன. உணவு என்று ஒன்று உள்ளே போனால், கழிவு என்று ஒன்று வெளியே வந்தாகவேண்டும். மேலும், அந்த நுண்ணுயிரிகளுக்கும் வளர்சிதை மாற்றம் நிகழும். அந்த செல்கள் என்னவாகும்? இந்த நுண்ணுயிரிகளின் கழிவையும், இறந்த செல்களையும் உணவாகக் கொள்ள வேறு வகை நுண்ணுயிரிகள் இருக்கும். இப்படி பல விதமான உயிரிகள் (ஜீவராசிகள்) காற்றிலும், நீரிலும், நிலத்திலும் உள்ளன. (முப்பத்து முக்கோடி தேவர்களில் பெரும்பாலான கோடிகள் இந்த நுண்ணுயிரிகள் தாம்!! 😉)
இவற்றை நமது கண்களால் காண இயலாது. ஒரு வேளை, இவற்றை காணும் திறனை இறைவன் நமக்குக் கொடுத்திருந்தால்? 🤔
நம் உள்ளும் வெளியும் கோடான கோடி நுண்ணுயிரிகள் பிறந்தும், இறந்தும், ஒன்றை மற்றொன்று விழுங்கியும், உண்டும், சார்ந்தும் வாழ்வதைக் காணுவோம். (வாந்தி வரலாம். பைத்தியம் பிடிக்கலாம். நெஞ்சும் வெடிக்கலாம். 😂 இதல்லாம் நிகழாதவாறு நம்மை காப்பது இறைவனின் ஐம்பெரும் தொழில்களில் ஒன்றான மறைத்தல் ஆகும். 🙏)
மொத்தத்தில், எங்கெங்கும் உடல்களாக (உணவாக) காண்போம். (ஒன்றின் உடல் இன்னொன்றின் உணவு)
இந்த பேருண்மையை விளக்குவது தான் அன்னாபிஷேகம். ஒவ்வொரு அரிசி பருக்கையும் ஓரு உடலை / ஒரு இனத்தைக் குறிக்கும். அனைத்தும் சேர்ந்து உலகைக் குறிக்கும். 👏👌👍
ஒவ்வொரு அரிசி பருக்கையும் ஒவ்வொரு விண்மீன் கூட்டமாக (Galaxy) எடுத்துக்கொண்டால், மொத்த லிங்கமும் அண்டத்தைக் குறிக்கும். 👏👏👌👌👍👍
இங்ஙனம், ஒரே உவமையைக் கொண்டு உடலுக்குள்ளேயும், இந்த உலகிலும் மற்றும் மொத்த அண்டத்திலும் நடக்கும் நிகழ்வுகளை நமக்கு உணர்த்திய மகான் எப்பேர்பட்டவராக இருக்கவேண்டும்! அவருக்கு நம் சிரம் தாழ்த்துவோம்!! 🌸🙏
அவர் யாரென்றுத் தெரியவில்லை. ஆனால், அவர் இந்தப் பேருண்மைகளை உணர்ந்த / வெளியிட்ட நாள் இன்று தான் என்று உறுதியாகக் கூற முடியும். மேலும், அவர் ஒரு தமிழர் என்றும் அறுதியிட்டுக் கூற இயலும். ஏனெனில் இது தமிழக சிவன் கோயில்களில் மட்டும் நடத்தப்படும் ஒரு விழாவாகும்.
🕉 வாருங்கள், சிவன் கோயிலுக்குச் சென்று வருவோம்.
🌸 அன்னாபிஷேகத்தை கண்குளிர காணுவோம்.
🙏 அந்த ஒப்பனை உணர்த்தும் பேருண்மைகளை உணர்ந்து மனமழிப்போம்.
🔥 எல்லாம் வல்லவனை சிக்கெனப் பிடிப்போம்.
🔯 திருச்சிற்றம்பலம் 🔯
🌸🏵🌹🌺💮🌻🌷🌼
💥 நம் மகான் எப்போது இந்தப் பேருண்மைகளை உணர்ந்திருப்பார்? நியூட்டன் தலையில் "ஆப்பிள் விழுந்த" பின்னர் தானே? மெகல்லன் உலகம் உருண்டை என்று "நிருபித்த" பின்னர் தானே? அந்தோனி வான் லீயு வென்ஹோயெக் நுண்ணுயிரிகளை "கண்டுபிடித்த" பின்னர் தானே? 👊💪 😛😜😝😂
💥 அன்னாபிஷேக அலங்காரத்தில் கண், காது, மூக்கு என சேர்ப்பது அண்மை காலத்தில் ஏற்பட்ட அலங்கோலமாகும். 😑
posted from Bloggeroid
Monday, November 14, 2016
ஐப்பசி பெளர்ணமி அன்னாபிஷேக விளக்கம்
இன்று #ஐப்பசி #பெளர்ணமி! #சிவன் கோயில்களில் #அன்னாபிஷேகம் நடக்கும்.
*"இந்த அண்டம் முழுவதும் உணவால் ஆனது"* என்னும் பேருண்மை வெளிப்படுத்தப்பட்ட நாள்!!
லிங்கம் (அடையாளம்) - மொத்த உலகைக் குறிக்கும்
அன்னம் - உணவு
தாயின் கருப்பையில் முதல் செல் உருவானது முதல் இறுதி மூச்சு வரை, நம் உடலில் செல்கள் உருவாகிக் கொண்டும், இறந்து கொண்டும் இருக்கின்றன. இதற்கு வளர்சிதை மாற்றம் என்று பெயர்.
இந்த மாற்றம் நமக்கு மட்டும் நடப்பதில்லை. தாவரங்கள், விலங்குகள், பறவைகள் என அனைத்து உடல்களுக்கும் நடக்கின்றது. இறக்கும் செல்கள் என்னவாகின்றன? காற்றிலும், நிலத்திலும், நீரிலும் கலக்கின்றன. பின் என்னவாகிறது?
அவற்றை சில்லுயிரிகள் / நுண்ணுயிரிகள் உண்டு விடுகின்றன. உணவு என்று ஒன்று உள்ளே போனால், கழிவு என்று ஒன்று வெளியே வந்தாகவேண்டும். மேலும், அந்த நுண்ணுயிரிகளுக்கும் வளர்சிதை மாற்றம் நிகழும். அந்த செல்கள் என்னவாகும்? இந்த நுண்ணுயிரிகளின் கழிவையும், இறந்த செல்களையும் உணவாகக் கொள்ள வேறு வகை நுண்ணுயிரிகள் இருக்கும். இப்படி பல விதமான உயிரிகள் (ஜீவராசிகள்) காற்றிலும், நீரிலும், நிலத்திலும் உள்ளன. (*முப்பத்து முக்கோடி தேவர்களில் பெரும்பாலான கோடிகள் இந்த நுண்ணுயிரிகள் தாம்!!* 😉)
இவற்றை நமது கண்களால் காண இயலாது. ஒரு வேளை, இவற்றை காணும் திறனை இறைவன் நமக்குக் கொடுத்திருந்தால்? 🤔
நம் உள்ளும் வெளியும் கோடான கோடி நுண்ணுயிரிகள் பிறந்தும், இறந்தும், ஒன்றை மற்றொன்று விழுங்கியும், உண்டும், சார்ந்தும் வாழ்வதைக் காணுவோம். (வாந்தி வரலாம். பைத்தியம் பிடிக்கலாம். நெஞ்சும் வெடிக்கலாம். 😂 இதல்லாம் நிகழாதவாறு நம்மை காப்பது இறைவனின் ஐம்பெரும் தொழில்களில் ஒன்றான மறைத்தல் ஆகும். 🙏)
*மொத்தத்தில், எங்கெங்கும் உடல்களாக (உணவாக) காண்போம். (ஒன்றின் உடல் இன்னொன்றின் உணவு)*
*இந்த பேருண்மையை விளக்குவது தான் அன்னாபிஷேகம். ஒவ்வொரு அரிசி பருக்கையும் ஓரு உடலை / ஒரு இனத்தைக் குறிக்கும். அனைத்தும் சேர்ந்து உலகைக் குறிக்கும்.* 👏👌👍
*ஒவ்வொரு அரிசி பருக்கையும் ஒவ்வொரு விண்மீன் கூட்டமாக (Galaxy) எடுத்துக்கொண்டால், மொத்த லிங்கமும் அண்டத்தைக் குறிக்கும்.* 👏👏👌👌👍👍
இங்ஙனம், ஒரே உவமையைக் கொண்டு உடலுக்குள்ளேயும், இந்த உலகிலும் மற்றும் மொத்த அண்டத்திலும் நடக்கும் நிகழ்வுகளை நமக்கு உணர்த்திய மகான் எப்பேர்பட்டவராக இருக்கவேண்டும்! அவருக்கு நம் சிரம் தாழ்த்துவோம்!! 🌸🙏
அவர் யாரென்றுத் தெரியவில்லை. ஆனால், *அவர் இந்தப் பேருண்மைகளை உணர்ந்த / வெளியிட்ட நாள் இன்று தான் என்று உறுதியாகக் கூற முடியும். மேலும், அவர் ஒரு தமிழர் என்றும் அறுதியிட்டுக் கூற இயலும். ஏனெனில் இது தமிழக சிவன் கோயில்களில் மட்டும் நடத்தப்படும் ஒரு விழாவாகும்.*
🕉 வாருங்கள், சிவன் கோயிலுக்குச் சென்று வருவோம்.
🌸 அன்னாபிஷேகத்தை கண்குளிர காணுவோம்.
🙏 அந்த அலங்காரம் உணர்த்தும் பேருண்மைகளை உணர்ந்து மனமழிப்போம்.
🔥 எல்லாம் வல்லவனை சிக்கெனப் பிடிப்போம்.
🔯 திருச்சிற்றம்பலம் 🔯
(இணைப்பு: தினமலர் - வாரமலர் - 13/11/2016)
🌸🏵🌹🌺💮🌻🌷🌼
💥 பி.கு. #1: நம் மகான் எப்போது இந்தப் பேருண்மைகளை உணர்ந்திருப்பார்? நியூட்டன் தலையில் "ஆப்பிள் விழுந்த" பின்னர் தானே? மெகல்லன் உலகம் உருண்டை என்று "நிருபித்த" பின்னர் தானே? அந்தோனி வான் லீயு வென்ஹோயெக் நுண்ணுயிரிகளை "கண்டுபிடித்த" பின்னர் தானே? 👊💪 😛😜😝😂
💥 பி.கு. #2: இணைப்புக் கட்டுரையில் சிவப்பு கட்டமிட்டதை மட்டும் படித்தால் போதும். மீதம், பக்கம் நிரப்புவதற்காக, சென்ற வருட கட்டுரையிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக எழுதப்பட்டுள்ளது.
💥 பி.கு. #3: அன்னாபிஷேக அலங்காரத்தில் கண், காது, மூக்கு என சேர்ப்பது அண்மை காலத்தில் ஏற்பட்ட அலங்கோலமாகும். 😑