Saturday, December 31, 2016

Celebrating English New Year promotes Slavery

There are so many calendars in the world. #English #calendar is JUST one of them. It is one of those very inaccurate calendars. Not just inaccurate. It is unscientific, not in sync with Mother Nature, untraditional (even to the White man), promotes slavery (doesn't apply to white man), promotes unecofriendly & unsustainable practices.

But, if you happen to celebrate it, I wish you the very best in everything on all the 365.242199 days (accurate மாமு, வெள்ளக்காரங்க ரொம்ப accurate 😝) of this Whiteman's year. 😊😀😃😄

🌸🌷🍀🌹🌻🌺🍁🌼

Friday, December 30, 2016

ஸ்ரீதிருப்புகழ் சுவாமிகள் என்றழைக்கப்படும் வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள்

"டிசம்பர் 31" மற்றும் "சனவரி 1" என்ற அடிமைத்தனம் வளர்க்கும் வியாதிகளுக்கு இந்த இடுகை சரியான மருந்தாக இருக்கும் என்பதால், இவ்விடுகையை மீண்டும் பகிர்கிறேன். வணக்கம்.

http://samicheenan.blogspot.in/2016/11/blog-post_22.html?m=1

Wednesday, December 28, 2016

அனுமன் பிறந்த நாள்

முதலில் கீழே இணைக்கப்பட்டிருக்கும் புருடாவைப் படியுங்கள். பின்னர் இதைப் படிக்கவும்.

இன்று அனுமன் ஜெயந்தி. இதையொட்டி ஒருவர் எனக்கு கீழேயுள்ள புருடாவை அனுப்பினார். அவருக்கு நான் கொடுத்த பதிலடி தான் இந்த இடுகை.

அனுமன் என்று எந்த Neanderthal-லும் இல்லை.  அனுமன் என்ற உவமை உருவாக்கப்பட்ட நாள் இது. பிறந்த நாள்.

முதலில் சைவர்கள் பிள்ளையாரை உருவாக்கினர். பிள்ளையார் அறிவைக் குறிப்பவர். அறிவுக்கு அடிப்படை ஞாபக சக்தி. அறிவுடையவன் பலம் பொருந்தியவன். இதற்கு அடையாளமாக யானை முகத்தைக் கொடுத்தனர். யானைக்கு ஞாபக சக்தி மிக அதிகம். மேலும், பலம் பொருந்தியது. சத்தியத்திற்குக் கட்டுப்பட்டது.

இது மன்னரிடமும், மக்களிடமும் ஹிட் ஆனது. இதைக் கண்ட வைணவர்கள், நாங்களும் செய்து காட்டுகிறோம் என்று எதையோ செய்யப் போய் அனுமனை உருவாக்கினார்கள். "பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் மாறிற்று" என்ற முதுமொழி இவர்களின் பித்தலாட்டத்தைக் காட்டும்.

அனுமன் மனதைக் குறிப்பவர். மனம் வாயு பூதத்தை அடிப்படையாகக் கொண்டது. வாயு ஓரிடத்தில் நிற்காது. மனமும் சதா சலித்துக் கொண்டே இருக்கும். இதைக் குறிக்க குரங்கை எடுத்துக் கொண்டனர். குரங்கும் ஓரிடத்தில் இருக்காது. கிளைக்கு கிளை தாவும். மனம் பலம் பொருந்தியது. "மனம் நினைத்தால்", "மனது வைத்தால்" ஆகிய சொற்றொடர்கள் மனதின் பலத்தைக் காட்டும். அனுமனும் பலம் உள்ளவராகக் காட்டப்படுவது இதனாலேயே. மனம் நினைத்தால் அடுத்த விநாடி நாம் இமய மலையில் இருக்கலாம். அனுமன் ஒரு அடியில் இலங்கைக்கு தாவியது போல.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

சாதாரணமாக ஒருவர் ஏமாந்தால் நாம் கூறுவது, "நாமம் போட்டுட்டாங்களா உனக்கு". ஏமாற்றியவரிடம் நாம் கூறுவது, ''நாமம் போட்டுட்டியா அவனுக்கு". ஆக, நாமம் ஏமாற்று வேலை. அதாவது,  வைணம் என்பது ஏமாற்று வேலை.

இந்த ஏமாற்றுகாரர்களுக்கு மன்னனின் (சோழர்கள்) அங்கீகாரமும் கிடைக்கவில்லை. பெருவாரியான மக்களின் ஆதரவும் கிடைக்கவில்லை. அந்த வயிற்றெரிச்சலில் அவர்களது "புனித நூல்களில்" (?)  சிவ தத்துவத்தை தாழ்த்தி எழுதி மகிழ்ந்து கொண்டார்கள்.

சிவம் - சக்தி என்பது வைணவத்தில் லஷ்மி - விஷ்ணு என்று மாறும். அதாவது, சைவர்கள் உயிர் - மெய் என்பதை வைணவர்கள் மெய் - உயிர் என்பர். உயிரிலிருந்து உயிரற்றது தோன்றிற்று என்பது சைவம். உயிரற்றதிலிருந்து உயிர் உண்டாயிற்று என்பது வைணவம். இதனால் தான் வைணவம் ஏமாற்று வேலை என்று சொல்லப்பட்டது.

சைவர்கள் வைத்திருந்ததை, உருவாக்கியதை வைணவர்கள் சிறிது மாற்றி அல்லது எதையாவது சேர்த்து "நாங்க ஒசத்தியாக்கும்" என்றனர். உ.ம். சைவத்தில் 5 பிரகாரம் என்பது வைணவத்தில் 7 பிரகாரம்.

சிதம்பரம் தல வரலாற்றில் நடராஜ பெருமானின் திருநடனத்தை நினைத்துப் பார்த்ததால் மகா விஷ்ணுவின் எடை அதிகமாயிற்று என்று வரும். இதற்குப் போட்டியாகத் தான் சிவபெருமான் பெருமாளுக்கு சேவை செய்ய நினைத்ததாகவும், அதனால் அனுமனாக அவதரித்தார் என்றும் பிட்டைப் போட்டிருக்கிறார்கள். இந்த பிட்டின் மூலம் சிவ தத்துவத்தை ஒரு படி இறக்கி மன தத்துவத்தோடு (அனுமனோடு) சமப்படுத்தியிருக்கிறார்கள். Criminals!!

வைணவத்தில் மகாலட்சுமி தான் சிவதத்துவம். ஏற்கனவே, மகாலட்சுமியை இறக்கி மகாவிஷ்ணுவின் பாதத்தில் வைத்திருக்கிறார்கள். அது போதாது என்று மேலும் கீழிறக்க முயற்சிக்கிறார்கள். மகாலட்சுமி எழுந்து உதைக்காமல் இருந்தால் சரி. 😂😂

"பொய்யைச் சொல். திரும்பத் திரும்பச் சொல். உண்மையாகும்." என்பதே வைணவர்களின் அடிப்படை யுக்தியாகும்.

ஒரு காலத்தில் தீண்டத்தகாத மதமானது இன்று இந்து மதத்தின் பெரும் பிரிவு. வெட்கக்கேடு. 😡

தீண்டத்தகாத மதம் எப்படி இன்று எல்லோராலும் ஏற்றுக் கொள்ளும்படியானதாக மாறிற்று என்று பரங்கியர் ஆராய்ச்சி செய்து வருவதாக கேள்விப்பட்டேன். ஏதற்கு என்பதை உங்களின் கற்பனைக்கு விட்டுவிடுகிறேன். 😉

🌸🌹🍀🍁🌺🌻🌼

அனுமன் ஜெயந்தி 09-01-2016

குங்குமப் பொட்டு: வாலில் குங்குமம் வைத்து வழிபடுவதின் தாத்பர்யம் என்னவென்றால், அனுமாருக்கு வாலில் தான் சக்தி அதிகம்.   பக்தி சிரத்தையுடன் ராமநாமத்தை ஜபித்துக் கொண்டு இடுப்பில் வால் தோன்றும் திருவிடத்தில் இருந்து தினமும் சந்தனம் சாத்தி   குங்குமத் திலகம் வைத்துக் கொண்டு வரவேண்டும். வாலின் நுனியை அடைந்ததும், கலைத்துவிட்டு மறுபடியும் பொட்டு வைக்க   வேண்டும். வால்முனையில் பொட்டு பூர்த்தி பெறுகின்ற சுபதினத்தில், எம்பெருமானுக்கு வடைமாலை சாத்தி, உப்பிலியப்பனுக்கு   நிவேதிப்பது போல் உப்பில்லா திருவமுது நிவேதிக்க வேண்டும்.காரியம் சித்தியாகும் வரை இவ்வண்ணம் பொட்டு வைத்துக் கொண்டே   வர வேண்டும்.

அனுமன் ராமனுக்கு தூதனாக இருந்தாலும், இவர் சிவனின் அம்சமாக தோன்றியவர். ராமாயணத்தில் ஒவ்வொருவரும் ஒரு வேடம்   ஏற்றனர். அதில் மகாவிஷ்ணு ராமனாகவும், மகாலட்சுமி சீதாதேவியாகவும், ஆதிசேஷன் லட்சுமணனாகவும் பாத்திரமேற்றனர். இந்த   ராமாயணத்தில் பங்குபெற எல்லாம் வல்ல சிவனுக்கும் ஆசை ஏற்பட்டது. அத்துடன் மகாவிஷ்ணுவுக்கு சேவை செய்யவேண்டும் என்ற   எண்ணமும் இருந்து வந்தது. இதனால் சிவபெருமான் ஆஞ்சநேயராக அவதரித்து ராமாயணத்தில் ராமருக்கு சேவை செய்தார் என்பது   முக்கியமான செய்தியாகும். ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும் பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.   ஆஞ்சநேயனின் ஜெயந்தி, ஜெயந்திக்கெல்லாம் ஜெயந்தி. அந்த ஜெயந்தியை நாம் கொண்டாடுவதால் நமக்கு சகல மங்கலங்களும்   உண்டாகும். நினைத்த காரியம் கைகூடும். துன்பம் விலகும்; குடும்பத்தில் இன்பம் பெருகும்.

ஆஞ்சநேயரை ராம நாமத்தால் சேவிப்பதோடு,  வடைமாலை சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் சாத்தி, ஆராதிக்க   வேண்டும். வாலில் குங்குமப்பொட்டு வைத்து தியானித்தும் பூஜிக்கலாம். ராமருக்கு அத்யந்த பக்தராகவும் அரிய தொண்டராகவும் பாத   சேவை புரியும் பரம பக்தராகவும் விளங்குபவர் ஆஞ்சநேய மகாப்பிரபு! ராமாயணம் என்னும் மணிஹாரத்தில் நடுநாயகமாக  விளங்குபவர்  ஆஞ்சநேயர்! அவல், சர்க்கரை, தேன், பானகம், நீர்மோர், கதலிப்பழம், கடலை முதலிய நிவேதனப் பொருட்களை அவர்  விரும்பி அமுது  செய்து மகிழ்வார். இப்படி கண்ணனும், மாருதியும் ஒற்றுமையோடு இணைந்திருப்பதால் தான் வெண்ணெயை  மாருதிக்கு சாத்தி  வழிபடுகிறார்கள். ஸ்ரீராம நவமி உற்சவம் கொண்டாடும் இடங்களில் எல்லாம் ஆஞ்சநேயர் நேரில் வந்து  அடியார்களுள்  அடியாராய்-பக்தருள் பக்தராய் அமர்ந்து உபன்யாசத்தைப் பேரானந்தத்துடன் ரசித்து அனைவருக்கும் சலக  சந்தோஷங்களையும்  சுபிட்சங்களையும் வாரி வழங்கிப் பேரருள் புரிகிறார். இதனால் தான் துளசி தாசர் ராமாயண பிரவசனம்  தொடங்கும் முன்னர் பக்தர்களை  ப்ரதட்சணமாக வருவார். அந்த பக்தர்களோடு  பக்தராக மாருதியும் எழுந்தருளி இருப்பார் என்பது  அவருக்கு தெரியும்.

Tuesday, December 27, 2016

திருவண்ணாமலை தீபம் - தி.பி. 2047 (2016)

நடந்து முடிந்த தீபத்திருநாளன்று பதிவு செய்தக் காட்சிகளை வைத்து தொகுக்கப்பட்ட காணொலியை இணைத்துள்ளேன்:

https://plus.google.com/+SaravananG_Enum_Dhasaman/posts/ER5PBUUSViP
(அ)
https://m.facebook.com/story.php?story_fbid=10154930854911052&id=698176051

*"விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்" என்றார் சம்பந்தமூர்த்தி பெருமான்.* அப்பேர்பட்ட விளக்கினை - பிறப்பறுக்க வல்ல அண்ணாமலையார் தீபத்தை - கண்டு மகிழவும்! மற்றவருடன் பகிரவும்!!

🌼🙏🌼

*இத்தனுவே நானாம் எனுமதியை நீத்தப்*
*புத்தி இதயத்தே பொருந்தி அகநோக்கால்*
*அத்துவிதமாம் மெய் அகச் சுடர் காண்கை பூ*
*மத்திஎனும் அண்ணாமலைச் சுடர் காண் மெய்யே*

*– பகவான் ஸ்ரீரமணர் எழுதிய “தீப தர்சன தத்துவம்”*

🌸🙏🌸

காணொலியில் வரும் அண்ணாமலையார் பாதம் பற்றி...

பெரும்பாலானோர், ஜடாமுடி, நீலத் திருமேனி, புலித்தோல், வெண்ணீறு, உருத்திராக்கக் கொட்டைகள், நாகங்கள் போன்ற அடையாளங்களைத் தாங்கிய ஒருவர் கையில் திரிசூலத்துடன் இங்கே நின்றிருப்பார் என எண்ணிக் கொள்கிறார்கள். இது மிகமிக தவறாகும்.

ஏதேனும் ஒரு மகான் இங்கு ஞானமடைந்திருக்கலாம். அவர் இங்கேயே உடலை உகுத்திருந்து, அவரது உடல் இங்கேயே புதைக்கப்பட்டிருந்தால், மேலே அடையாளமாக சிவலிங்கத்தை வைத்திருப்பர் நம் முன்னோர். ஆனால், இங்கே சிவலிங்கம் இல்லை. பாதாம் மட்டுமே உள்ளது.

*என்றும் மாறாமலும், அழியாமலும், சுயப்பிரகாசத்துடனும் நம்மில் விளங்குவது நம் உள்ளுணர்வாகும். இதையே இறையுணர்வு, கடவுள், ஈஸ்வரன், இறைவனின் பாதம், சிவபதம் என்றெல்லாம் அழைக்கிறோம். இந்த இறையுணர்வை தெளிவாக உணராமல் தடை செய்வது "நான் இன்னார்" என்னும் பொய்யறிவு. இந்தப் பொய்யறிவு நீங்கப் பெறுவதே ஞானமடைவது.* அப்படிப்பட்ட நிகழ்வு யாருக்கேனும் இவ்விடத்தில் நிகழ்ந்திருக்கும். அதைக் குறிப்பிடவே பாத அடையாளத்தை வைத்திருக்கின்றனர். ஒரு புனித நிகழ்வு இங்கே நடந்திருப்பதால், இவ்விடம் பாதுகாக்கப்பட வேண்டியதாகிறது.  சுருங்கக் கூறின், புத்த பகவான் ஞானமடைந்த போதி மரத்தடி போல. எவ்வாறு அப்போதி மரமும், அதைச் சுற்றியுள்ள இடமும் பாதுகாக்கப்படுகிறதோ, அவ்வாறே இவ்விடமும் பாதுகாக்கப்படவேண்டும்.

இது போன்ற இடங்களில் என்ன செய்ய வேண்டும்?

போதி மரத்தடியில் என்ன செய்வோம்? புத்த பகவானை வணங்குவோம். அவரது அறிவுரைகளைப் பற்றி சிந்திப்போம். அது போன்றே, இங்கே ஞானமடைந்த மகானை வணங்கவேண்டும். அவரது அறிவுரைகளைப் பற்றி சிந்திக்கவேண்டும். அவர் யாரெனத் தெரியாது எனும் போது, நமது குருவையும் அவரது அறிவுரைகளைப் பற்றியும் சிந்திக்கவேண்டும். அப்படி குருநாதர் யாரும் அமைந்திருக்காவிடில், நம் இறையுருவங்கள் உணர்த்தும் பேருண்மைகளை சிந்திக்கவேண்டும். அதுவும் இயலாவிடில், *"நாம் பிறந்தது முதல் இக்கணம் வரை, நம்மில் மாறாதது எது? அழியாதது எது? சுயப்பிரகாசத்துடன் விளங்குவது எது?"* என்று சிந்திக்கவேண்டும். இந்த சிந்தனையோட்டமே காலப்போக்கில் நாம் தேடும் உண்மையைத் தெள்ளென நமக்கு உணர்த்திவிடும்.

💮 திருச்சிற்றம்பலம் 💮

Friday, December 23, 2016

உச்சந் தொட்ட ஊழியம்

அப்படிப் போடு அரிவாளை!! 😂

என்னமாக ஊழியம் செய்திருக்கிறார்கள்! 😱 "டெசம்" என்ற பரங்கி வார்த்தையிலிருந்துத் தான் "தசம்" என்ற நம் வார்த்தை வந்ததாம். விட்டால், ஞானி யேசு பாரதம் வந்தது அத்வைதம் கற்க அல்ல, அத்வைதம் போதிக்க என்பார்கள் போலிருக்கிறது!! 😛

ஐரோப்பிய மொழிகள் இந்தோ-ஆரியப் பிரிவைச் சேர்ந்தவை. நமது மொழிகளை அடிப்படையாகக் கொண்டவை. நமது தசமம் தான் அங்கு டெசம் ஆகியிருக்கிறது.

மேலும், முற்காலத்தில் நமது வருடப்பிறப்புகளைப் போன்றே அவர்களது வருடப் பிறப்பும் ஏப்ரல் 1 அன்று துவங்கியிருக்கிறது. இதை ஜனவரி 1க்கு மாற்றிய பின்னரும் ஏப்ரல் 1ஐ வருடப்பிறப்பாகக் கொண்டாடியவர்களை கூலிக்கு ஆள் வைத்து "முட்டாள்கள்" என்று பறையடித்துள்ளார்கள் பரங்கி மன்னர்கள். எனில், டிசம்பர் எங்ஙனம் 10-வது மாதமாக இருந்திருக்க முடியும்?

ஒரு அறிவியலும் கிடையாது. ஒரு மன்னர் வருவாராம். தன் பெயரில் ஒரு மாதத்தை ஏற்படுத்துவாராம். அதிக நாட்களை ஒதுக்கிவிடுவாராம். நாய் வாந்தி எடுத்தது போன்றிருந்த அவர்களது வருட கணக்கு சரியானது நம்முடன் 13-ஆம் நூற்றாண்டு வாக்கில் மீண்டும் தொடர்பு ஏற்பட்ட பின்னரே. 😠

அவர்களது மொழி, மதம், கலாச்சாரம் என அனைத்தும் மேம்பட்டது நம்மிடமிருந்து சுட்ட விஷயங்களால் தான்.

சுட்டது தான் சுட்டார்கள். சரியாக சுட்டார்களா? நம் ஆத்மாவை ஆதாம் என்றாக்கினார்கள். ஜீவனை ஏவாள் ஆக்கினார்கள். பிப்பல மரத்தை ஆப்பிள் மரம் ஆக்கினார்கள். "உயிர் உடலை வைத்திருக்கிறது" என்பதை "உடல் உயிரை வைத்திருக்கிறது" என்றாக்கினார்கள். 😜

"அப்பனே முருகா" என்று நாம் அழைப்பது போல் இறையுணர்வை "தந்தையே" என்றார் ஞானி யேசு. இதை உணராமல், இறையுணர்வை பரம பிதா என்றும், இவரின் தந்தை என்றும் தவறாக (அல்லது தப்பாக) கடக்கால் போட்டுவிட்டார்கள். 😝

*"இயற்கைக்கு மாறாக எதுவுமே நடக்காது" என்பார் பகவான் ஸ்ரீ ரமணர். நாம் எப்படி பிறந்தோமோ அப்படித்தான் பகவான் ஸ்ரீரமணரும் பிறந்தார். பகவான் ஸ்ரீகிருஷ்ணரும் பிறந்தார். பகவான் புத்தரும் பிறந்தார். ஞானி யேசுவும் பிறந்தார். "ஆண் சம்பந்தமில்லாமல் பிறந்தார்" என்பதற்குப் பொருள், அவர் பிறந்தது கன்னி லக்கினத்தில். அந்நேரத்தில் அந்த லக்கினத்திலும் எந்த ஆண் கோள்கள் இல்லை. அந்த லக்கினத்தையும் எந்த ஆண் கோள்களும் பார்க்கவில்லை. ஆகையால், ஆண் சம்பந்தமில்லாமல் பிறந்தார்!!*

*மறுபிறவி கொள்கையை ஞானி யேசு போதிக்கவில்லை. ஏனெனில், மறுபிறவியை போதித்தால் பாவம், புண்ணியம் போன்றவற்றையும் போதிக்க வேண்டி வரும். மனிதப் பிறப்பின் குறிக்கோளாகிய ஞானமடைவதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று மனிதர்கள் மெத்தனமாக இருந்து விட வாய்ப்புள்ளது. அதற்கு வாய்ப்பளிக்கக் கூடாது என்பதற்காகத் தான் ஒரே பிறப்பு, இறுதி நாள் என்றெல்லாம் பயமுறுத்தினார். இவராவது மறுபிறவியை மறுத்தார். பகவான் புத்தரோ இவ்வுலகையே மறுத்தார்; உன்னை மட்டும் கவனி என்றார். கிடைத்தற்கரிய மனிதப் பிறவி வீணாகக் கூடாது என்பதற்காகவே இம்மகான்கள் இவ்வாறு போதித்தார்கள். ஆனால், விளைவு? இறுதி நாளை வைத்து ஹாலிவுட் பணம் சம்பாதித்தது தான். 😂😂*

(இணைப்பு: தினமலர் - சென்னை - 23/12/2016)

Wednesday, December 21, 2016

தமிழென்னும் அமுது - "வே"

'வே' என்ற ஒற்றைத் தமிழெழுத்து அல்லது தமிழ்ச் சொல்லிற்கு "மறை" (மறைத்து வைத்தல்) என்பது பொருளாகும்.

தாவரங்களின் வேரானது, மண்ணுக்குள் ஓடி மறைந்து கிடப்பதாலேயே அது *'வே'ர்* எனப்பட்டது.

மறைந்திருந்து தாக்குவதாலேயே அவன் *'வே'டன்* எனப்பட்டான். *'வே'ட்டையும்* அப்படித்தான்.

சுற்றிலுமிட்டு மறைத்துப் பாதுகாப்பதாலேயே *'வே'லி* எனப்பட்டது. வேய்தலும் அப்படித்தான்.

சுடுநீரில் மூலிகைகளையிட்டு, அடர்த்துணி கொண்டு நம்மை மூடிமறைத்து, அதனை முகர்ந்து நோய் போக்கும் நிகழ்வு *'வே'து பிடித்தல்* எனப்பட்டது.

*'வே'ய்ங்குழல்* எனச் சங்க இலக்கியங்கள் முதல் போற்றும் பெண்ணில் அடர்க்கூந்தல், அப்படியே அவளது முழுவுடலையும் கவிழ்ந்து மறைக்கக் கூடியதாகையால் அவ்வாறு கூறப்பட்டது.

நம்முடலின் பாகங்களையும், மானத்தையும் மறைத்துக் காப்பாற்றுவதாலேயே அவ்வுடை *'வே'ட்டி* எனப்பட்டது.

வேதத்தைக் கூட *மறை* என்றுதான் தனித் தமிழில் கூறுகிறோம்.

*தமிழைக் கற்றவருக்கே தமிழின் இனிமை தெரியும்!*

*வாழ்க மொழிகளின் தாயாகிய எம் தமிழ்!!!*

(மூலம்: https://plus.google.com/114535663067658211889/posts/VwtdAfoYgDM)

Tuesday, December 20, 2016

செல்லக்காசு அறிவிப்பால் உண்மையில் யாருக்கு லாபம்?

இவ்விடுகையுடன் இணைக்கப்பட்டிருக்கும் செய்திகளை முதலில் படியுங்கள் (நேற்றைய தினமலர், முகநூல் மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ்). பின்னர், கீழ் காணும் வாட்ஸ்அப் இடுகையை படியுங்கள்:

ஒரு லாட்ஜ் ஓனர் இருந்தாரு. அவரு லாட்ஜுக்கு ஒருத்தர் வந்தாரு. ரூம் புக் பண்றதுக்கு முன்னாடி ரூம் எப்பிடியிருக்குதுன்னு பார்க்கணும்னு சொன்னாரு. உடனே லாட்ஜ் ஓனர் அப்பிடின்னா 500 ரூவா டெபாஸிட் குடுக்கணும்னு சொன்னாரு. உடனே அந்த ஆள் ஒரு புது 500 ரூவாவை எடுத்து டேபிள் மேல வச்சிட்டு படியேறி ரூம் பார்க்க போனாரு.

லாட்ஜ் ஓனர் அந்த 500 ரூவாவை எடுத்து லாட்ஜ்ல ரூம் தொடைக்கிற அம்மாகிட்ட குடுத்து போன மாசம் சம்பளத்துல பாக்கி வச்ச 500 ரூவா இந்தான்னாரு. அந்தம்மா அந்த 500 ரூவாவ எடுத்துக்கிட்டுப் போய் பக்கத்துல இருந்த டீக்கடையில குடுத்து போன மாச டீ பாக்கி இந்தா வச்சிக்கோன்னு குடுத்தாங்க.

அந்த டீக்கடைக்காரரு அந்த 500 ரூவாவ எடுத்துக்கிட்டுப் போய் பால் பண்ணையில முதலாளிக்கிட்ட குடுத்து போன மாச பால் பாக்கி இந்தாங்கன்னு சொன்னாரு. பால் பண்ணை முதலாளி அந்தப் பணத்தை எடுத்துக்கிட்டுப் போய் கால்நடை மருத்துவர்கிட்ட கொடுத்து, இந்தாங்க சார், கடந்தமாதம் மாடுகளுக்கு வைத்தியம் பார்த்தபோது,  சில்லறை இல்லைன்னு 2000 ரூவா நோட்டு வாங்கிக்க மாட்டேன்னு சொன்னீங்கல்ல,  இந்தாங்கன்னு கொடுத்தார். அந்த நோட்டை எடுத்துக்கிட்டு லாட்ஜுக்கு வந்த மருத்துவர், கடந்தமாதம் தங்கி இருந்த  ரூம் வாடகை பாக்கி இந்தாங்கன்னு 500 ரூவாவை குடுத்தார்.

லாட்ஜ் ஓனர் அந்த 500 ரூவா நோட்டை மறுபடி டேபிள் மேல வச்சாரு. ரூம் பார்க்க வந்தவரு, எனக்கு எந்த ரூமும் பிடிக்கலை. நான் போறேன்னு 500 ரூவாவ எடுத்துக்கிட்டு கிளம்பிட்டாரு.

இப்ப 500 ரூவா வந்த இடத்துக்கே போயிடுச்சி. ஆனா போற வழியில சம்பள பாக்கி, டீக்கடை பாக்கி, பால் பாக்கி, மருத்துவர் பாக்கி, லாட்ஜ் வாடகை பாக்கின்னு எல்லாத்தையும் சரி பண்ணிட்டுப் போயிடுச்சி. யாருக்கும் இழப்பில்லாம.

இப்ப நம்ம புதிய இந்தியால இந்தக் கதை என்னவாகும்?

வேலைக்கார அம்மாவோட பேடிஎம் ஆப்ல 1%, டீக்கடையில ஆபல 1%, பால் பண்ணையில ஆப்ல 1%, கால்நடை மருத்துவர் பேடிஎம் ஆப்ல 1%, லாட்ஜ் ஓனரோட பேடிஎம் ஆப்ல 1% இப்பிடி பேடிஎம் பாக்கெட்ல 14.5 + 14.08 + 13.67 + 13.27 + 12.89 = 68.41 போயிடும். 500 ரூவாவ ஆரம்பிச்ச ட்ரான்ஸாக்‌ஷன் லாட்ஜ் ஓனர் கைக்கு திரும்ப வரும்போது 431.59 ஆகிடும்.

பேடிஎம்-முக்கு கிடைக்கும் 68.41-ல் அரசாங்கத்துக்கு சேவை வரியா 10.26 கிடைச்சிடும். பேடிஎம்-மின் லாபம் 10%ன்னு வைச்சுகிட்டா, அதுல வருமான வரியா 1.75 அரசாங்கத்துக்கு கெடச்சிடும். ஆக, நம்ம பணத்த வச்சு ஒண்ணுமே பண்ணாம சில லட்சம் கோடிகள இந்தக் கூட்டு களவாணிங்க சம்பாதிக்கப் போறாங்க.

எடுத்துக் காட்றதுக்குத் தாங்க தொடைக்கிறம்மா, பால்பண்ணைன்னு சொன்னேன். ஆன, நெசத்துல சிறு குறு சம்சாரிங்க எல்லாம் அழிஞ்சு போய்டுவாங்க. பெரும் முதலாளிகளும், பன்னாட்டு கம்பெனிங்க மட்டும் தான் நெலச்சு நிப்பாங்க. அவுங்களும் பேடிஎம்-முக்கு கொடுக்கற 2.9% பணத்த வெலயில ஏத்திருவாங்க. வெலவாசி ஏறுமுங்க. அது சங்கிலி தொடரா சம்பளம், வாடக, வண்டி சத்தமுன்னு அத்தனையையும் ஏத்திடுங்க.

தூய்மை இந்தியான்னு 0.5% வரி ஏத்துனாங்க. இன்னி வரைக்கும் இந்தியா நாறிகிட்டுதாங்க இருக்கு. விவசாயிய காப்பாத்துறேன்னு இன்னோரு 0.5% வரி ஏத்துனாங்க. இன்னி வரைக்கும் விவசாயி தற்கொலை தொடருதுங்க. இப்ப கள்ள பணம் ஒழிக்கறேன்னு நம்மல நாயா பேயா அலையவுடறதும் அதே கதிக்கு தாங்க போயி முடியும். இந்த பகல் கொள்ளைக்கு துணை வேணும்முன்னு தான் 7வது பே கமிஷன கொண்டுவந்தாங்க. இப்ப பார்லிமென்ட்டு நடக்கலேன்னுட்டு அரசியல் கட்சிகளுக்கு சத்தமில்லாம சலுக கொடுத்திருக்காங்க. எல்லாம் நம்ம தலயெழுத்துங்க. இன்னிக்கு சோறு கெடச்சுதா, படுக்க எடம் கெடச்சுதான்னு பிச்சக்கரனாவே வாழ வேண்டியிருக்குங்க.

😒🙁😔😞😤😡