Saturday, September 5, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு: பாடல் #67 - வினைப்பிறவி - சிறு விளக்கம்

அஞ்சு புலனும் அடக்கி அறிவுடையோர்
வஞ்ச வினைப்பிறவி மாயவே - நெஞ்சில்
அழுத்துமலை அன்பர் அனவரதம் போற்றி
வழுத்துமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #67

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

🔸வினைப்பிறவி - நாம் செய்யும் வினைகளின் விளைவுகளைத் துய்க்கவே உடல்கள் நமக்கு அமைகின்றன.

நாமே உள்ளபொருள். நம்மைத் தவிர மற்றவை பிறபொருள். உடல் மாட்டப்பட்டவுடன் நமது உண்மையை மறந்துவிடுகிறோம். பிறபொருள் ஆகிறோம். பிறவாகிறோம். பிறவி எடுக்கிறோம்.

உடல் மாட்டப்பட்டாலும், மறைந்துபோனாலும் நாம் நாமாகத்தான் இருக்கிறோம். துய்க்க வேண்டியதையெல்லாம் துய்த்து முடித்தபிறகு, நமக்கேற்ற மெய்யாசிரியர் வந்து, மேற்சொன்ன நமதுண்மையை சுட்டிக்காட்டிய பின் உணர்கிறோம். பின்னர், நிலை பெறுகிறோம்.

(வேடிக்கையாக: பிற-ஆக இருந்த நாம் மீண்டும் நாம்-ஆக ஆகிறோம்! 😊)

நிலைபேற்றினை அடைந்த பின், உடலோ, அதன் மூலம் கிடைக்கும் துய்ப்புகளோ நம்மை பாதிக்காது. பகவான் திரு ரமணர் 🙏🏽🌺 இறுதியாக அருளிய அறிவுரைகளில் ஒன்று: பிறவிகள் வரும்; போகும். அதனாலென்ன?

🔸அனவரதம் - எப்பொழுதும் / எக்கணமும்
🔸வழுத்தும் - வாழ்த்தும்

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

No comments:

Post a Comment