Showing posts with label McCaulay. Show all posts
Showing posts with label McCaulay. Show all posts

Saturday, August 6, 2016

தலைவர் மாற்றிப் படித்துவிட்டார் என்று நினைக்கிறேன்!! 😉


(தினமலர் - சென்னை - 06/08/2016)

கடந்த 69 வருடங்களாக கடைபிடிக்கப்பட்டு வரும் மெக்காலே கல்வி மற்றும் இடஒதுக்கீடு திட்டங்களினால் ஏற்பட்டுள்ள விளைவுகளை பட்டியலிட்டுவிட்டார்!! 😂

💥 பல ஜாதி மாணவர்கள் கடினமாகப் போராடுகையில், சில ஜாதி மாணவர்கள் சுலபமாக கல்லூரிகளிலும், அரசு அலுவலகங்களிலும் இடம்பெற முடிவதால், மாணவர்களிடையே பாகுபாடு, சலிப்பு மற்றும் சோர்வு.
💥 பன்னாட்டு நிறுவனங்களுக்கு, மேலைநாட்டு கலாச்சாரத்திற்கு, மொழிக்கு இந்தியக் கதவுகளைத் திறந்துவிட்டதால் குருவந்தனம் என்ற வார்த்தைகளுக்கு பொருளில்லாமல் போய்விட்டது. ஆசிரியர்களுக்கு மரியாதையில்லாமல் போய்விட்டது. அடாவடி செய்யும் மாணவனை கண்டிக்க இயலாமல் அதே சமயம் தமது கண்ணியத்தை விட்டுக்கொடுக்க முடியாமல் ஆசிரியர்கள் சலிப்பும் சோர்வும் அடைந்துள்ளனர்.
💥 ஊரை அடித்து உலையில் போட்ட அரசியல்வியாதிகள் கையில் கல்வி மாட்டிக்கொண்டதால், அது வியாபாரமாகி, மீள முடியாத நிலைக்குச் சென்று, நமக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

தன்னைப் பற்றி தனது பெற்றோருக்குத் தெரியப்படுத்தியதால் ஆசிரியையைக் கொல்லும் மாணவனும், தன்னிடம் கல்வி கற்கும் மாணவனோடு ஓடிப்போகும் ஆசிரியையும், தன்னிடம் கல்வி கற்கும் மாணவியை கர்ப்பமாக்கும் ஆசிரியனும், 5வது மாடியிலிருந்து நாயை தள்ளிவிட்டு சிரித்து மகிழும் மருத்துவனும் தான் கடந்த 69 வருடமாக கடைபிடிக்கப்பட்டு வரும் மெக்காலே கல்வி திட்டத்தால் விளைந்த சிறந்த விளைவுகள்!! 😡😡😡

கல்வியைப் பற்றி சுவாமி விவேகானந்தரின் அருமையான விளக்கம்: கல்வி என்பது மனிதனிடம் ஏற்கனவே இருக்கின்ற பூரணத்துவத்தை வெளிப்படுத்துவது!! 👏👌👍

இந்த இரத்தின வார்த்தைகளை அடிப்படையாகக் கொள்ளாமல் உருவாக்கப்படும் எந்த கல்வி திட்டமும் வியாபாரமே - மெக்காலே திட்டமே!

posted from Bloggeroid

Sunday, May 8, 2016

"Let's talk about sex"!!

☝ இது இன்றைய ஆங்கில ஹிந்துவில் வெளிவந்த ஒரு நற்செய்தி! 😀 (m.thehindu.com/features/magazine/these-initiatives-are-pushing-the-boundaries-of-the-discourse-on-sexuality/article8565359.ece)



சில வாரங்களுக்கு முன்னர் தான் "திருமணம் ஆகாத ஆணும் பெண்ணும் சேர்ந்து ஓர் அறையில் தங்கினால் என்ன குற்றம்?" என்ற ரீதியில் ஒரு நற்செய்தி வெளியிட்டிருந்தார்கள். இப்போது, இப்படி ஒரு நற்செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். அதிலும், நற்செய்தியின் நடுவில் ஒரு அற்புதமான வரைபடத்தை வெளியிட்டுள்ளார்கள். அதை தனியாக மறுபடியும் இணைத்துள்ளேன். பெரிதுபடுத்திப் பார்க்கவும். "இந்த கருமத்தை துறவி. வேலன்டைன் ஆசிர்வதிக்கிறார்" என்று ஒரு வாசகம் வேறு அதில் இடம் பெற்றுள்ளது. பரங்கி மதத்தினர் இதை எப்படி அனுமதிக்கிறார்கள்? 😡



இந்த நற்செய்தி வெளியிட எவ்வளவு பணம் பெற்றார்கள் என்று தெரியவில்லை. அல்லது, இவர்களது குடுமி பரங்கிகளிடம் எக்கச்சக்கமாக மாட்டிக் கொண்டிருக்கிறதா என்றும் தெரியவில்லை. 😕

இதோடு, பிப்ரவரி 2, 1835 ஆம் ஆண்டு ஆங்கிலேய பாராளுமன்றத்தில் மெக்காலேஎன்னுமொரு பரங்கி தாசிமகன் ஆற்றிய உரையையும் இணைத்துள்ளேன். 😤 அதில் சிவப்பு அடிகோடிட்ட ஒரு வரி தான் இது போன்ற நற்செய்திகள் வெளியாவதின் மூலகாரணம் என்று எனக்குத் தோன்றுகிறது.



300 வருடங்களாக நேரடியாகவும், இன்று வரை மறைமுகமாகவும் ஆண்டும், சுரண்டியும், அழித்தும் வெறி தீரவில்லை போலிருக்கிறது. மீதமுள்ளதையும் அழிக்கத்தான் அவ்வப்போது இப்படி நற்செய்தி விதைகளை 💣 தூவி வருகிறார்கள் என்று தோன்றுகிறது!!

(இணைப்புகள்: The Hindu - Sunday Magazine - சென்னை - 08/05/2016 & தாசிமகன் மெக்காலேவின் உரை)

posted from Bloggeroid