Showing posts with label எச்சில். Show all posts
Showing posts with label எச்சில். Show all posts

Wednesday, May 22, 2024

எச்சில் இலைகளின் மேல் புரண்டால் நோய்தான் வரும்!!


அசுரத்தில், உச்சிஷ்டம் = தென்தமிழில், எச்சில்.

🌷 பகவானது உச்சிஷ்டம் = பகவானிடமிருந்து வெளிப்பட்ட அறிவுரைகள்.

அறிவுரைகள் என்பது சொற்றொடர்கள். சொற்றொடர்கள் என்பது ஒலிக்கோர்வைகள். ஒலிக்கோர்வைகள் பயணிக்க காற்றுவேண்டும். பகவானது வாயிலிருந்து காற்று வெளிப்படும்போது, முதலில், அவரது எச்சில்பட்டு, பிறகே வெளிப்படுகிறது. எனவே, அவரிடமிருந்து வெளிப்பட்ட அறிவுரைகளை, அவரிடமிருந்து வெளிப்பட்ட எச்சில் என்று கூறினார்கள். "அவரது எச்சிலை உண்டேன்" என்று சொல்வதால் செருக்கு குறையும் என்று கருதினார்கள்.

🌷 பகவானது உச்சிஷ்டத்தை உண்டேன் = பகவானது அறிவுரைகளை உள்வாங்கினேன் / படித்தேன்.

🌷 பகவானது எச்சில் இலையில் புரண்டேன் = பகவானது அறிவுரைகளின் படி, ஒவ்வொரு நொடியும் வாழ்ந்தேன் / பகவானது அறிவுரைகளில் மூழ்கிக் கிடந்தேன் / பகவானது அறிவுரைகளை இடைவிடாது சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

பெரியவர்கள் சொன்ன அறிவுரைகளின் உட்பொருளையுணர முயற்சிக்க வேண்டுமேயொழிய, அவ்வறிவுரைகளை அப்படியே செயல்படுத்த முயற்சிக்கக்கூடாது.

மேலும், பிராமணன் என்ற சொல், பகவான் போன்ற மெய்யறிவாளர்களை குறிக்கும். ரிஷிவர்ஷாவிலருந்து (இன்றைய இரஷ்யா. குறிப்பாக, உஸ்பெக் & கஸக் பகுதிகள்.) வந்த அசுரக்கூட்டத்தை குறிக்காது.

🌷 பிராமணனது எச்சிலில் புரளு = மெய்யறிவாளர் காட்டிய வழியில் பயணி / அவரது அறிவுரைகளை இடைவிடாது சிந்தித்துக் கொண்டிரு.

(இவையாவும் அசுரக்கூட்டத்தின் பெரியோர்களுக்கு தெரியாது போலிருக்கிறது! 😏 தெரிந்திருந்தால், பைத்தியக்காரத்தனமான இவ்வினைமுறையை (அசுரத்தில், சடங்கை) தடுத்து நிறுத்தி, மக்களை உய்வடையச் செய்திருப்பார்கள் என்று உறுதியாக நம்பலாம்! 😜)

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Friday, March 11, 2016

செங்கோட்டை ஸ்ரீஆவுடையக்காளின் புகழ்பெற்ற எச்சில் பாட்டு

அக்காள் சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்னர் செங்கோட்டையில் வாழ்ந்தவர். திருவிசநல்லூர் ஸ்ரீ ஸ்ரீதரஅய்யாவாளின் சிஷ்யை. ஒரு ஆடி அமாவாசையன்று குற்றாலம் செண்பக அருவிக்கு மேலுள்ள காட்டில் காற்றோடு கலந்தார் என்பது செவிவழிச் செய்தி. உள்ளத்தை உருக்கும் அவர்தம் சரிதையை தனி இடுகையாக பின்னொரு நாளில் வெளியிடுகிறேன்.


அக்காளின் இந்தப் பாடல் ஆசாரத்தைக் கிண்டலடிக்கிறது என்றே உலகம் அறியும். ஆனால், என் நினைவில் இப்பாடல் நிற்பது இதில் வரும் "சில்லெச்சில் மூர்த்தி கையில்" என்ற வார்த்தைகளுக்காக.

சில்லுயிர் - நுண்ணுயிர்
சில்லெச்சில் - நுண்ணுயிரியின் எச்சில்

காற்றில் சில்லுயிர்கள் உள்ளன. அதன் எச்சிலும் உள்ளது. நாம் சுவாசிக்கும் போது, உண்ணும் போது, நீர் அருந்தும் போது, பேசும் போது என பல வழிகளில் அவையும் அவற்றின் எச்சிலும் நம்முள் நுழைகின்றன. இயற்கை இவ்வாறு இருக்கையில், தீட்டு ஆசாரம் என ஊரை ஏமாற்றுவானேன்?

இது சொற்றொடரின் விளக்கம்.

சரி, அக்காளுக்கு நுண்ணுயிர் பற்றிய அறிவு எங்கிருந்து வந்தது. அக்காளின் காலம் கிட்டதட்ட நுண்ணுயிரிகளை கண்டுபிடித்ததாக (?) நம்பப்படும் அண்டோனி வான் லியுவென்ஹோயெக்கின் (Antonie van Leeuwenhoek) காலத்தோடு ஒத்துப்போகிறது. ஒரு வேளை, அக்காள் அன்டோனியிடமிருந்து தெரிந்து கொண்டிருப்பாரோ? 😂

நம்மிடமிருந்து தெரிந்து கொண்டு தான் "கண்டுபிடித்ததாக" பிட்டைப் போட்டிருப்பான் இந்தப் பரங்கி. உலகை அழிப்பதற்கு அடுத்து பரங்கிகளுக்கு கைவந்த கலை இன்னொருவரின் உழைப்பை தனதாக்குவது. 😬

அக்காளின் கண்டுபிடிப்பு எனச் சொல்ல வரவில்லை. அக்காள் அன்றைய பாமர மக்களின் மொழியில், நடையில் பாடியிருக்கிறார். ஆகையால், நுண்ணுயிரிப் பற்றிய அறிவு அன்று பாமரரிடமும் இருந்தது என்பது என் கூற்று. 👊💪👍👌👏

இனி பாடலைப் பார்ப்போம்.

🌸🌹🍀🍁🌺🌻🌼

எச்சிலெச்சில் என்று புலம்புகிறாய் மானுடர்கள்
எச்சில் இல்லாத இடமில்லை- பராபரமே

சில்லெச்சில் மூர்த்தி கையில் ஈ எச்சில் தேனல்லவோ
என்றைக்கும் உண்ணும் தாய் முலை எச்சிலன்றோ- பராபரமே

மச்சமெச்சில் நீரில் வந்து மூழ்கும் மறையோர்கள் எச்சில்
பச்சைக் கிளி கோதும் பழம் எச்சில் அன்றோ- பராபரமே

தேரை எச்சில் தேங்காய் சிறு பூனை எச்சில்
தேசமெல்லாமே எச்சிலென்றறிவேன் – பராபரமே

நாதமெச்சில் பிந்து எச்சில் நால்மறையோர் வேதம் எச்சில்
மந்திரங்கள் சொல்லும் வாய் எச்சிலன்றோ- பராபரமே

அண்ட பிண்ட லோகமெல்லாம் அடங்கலும் எச்சிலாச்சே
வண்ட மத வாதிகட்கு வாயுண்டோ- பராபரமே

எச்சிலுன் வாயும் உடலும் ஏகமாயிருக்கையிலே
பாதம் எச்சிலென்று அலம்ப சுத்தமாச்சோ- பராபரமே

ஈசர் ஒருவர் உண்டே எச்சிலில்லாத வஸ்து தான் பாடக
வாசகரும் காணா ஜோதி- பராபரமே

🌸🌹🍀🍁🌺🌻🌼

🔯 ஸ்ரீஆவுடையக்காளுமாயான ஏகன் அனேகன் திருவடிக்கு சமர்ப்பணம் 🔯

posted from Bloggeroid