Showing posts with label திருவள்ளுவர். Show all posts
Showing posts with label திருவள்ளுவர். Show all posts

Monday, May 16, 2022

திருக்குறள் #612: செயலுக்கு மாற்று இருத்தல்! அன்னைக்கு மாற்று அப்பன்!!


வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு

-- திருக்குறள் #612 (ஆள்வினையுடைமை)

பொருள்: கொண்ட வேலையை முயற்சிகுறை ஏற்படாவண்ணம் முற்றச் செய்யவேண்டும்; செயலை நிறைவேற்றாது அரைகுறையாக விட்டவரை உலகம் மதிக்காது புறக்கணித்துவிடும் (குறள்திறன் உரை - பண்டைய ஆசிரியர்களின் உரைகளை அடிப்படையாகக் கொண்டது).

oOo

வினைப்பயன்கள் மீதமிருப்பதனால்தான் பிறவியே ஏற்படுகிறது. இல்லையெனில், இந்த ஜிஎஸ்டி, பகுத்தறிவு, சமூக நீதி, மதச்சார்பின்மை மற்றும் பல பட்டை நாமங்கள்-சூழ் உலகில் நமக்கென்ன வேலை? ☺️

🔸 வினைக்குறை - மீதமிருக்கும் வினைப்பயன்கள்

🔸 வினைக்குறை தீர்ந்தார் - வினைப்பயன்கள் தீர்ந்தவர்கள். மெய்யறிவாளர்கள். 

🔸 தீர்ந்தன்று உலகு - மெய்யறிவில் நிலைப்பெற்றவுடன் பிறவி முடிந்துவிடாது. இதற்கு பெரியோர்கள் கொடுக்கும் எடுத்துக்காட்டு: மிதிவண்டி. விசை கொடுப்பதை நிறுத்திய பிறகும், ஏற்கனவே கொடுக்கப்பட்ட விசையினால், மிதிவண்டி சற்று தூரம் சென்றபிறகு நிற்பது போல, நிலைப்பேறு கிட்டியபிறகும், மீதமிருக்கும் வினைப்பயன்களினால் உடல்-உலகக் காட்சிகள் தொடரும்.

இதற்கு, பகவான் திரு இரமண மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️ ஒரு சிறந்த எடுத்துக்காட்டாவார். 16 வயதில் நிலைப்பேறு கிட்டினாலும், 70 வயதுவரை வாழ்வு தொடர்ந்தது.

🔸 உடல்-உலகக் காட்சிகள் தொடர்ந்தாலென்ன?

எச்சரிக்கையாக இருக்காவிடில், மீண்டும் உலகிற்குள் சிக்கிக்கொள்வர். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு திரு விசுவாமித்திர மாமுனிவராவார் 🌺🙏🏽🙇🏽‍♂️. மெய்யறிவு பெற்ற பின்னரும், மேனகையிடம் மாட்டிக்கொண்டார்.

🔸 தொடரும் உடல்-உலகக் காட்சிகளுக்குள் சிக்காமலிருக்க என்ன செய்வது?

"வினைக்கண் வினைகெடல் ஓம்பல்" என்று பதிலளிக்கிறார் வள்ளுவப் பெருந்தகை 🌺🙏🏽🙇🏽‍♂️.

"முயலுதல் இல்லாமலிருக்க முயலுங்களேன்" என்று சில அன்பர்களுக்கு அறிவுருத்தினார் பகவான். முயலுதல் என்பது ஒரு வினையெனில், முயற்சியற்று 'இருத்தல்' என்பது இன்னொரு வினையாகிறது. ஒன்றுக்கு இன்னொன்று மாற்றாகிறது. வினைக்கண்ணுக்கு மாற்று வினைகெடல்!

> வினைக்கண் - ஒரு வினையில் ஈடுபடுதல் / விருப்பம் கொள்ளுதல்

> வினைகெடல் - அந்த ஈடுபாட்டை / விருப்பத்தை அழித்தல் / அடக்குதல் / தவிர்த்தல்

> அதாவது, செயல் (வினைக்கண்) அற்றிருத்தல் (வினைகெடல்)

> இவ்வாறு செயலற்றிருத்தலே, ஓம்பல் (காத்துக்கொள்ளல்)

இப்போது அனைத்தையும் இணைப்போம்: மெய்யறிவு பெற்றவர்கள் மீண்டும் உலகிற்குள் சிக்கிக் கொள்ளாமலிருக்க செயலற்றிருக்கவேண்டும் என்பது பொருளாகும்.

oOo

இன்றைய சூழ்நிலையில், எந்த செயலையும் செய்யாமலிருக்க முடியுமா?

இதற்கு விடை காண்பதற்கு முன்னர், வேடிக்கையாக ஒரு பொருள் காண்போம்.

செயல், வேலை, வினை, உழை என எல்லாம் மனதின் அசைவை, மனதை வெளிவிடுவதைக் குறிக்கும். மனம், அசைவு என்றாலே அது அன்னைதான். எனில், செயல் = அன்னை.

செயலுக்கு / அசைவுக்கு எதிர்மறை செயலற்று இருத்தல் / அசைவற்று கிடத்தல் = அப்பன் / சிவன். "சித்த நேரம் சிவனேன்னு கிடக்க வேண்டியதுதானே?".

செயலுக்கு மாற்று செயலற்றிருத்தல். அன்னைக்கு மாற்று அப்பன்.

பொருள்: மெய்யறிவு பெற்றவர்கள் மீண்டும் உலகிற்குள் சிக்கிக்கொள்ளாமலிருக்க சிவமாய் கிடந்தால் போதும்! 😊

எனில், சிவமாய் கிடப்பது / இருப்பது எவ்வாறு?

நான் என்னும் தன்மையுணர்வை விடாது நாடி, புறம் நாடாது, தன்னை நாடி நிற்றலே சும்மாவிருத்தல் (சிவமாயிருத்தல்) -- திரு சாது ஓம் சுவாமிகள் 🌺🙏🏽🙇🏽‍♂️

oOo

செயலற்றிருத்தல் என்றாலென்ன?

எந்த வேலையும் செய்யாமல் சும்மாவிருத்தல் அல்ல. அப்படி சும்மாவிருக்கும் தலைவிதி அமைந்தால் நல்லதே. இல்லையெனில், சும்மாவிருக்க முயல்வது வீணாகும். இதைவிட, உண்மையில் என்ன நடக்கிறதென்று தெரிந்துகொண்டால் செயலற்ற நிலை தானாக அமையும்!

பகவானது விளக்கத்தைப் பார்ப்போம்: "வேலை செய்கிறேன்" என்ற உணர்ச்சியே தடை. "வேலை செய்வது யார்?" என்று ஆராய்ந்து, உனது உண்மையை நினைவிற் கொள். வேலை தானே நடக்கும். உன்னை கட்டுப்படுத்தாது. வேலை செய்யவோ துறக்கவோ முயற்சிக்கவேண்டாம். உனது முயற்சியே உனது தளை.

வினைக்கண் வினைகெடுவதற்கு இந்த ஒரு பொன்னான அறிவுரை போதும்! 🙏🏽

oOOo

வாலறிவன் வள்ளுவன் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Monday, May 2, 2022

திருக்குறள் #901: மனைவிழைவார் & வினைவிழையார் என்போர் யார்?


மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார்
வேண்டாப் பொருளும் அது

-- திருக்குறள் #901 (பெண்வழிச் சேறல்)

பொருள்: மனைவியை விரும்பி அவள் சொன்னபடி நடப்பவர், சிறந்த பயனை அடையமாட்டார், கடமையைச் செய்தலை விரும்புகின்றவர் வேண்டாத பொருளும் அதுவே. (மு.வ.)

இன்றைய உரையாசிரியர்கள், மனைவிழைவார் என்பதற்கு "சிற்றின்பத்தை பெரிதும் விரும்புவோர்" என்றும், வினைவிழையார் என்பதற்கு "பொருளீட்ட விரும்புவோர்" என்றும் பொருள் கொள்கின்றனர்.

இங்கு நுட்பமாகக் காணவேண்டிய சொற்கள்: விழைவார் & விழையார்.

🔸 விழைவார் - விரும்புவோர்
🔸 விழையார் - விரும்பாதவர் / பகைவர்

மனை என்ற சொல்லுக்கு மனைவி, வெற்றிடம் (காலி மனை), இல்வாழ்க்கை என பல பொருள்கள் உண்டு. மனைவி மூலம் மட்டுமே பெறவேண்டிய சிற்றின்பத்தைக் குறிப்பிடுகிறார் திருவள்ளுவர் 🌺🙏🏽🙇🏽‍♂️ என்று எடுத்துக் கொள்ளலாம். (தற்காலத்தில், இல்வாழ்க்கை என்று பொருள் கொண்டாலும் தவறாகாது! 😊)

வினைவிழையார் - வினை + விழையார் - செயலை விரும்பாதவர். யார் அவர்கள்?

செயல் என்பது அசைவு. செயலை விரும்பாதவர் - அசைவை விரும்பாதவர். நேர்மறையாக்கினால், அசைவற்றதை விரும்புபவர். எது அசைவற்றது? உள்ளபொருளே அசைவற்றது. உள்ளபொருளில் நிலைபெற விரும்புபவர். அதாவது, நிலைபேற்றினை விரும்புபவர்!!

இப்போது பொருள் காண்போம்:

நிலைபேற்றினை விரும்புவோர் ஒதுக்கும் சிற்றின்பத்தை விரும்புவோர் மேன்மையடையமாட்டார்கள்.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Thursday, February 3, 2022

திருக்குறள் #834: கல்வியின் பயன் அகந்தையடங்குதல்!!


ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல்

-- திருக்குறள் #834 (அதிகாரம்: பேதைமை)

பொருள்: நன்கு கற்றும், கற்றதை உணர்ந்தும், உணர்ந்ததை பிறர்க்கு எடுத்துக் கூறுமளவுக்கு வளர்ந்தும், தனது அகந்தையை ஒழிக்காமலிருக்கும் அறிவிலிகளை விட இழிந்த அறிவிலிகள் இல்லை.

🔸 தானடங்கா என்ற சொல்லே இக்குறளின் தலையாயச் சொல்லாகும்.

🔸 தானடங்கா - தானடங்குதல் - அகந்தையடங்குதல். "நான் இன்னார்" என்ற அகந்தையடங்கினால் மீதமிருப்பது? நான் என்ற தன்மையுணர்வு மட்டுமே. இதுவே சிவமெனப்படும். இந்நிலையில் நிற்றலே சிவநிலை.

🔸 தானடங்கத் தேவை? கல்வி (இன்றைய மெக்காலே கல்வியல்ல! 😊)

🔸 கல்வி என்ற சொல்லை கல்+வி எனப் பிரித்தால், கல் போன்று அசைவற்று, உருக்கொளாது அல்லது வெளிப்படாதிருத்தல் என்ற பொருள் கிடைக்கும்.

🔸 கல்வி என்ற சொல்லுக்கு சுவாமி விவேகானந்தர் 🌺🙏🏽🙇🏽‍♂️ கொடுக்கும் பொருள்: கல்வி என்பது மனிதனிடம் ஏற்கனவே இருக்கும் முழுமைத்துவத்தை வெளிப்படுத்துவது.

oOo

இங்க எனக்கொரு பகுத்தறிவு டவுட்டு: 2000ம் வருசங்களுக்கு முன்னாடி, நம்ம திருவள்ளுவரும், ஒரு பரங்கியரும், மேற்கு தொடர்ச்சி மலைத்தொடருல, "முஸ்தஃபா முஸ்தஃபா ..." பாடிகிட்டு ஆடிகிட்டு, சுத்தி வரும்போது, அந்த பரங்கியர் திருவள்ளுவருக்கு ஞானஸ்நானம் கொடுத்தாருன்னு "ஆராய்ச்சி" செஞ்சவங்க சொன்னாங்களே. அப்படின்னா, திருவள்ளுவர் அகந்தையடங்குதல் பத்தியா எழுதியிருப்பாரு? "2000 வருசத்துக்கு முன்னாடி உன்னக் கொன்னுட்டாங்களேயா"-ன்ற ஒப்பாரிய பத்தியில்ல எழுதியிருப்பாரு? 🤔

😜

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Monday, January 31, 2022

தை - 19: திரு வள்ளற் பெருமானின் பருவுடல் மறைந்த நாள்!!

பசித்திரு. விழித்திரு. தனித்திரு.

🌺🙏🏽🙇🏽‍♂️

''பெருமான் அணையா அடுப்பைத் துவங்கி வைத்தார்", "வாடி வந்த மக்களின் பசியாற்றினார்" என்றெல்லாம்தான் நமக்கு சொன்னார்களே தவிர, ஏன் அதை செய்தாரென்று சொல்லவில்லை! (பொரை வீசும் முதலாளியின் பெயரைக் காப்பாற்றுவது பான்பராக் சட்டைக்காரனின் கடமையல்லவா! 👊🏽)

பேராசை பிடித்த நயவஞ்சக கிறித்தவப் பரங்கி ஓநாய்களின் கொள்ளையால் (ஆட்சியால்) விளைந்த விளைவு: ஒரு நூற்றாண்டு காலம் நீடித்த பஞ்சம்!!

காலம்காலமாக ஆறில் ஒரு பங்கு வரி என்றிருந்த சமன்பாட்டை மூன்றில் இரண்டு பங்கு என்று மாற்றியதால் விளைந்தது. அச்சமயம் மக்களின் துயர் துடைக்கத் தோன்றிய பெருமான்களில் ஒருவர் வள்ளலார் எனப்படும் திரு இராமலிங்க அடிகளாராவார். 🙏🏽

(திருவள்ளுவர், ஒளவையார், வள்ளலார் போன்ற அருளாளர்களின் படங்களை பகிரும்போது, தயவு செய்து, அவர்கள் திருநீறு தரித்திருக்கும் படங்களையேப் பகிரவும். பாலைவன மதங்களின் கால்வருடிகளான திருட்டுத் திராவிட கும்பல் பரப்பி வைத்திருக்கும் திருநீறு தரிக்காதப் படங்களை, தயவு செய்து, தவிர்க்கவும்.)

Saturday, January 15, 2022

அனைவருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல், மாட்டுப் பொங்கல் & உழவர் திருநாள் நல்வாழ்த்துகள்!! ✨



(திருவருணை திரு அண்ணாமலையார் திருக்கோயில் பிரதோஷ விடை)

மடுத்தவாய் எல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து

-- குறள் #624, இடுக்கணழியாமை

இக்குறளில் விடாமுயற்சிக்கு அடையாளமாக காளையை காண்பிக்கிறார் முப்பால் முனிவர்.

எனில், நமது திருத்தலங்களில் மூலவரை நோக்கி அமர வைக்கப்பட்டிருக்கும் சிவன்காளை உணர்த்துவதென்ன?

வெளிப்புறமாகவே ஓட எத்தனிக்கும் நமது கவன ஆற்றலை நம் தன்மையுணர்வின் மீது திருப்பி (விடை இறைவனை நோக்கியிருத்தல்), விடாமுயற்சியுடன் அவ்வுணர்வை பிடித்துக் கொண்டிருக்கவேண்டும் (விடை இறைவனையே பார்த்துக்கொண்டிருத்தல்).

இவ்வளவுதான் நாம் செய்ய வேண்டியது! இவ்வளவுதான் நம்மால் இயன்றதும்கூட!! இதன் பிறகு இறைவனின் பாடு. 🙏🏽

oOo


இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்

-- குறள் #1035, உழவு

இக்குறளில், ஓர் உழவன் எப்படியிருக்கவேண்டும் அல்லது எப்படியிருப்பார் என்று சுட்டிக்காட்டுகிறார் தெய்வப்புலவர்.

யாரிடமும் ஒரு பொருளை இரந்து கேட்கமாட்டார். வந்து இரந்து கேட்போருக்கு இல்லையென்று சொல்லமாட்டார்.

அன்று எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்திருக்கிறார்கள் உழவர்கள்!! 😌

oOo


திருவள்ளுவர் திருநாள் 🌺🙏🏽🙇🏽‍♂️

ஒன்றே பொருளெனின் வேறென்ப வேறுஎனின்
அன்றென்ப ஆறு சமயத்தார் – நன்றுஎன
எப்பா லவரும் இயைபவே வள்ளுவனார்
முப்பால் மொழிந்த மொழி

-- கல்லாடர், வள்ளுவமாலை

(நல்லவேளை, கல்லாடர் காலத்தில் சமய வேறுபாடுகள் உள்ளபொருளை அடிப்படையாக கொண்டிருந்தன. நாசகார, நயவஞ்சக தொற்றுகள் நுழைந்த பின்னர் பாடியிருந்தால்... 🤢)

(இணைப்பு படம்: 10 வயதில் ஆசிரியையின் இடுப்பைக் கிள்ளி செருப்படி பெற்றவனின் படைப்பான பகுத்தறிவு உச்சம் பெறுமுன் பயன்பாட்டிலிருந்த திருவள்ளுவ நாயனாரின் ஓவியங்களுள் ஒன்று)

oOo


பழையதை போக்கி, என்றும் புதிதாய் உள்ள உள்ளபொருளைப் பற்றிய மெய்யறிவைப் பொங்கவிட்டு, வான்புகழ் வள்ளுவன் சுட்டிக்காட்டும் உழவனாக வாழ்ந்து, வேண்டுதல் வேண்டாமை இலான் திருவடி சேருவோம்! 🌺🙏🏽🙇🏽‍♂️

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Thursday, January 16, 2020

தை 2 - திருவள்ளுவ நாயனார் நாள் 🌺🙏🏽

(1950களில் கூட புழக்கத்திலிருந்த திருவள்ளுவ நாயனாரின் திருவுருவம்)

ஒன்றே பொருளெனின் வேறென்ப வேறுஎனின்அன்றென்ப ஆறு சமயத்தார் – நன்றுஎனஎப்பா லவரும் இயைபவே வள்ளுவனார்முப்பால் மொழிந்த மொழி

-- கல்லாடர்

👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽

கல்லாடர் குறிப்பிடும் ஆறு சமயங்களில் நம் நாட்டை கொள்ளையடித்த, சீரழித்த, நம் முன்னோர்களைக் கொன்று குவித்த காட்டுமிராண்டித்துவமோ, நயவஞ்சக பரங்கியனின் நரித்துவமோ, இந்து சமய, சமூக, தேச விரோத & துரோக கூட்டங்களின் தாயகமான சிறியாரித்துவமோ இல்லை!! ஆதிசங்கரர் பிரித்து முறைப்படுத்திய சிவம், உமை, கணபதி, முருகன், பெருமாள் மற்றும் பகலவன் வழிபாடுகளையே சமயங்களாகக் குறிக்கிறார்.

Tuesday, January 14, 2020

அனைவருக்கும் எனது உளங்கனிந்த "🌧️☀️🐂🌾👳" வாழ்த்துக்கள்!!! 🙏🏽

"நிறைமொழி மாந்தர்" எனும் பெயர் பெற்ற உலகின் மூத்தக் குடியோனான தமிழனின் இயற்கையைப் பற்றிய பேரறிவின் விளைவே பொங்கல் விழாக்காலமாகும்!! அம்மூத்தோன் காட்டிய வழிச் சென்று, நல்லது - அல்லது என அனைத்தையும் அரவணைத்துச் செல்லும் போகியாகி, உள்ளம் எனும் பானையில் ஆனந்தம் எனும் பொங்கல் என்றும் பொங்கிட, வான்புகழ் பெற்ற வள்ளுவம் கூறும் உழவனைப் போல் வாழ்ந்து, மனிதப் பிறவியின் குறிக்கோளாகிய பிறவாமையை அடைந்திடுவோம் என இத்திருவிழாக் காலத்தில் உறுதி ஏற்போம்!!!

பிறப்பறுக்கும் அந்தப் பிஞ்ஞகன் 🌺🙏🏽 நமக்கு திருவருள் புரிந்து துணை நிற்கட்டும்!!!

🎆 🎉 🎊 🌈 ✨ 

Sunday, November 24, 2019

#திருக்குறள் ஊழியத்திற்கு வ.உ.சி. கிடைத்துவிட்டார்!!

https://www.hindutamil.in/amp/news/opinion/columns/525736-voc.html

சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை அசோக்நகர் பகுதியில் இயங்கி வந்த ஒர் இந்து சமய-சமூக-தேசத் துரோக நிறுவனம் (கருங்காலி சாதி அரசியல் கட்சி), அது இயங்கி வந்த வாடகை இடத்திலிருந்து காலி செய்யச் சொல்லி உயர் நீதிமன்றம் ஆணையிட்டும், காலி செய்ய மறுத்தது. பின்னர், காவல்துறையைக் கொண்டு அவர்களை வெளியேற்றிய போது அப்பகுதியையே போர்களமாக்கினர். (முதலில் வாடகைக்கு குடி வந்து, பின்னர் மொத்தத்தையும் ஆக்கிரமித்துக் கொள்ளலாம் என்ற அவர்களது "நியாயமான" கனவில் மண் விழுந்ததால் அவ்வளவு வயிற்றெரிச்சல், கோபம், ஆத்திரம்.) இதற்கு சமமான "அறப்போர்" தான் இன்று  திருவள்ளுவரை வைத்து நடந்து கொண்டிருக்கின்றது. 😎

எத்தனை ஆண்டு கால "ஊழியம்"? வளர்ப்பு மகளை மணந்தவன் 🤢, தொழில் செய்தவளுக்கு பிறந்து அக்காள் மகளை வைத்து தொழில் செய்தவன் 🤮, திருட்டு ரயில் ஏறி வந்து மொத்த தமிழ்நாட்டையும் தன் குடும்பத்தாருக்கு கூறுபோட நினைத்தவன் 🥶 ...  வளர்ப்பு மகளை அடைய நினைத்தவன் 🤯 என்று எத்தனை கருங்காலிகளின் "ஊழியங்கள்"? திருக்குறளில் டுபாக்கூர் புத்தகத்தின் கருத்துக்கள் உள்ளன என்றும், காலத்தால் முற்பட்ட திருவள்ளுவரை 🌺🙏🏽 பாரதத்திற்கு வந்தேயிராத தோமையரின் மாணவர் என்றும் பல வித விதைப் பந்துகளை உருவாக்கி, கல்வி, ஊடகம் போன்ற விமானங்கள் வாயிலாக மக்கள் என்னும் விளைநிலத்தில் வீசியெறிதல் போன்ற எத்தனை மெக்காலே "ஊழியத்" திட்டங்கள்? 🥵 அத்தனையும் வீணாக விடுவரா? 👻👹👺

சிவஞானபோதத்திற்கு உரை எழுதி, இறுதி வரை சைவ சமய வகுப்புகள் நடத்திக் கொண்டு, சுத்த சைவராக வாழ்ந்த வ உ சிதம்பரம் பிள்ளையவர்களை கேடயமாக்க முயற்சித்திருக்கிறார்கள் - பரிமேல்அழகரின் திருக்குறள் உரையில் பிழைகள் உள்ளனவாம்!! நம் சமய கருத்துக்கள் தெள்ளத் தெளிவாக காணப்படும் கடவுள் வாழ்த்து முதலான முதல் 4 திருக்குறள் அதிகாரங்களும் இடைச்செருகலாம்!!! இப்படி #வஉசி சொன்னார் என்று மட்டும் எழுதியிருக்கிறார்கள். இதற்கு பின்னர், தமிழறிஞர் வையாபுரி பிள்ளையவர்களின் விளக்கத்தைக் கேட்டு வஉசி அமைதியுற்றார் என்பதை எழுதவில்லை. "ஊழியத்திற்கு" உதவாததை ஒதுக்குவதும் / மறைப்பதும் சிறந்த ஊழியம் எனக் கருதியிருக்கலாம். 😒

தமிழையும், தமிழரையும் அவர்களது சொந்த சமயத்திலிருந்து பிரிக்க பல "ஊழியத்" திட்டங்கள் இயக்கத்தில் உள்ளன. தற்போது இயக்கத்திலுள்ள #சுமேரியா #திட்டம் வெற்றி பெற்றால் திருக்குறள் திட்டத்தின் பங்களிப்பு ஒன்றுமில்லாமல் ஆகிவிடும். அவ்வளவு பாதகமானது!! திருக்குறளை வைத்து நம்மை நம் சொந்த சமயத்திலிருந்து பிரித்து, நாம் சமணர்கள் என்று போக்கு காட்டி, நரித்துவத்தோடு இணைக்க முற்பட்டார்கள். சுமேரியா திட்டத்தின் மூலம் நமது தோற்றம், சமயம், மொழி, நாட்டுப்பற்று என அனைத்தையும் ஒரே நேரத்தில் குறி வைத்து, இஸ்ரவேல் அத்வைதியான யேசுவை நமது மாமன்-மச்சான் கடவுளாக கொண்டாட வைத்து, நரித்துவத்தை நமது சொந்த மதமாக காண வைத்து, தமிழகத்தை காஷ்மீரம் போன்று மாற்றி ஆள்வதே இவர்களது குறிக்கோள். 🤬😡

பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்

-- குறள் #319

வள்ளுவ நாயனாரின் சொற்படி உலகக் கொல்லிகளான பரங்கியரும், அவர்களது அடிவருடும் நம் நாட்டு கருங்காலிகளும் துன்பப்படும் காலம் விரைவில் வரும்!!

🌸🏵️🌼🌻💮

"#மனத்துக்கண் #மாசிலன் ..." என்ற திருக்குறளுக்கு வஉசியின் உரை: மனத்தின்கண் குற்றம் இல்லாதவனாய் செய்யப்படுவது அனைத்தும் அறம்; குற்றம் உள்ளவனாய் செய்யப்படுவன துன்பம் தருவன.

(மற்றவர்கள் "... மாசிலன் ஆதல்..." என்று பதம் பிரிக்க, இவர் மட்டும் "மாசிலன் ஆவது" என்று பிரித்துள்ளார்.)

"தன் மனத்தின்கண் குற்றமில்லாதவனாய் ஆகுக; அவ்வளவே அறம்", என்று உரை எழுதியவர்களை, "மனத்தின்கண் குற்றமில்லாதவனாய் ஆதல் ஓர் ஒழுக்கமேயன்றி அதுவே அறமாகாது.", என்று எதிர்க்கிறார். மேலும், "அறம் என்பது ஓர் உயிர்க்கு நன்மை பயக்கும் ஒரு செயல்", என்று பொருள் கூறுகிறார்.

🌸🏵️🌼🌻💮

அறம் என்பது அறு என்ற வினையோடு தொடர்பு கொண்டது. நல்லறம், இல்லறம், துறவறம். நல்வழி, இல்வழி, துறவு வழி. இந்த மாய உலகில் நல்லபடியாக பயணித்து கரையேற - மெய்யறிவு / நிலைபேறு பெற - நாம் தேர்ந்தெடுக்கும் / உருவாக்கி கொள்ளும் வழியே அறம்.

மெய்யறிவாளரை (இறைவனை) வாலறிவன், வேண்டுதல் வேண்டாமை இலான், இருவினையும் சேரா இறைவன், தனக்குவமை இல்லாதான், ஐந்தவித்தான் என்று பலவாறு அழைத்த நாயனார், இக்குறளில் மனத்துக்கண் மாசிலன் என்றழைக்கிறார். இப்படி பலவாறு அழைப்பதன் மூலம் மெய்யறிவாளர் என்பவர் யார், அந்நிலையை எப்படி அடைவது போன்ற கேள்விகளுக்கும் பதிலளிக்கிறார்.

மனத்துக்கண் மாசிலன் - மனதில் மாசு இல்லாதவன். மாசு எனில் தீய எண்ணங்கள் மட்டுமல்ல. நல்லெண்ணங்களும் மாசு தான். மாசற்று - எண்ணங்களற்று - இருத்தலே நிலைபேறாகும். சிவப்பரம்பொருளுக்கு #மாசிலாமணி என்றொரு அருமையான பெயர் இருப்பதும் இந்த அடிப்படையில் தான்.

எண்ணங்களற்று இருப்பது எவ்வாறு?

இக்கேள்விக்கு, நம் தமிழ் மண் உருவாக்கிய பெரும் மாமுனிவர்களில் ஒருவரான பகவான் திரு ரமணர் 🌺🙏🏽 கொடுத்த அருமையான பதில் ("நான் யார்?" என்ற நூலிலிருந்து, கேள்விகள் 10 & 11):

"நான் யார்?" என்னும் விசாரணையினாலேயே மனம் அடங்கும். "நான் யார்?" என்னும் நினைவு மற்ற நினைவுகளை எல்லாம் அழித்து, பிணம் சுடும் தடி போல் முடிவில் தானும் அழியும். பிற எண்ணங்கள் எழுந்தால் அவற்றை பூர்த்தி பண்ணுவதற்கு எத்தனியாமல், அவை "யாருக்கு உண்டாயின?" என்று விசாரிக்க வேண்டும். எத்தனை எண்ணங்கள் எழினும் என்ன? ஜாக்கிரதையாய் ஒவ்வொரு எண்ணமும் கிளம்பும் போதே "இது யாருக்கும் உண்டாயிற்று?" என்று விசாரித்தால் எனக்கு என்று தோன்றும். "நான் யார்?" என்று விசாரித்தால் மனம் தன் பிறப்பிடத்திற்குத் திரும்பி விடும்; எழுந்த எண்ணமும் அடங்கிவிடும். இப்படி பழகப்பழக மனதிற்கு தன் பிறப்பிடத்தில் தங்கி நிற்கும் சக்தி அதிகரிக்கின்றது.

(விசாரித்தல் / விசாரணை - தற்கவனம் - தன்னாட்டம் - தன்னை நாடுதல் - நான் என்னும் நம் தன்மையுணர்வின் மேல் நம் கவன ஆற்றலை வைத்திருத்தல்.)

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

Saturday, September 21, 2019

இவ்வுலகில் வாழ்வது எங்ஙனம்?



அவரவர் பிராரப்தப் பிரகாரம் அதற்கானவன் ஆங்காங்கிருந்து ஆட்டுவிப்பன். என்றும் நடவாதது என் முயற்சிக்கினும் நடவாது. நடப்பது என் தடை செய்யினும் நில்லாது. இதுவே திண்ணம். ஆகலின் மெளனமாய் இருக்கை நன்று.

-- #பகவான் #திருரமண #மகரிஷி 🌺🙏🏼 தன் தாய்ககு எழுதிக் காட்டியது. இதுவே பகவானருளிய முதல் அறிவுரையுமாகும். இதற்கு சமமான #திருமுருகனார் சுவாமிகளின் 🌺🙏🏼 செய்யுள் (#குரு #வாசகக் #கோவை #150):

பதம் பிரிக்காமல்:

ஊழேகூ ழாக உணர்ந்தோ ருளங்கலங்கிக்
கூழுக்கா வென்றுங் குலைவுறார் - கூழதனை
வேண்டினும் வேண்டா விடினு மெவர்க்குமவ்
வூண்டா னொழிய துணர்.

பதம் பிரித்து:

ஊழே கூழ் ஆக உணர்ந்தோர் உளம் கலங்கிக்
கூழுக்கா என்றும் குலைவு உறார் - கூழ் அதனை
வேண்டினும் வேண்டா விடினும் எவர்க்கும் அவ்
ஊண் தான் ஒழியாது உணர்.

(ஊழ் - தலைவிதி; கூழ், ஊண் - துய்க்கும் பொருள்கள்; குலைவு - கவலை; ஒழியாது - தவறாது)

அகத்தில் தோன்றும் எண்ணங்கள் முதல், புறத்தில் காட்சிகளாக, பொருட்களாக, பட்டறிவாக நமக்கு வந்து சேருபவை அனைத்தையும் கூழ் எனும் சொல்லின் மூலம் குறித்தது அழகு!!

பொருள்: இந்தக் கூழானது அவரவர் முன்வினைப்படி விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் தவறாது வந்து சேரும். இதை உணர்ந்தவர்கள் எதற்காகவும் கலங்கமாட்டார்கள்.

இதே கருத்தை #வள்ளுவப் #பெருந்தகை-யும் 🌺🙏🏼 376-ஆம் குறளில் தெரிவிக்கிறார்:

பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம.

பொருள்: முன்வினையால் தமக்கு உரியவை அல்லாதப் பொருள்களை வருந்திக் காப்பாற்றினாலும் நில்லாமல் போய்விடும். உரியவை எனில், வேண்டா என்று நாமே வெளியே தள்ளினாலும் நம்மை விட்டுப் போகமாட்டா.

ஊழைப் பற்றி பகவானும், சுவாமிகளும் மேற்சொன்னவற்றில் அதை கையாளுவதைப் பற்றியும் சொல்லிவிட்டார்கள் (மௌனமாய் இருக்கை நன்று, விதியை உணர்ந்து உள்ளம் கலங்காதிருத்தல்). தெய்வப் புலவரோ அறத்துப்பாலின் ஆரம்பத்திலேயே வழியை சொல்லிவிடுகிறார்:

வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

🏵️ வேண்டுதல் வேண்டாமை இலான் அடி - இறைவனடி.

🌻 மெளனமாய் இருக்கை நன்று - மௌனம் - "நான் என்னும் நினைவு கிஞ்சித்தும் இல்லாத நிலையே மெளனம்" - நான் என்னும் நினைவு - நான் இன்னார் என்னும் நினைவு - நான் இல்லாத இடத்திலும் தான் இல்லாமல் போவதில்லை. இதை "பூன்றமாம் அஃதே பொருள்" - உள்ளபொருள் / பரம்பொருள் - என்கிறார் பகவான்.

🌼 உளம் கலங்காமல் - கலங்கலுக்கு எதிர்பதம் தெளிவு - உள்ளத் தெளிவு. எப்போது கிட்டும்? உள்ளல் அற, உள்ளத்தே உள்ளபடி உள்ளும் போது. எண்ணங்களற்று நாம் நாமாக இருக்கும் போது. உள்ளபொருளாக உள்ள போது.

இவையனைத்தும் ஒன்றையே உணர்த்துகின்றன: வருவதை வர விட்டு, போவதை போக விட்டு, நாம் நாமாக இருப்பது மட்டுமே நம்மால் முடிவதும், நாம் செய்ய வேண்டியதும் ஆகும்!!

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏼

Tuesday, March 19, 2019

திருக்குறளை ஆரியர்கள் திரிக்கிறார்களாம்! இவர்கள் வினவுகிறார்களாம்!!

https://www.vinavu.com/2018/12/25/brahmanism-interpretting-thirukural-opinion/

👊 வினவ வேண்டியது தான். மொத்த இந்து சமயமும் தமிழர்களுடையது தான். அதற்கு மேல் ஆரியப் போர்வையைப் போர்த்தி விட்டு தங்களது என்று அவர்கள் காலரைத் தூக்கி விட்டுக் கொள்வதை வினவ வேண்டியதுதான். இதே போன்று சர்ச்சியர்களை வினவுவார்களா?

👊 2,300 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த வள்ளுவப் பெருந்தகையை 2,000 ஆண்டுகளுக்குள் வாழ்ந்த தோமையரோடு இணைத்ததுப் பற்றி வினவுவார்களா?

👊 நம் புண்ணிய பாரத மண்ணிற்கே வராமல், இத்தாலியிலேயே வாழ்ந்து இறந்த தோமையர், வள்ளுவருடன் மேற்கு தொடர்ச்சி மலைகளில், ஏ.ஆர். ரகுமானின் முஸ்தபா பாடல் பின்னணியில் ஒலிக்க சுற்றி வந்த போது, வள்ளுவருக்கு மெய்யறிவு கொடுத்தார் என்ற "சோத்துல செங்கல்" நற்செய்தியைப் பற்றி வினவுவார்களா?

👊 நமது #திருக்குறள், மறை நூல்கள் மற்றும் அவர்களது மெய்யறிவாளர்கள் அருளியது என எல்லாவற்றையும் அரைவேக்காட்டாக ஒரு புத்தகத்தில் பதிவு செய்து விட்டு, அந்த அரைவேக்காடுப் புத்தகத்திலிருந்து தான் நமது திருக்குறளும் மற்றும் அனைத்து மறை நூல்களும் தோன்றின என்ற "சோத்துல பாறாங்கல்" நற்செய்தியைப் பற்றி வினவுவார்களா?

👊 குறுக்கையில் அறையப்பட்டிருந்த போது ஞானி யேசு பேசிய சொற்களில் சில தமிழ் சொற்களும் இருக்கின்றன என்று சொன்னால் (அதாவது, அவர் இங்கு வந்து தமிழும் கற்றுக் கொண்டு திரும்பியுள்ளார் என்று சொன்னால்) தமிழை உருவாக்கியதே அவர் தான் என்று "தீர்ப்பை மாற்றிச் சொல்லும்" சுவிசேஷத்தைப் பற்றி வினவுவார்களா?

👊 "கற்றதனால் ஆய பயனென்கொல் #வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்" என்ற திருக்குறளில் வரும் வாலறிவன் (1) என்பது இறைவனை அல்லது இறையை உணர்ந்து இறையாகவே உள்ள மெய்யறிவாளர்களைக் (ஞானிகளைக்) குறிக்கும் என தொல் ஆசிரியர்கள் அனைவரும், இன்றைய ஆசிரியர்கள் சிலரும் பொருள் கூறியுள்ள போது, வேண்டுமென்றே "தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளர்" (2) என்று திரித்து பொருள் கூறிய பகுத்தறிவைப் பற்றி வினவுவார்களா?

அந்நிய மதத்தினரும், தேச விரோத சக்திகளும், அமெரிக்க சி.ஐ.ஏ. போன்ற உளவு அமைப்புகளும் வீசிய பொரைகளைக் கவ்விக் கொண்டு, தெரு சந்திப்பில் நின்று கொண்டு, எதுகை மோனையுடன் இந்து சமயத்தை எதிர்த்து குளைத்ததை மக்கள் ரசித்தது ஒரு காலம். இன்று "திருச்சி குலுங்கியது" என்று கிராஃபிக்ஸ் வேலை தான் செய்யவேண்டும்!!

👊👊👊👊👊👊👊👊👊👊

குறிப்புகள்:

1. வா என்பது வெளிவருவதைக் குறிக்கும். வால் என்பது உடலிலிருந்து முளைத்த ஒன்றைக் குறிக்கும். உடல் இல்லாமல் வால் இல்லை. ஆனால், வால் இல்லாமல் உடலால் இயங்க முடியும். இது போன்றது தான் நாம் காணும் உலகம். பரம்பொருளில் இருந்து முளைத்த வால் போன்றது இவ்வுலகம். பரம்பொருள் இல்லாமல் உலகமில்லை. ஆனால், உலகமில்லாமல் பரம்பொருள் இருக்கும்.  இந்தப் பரம்பொருளிலிருந்து (மெய்யிலிருந்து) உலகம் தோன்றுவதை உணர்ந்தவர்களை - வாலை அறிந்தவர்களை - வாலறிவர்கள் என்றனர்!! வால் முளைப்பது மெய்யிலிருந்து. மெய்யாகவே இருப்பவர்களால் தான் வாலை உணரமுடியும். ஆகவே, இவர்களை மெய்யறிவாளர்கள் (ஞானியர்) என்றனர்!! 🌸🙏

இவ்விளக்கத்தின் உருவ வடிவம் தான் திருவரங்கம் அரங்கநாதப் பெருமான். 🌸🙏 பெருமான் தொழிலற்ற பரம்பொருளைக் குறிக்கிறார். பெருமானின் தொப்புளில் இருந்து வால் போன்று கிளம்பும் தாமரையும், அதன் மேல் அமர்ந்திருக்கும் நான்முகனும் உலகைக் குறிப்பர்.

2. இவர்களது அகராதியில் "அறிவில் மூத்த பெருந்தகையாளர்" எனில்...

- 10 வயதில் ஆசிரியையின் இடுப்பைக் கிள்ளியதற்காக செருப்படி வாங்கியவர்,
- வளர்த்த மகளையே மணந்தவர்,
- அக்காள் மகளை  வைத்து தொழில் செய்தவர்,
- திருட்டுத்தனமாக தொடர்வண்டியில் பயணித்தவர்,
- மகளின் தோழியை மடக்கியவர்,
- இலட்சக்கணக்கான தமிழர்கள் மடிந்து கொண்டிருக்கும் போது காப்பாற்றுகிறேன் பேர்வழி என்று மெரினாவில் படுத்துக் கொண்டு காற்று வாங்கியவர்

மற்றும் இது போன்ற அறிவார்ந்த செயல்களை செய்தவர் என்று பொருள். 😛

Friday, March 24, 2017

சட்ட வல்லுநர் திருவள்ளுவர்

மொழி, சமயம் ஆகிய இவ்விரண்டுத் துறைகளை தவிர மற்றனைத்திலும், "நாம் ஒன்றுமில்லை. முட்டாள்கள். பரங்கி மத தேவர்களாகிய வெள்ளையர்கள் வந்த பின்னர் தான் நமக்கு பல் துலக்கவே தெரிந்தது." என்று தானே நம் தலையில் ஏற்றியிருக்கிறார்கள். 😠 இன்னமும் "பரங்கி பொறுக்கி வாஸ்கோட காமா தான் இந்தியாவைக் கண்டு பிடித்தான்" என்று ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள். 😡 சட்டத்துறை மட்டும் விதிவிலக்கா என்ன?

சிறு வயதிலேயே சிறப்பான தீர்ப்பை அளித்த கரிகாலனோ, "தவறாக தீர்ப்பை அளித்துவிட்டோம்" என்றுணர்ந்த உடனேயே உயிரை விட்ட ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனோ, புறாவிற்காக தொடையின் சதையை அறுத்துக் கொடுத்த சிபி சக்ரவர்த்தியோ, பசுவிற்கு செவி மடுத்த மனுநீதி சோழனோ இந்த லார்ட் லபக்குதாஸுகளுக்கு (#) முன் எம்மாத்திரம்? 😛😜😝

(# - லபக்குதாஸ் என்ற பரங்கி ஒரு நடமாடும் கலைக்களஞ்சியம். கண்டதையும் தெரிந்து வைத்திருப்பான். குத்திக் காட்டவும், எதுகை மோனைக்காகவும் இவன் பெயரை உபயோகப்படுத்தினேன்.)

(இணைப்பு: தினமலர் - சென்னை - 19/03/2017)

Saturday, July 2, 2016

இவர்களெல்லாம் திருந்தப் போவதேயில்லை!! 😡


(தினமலர் - சென்னை - 02/06/2016)

ஜாதி என்ற வார்த்தையின் நேர்பெருள் "தன்மை". தொழிலை அடிப்படையாகக் கொண்டதை பிறப்பின் அடிப்படையாக மாற்றியவர்கள் இவர்களே! 😠

🌋 தான் ஞானமடைந்தது மட்டுமல்லாமல், தான் அடைந்த நிலையை அனைவரும் அடையலாம் என்று முழங்கியதோடு நிற்காமல், தான் அடைந்த வழியை அனைவருக்கும் திறந்துவிட்டு, ஒரு ஞானப் புரட்சி செய்த பகவான் ஸ்ரீகிருஷ்ணர் என்ன ஜாதி?

🌋 ஒரு வேதத்தை சரியாகக் கற்பதே பிரம்ம பிரயத்தனம் எனும் போது, அனைத்து வேதங்களையும் கற்றுத் தெளிந்து அவற்றைப் பிரித்து, பின்னர் அது அனைவருக்கும் சென்று சேரவேண்டும் என்ற உயரிய எண்ணத்தினால் பிரம்மசூத்திரம் முதல் மகாபாரதம் வரை இயற்றிய ஸ்ரீவேதவியாசர் என்ன ஜாதி?

🌋 எல்லாவற்றிற்க்கும் மேலாக இவர்கள் என்ன ஜாதி? கைபர், போலன் கனவாய்கள் வழியாக உள்நுழைந்த காட்டுமிராண்டி ஆரியர்களின் வாரிசுகள் தானே இவர்கள்? காட்டுமிராண்டி ஜாதி தானே? நம்மால், நம்மிடமிருந்தவையால் செம்மையானவர்கள் தானே இவர்கள்!

நம்மிடமிருந்து எடுத்துக் கொண்டதையாவது நல்லபடியாக வைத்துக் கொள்ளத் தெரிந்ததா? இல்லை. குப்பையாக்கினார்கள். 😛 சீர்திருத்த பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தேவைப்பட்டார். மீண்டும் குப்பையாக்கினார்கள். 😜 இம்முறை பகவான் புத்தர் வந்துதித்தார். அவர் மறைவுக்கு பின்னர் அவருடையதும் குப்பையானது. இவர்களும் குப்பையானர்கள். 😝 மீண்டும் சீர்திருத்தம் ஆதிசங்கரர் வடிவில் நடந்தது. அவர் மறைந்த உடனேயே குப்பையாக்கும் வேலையை மீண்டும் ஆரம்பித்தார்கள். அதன் பின்னர் வலுவான பேரரசுகள் அமையாததினாலும், தொடர்ந்த படையெடுப்புகளாலும் இன்று வரை பெரிய சீர்திருத்தம் நடைபெறவில்லை.

ஆக, குப்பைக்காரர்களுக்கு இடையே நம் வள்ளுவப் பெருந்தகை நின்று மண்டை காயவேண்டுமா என்று நாம் தான் முடிவு செய்யவேண்டும்!! 😎

என்னை பொறுத்தவரை கங்கையம்மனை விட நம் காவரித்தாய் மேலானவர்! என்னுடைய அளவுகோல்: கங்கை நதி நெடுக எத்தனை மகான்களின் சமாதிக் கோயில்கள் உள்ளன? காவிரி நதி நெடுக எத்தனை உள்ளன? 💥💥😘

கணக்கிட்டால், நம் காவிரித்தாய் வேறெந்த நதியும் நெருங்க முடியாத தூரத்தில் இருப்பார். அத்தனை மகான்கள் உருவாகக் காரணமான புனிதமான காவிரித்தாயின் மடியில் வைத்து அழகு பார்ப்போம்!! 👍👍👍

(பி.கு.: புனித கங்கை நதியை எவ்விதத்திலும் சிறுமைபடுத்த நான் முயலவில்லை. அவரின் புனிதத்தன்மையை அனுபவித்து உணர்ந்தவன் நான். 🙏)

posted from Bloggeroid

Saturday, March 19, 2016

கோ பூஜையின் உள்ளர்த்தம்!!



மேலே இணைக்கப்பட்டிருக்கும் செய்தியை முதலில் படியுங்கள் (தினமலர் - ஆன்மிகமலர் - சென்னை - 15/03/2016).

அதில் விளக்கியபடி கோ பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள்:

- நம் 'பெண்டு' நிமிரும்
- #சாணம் கிடைக்கும் - மாடு மிரள்வதால்
- நீலத்தடி நீர் மட்டம் குறையும்
- சுற்றுப்புற சூழல் கெடும் - இன்று மஞ்சள், குங்குமம், பூ சாகுபடி என அனைத்திலும் அளவுக்கதிகமான ரசாயனங்கள் உபயோகிப்பதால்

😂😂😂

வேறு புண்ணியம் ஏதும் கிடையாது.

வசதியில்லாதோர் இதை செய்யப் போவதில்லை. வசதிபடைத்தோரும் பயம், குடும்ப பாரம்பரியம், சமூக அந்தஸ்து போன்ற காரணங்களுக்காகத்தான் இதைச் செய்வர். அவர்களும் நேரடியாக செய்யப் போவதில்லை. 'மம' சொல்லிவிட்டு வாத்யாரிடம் ஒப்படைத்துவிடுவர்.

பிறகென்ன, வாத்யார் சிறப்பாக பூஜை செய்கிறாரா என எஜமானனும், எஜமானன் மனம் குளிர்ந்தாரா என வாத்யாரும் "பூஜையில்" முனைப்புடன் ஈடுபட்டிருப்பர். இருவருக்கும் புண்ணியம் சேர்த்தாற் போலத்தான்!! 😀

கோ பூஜை விளக்கத்தில் உள்ள மிக முக்கியமான செயல் பசுமாட்டின் பின்புறத்தைத் தொட்டு வணங்குவது. அங்கே மகாலஷ்மி வாசம் செய்வதாகக் கூறுவர்.

அங்கே மகாலஷ்மியா வாசம் செய்கிறார்? சாணமல்லவா வாசம் செய்கிறது!

சாணமே செல்வம்!!
சாணமே மகாலஷ்மி!!!

பசுஞ்சாணத்தில் கோடானகோடி நுண்ணுயிரிகள் வாசம் செய்கின்றன. அதை நிலத்தில் இடுவதால் நிலம் வளம் பெறுகிறது. வளமடைந்த நிலம் அமோக விளைச்சலைத் தருகிறது. அமோக விளைச்சல் செல்வமாகிறது. அதாவது, மகாலஷ்மியாகிறது. சாணமே மகாலஷ்மியாகிறது. செல்வத்திற்கு மூலமாகிய சாணத்தைத் தரும் மாடுகளை சீதனமாகக் கொண்டு வருவதால் மருமகள் மாட்டுப்பெண் ஆனாள். அவளை "எங்க வீட்டு மகாலஷ்மி" என அழைப்பதும் இதன் அடிப்படையில் தான். இதே அடிப்படையில் தான் திருவள்ளுவர் செல்வத்தையும் மாட்டையும் சமமாக்கி எழுதினார். 👍👌👏

(சாணம், நுண்ணுயிரி பற்றிய விரிவான விளக்கத்திற்கு - https://plus.google.com/+SaravananG_Enum_Dhasaman/posts/No1Tpyzsqgf)

இப்பேருண்மை காலத்திற்கும் காப்பாற்றப்பட வேண்டியது, போற்றப்பட வேண்டியது, வாழையடி வாழையாக எடுத்துச் செல்ல வேண்டியது. செழிப்பான குடும்பங்கள் செழிப்பான சமூகத்திற்கும், செழிப்பான சமூகங்கள் செழிப்பான நாட்டிற்கும் அடிப்படை. இத்தனை செழிப்பிற்கும் அடிப்படை பசுஞ்சாணம், அது தரும் பசுமாடுகள். ஆகையால், கோ பூஜைக்கு இவ்வளவு முக்கியத்துவம்.

ஆனால், இத்தனை படிகளை சொன்னால் அதன் மதிப்பு வேண்டுமானால் உயரும். அனைவரையும் சென்று சேராது. அனைவரையும் சென்றடையும் வகையில் எளிதாக்கினால் மதிப்பு போய்விடும். ஆகையால், இருவருக்கும் ஏற்றவாறு விளக்கமளிக்கலாம்.

சுவாமி சிலைகளை வணங்குவது போன்றது தான் பசுவின் பின்புறத்தைத் தொட்டு வணங்குவது. சிலையை வணங்குதல் என்பது அந்தச் சிலை உணர்த்தும் உண்மைகளை நினைத்துப் பார்த்தல், சிந்தித்தல், மதித்தல், செயல்படுத்துதல் மற்றும் அப்பேருண்மையாகவே ஆகுதல் (சாயுஜ்யம் அடைதல்).

அங்ஙனமே, பசுவின் பின்புறத்தைத் தொடுதல் என்பது சாணத்தைப் பற்றிய மேற்கூரிய உண்மைகளை நினைத்துப் பார்த்தல், சிந்தித்தல், மதித்தல் மற்றும் செயல்படுத்துதல்.

"யாவர்க்குமாம் பசுவிற்கொரு வாயுறை" -- திருமந்திரம்

posted from Bloggeroid