Showing posts with label திருவரங்கம். Show all posts
Showing posts with label திருவரங்கம். Show all posts

Thursday, February 27, 2025

தங்க புத்தர் சிலையை விற்று, திருவரங்கம் கோயிலை கட்டியுள்ளார்கள் - ஆ இராசா


இது இவரது கருத்தல்ல. திருவரங்கம் திருக்கோயில் பற்றிய செய்திகளை கொண்டுள்ள "கோயிலொழுகு" (நாமாசுரர்கள் (#) எழுதியது) நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளதைத்தான் இவர் கூறியிருக்கிறார். இது, பெரும்பாலும், உண்மையாக இருக்க வாய்ப்புள்ளது.

(# - ஆரியர்கள், குறிப்பாக, வைணவர்கள், தங்களது புருடாக்களில் திருநெறியத் தமிழர்களை அசுரர்களாக காண்பித்துள்ளதால், நான் அவர்களை அசுரர்கள் என்றழைக்கிறேன்.)

இன்று நாமம் போடும் தொழில் (வைணவம்) செய்து கொண்டிருக்கும் நாமாசுரர்கள், நேற்று மொட்டை போடும் தொழில் (பெளத்தம்) செய்து கொண்டிருந்தார்கள். திரு சீர்காழி பிள்ளையாரின் 🌺🙏🏽🙇🏽‍♂️ (அசுரத்தில், திருஞானசம்பந்தர்) திருப்பணியினால் மொட்டை, அம்மணம் போன்ற வடக்கிலிருந்து வந்த தொழில்கள் போணியாகாமல் போனதால், மொட்டாசுரர்களில் ஒரு பிரிவினர், இங்கிருந்த மாயோன் வழிபாட்டினருடன் கூட்டு சேர்ந்து (அல்லது, அதை விலைக்கு வாங்கி), நாமத்தொழிலாக மாற்றிக்கொண்டனர். அதற்காக அவர்களிடமிருந்த ஒரு தங்க புத்தர் சிலையை விற்று, அப்பணத்தை முதலீடாக பயன்படுத்தியுள்ளனர் என்று எடுத்துக் கொள்ளலாம்.

இன்று நாம விகாரையாக இருக்கும் திருவரங்கம், நேற்று, பௌத்த விகாரையாக இருந்திருக்கலாம். ஆனால், "அதற்கும் முன்னர் என்னவாக இருந்தது?" என்பதுதான் இன்னும் முகமையான கேள்வியாகும்!

oOo

இதற்கு விடையாக, திருச்சி மக்களிடையே நிலவும் ஒரு செய்தியை ஆராயலாம்: சமயபுரம் மாரியம்மன் சிலையும், திருவரங்கம் பெருமாள் சிலையும் [பானைகள் செய்யப் பயன்படும்] ஒரே வகை மண்ணாலானது.


இதைக் கேட்டவுடன் நாம், "அக்காலத்தில், இரு சிலைகளையும், ஒரே சிற்பி ஒரே இடத்து மண்ணைக் கொண்டு வடிவமைத்திருப்பார் போலிருக்கிறது" என்று நினைத்துக் கொள்வோம். இது தவறாகும்!

திருவரங்கம் பெருமாள் சிலைக்கு கீழேயிருப்பவர் திரு சட்டைமுனி பெருமானாவார் (அசுரத்தில், சித்தர்). சமயபுரம் மாரியம்மன் சிலைக்கு கீழேயிருக்கும் பெருமானின் பெயர் தெரியவில்லை. ஆனால், எது மேன்மையான பொருள் என்பது பற்றிய இருவரது கண்ணோட்டமும் ஒன்றாக இருந்துள்ளது. இதனால்தான், "... ஒரே வகை மண்ணாலானது" என்று பதிவு செய்திருக்கிறார்கள்.

வையகத்திலுள்ள யாவற்றையும் இரண்டாக பிரிக்கலாம்:

> காண்பவன்-காணப்படுவது
> உணருபவன்-உணரப்படுவது
> மாறாதது-மாறுவது
> அழியாதது-அழிவது
> அசையாதது-அசைவது

மேற்கண்ட இரு பெருமான்களும், மாறிக்கொண்டேயிருக்கும் மனதையும், உடலையும், வையகத்தையும் பெரிதாக கருதியுள்ளனர்.

மாறாததை போற்றினால் ஐயன் (சிவன்) வழிபாடு. மாறுவதை போற்றினால் அன்னை வழிபாடு. மாறுவதை ஆணாகக் கண்டால்... மாயோன் வழிபாடு! இவ்வழிபாடே சட்டைமுனி பெருமானின் திருவிடத்தில் (அசுரத்தில், சமாதியில்) நடந்திருக்கலாம். பின்னர், வடக்கிலிருந்து வந்த மொட்டாசுரர்களின் கைகளுக்கு சென்று, இன்று, நாமத்தொழிலின் தலைமையகமாக மாறியுள்ளது.

oOo

சீர்காழிப் பிள்ளையாரால் புவாவுக்கு லாட்டரி அடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட மொட்டாசுரர்களுக்கு அப்போதிருந்த தெரிவுகள் 2:

🥂 மீண்டும் தேவலோகத்திற்கு திரும்பி, அன்றைய அசோகன் முதல் இன்றைய தெய்வப்பிறவி வரை, தெற்கை கொள்ளையடித்துக் கொடுக்கும் தட்சிணையில் சோமபானம் குடித்துக் கொண்டு, ஊர்வசி, அரம்பை போன்ற ஐயிட்டங்களின் குத்தாட்டத்தை கண்டுகளித்துக் கொண்டிருத்தல். அல்லது,

🤑 இங்கேயிருக்கும் ஏதாவதொரு பிரிவினரோடு இணைந்து, தொழிலை தொடருதல்.

மொட்டாசுரர்களில் ஒரு பிரிவினர் 2வது தெரிவை தேர்ந்தெடுத்தனர். அவர்களே, இன்று, நாமாசுரர்களென்று (நாம மதத்தை வழிநடத்துபவர்கள்) அறியப்படுகின்றனர்.

(ஏன் பரந்து, விரிந்து, வலுவுடன் திகழ்ந்த அன்னை வழிபாட்டினருடன் இணையாமல், சிறிய அளவிலிருந்த மாயோன் வழிபாட்டை விலைக்கு வாங்கினர்? இதற்கான "கைங்கரியத்தை" வேறொரு நாள் வைத்துக் கொள்வோம்! ☺️)

oOo

இன்று,

💥 நாமம் போட்டுட்டாங்களா? = ஏமாற்றிவிட்டார்களா?
💥 நாமம் போட்டுட்டியா? = ஏமாற்றிவிட்டாயா?
💥 பட்டை நாமம் சாத்திவிட்டார்களா? = நன்றாக ஏமாற்றிவிட்டார்களா?

நேற்று,

💥 மொட்டை போட்டுட்டாங்களா? = முழுவதும் கறந்துவிட்டார்களா?
💥 மொட்டை போட்டுட்டியா? = முழுவதும் கறந்துவிட்டாயா?

இவ்வளவுதான் வைணவ & பௌத்த தொழில்களின் வரலாறு!! 👊🏽👊🏽

oOOo

அசுரம் தவிர். தமிழ் பயில். 💪🏽

அருள் நிறைவான அன்புக்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Saturday, October 22, 2022

மாமன்னர் சடையவர்மன் சுந்தரபாண்டியர் பரங்கி ஆர்கிமிடிஸிடம் பாடங்கற்றவர்!! 🤭


திருவரங்கம் திருக்கோயிலுள்ள ஒரு கல்வெட்டும், அத்திருக்கோயிலின் கோயிலொழுகு நூலும் பாண்டிய மன்னர் சடையவர்மன் சுந்தரபாண்டியன் (தி.பி. 1,282-1,302) நிறைகோல் (துலாபாரம்) ஏறிய சடங்கைப் பற்றிக் தெரிவிக்கிறது.

தங்கத் தகடுகளால் போர்த்தப்பட்ட ஒரு பெரிய படகை காவிரியாற்றில் மிகத்தவிட்டு, தனது பட்டத்து யானையின் மீதேறி அமர்ந்தவாறு, அந்த படகில் ஏறினார். இப்போது, தண்ணீரில் எவ்வளவு ஆழம் அந்த படகு அமிழ்ந்தது என்பது குறித்துக்கொள்ளப்பட்டது. படகிலிருந்து மன்னர் வெளியேறிய பிறகு, அந்த படகு முழுவதும் தங்கத்தாலும், 9 வகை மணிகளாலும், குறித்து வைக்கப்பட்ட அளவு அமிழும் வரை நிரப்பப்பட்டது. இப்படி நிரப்பப்பட்ட பொருட்களைக் கொண்டு, அத்திருக்கோவிலின் கருவறை கோபுரம், முன்னுள்ள மன்றம் மற்றும் தூண்கள் ஆகியவற்றை தங்கத்தகடுகளால் போர்த்தி மிளிரச் செய்தார்.

இப்போது கேள்வி: தி.பி. 1,529-ல்தான் நம்மை போர்த்துகீசிய பொறுக்கி... மன்னிக்கவும்... மாலுமி வாஸ்கோடகாமா "கண்டுபிடித்தான்". அதற்கு முன்னர் நம்மை பற்றி நமக்கே தெரியாது! 😁 எனில், எப்படி பாண்டியருக்கு ஆர்கிமிடிஸின் "நீர்ம இடப்பெயர்ச்சி கோட்பாடு" பற்றி தெரிந்திருக்கும்? 🤔

பகுத்தறிவு பதில்: ஹாலிவுட் திரைப்படங்களில் வருவதுபோன்று, ஆர்கிமிடிஸ் காலப்பயணம் செய்து, பாண்டியரை சந்தித்து, அவருக்கு, முதலில், "ஏ பார் ஆப்பிள்" என்று பீட்டர் விட கற்றுக்கொடுத்து, பிறகு, தான் சுட்ட... மன்னிக்கவும்... "கண்டுபிடித்த" கோட்பாட்டை கற்றுக்கொடுத்திருக்கவேண்டும். 😜

மெய்ப்பொருள் காண்பது அறிவு! கிடைக்கும் பொரைக்கேற்றவாறு திரிப்பது பகுத்தறிவு!! 👊🏽

Tuesday, September 17, 2019

தேங்காய் உடைத்தால் #திருவரங்கம் பெருமாளின் உறக்கம் பாதிக்குமாம்! 😛 ஆகையால் #தேங்காய் #துருவல் படைக்கிறார்களாம்!! 😝


(தினமலர் - ஆன்மீகமலர் - 14-09-2019)

இப்படி படங்காட்டி படங்காட்டியே, கோபுரத்தில் இருக்கவேண்டிய பேருண்மைகளையெல்லாம் வீதிக்கு இறக்கி வந்து, சாக்கடை உயிரிகள் கூட கைகொட்டி சிரிக்கும் நிலைக்கு கொண்டு வந்து விட்டனர். 🤬 இன்னும் எவ்வளவு காலம்தான் இப்படி படம் காட்டுவார்களோ?

இவர்களது விளக்கத்தை எடுத்துக் கொண்டால்கூட பெருமாள் அறி-துயிலில் இருப்பவர். எப்படி அவரது உறக்கம் கெடும்?

பாம்பணை ஐம்பூதங்களால் ஆன உடலைக் குறிக்கும். அழிவதை, மாறுவதை, நிலையில்லாததை, இருப்பற்றதைக் குறிக்கும். பெருமாள் இவ்வுடலில் என்றும் அழியாமல், மாறாமல், நிலையாகவுள்ள இருப்பை - உள்ளபொருளை - பரம்பொருளைக் குறிக்கும். மொத்தத்தில், இவ்வுருவம் அரவு அணிகலனுடன் கூடிய சிவலிங்கத்துக்கு சமமானதாகும். 🌺🙏🏼 பரம்பொருளுக்கு அந்நியமாக ஏதும் இருக்கிறதா? பரம்பொருளுக்குத் தெரியாமல் ஏதும் நிகழ்ந்துவிடுமா? ஏதும் நிகழ்ந்தாலும் பரம்பொருள் தான் பாதிக்கப்படுமா? அப்படி பாதிக்கப்படுவதற்கு பரம்பொருள் என்ன "உலகை முதலில் தவறாக படைத்து விட்டு, பின்னர் அதை சீர் செய்ய தனது மகனை அனுப்பும்" கூமுட்டை 🥴 வகையறாவா?

தேங்காய் உடைப்பது என்பது அகந்தை அழிவதைக் குறிக்கும். ஓடு உடைந்து வெளிப்படும் தேங்காய், அகந்தை அழிந்து வெளிப்படும் மெய்யறிவைக் குறிக்கும். உடைத்த தேங்காய் அப்படியே அனைவருக்கும் பயன்படாது. முனிவர்கள் வெளிப்படுத்திய மெய்யறிவை அப்படியே பெறும் பக்குவம் அனைவரிடமும் இருக்காது. துருவிய தேங்காய் அனைவருக்கும் பயன்படும். இவ்வாறே மெய்யறிவையும் அனைவருக்கும் பயன்படும் படி எளிமையாக்கி கொடுக்க வேண்டும்.

இது தான், தேங்காயை படைக்காமல், துருவலை படைக்கும் சடங்கு உணர்த்தும் பொருள். திருவரங்க மூலவர் திரு அரங்கநாதப் பெருமாளின் கீழ் சமாதியாகி இருக்கும் சட்டைமுனி சித்தர் 🌺🙏🏼 இவ்வாறு அறிவுருத்தினாரா? அல்லது, அவர் வழித்தோன்றல்கள், திருராமானுஜர் போன்ற வைணவப் பெரியோர்கள் யாரேனும் அறிவுருத்தினரா என்று தெரியவில்லை.

அன்று பாமரரும் பேருண்மைகளை எளிதில் புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட இத்தகைய சடங்குகளை, இன்று கற்றவரும் புரிந்து கொள்ள முடியாதபடி செய்துவிட்டனர். 😔

🏵️🌼🌻

எனக்கு பிடித்த தேங்காய் துருவல்களில் 😀 ஒன்று:

தன்னை உபாதி விட்டு ஓர்வது தான் ஈசன்
தன்னை உணர்வதாம் உந்தீபற
தானாய் ஒளிர்வதால் உந்தீபற

-- பகவான் திரு ரமணர் 🌺🙏🏼, உபதேச உந்தியார்

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏼