Saturday, September 12, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு: பாடல் #69 - திருக்கயிலாயக் காட்சி - சிறு விளக்கம்

இமையவரும் பத்தரும்மா கேசுரரும் காணச்
சமயகுரு வாம்நந்தி தாங்க - உமைஒருபங்கு
ஆனமலை வாக்குமனம் காயம் தமக்குஅரிய
வானமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #69

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

🔸 இமையவரும் ... ஆனமலை

வானவரும், அன்பர்களும், மாமுனிவர்களும் காண, (சைவ) சமயத்தின் முதல் மெய்யாசிரியரான நந்தியம்பெருமான் (விடை) தாங்க, உமையன்னையோடு காட்சித் தருகிறாராம் சிவபெருமான். அதாவது, உலகக் காட்சியைப் புனைகிறார் ஆசிரியர்.

🔹 சிவம், அன்னை & விடை - உலகக்காட்சி

🔹 சிவம் & அன்னை - திருக்கயிலாயக் காட்சி. சில திருத்தலங்களில். "இன்னாருக்கு இறைவன் திருக்கயிலாயக் காட்சி கொடுத்த இடம்" என்று எழுதி, அம்மையப்பரை வரைந்திருப்பார்கள் / செதுக்கியிருப்பார்கள். அவ்விடங்களில், அந்த அருளாளர்கள் தாமே தாமாயிருக்க, படைப்பனைத்தும் தம்முள்ளிருக்க "இரு"ந்திருப்பார்கள்.

🔹 சிவம் - நிர்விகற்பசமாதி நிலை

வேடிக்கையாக 😊,

🔹 நாயைக் கண்டால் கல்லைக் காணோம் - உலகக் காட்சி

🔹 கல்லைக் கண்டால் நாயைக் காணோம் - சமாதி

🔹 இரண்டையும் கண்டால் அடிப்பவனைக் காணோம் - திருக்கயிலாயக் காட்சி. அடிப்பவன் - விடை/மனம்.

🔸 வாக்குமனம் காயம் தமக்குஅரிய வானமலை

உள்ளபொருளுக்கு வாக்கு, மனம் & காயம் ஆகியவை கிடையாது என்று பாடுகிறார் ஆசிரியர்.

வானமலை - உயிர் மலை. வானம் (விசும்பு) என்ற சொல்லுக்கு பல பொருள்கள் இருந்தாலும் உயிர் என்ற பொருளிலேயே இங்கு பயன்படுத்தியுள்ளார். விசும்பிற்கு எல்லை கிடையாது. ஒரு பொருளைத் தொடுவதுபோல் விசும்பைத் தொடமுடியாது. அதை ஒளிச்சிதறல் கொண்டே காண/உணரமுடியும். இவ்வாறே உள்ளபொருளும். படைப்பை வைத்தே படைத்தவர் ஒருவர் இருக்கிறார் என்று உணரமுடியும்.

அந்த படைப்பும் எதைக் கொண்டு படைக்கப்பட்டது? (இந்த கேள்விக்கு பாலைவன மதங்கள் 'ஙே' என்று முழிக்கும்! 😁) விடை கூறுகிறார் பகவான் திரு ரமணர் 🌺🙏🏽:

... நாமஉரு
சித்திரமும் பார்ப்பானும் சேர்படமும் ஆர்ஒளியும்
அத்தனையும் தானாம் அவன்!!

(ஆர்ஒளி - அறிவு ஒளி)

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

No comments:

Post a Comment