Wednesday, May 22, 2024
எச்சில் இலைகளின் மேல் புரண்டால் நோய்தான் வரும்!!
Thursday, May 16, 2024
கம்பர் பெருமானுக்கும் குறிமதத்திற்கும் என்ன தொடர்பிருக்கிறது?
Wednesday, April 24, 2024
அயோத்தியின் பட்டை நாமங்கள்!!
Tuesday, April 23, 2024
பொருள் புரியாமல் இறைபெயர்களை உருட்டுவதால் எந்த பயனுமில்லை!!
Saturday, April 20, 2024
வாசுகிப் பாம்புக்கு போதாத நேரம்! 😃
வாசுகியின் படிமம் கிடைத்துள்ளதெனில், அது இங்கு வந்து, வாழ்ந்து & இறந்துவிட்டது என்பது உறுதியாகிறது. எனில், அச்சமயத்தில் சிவபெருமானின் கழுத்தை யார் அணி செய்தார்கள்? வாசுகியின் பாடி-டபுளா? அல்லது, உடன் பிறந்த ஆதிசேஷனே பெருமாளுக்கும் சிவபெருமானுக்கும் ஓவர்டைம் பார்த்தாரா? 😆
👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽
திருட்டுப்பயல்களே!! இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவீர்கள்?
🌷 வாசுகி - மனம் / மூச்சுக்காற்று
🌷 சிவபெருமானின் கழுத்தை அணி செய்யும்போது - மனம்
🌷 மந்தார மலையை கடையும் போது - மூச்சுக்காற்று
இனி, மந்தார மலையை கடைதலின் உட்பொருளை பார்ப்போம்:
🌷 பாற்கடல் - நமதுடல் / வையகம். மாறிக்கொண்டேயிருப்பதை குறிக்கும்.
🌷 மந்தாரமலை - பகவான் திரு இரமண மாமுனிவர் போன்ற மெய்யறிவாளர்களிடமிருந்து பெறப்படும் அறிவுரை.
🌷 மலையை தாங்கும் ஆமை - புலனடக்கம்
🌷 தேவர்கள் - நாம் உள்ளிழுக்கும் உயிர்வளி
🌷 அசுரர்கள் - நாம் வெளிவிடும் கரியமிலம்
🌷 கடைதல் - மெய்யாசிரியரிடமிருந்து பெறப்பட்ட அறிவுரையை செயல்படுத்துதல்.
🌷 முதலில் வெளிப்படும் நஞ்சு (தவ்வை / மூத்தவள் / மூதேவி) - அவரவர் வினைப்பயன்களின் படி வெளிவரும் எண்ணங்கள், அரிய அறிவு & திறமைகள். அசுரத்தில், சித்திகள்.
🌷 இறுதியில் வெளிப்படும் அமுது (மலர்மகள் / இளையவள் / ஶ்ரீதேவி) - நாமே உள்ளபொருள் என்ற மெய்யறிவு.
மொத்தத்தில், இக்கடைதல் நிகழ்வு வடக்கிருந்து, மெய்யறிவு பெறுதலை குறிக்கும்.
திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽♂️









