Showing posts with label கைலாயம். Show all posts
Showing posts with label கைலாயம். Show all posts

Tuesday, December 27, 2016

திருவண்ணாமலை தீபம் - தி.பி. 2047 (2016)

நடந்து முடிந்த தீபத்திருநாளன்று பதிவு செய்தக் காட்சிகளை வைத்து தொகுக்கப்பட்ட காணொலியை இணைத்துள்ளேன்:

https://plus.google.com/+SaravananG_Enum_Dhasaman/posts/ER5PBUUSViP
(அ)
https://m.facebook.com/story.php?story_fbid=10154930854911052&id=698176051

*"விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்" என்றார் சம்பந்தமூர்த்தி பெருமான்.* அப்பேர்பட்ட விளக்கினை - பிறப்பறுக்க வல்ல அண்ணாமலையார் தீபத்தை - கண்டு மகிழவும்! மற்றவருடன் பகிரவும்!!

🌼🙏🌼

*இத்தனுவே நானாம் எனுமதியை நீத்தப்*
*புத்தி இதயத்தே பொருந்தி அகநோக்கால்*
*அத்துவிதமாம் மெய் அகச் சுடர் காண்கை பூ*
*மத்திஎனும் அண்ணாமலைச் சுடர் காண் மெய்யே*

*– பகவான் ஸ்ரீரமணர் எழுதிய “தீப தர்சன தத்துவம்”*

🌸🙏🌸

காணொலியில் வரும் அண்ணாமலையார் பாதம் பற்றி...

பெரும்பாலானோர், ஜடாமுடி, நீலத் திருமேனி, புலித்தோல், வெண்ணீறு, உருத்திராக்கக் கொட்டைகள், நாகங்கள் போன்ற அடையாளங்களைத் தாங்கிய ஒருவர் கையில் திரிசூலத்துடன் இங்கே நின்றிருப்பார் என எண்ணிக் கொள்கிறார்கள். இது மிகமிக தவறாகும்.

ஏதேனும் ஒரு மகான் இங்கு ஞானமடைந்திருக்கலாம். அவர் இங்கேயே உடலை உகுத்திருந்து, அவரது உடல் இங்கேயே புதைக்கப்பட்டிருந்தால், மேலே அடையாளமாக சிவலிங்கத்தை வைத்திருப்பர் நம் முன்னோர். ஆனால், இங்கே சிவலிங்கம் இல்லை. பாதாம் மட்டுமே உள்ளது.

*என்றும் மாறாமலும், அழியாமலும், சுயப்பிரகாசத்துடனும் நம்மில் விளங்குவது நம் உள்ளுணர்வாகும். இதையே இறையுணர்வு, கடவுள், ஈஸ்வரன், இறைவனின் பாதம், சிவபதம் என்றெல்லாம் அழைக்கிறோம். இந்த இறையுணர்வை தெளிவாக உணராமல் தடை செய்வது "நான் இன்னார்" என்னும் பொய்யறிவு. இந்தப் பொய்யறிவு நீங்கப் பெறுவதே ஞானமடைவது.* அப்படிப்பட்ட நிகழ்வு யாருக்கேனும் இவ்விடத்தில் நிகழ்ந்திருக்கும். அதைக் குறிப்பிடவே பாத அடையாளத்தை வைத்திருக்கின்றனர். ஒரு புனித நிகழ்வு இங்கே நடந்திருப்பதால், இவ்விடம் பாதுகாக்கப்பட வேண்டியதாகிறது.  சுருங்கக் கூறின், புத்த பகவான் ஞானமடைந்த போதி மரத்தடி போல. எவ்வாறு அப்போதி மரமும், அதைச் சுற்றியுள்ள இடமும் பாதுகாக்கப்படுகிறதோ, அவ்வாறே இவ்விடமும் பாதுகாக்கப்படவேண்டும்.

இது போன்ற இடங்களில் என்ன செய்ய வேண்டும்?

போதி மரத்தடியில் என்ன செய்வோம்? புத்த பகவானை வணங்குவோம். அவரது அறிவுரைகளைப் பற்றி சிந்திப்போம். அது போன்றே, இங்கே ஞானமடைந்த மகானை வணங்கவேண்டும். அவரது அறிவுரைகளைப் பற்றி சிந்திக்கவேண்டும். அவர் யாரெனத் தெரியாது எனும் போது, நமது குருவையும் அவரது அறிவுரைகளைப் பற்றியும் சிந்திக்கவேண்டும். அப்படி குருநாதர் யாரும் அமைந்திருக்காவிடில், நம் இறையுருவங்கள் உணர்த்தும் பேருண்மைகளை சிந்திக்கவேண்டும். அதுவும் இயலாவிடில், *"நாம் பிறந்தது முதல் இக்கணம் வரை, நம்மில் மாறாதது எது? அழியாதது எது? சுயப்பிரகாசத்துடன் விளங்குவது எது?"* என்று சிந்திக்கவேண்டும். இந்த சிந்தனையோட்டமே காலப்போக்கில் நாம் தேடும் உண்மையைத் தெள்ளென நமக்கு உணர்த்திவிடும்.

💮 திருச்சிற்றம்பலம் 💮