Showing posts with label சித்திரை. Show all posts
Showing posts with label சித்திரை. Show all posts

Wednesday, April 29, 2020

சித்திரை திருவாதிரை - ஆதிசேஷன் அவதாரமாக போற்றப்படும் திரு ராமானுஜர் பிறந்தநாள்!!

(https://m.dinamalar.com/temple_detail.php?id=104700)

💥 அது என்ன ஆதிசேஷன் அவதாரம்?

பாரம்பரிய விளக்கம்: பெருமாள் பள்ளி கொண்டிருக்கும் பாம்பணை ராமானுஜராக உருவெடுத்து வந்து வைணவத்தை நிலைநாட்டியது!! 🥴

ஆதிசேஷன் ஐம்பூதங்களைக் குறிக்கும். அதில் படுத்திருக்கும் பெருமாள் உயிரைக் குறிக்கிறார். அதாவது, இவ்வண்டம் உயிராலும் உயிரற்றவையாலும் ஆனது என்று பொருள். நமது மனம், உடல் முதற்கொண்டு இவ்வண்டத்தில் காணப்படும் அனைத்து உயிரற்ற பொருள்களும் ஆதிசேஷனின் - ஐம்பூதங்களின் - அவதாரங்கள் தான்!! ராமானுஜர் மட்டுமல்ல. பின்னர் ஏன் அவரை மட்டும் தனியாக குறிப்பிட்டார்கள்?

மனிதர்களில் 3 வகை: அகம் சார்ந்தவர்கள், புறம் சார்ந்தவர்கள் மற்றும் அகம்-புறம் சார்ந்தவர்கள்.

அகம் மட்டும் சார்ந்தவர்கள் உணர்வுப்பூர்வமாக இருப்பார்கள். ஆன்மிகம், கலை போன்றவைகளை மட்டும் விரும்புவார்கள். புறம் மட்டும் சார்ந்தவர்கள் உலகியலில் ஆர்வமாக இருப்பார்கள். பொருள் ஈட்டுவது, சொத்து சேர்ப்பது, வேலைகளில் குறியாக இருப்பது போன்றவை தான் இவர்களுக்கு முக்கியம். இரண்டும் சார்ந்தவர்கள் கலவையாக இருப்பார்கள். அகம் மட்டும் சார்ந்தவர்கள் பழகுவதற்கு இனிமையானவர்களாக இருந்தாலும், பொருளீட்ட தெரியாதவர்கள். இருப்பதையும் கரைத்து விடுவார்கள். புறம் மட்டும் சார்ந்தவர்கள் உலக வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் பெற்றிருப்பார்கள். கெட்டிக்காரர்கள். ஆனால், ரசனை இல்லாதவர்கள்; பழகுவதற்கு இனிமையானவர்கள் அல்லர்.

ஒரு எடுத்துக்காட்டு. ஒரு அமெரிக்க பங்கு சந்தை வியாபாரியும் அவரது மனைவியும், ஒரு முழுநிலவன்று கடற்கரைக்குச் சென்றார்களாம். நிலவின் அழகில் மயங்கிய மனைவி, "அந்த நிலவு எவ்வளவு அழகாக இருக்கிறது பாருங்கள்!!" என்றாளாம். அதற்கு அந்த வியாபாரி, "அது அழகாக இருந்து என்ன பயன்? அதை வாங்கவோ விற்கவோ முடியாதல்லவா?" என்றானாம்!! 😁 இவர் தான் புறம் மட்டும் சார்ந்தவர். இப்படிப்பட்டவராகத் தான் ராமானுஜர் இருந்திருப்பார். தனது மதத்திற்கு ஆள் சேர்த்தல், மதத்தை நிலை நிறுத்துதல், மேம்படுத்துதல் & பரப்புதல், எதிர் சமயத்தை (சைவத்தை) கண்காணித்தல், ஆராய்தல் & தாக்குதல் போன்றவற்றில் மிக குறியாக இருந்திருப்பார்.

இன்னொரு எடுத்துக்காட்டு. #பகவான் திரு #ரமணர் 🌺🙏🏽 அகம் மட்டும் சார்ந்தவர். சின்னசுவாமி என்றழைக்கப்பட்ட அவரது இளைய சகோதரர் புறம் மட்டும் சார்ந்தவர். ஆசிரம வளர்ச்சி (கட்டிடங்கள், பொருளாதாரம்...) & பாதுகாப்பு இவை மட்டும்தான் அவருக்கு முக்கியம். ஆனாலும், இவர் இல்லையெனில் திரு ரமணாசிரமம் இன்றிருக்கும் நிலையில் இருந்திருக்காது. இது போன்று, ராமானுஜர் தோன்றாமல் போயிருந்தால் வைணவம் நிலை பெற்றிருக்காது என்று எடுத்துக் கொள்ளலாம்.

(ராமானுஜர் செய்த பணிகளால் மட்டும் வைணவம் நிலைத்து விடவில்லை. பின்னர் வந்த மன்னர்கள் வைணவர்களாக அமைந்துவிட்டதே மிக முக்கிய காரணம். சோழப் பேரரசு மட்டும் இன்னும் மூன்று நூற்றாண்டுகள் வலுவாகத் தொடர்ந்திருந்தால், சைவத்தின், தமிழகத்தின், நம் நாட்டின் தலையெழுத்தே வேறு!! 😍)

💥 திருவனந்தபுரத்திலிருந்து ராமானுஜரை கருடன் தூக்கிவந்து திருக்குறுங்குடிக்கு அருகிலுள்ள திருப்பரிவட்டப்பாறை மேல் கிடத்தியது

வைணவத்தில் கருடன் அறிவைக் குறிக்கும். திருவனந்தபுரத்தில் இருக்கும் போது ராமானுஜர் உணர்ச்சிவயப்பட்டு, மூலவர் திரு அனந்தபத்மநாப பெருமாளுக்கு (அகத்திய மாமுனிவரின் சமாதி 🌺🙏🏽) தனது முறைப்படி பூசைகளை நடத்த நினைத்திருப்பார் / முயற்சித்திருப்பார் / துடித்திருப்பார். பின்னர், ஏதோ காரணத்தால், பொங்கிய உணர்ச்சி அடங்கியிருக்கும் (அல்லது, அடக்கிக்கொண்டிருப்பார்). உணர்ச்சி வயப்படும் போது அறிவு வேலை செய்யாது. உணர்ச்சிக் கொந்தளிப்பு அடங்கியபின் அறிவு வேலை செய்ய ஆரம்பித்திருக்கும். இது தனது இடமல்ல / வேலையல்ல என்றுணர்ந்து, மீண்டும் உணர்ச்சிவயப்படாமல், கவனமாக திருக்குறுங்குடி திரும்பியிருப்பார் (கவனமாக = அறிவுடன்; கருடன் தூக்கி வந்தது என்பது இதுவே). வரும் வழியிலுள்ள பரிவட்டப்பாறையில் அமர்ந்து நடந்தவற்றை நினைத்துப் பார்த்திருப்பார். தவமியற்றி இருப்பார்.

💥 பெருமாளே வடுகநம்பியாக வந்து சேவை செய்தது

அண்ணாமலை சுவாமிகளின் 🌺🙏🏽 வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு என்று நினைவு. நீச்சல் தெரியாத இவர், ஒரு நாள் அண்ணாமலையார் திருக்கோயிலில் உள்ள குளத்தில் குளிக்கும் போது மூழ்க ஆரம்பித்தார். அப்போது ஒரு நபர் குளத்தில் குதித்து, இவரைக் காப்பாற்றி கரைக்கு இழுத்து வந்து விட்டு விட்டுச் சென்றார். பின்னர், தன்னை சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு ஆசிரமம் திரும்பினார். அப்போது, அங்கு அமர்ந்திருந்த பகவான் உதிர்த்த புன்னகை மற்றும் அவரது பார்வை, "ஓ! இவர் தான் நம்மை காப்பாற்றியிருக்கிறார்!!" என்ற உண்மையை உணர்த்தியது. பெருமாள் வடுகநம்பியாக வந்து சேவை செய்ததும் இது போன்று ராமானுஜர் உள்ளுணர்வால் உணர்ந்த ஒன்றாகத்தான் இருக்கும். இதை, "பெருமாளே வடுகநம்பி உருவத்தில் வந்து..." என்று மிகைப்படுத்தி எழுதியிருக்கிறார்கள். 😏

ராமானுஜரின் வரலாறு வரல் ஆறல்ல. அவரை சூப்பர்மேனாக காட்ட, ஆச்சார்யார் ஆதிசங்கரர் 🌺🙏🏽 மற்றும் திருஞானசம்பந்தப் பெருமானின் 🌺🙏🏽 வரலாறுகளிலிருந்து நிகழ்வுகள் சேர்த்து, நடந்தவையெல்லாம் மிகைப்படுத்தி உருவாக்கப்பட்ட வரலாற்று புதினம்!! நடந்தவற்றை நடந்தவாறே பதிவு செய்தால் போதும். இந்த புவியில் பிறந்து, நியாயமாக வாழ்ந்து, தனது கடமைகளை சரிவர செய்து, வடக்கிருந்து, பிறவிப் பெருங்கடல் தாண்டும் மனிதர்கள் எல்லோருமே சூப்பர்மேன்கள் தான்!!

கருணாகர முனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

Saturday, August 12, 2017

வருட பிறப்பு, ஆடிப்பெருக்கு, தீபாவளி & பொங்கல் – பின்னுள்ள நம் முன்னோரின் அறிவியல்! 👌🙏

கீழ்காணும் இடுகை வாட்ஸ்அப் மூலம் கிடைத்தது. எனது கருத்துக்களை இதற்குக் கீழ் பதிவிட்டுள்ளேன். நன்றி. 🙏

🌞☀🌞☀

சித்திரை 1, ஆடி 1, தை 1 எல்லாம் விழாவாக கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு / பழக்கம்ன்னு நினைச்சுக்கிட்டு இருக்கோம்...

நம் முன்னோர்கள் இதுக்கு பின்னாடி மிகப்பெரிய அறிவியல வச்சிருக்காங்க....!!!

Ok. Lets look at the science behind it...

"சூரியன் உதிக்கும் திசை கிழக்கு" னு school பசங்களுக்கு சொல்லித்தற்றோம்....

என்னைக்காச்சும் ஒரு #compass வச்சு சூரியன் உதிக்குறப்போ check பண்ணி இருக்கோமா???!!! கண்டிப்பாக இல்லை...
நம்ம education system design பண்ணின வெள்ளக்காரன், நம்ம கிட்ட இருந்த அறிவியல அழிச்சிட்டு, ஒரு முட்டாள்த்தனமான கல்வியை புகுத்திட்டு போயிருக்கான்றதுக்கு இதுவும் ஒரு சான்று....

சூரியன் ஒரு குறிப்பிட்ட நாள்ல மட்டும் தான் exactஆ கிழக்கே உதிக்கும்.... அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா வடகிழக்கு நோக்கி நகர்ந்து, ஒரு extreme pointல மறுபடியும் தெற்கு நோக்கி திரும்பும்... அப்பறம் மறுபடியும் ஒரு நாள் கிழக்கே உதிக்கும், அப்புறம் தென்கிழக்கு நோக்கி நகரும்...

இப்படி correctஆ கிழக்குல ஆரம்பித்து, வடகிழக்கு, தென்கிழக்கு னு போயிட்டு மறுபடியும் correctஆ கிழக்குக்கு வர ஆகிற time, Correctஆ "1 year"...!!!!

சரி... இதுக்கும் தமிழ் மாதத்துக்கும் என்ன சம்பந்தம்ன்னு தானே யோசிக்குறீங்க?

சூரியன் correctஆ கிழக்குல start ஆகுற நாள் தான் #சித்திரை 1 - புத்தாண்டு...!!! (In science it is called Equinox)

அப்புறம் extreme வடகிழக்கு point தான் #ஆடி 1 .... (Solstice)

மறுபடியும் கிழக்குக்கு வர்றது #ஐப்பசி 1 (Equinox)

Going to extreme தென்கிழக்கு is #தை 1 (Solstice)

இந்த வானியல் மாற்றங்கள், அதனை சார்ந்த பருவ கால மாற்றங்களை நன்கு உணர்ந்து இருந்த நம் முன்னோர்கள், இவற்றை அனைவரும் அறியும் வகையில் திருவிழாக்களாக கொண்டாடினார்கள்...

சித்திரை (equinox) - புத்தாண்டு
ஆடி (summer solstice) - ஆடிப்பிறப்பு, ஆடிப்பெருக்கு
ஐப்பசி (equinox) - தீபாவளி
தை (winter solstice) - பொங்கல்

நமது அடுத்த தலைமுறைக்கு நமது பாரம்பரியத்தை வெறும் சடங்காக மட்டும் அல்லாமல் அதன் அறிவியலையும் சேர்த்து கொண்டு சேர்ப்போம்...

🌞☀🌞☀

மேலுள்ள இடுகையில் "In science it is called Equinox" என்று எழுதியிருக்கிறார் அதன் சொந்தக்காரர். இது தவறு! "காலை" என்பதை "In science it is called Morning" என்று கூறுவதற்கு சமம்! 😛 நம்மையும் அறியாமல், நம் மரபணுவில் ஏற்றப்பட்டிருக்கும் அடிமைத்தனத்தினால் வெளிப்பட்டிருக்கும் வாக்கியம் இது!! 😡

ஒன்றை பரங்கியரின் மொழிகளில் (ஆங்கிலம், கிரேக்கம், லத்தீனம், ...)  சொன்னால் அறிவியலன்று. 👊

கிரேக்கம், லத்தீனம் செம்மொழிகளாக இருக்கலாம். தமிழ் மட்டுமே நிறைமொழியாகும். மற்றவை குறைமொழிகளாகும். 💪

கொடூரன் அலெக்ஸாண்டரின் வருகை-தோல்விக்குப் பின்னர் இந்தச் சாக்கடைகளால் ஏற்பட்ட சமூகச் சீரழிவை (பிள்ளைபேறுக்கு பெண் மனைவி. உடல் இன்பத்திற்கு சமூக மதிப்பிற்கு ஆண் மனைவி! 😲🤒😝) நம் முன்னோர்கள் மிகவும் பிரயத்தனப்பட்டு  நீக்கியிருக்கிறார்கள். அதற்கேற்றாற் போல் அன்றைய அரசுகள் இருந்தன. ஆனால், இன்று அப்படியில்லை. பரங்கி பொறுக்கி வாஸ்கோட காமாவின் வருகையினால் மீண்டும் ஆரம்பித்த சீரழிவு இன்று வரை தொடருகிறது.

அவர்களது அறிவியலால் உலகம் ஒவ்வொரு விநாடியும் மேன்மேலும் அழிந்து கொண்டேயிருக்கிறது. ஆகையால், அவர்களது அறிவியலை அழிவியல் என்று அழைப்பதே சரி! 👌

எனில், மேலுள்ள வாக்கியம் "In அழிவியல் it is called Equinox" என்று மாற்றப்பட்டால் பொருத்தமாக இருக்கும்!! 😜😁

Thursday, April 14, 2016

தமிழ் & தமிழரின் புத்தாண்டு பற்றிய அறிவியல்

💐💐 💐 அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!! 🍏🍈🍌

🌾🌺🌻🌹🌷🌼🌸🌾

ஆண்டு என்றாலே தமிழாண்டு தான். இதை வைத்து தான் உலகின் அனைத்து ஆண்டுகளும். ஆகையால், தமிழ் என்ற வார்த்தை சேர்க்கவில்லை!!

🌾🌺🌻🌹🌷🌼🌸🌾

வானவியலில் முன்னோடிகளான நம் முன்னோர்கள் ஆண்டு பிறப்பை எவ்வாறு கண்டறிந்தனர் என்பதைப் பற்றிய ஒரு அருமையாக கட்டுரையை சுமார் 12-13 ஆண்டுகளுக்கு முன்னர் படிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இப்போது எவ்வளவு தேடியும் அக்கட்டுரை கிடைக்கவில்லை. ஆகையால், நான் படித்ததின் சாரத்தை இங்கே தந்துள்ளேன்:

🌋 எந்நாளில் பகல் உச்சிப் பொழுதில், பகலவன் தலைக்கு நேர் மேலே இருக்கும் போது, நம் நிழல் சிறிதும் சாயாமல் நம் மேலே விழுகிறதோ, அந்நாளே வருட பிறப்பாக எடுத்துக் கொண்டனர் நம் முன்னோர்கள்.

🌋 இது கடல் கொண்ட தென்மதுரையில் வைத்து கணக்கிடப்பட்டது. ஆகையால், சித்திரை முதல் நாளன்று பூமியின் எப்பகுதியில், உச்சிப் பொழுதில் ஒரு பொருளின் நிழல் சாயாமல் அதன் மீதே விழுகின்றதோ அப்பகுதியே தென்மதுரை.

🌋 இக்கணக்கிற்கு இயற்கை அன்னையும் ஆமோதிக்கின்றாள் தன் தாவர குழந்தைகளை பூக்க விட்டு - மழைக்காலத்திற்குப் பின்னர் அழுகிய வேர்க்களை செப்பனிட்டு, புதிய வேர்களை உருவாக்கி புது சத்துக்களை உறிஞ்சி, அடுத்த சுழற்சிக்காக தாவர உலகம் புதிய பூக்களை பூப்பதும் நம் வருட பிறப்பு காலத்தில் தான்.

🌋 உலகிலுள்ள பெரும்பாலான வருட பிறப்புகள் இந்தக் கணக்கையே அடிப்படையாகக் கொண்டவை. பரங்கியரின் ஆங்கில வருடமும் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் வரை ஏப்ரல் 1 அன்று தான் தொடங்கியது. கிரகோரியன் கணக்கிற்கு மாற்றியதாலும், யேசுநாதர் பிறந்தது ஜனவரி 1 என்று ஒரு கணக்கு இருப்பதாலும், நம் பிள்ளையார் போல் கிரேக்கர்களின் ஜானஸ் கடவுள் அனைத்திற்கும் முதன்மையானவராக இருப்பதாலும் ஜனவரி 1-ற்கு மாற்றினர். அதை ஏற்றுக் கொள்ளாமல் ஏப்ரல் 1-ஐ வருட பிறப்பாக தொடர்ந்தவர்களை சம்பளத்திற்கு ஆள் வைத்து "முட்டாள்கள் " என்று ஏளனம் செய்ய வைத்தனர் பரங்கி மன்னர்கள்! 😂 (இங்கும் மன்னராட்சி இருந்திருந்து தை 1-க்கு மக்கள் மாறாமல் இருந்திருந்தால், அவர்களை முட்டாள்கள் என்று பறையறிவிக்க இடஒதுக்கீட்டின் அடிப்படையில் ஆட்களை சேர்த்திருப்பர்!! 😉).

சித்திரை 1-ஐ வருடத்தின் முதல் நாளாக நம் முன்னோர்கள் ஏற்றுக் கொண்டது அறிவின் அடிப்படையில். சூரியன் மேஷ ராசிக்குள் நுழைந்ததாலோ, ஆரியர்கள் திணித்ததாலோ அல்ல. இன்னும் சொல்லப்போனால், நம்மிடமிருந்து தான் ஆரியரும் ஏனையோரும் அறிந்து கொண்டனர் எனலாம்!! வருட பிறப்பும், சூரியன் மேஷ ராசிக்குள் புகுவதும் இயற்கையாக ஒன்றாய் அமைந்துவிட்டது எனலாம்.

🌾🌺🌻🌹🌷🌼🌸🌾

On this auspicious day, I am proud to present the following definition of the word தமிழ் by Thiru. Ganapathi Sthapathi, one of the very very few grand persons I have met so far in my life:

As per ‘Aintiram’ written by Mamuni Mayan, at this early stage of manifestation of universe there are five stages. They are அமிழ்தல் (Amizhdal – Withdrawal), இமிழ்தல் (Imizhdal – Overflowing), குமிழ்தல் (Kumizhdal – Clustering round in an order), உமிழ்தல் (Umizhdal – Emitting), தமிழ்தல் (Tamizhdal – Resulting into a well-defined form).

First the throbbing Consciousness withdraws into itself. Moolam (Originating Source) consolidates itself through withdrawal called Amizhdal or converging to a point. Minute Cubical tip This Moolam then gushes or explodes outward and emerges and spreads (Imizhdal) and consolidates itself (Kumizhdal). The movement of energy in self spin (kalavisai) propels and projects this energy (Umizhdal) so that it comes out into form (Tamizdhal).

Interestingly enough, for the experience to merge into word-form the inner being has to undergo or travel through these five levels states, namely Amizhdal (“converging to a point”…withdrawal), Imizhdal (‘emerging and spreading’), Kumizhdal (coming together an consolidating’), Umizhdal (projecting or delivering) and Tamizdhal (“coming out into form”). Hence a language as rich with the sweetness of inherent order, originating from the luminosity of the Source is called Tamil. Tamil is the word based on the final resultant state called Tamizhdal (தமிழ்தல்).

posted from Bloggeroid