Friday, September 25, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு: பாடல் #71 - ஐயர், அந்தணன், பிராமணன், சதுர்வேதியன் & வேள்வி - சிறு விளக்கம்

மால்ஊன்றிச் செய்யும் மணம்தகைந்து சுந்தரனைக்
கால்ஊன்றி ஆளக் கருணையாய்க் - கோல்ஊன்றித்
தந்த விருத்த சதுர்வே தியன்ஆக
வந்தமலை அண்ணா மலை

-- அண்ணாமலை வெண்பா - #71

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

திருவெண்ணெய்நல்லூரில் நடக்கவிருந்த திரு சுந்தரமூர்த்தி நாயனாரின் 🌺🙏🏽 முதல் திருமணத்தை தடுத்தி நிறுத்தி அவரை எம்பெருமான் ஆட்கொண்ட வரலாற்றைப் பற்றி பாடுகிறார் ஆசிரியர்.

🔸 திருவெண்ணெய்நல்லூர் (திருஅருட்துறை) - மூலவர் ஆட்கொண்டநாதர் 🌺🙏🏽. இதன் கீழ் சமாதியாகியிருக்கும் பெருமான் தான் நாயனாரைத் தடுத்தாட்கொண்டதாக தொன்நம்பிக்கை.

இவ்வூரில் தான் சிவஞானபோதம் எனும் ஒப்பற்ற சாத்திர நூலைப் படைத்த மெய்கண்ட சிவம் 🌺🙏🏽 சமாதி அடைந்துள்ளார்.

🔸 சதுர்வேதியன் - நான்கு மறைநூல்களையும் கற்றவர். எனில், நான்கு உயர்ந்த சொற்றொடர்களின் உட்பொருளை அறிந்தவர் (1. உணர்வே உள்ளபொருள், 2. அது நீயே, 3, நானே உள்ளபொருள், 4. இந்த உயிரே உள்ளபொருள்)

இதை வாய்ப்பாகக் கருதி பெரும்பாலும் தவறாகவே பொருள் கொள்ளப்படும் மேலும் சில சொற்களையும் பார்ப்போம்:

🔹 ஐயர் - கற்றறிந்தவர், பெரியவர்.

🔹 அந்தணன் - எவ்வுயிர்க்கும் தீங்கு நினைக்காதவர் / இழைக்காதவர்

🔹 பிராமணன் - பிரம்மம் எனில் பரம்பொருள் / உள்ளபொருள். பிராமணன் எனில் உள்ளபொருளாய் உள்ளவர். உள்ளபொருளை அறிந்தவர்.

🔹 வேள்வி - உடல் என்னும் குண்டத்தில் எரியும் நெருப்பான தன்மையுணர்வில், மனதில் தோன்றும் எண்ணங்கள் என்னும் குச்சிகளை (சுல்லிகளை) போட்டுக்கொண்டிருப்பதே வேள்வி. வேள்வியின் விளைவால் தோன்றும் புகையென்பது மெய்யறிவாளரிடமிருந்து வெளிப்படும் நல்லுரைகள் (பகவான் திரு ரமணரிடமிருந்து 🌺🙏🏽 வெளிப்பட்ட "நான் யார்?" போன்று). வேள்விப்புகை காற்றை சுத்தப்படுத்துவது போல் மெய்யறிவாளரின் நல்லுரைகள் கேட்போரின் மனதை சுத்தப்படுத்தும்.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

No comments:

Post a Comment