Monday, May 16, 2022
திருக்குறள் #612: செயலுக்கு மாற்று இருத்தல்! அன்னைக்கு மாற்று அப்பன்!!
Monday, May 2, 2022
திருக்குறள் #901: மனைவிழைவார் & வினைவிழையார் என்போர் யார்?
Thursday, February 3, 2022
திருக்குறள் #834: கல்வியின் பயன் அகந்தையடங்குதல்!!
Monday, January 31, 2022
தை - 19: திரு வள்ளற் பெருமானின் பருவுடல் மறைந்த நாள்!!
Saturday, January 15, 2022
அனைவருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல், மாட்டுப் பொங்கல் & உழவர் திருநாள் நல்வாழ்த்துகள்!! ✨
Thursday, January 16, 2020
தை 2 - திருவள்ளுவ நாயனார் நாள் 🌺🙏🏽
Tuesday, January 14, 2020
அனைவருக்கும் எனது உளங்கனிந்த "🌧️☀️🐂🌾👳" வாழ்த்துக்கள்!!! 🙏🏽
Sunday, November 24, 2019
#திருக்குறள் ஊழியத்திற்கு வ.உ.சி. கிடைத்துவிட்டார்!!
https://www.hindutamil.in/amp/news/opinion/columns/525736-voc.html
சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை அசோக்நகர் பகுதியில் இயங்கி வந்த ஒர் இந்து சமய-சமூக-தேசத் துரோக நிறுவனம் (கருங்காலி சாதி அரசியல் கட்சி), அது இயங்கி வந்த வாடகை இடத்திலிருந்து காலி செய்யச் சொல்லி உயர் நீதிமன்றம் ஆணையிட்டும், காலி செய்ய மறுத்தது. பின்னர், காவல்துறையைக் கொண்டு அவர்களை வெளியேற்றிய போது அப்பகுதியையே போர்களமாக்கினர். (முதலில் வாடகைக்கு குடி வந்து, பின்னர் மொத்தத்தையும் ஆக்கிரமித்துக் கொள்ளலாம் என்ற அவர்களது "நியாயமான" கனவில் மண் விழுந்ததால் அவ்வளவு வயிற்றெரிச்சல், கோபம், ஆத்திரம்.) இதற்கு சமமான "அறப்போர்" தான் இன்று திருவள்ளுவரை வைத்து நடந்து கொண்டிருக்கின்றது. 😎
எத்தனை ஆண்டு கால "ஊழியம்"? வளர்ப்பு மகளை மணந்தவன் 🤢, தொழில் செய்தவளுக்கு பிறந்து அக்காள் மகளை வைத்து தொழில் செய்தவன் 🤮, திருட்டு ரயில் ஏறி வந்து மொத்த தமிழ்நாட்டையும் தன் குடும்பத்தாருக்கு கூறுபோட நினைத்தவன் 🥶 ... வளர்ப்பு மகளை அடைய நினைத்தவன் 🤯 என்று எத்தனை கருங்காலிகளின் "ஊழியங்கள்"? திருக்குறளில் டுபாக்கூர் புத்தகத்தின் கருத்துக்கள் உள்ளன என்றும், காலத்தால் முற்பட்ட திருவள்ளுவரை 🌺🙏🏽 பாரதத்திற்கு வந்தேயிராத தோமையரின் மாணவர் என்றும் பல வித விதைப் பந்துகளை உருவாக்கி, கல்வி, ஊடகம் போன்ற விமானங்கள் வாயிலாக மக்கள் என்னும் விளைநிலத்தில் வீசியெறிதல் போன்ற எத்தனை மெக்காலே "ஊழியத்" திட்டங்கள்? 🥵 அத்தனையும் வீணாக விடுவரா? 👻👹👺
சிவஞானபோதத்திற்கு உரை எழுதி, இறுதி வரை சைவ சமய வகுப்புகள் நடத்திக் கொண்டு, சுத்த சைவராக வாழ்ந்த வ உ சிதம்பரம் பிள்ளையவர்களை கேடயமாக்க முயற்சித்திருக்கிறார்கள் - பரிமேல்அழகரின் திருக்குறள் உரையில் பிழைகள் உள்ளனவாம்!! நம் சமய கருத்துக்கள் தெள்ளத் தெளிவாக காணப்படும் கடவுள் வாழ்த்து முதலான முதல் 4 திருக்குறள் அதிகாரங்களும் இடைச்செருகலாம்!!! இப்படி #வஉசி சொன்னார் என்று மட்டும் எழுதியிருக்கிறார்கள். இதற்கு பின்னர், தமிழறிஞர் வையாபுரி பிள்ளையவர்களின் விளக்கத்தைக் கேட்டு வஉசி அமைதியுற்றார் என்பதை எழுதவில்லை. "ஊழியத்திற்கு" உதவாததை ஒதுக்குவதும் / மறைப்பதும் சிறந்த ஊழியம் எனக் கருதியிருக்கலாம். 😒
தமிழையும், தமிழரையும் அவர்களது சொந்த சமயத்திலிருந்து பிரிக்க பல "ஊழியத்" திட்டங்கள் இயக்கத்தில் உள்ளன. தற்போது இயக்கத்திலுள்ள #சுமேரியா #திட்டம் வெற்றி பெற்றால் திருக்குறள் திட்டத்தின் பங்களிப்பு ஒன்றுமில்லாமல் ஆகிவிடும். அவ்வளவு பாதகமானது!! திருக்குறளை வைத்து நம்மை நம் சொந்த சமயத்திலிருந்து பிரித்து, நாம் சமணர்கள் என்று போக்கு காட்டி, நரித்துவத்தோடு இணைக்க முற்பட்டார்கள். சுமேரியா திட்டத்தின் மூலம் நமது தோற்றம், சமயம், மொழி, நாட்டுப்பற்று என அனைத்தையும் ஒரே நேரத்தில் குறி வைத்து, இஸ்ரவேல் அத்வைதியான யேசுவை நமது மாமன்-மச்சான் கடவுளாக கொண்டாட வைத்து, நரித்துவத்தை நமது சொந்த மதமாக காண வைத்து, தமிழகத்தை காஷ்மீரம் போன்று மாற்றி ஆள்வதே இவர்களது குறிக்கோள். 🤬😡
பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்
-- குறள் #319
வள்ளுவ நாயனாரின் சொற்படி உலகக் கொல்லிகளான பரங்கியரும், அவர்களது அடிவருடும் நம் நாட்டு கருங்காலிகளும் துன்பப்படும் காலம் விரைவில் வரும்!!
🌸🏵️🌼🌻💮
"#மனத்துக்கண் #மாசிலன் ..." என்ற திருக்குறளுக்கு வஉசியின் உரை: மனத்தின்கண் குற்றம் இல்லாதவனாய் செய்யப்படுவது அனைத்தும் அறம்; குற்றம் உள்ளவனாய் செய்யப்படுவன துன்பம் தருவன.
(மற்றவர்கள் "... மாசிலன் ஆதல்..." என்று பதம் பிரிக்க, இவர் மட்டும் "மாசிலன் ஆவது" என்று பிரித்துள்ளார்.)
"தன் மனத்தின்கண் குற்றமில்லாதவனாய் ஆகுக; அவ்வளவே அறம்", என்று உரை எழுதியவர்களை, "மனத்தின்கண் குற்றமில்லாதவனாய் ஆதல் ஓர் ஒழுக்கமேயன்றி அதுவே அறமாகாது.", என்று எதிர்க்கிறார். மேலும், "அறம் என்பது ஓர் உயிர்க்கு நன்மை பயக்கும் ஒரு செயல்", என்று பொருள் கூறுகிறார்.
🌸🏵️🌼🌻💮
அறம் என்பது அறு என்ற வினையோடு தொடர்பு கொண்டது. நல்லறம், இல்லறம், துறவறம். நல்வழி, இல்வழி, துறவு வழி. இந்த மாய உலகில் நல்லபடியாக பயணித்து கரையேற - மெய்யறிவு / நிலைபேறு பெற - நாம் தேர்ந்தெடுக்கும் / உருவாக்கி கொள்ளும் வழியே அறம்.
மெய்யறிவாளரை (இறைவனை) வாலறிவன், வேண்டுதல் வேண்டாமை இலான், இருவினையும் சேரா இறைவன், தனக்குவமை இல்லாதான், ஐந்தவித்தான் என்று பலவாறு அழைத்த நாயனார், இக்குறளில் மனத்துக்கண் மாசிலன் என்றழைக்கிறார். இப்படி பலவாறு அழைப்பதன் மூலம் மெய்யறிவாளர் என்பவர் யார், அந்நிலையை எப்படி அடைவது போன்ற கேள்விகளுக்கும் பதிலளிக்கிறார்.
மனத்துக்கண் மாசிலன் - மனதில் மாசு இல்லாதவன். மாசு எனில் தீய எண்ணங்கள் மட்டுமல்ல. நல்லெண்ணங்களும் மாசு தான். மாசற்று - எண்ணங்களற்று - இருத்தலே நிலைபேறாகும். சிவப்பரம்பொருளுக்கு #மாசிலாமணி என்றொரு அருமையான பெயர் இருப்பதும் இந்த அடிப்படையில் தான்.
எண்ணங்களற்று இருப்பது எவ்வாறு?
இக்கேள்விக்கு, நம் தமிழ் மண் உருவாக்கிய பெரும் மாமுனிவர்களில் ஒருவரான பகவான் திரு ரமணர் 🌺🙏🏽 கொடுத்த அருமையான பதில் ("நான் யார்?" என்ற நூலிலிருந்து, கேள்விகள் 10 & 11):
"நான் யார்?" என்னும் விசாரணையினாலேயே மனம் அடங்கும். "நான் யார்?" என்னும் நினைவு மற்ற நினைவுகளை எல்லாம் அழித்து, பிணம் சுடும் தடி போல் முடிவில் தானும் அழியும். பிற எண்ணங்கள் எழுந்தால் அவற்றை பூர்த்தி பண்ணுவதற்கு எத்தனியாமல், அவை "யாருக்கு உண்டாயின?" என்று விசாரிக்க வேண்டும். எத்தனை எண்ணங்கள் எழினும் என்ன? ஜாக்கிரதையாய் ஒவ்வொரு எண்ணமும் கிளம்பும் போதே "இது யாருக்கும் உண்டாயிற்று?" என்று விசாரித்தால் எனக்கு என்று தோன்றும். "நான் யார்?" என்று விசாரித்தால் மனம் தன் பிறப்பிடத்திற்குத் திரும்பி விடும்; எழுந்த எண்ணமும் அடங்கிவிடும். இப்படி பழகப்பழக மனதிற்கு தன் பிறப்பிடத்தில் தங்கி நிற்கும் சக்தி அதிகரிக்கின்றது.
(விசாரித்தல் / விசாரணை - தற்கவனம் - தன்னாட்டம் - தன்னை நாடுதல் - நான் என்னும் நம் தன்மையுணர்வின் மேல் நம் கவன ஆற்றலை வைத்திருத்தல்.)
கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽
திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽
Saturday, September 21, 2019
இவ்வுலகில் வாழ்வது எங்ஙனம்?
Tuesday, March 19, 2019
திருக்குறளை ஆரியர்கள் திரிக்கிறார்களாம்! இவர்கள் வினவுகிறார்களாம்!!
https://www.vinavu.com/2018/12/25/brahmanism-interpretting-thirukural-opinion/
👊 வினவ வேண்டியது தான். மொத்த இந்து சமயமும் தமிழர்களுடையது தான். அதற்கு மேல் ஆரியப் போர்வையைப் போர்த்தி விட்டு தங்களது என்று அவர்கள் காலரைத் தூக்கி விட்டுக் கொள்வதை வினவ வேண்டியதுதான். இதே போன்று சர்ச்சியர்களை வினவுவார்களா?
👊 2,300 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த வள்ளுவப் பெருந்தகையை 2,000 ஆண்டுகளுக்குள் வாழ்ந்த தோமையரோடு இணைத்ததுப் பற்றி வினவுவார்களா?
👊 நம் புண்ணிய பாரத மண்ணிற்கே வராமல், இத்தாலியிலேயே வாழ்ந்து இறந்த தோமையர், வள்ளுவருடன் மேற்கு தொடர்ச்சி மலைகளில், ஏ.ஆர். ரகுமானின் முஸ்தபா பாடல் பின்னணியில் ஒலிக்க சுற்றி வந்த போது, வள்ளுவருக்கு மெய்யறிவு கொடுத்தார் என்ற "சோத்துல செங்கல்" நற்செய்தியைப் பற்றி வினவுவார்களா?
👊 நமது #திருக்குறள், மறை நூல்கள் மற்றும் அவர்களது மெய்யறிவாளர்கள் அருளியது என எல்லாவற்றையும் அரைவேக்காட்டாக ஒரு புத்தகத்தில் பதிவு செய்து விட்டு, அந்த அரைவேக்காடுப் புத்தகத்திலிருந்து தான் நமது திருக்குறளும் மற்றும் அனைத்து மறை நூல்களும் தோன்றின என்ற "சோத்துல பாறாங்கல்" நற்செய்தியைப் பற்றி வினவுவார்களா?
👊 குறுக்கையில் அறையப்பட்டிருந்த போது ஞானி யேசு பேசிய சொற்களில் சில தமிழ் சொற்களும் இருக்கின்றன என்று சொன்னால் (அதாவது, அவர் இங்கு வந்து தமிழும் கற்றுக் கொண்டு திரும்பியுள்ளார் என்று சொன்னால்) தமிழை உருவாக்கியதே அவர் தான் என்று "தீர்ப்பை மாற்றிச் சொல்லும்" சுவிசேஷத்தைப் பற்றி வினவுவார்களா?
👊 "கற்றதனால் ஆய பயனென்கொல் #வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்" என்ற திருக்குறளில் வரும் வாலறிவன் (1) என்பது இறைவனை அல்லது இறையை உணர்ந்து இறையாகவே உள்ள மெய்யறிவாளர்களைக் (ஞானிகளைக்) குறிக்கும் என தொல் ஆசிரியர்கள் அனைவரும், இன்றைய ஆசிரியர்கள் சிலரும் பொருள் கூறியுள்ள போது, வேண்டுமென்றே "தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளர்" (2) என்று திரித்து பொருள் கூறிய பகுத்தறிவைப் பற்றி வினவுவார்களா?
அந்நிய மதத்தினரும், தேச விரோத சக்திகளும், அமெரிக்க சி.ஐ.ஏ. போன்ற உளவு அமைப்புகளும் வீசிய பொரைகளைக் கவ்விக் கொண்டு, தெரு சந்திப்பில் நின்று கொண்டு, எதுகை மோனையுடன் இந்து சமயத்தை எதிர்த்து குளைத்ததை மக்கள் ரசித்தது ஒரு காலம். இன்று "திருச்சி குலுங்கியது" என்று கிராஃபிக்ஸ் வேலை தான் செய்யவேண்டும்!!
👊👊👊👊👊👊👊👊👊👊
குறிப்புகள்:
1. வா என்பது வெளிவருவதைக் குறிக்கும். வால் என்பது உடலிலிருந்து முளைத்த ஒன்றைக் குறிக்கும். உடல் இல்லாமல் வால் இல்லை. ஆனால், வால் இல்லாமல் உடலால் இயங்க முடியும். இது போன்றது தான் நாம் காணும் உலகம். பரம்பொருளில் இருந்து முளைத்த வால் போன்றது இவ்வுலகம். பரம்பொருள் இல்லாமல் உலகமில்லை. ஆனால், உலகமில்லாமல் பரம்பொருள் இருக்கும். இந்தப் பரம்பொருளிலிருந்து (மெய்யிலிருந்து) உலகம் தோன்றுவதை உணர்ந்தவர்களை - வாலை அறிந்தவர்களை - வாலறிவர்கள் என்றனர்!! வால் முளைப்பது மெய்யிலிருந்து. மெய்யாகவே இருப்பவர்களால் தான் வாலை உணரமுடியும். ஆகவே, இவர்களை மெய்யறிவாளர்கள் (ஞானியர்) என்றனர்!! 🌸🙏
இவ்விளக்கத்தின் உருவ வடிவம் தான் திருவரங்கம் அரங்கநாதப் பெருமான். 🌸🙏 பெருமான் தொழிலற்ற பரம்பொருளைக் குறிக்கிறார். பெருமானின் தொப்புளில் இருந்து வால் போன்று கிளம்பும் தாமரையும், அதன் மேல் அமர்ந்திருக்கும் நான்முகனும் உலகைக் குறிப்பர்.
2. இவர்களது அகராதியில் "அறிவில் மூத்த பெருந்தகையாளர்" எனில்...
- 10 வயதில் ஆசிரியையின் இடுப்பைக் கிள்ளியதற்காக செருப்படி வாங்கியவர்,
- வளர்த்த மகளையே மணந்தவர்,
- அக்காள் மகளை வைத்து தொழில் செய்தவர்,
- திருட்டுத்தனமாக தொடர்வண்டியில் பயணித்தவர்,
- மகளின் தோழியை மடக்கியவர்,
- இலட்சக்கணக்கான தமிழர்கள் மடிந்து கொண்டிருக்கும் போது காப்பாற்றுகிறேன் பேர்வழி என்று மெரினாவில் படுத்துக் கொண்டு காற்று வாங்கியவர்
மற்றும் இது போன்ற அறிவார்ந்த செயல்களை செய்தவர் என்று பொருள். 😛
Friday, March 24, 2017
சட்ட வல்லுநர் திருவள்ளுவர்
மொழி, சமயம் ஆகிய இவ்விரண்டுத் துறைகளை தவிர மற்றனைத்திலும், "நாம் ஒன்றுமில்லை. முட்டாள்கள். பரங்கி மத தேவர்களாகிய வெள்ளையர்கள் வந்த பின்னர் தான் நமக்கு பல் துலக்கவே தெரிந்தது." என்று தானே நம் தலையில் ஏற்றியிருக்கிறார்கள். 😠 இன்னமும் "பரங்கி பொறுக்கி வாஸ்கோட காமா தான் இந்தியாவைக் கண்டு பிடித்தான்" என்று ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள். 😡 சட்டத்துறை மட்டும் விதிவிலக்கா என்ன?
சிறு வயதிலேயே சிறப்பான தீர்ப்பை அளித்த கரிகாலனோ, "தவறாக தீர்ப்பை அளித்துவிட்டோம்" என்றுணர்ந்த உடனேயே உயிரை விட்ட ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனோ, புறாவிற்காக தொடையின் சதையை அறுத்துக் கொடுத்த சிபி சக்ரவர்த்தியோ, பசுவிற்கு செவி மடுத்த மனுநீதி சோழனோ இந்த லார்ட் லபக்குதாஸுகளுக்கு (#) முன் எம்மாத்திரம்? 😛😜😝
(# - லபக்குதாஸ் என்ற பரங்கி ஒரு நடமாடும் கலைக்களஞ்சியம். கண்டதையும் தெரிந்து வைத்திருப்பான். குத்திக் காட்டவும், எதுகை மோனைக்காகவும் இவன் பெயரை உபயோகப்படுத்தினேன்.)
(இணைப்பு: தினமலர் - சென்னை - 19/03/2017)
Saturday, July 2, 2016
இவர்களெல்லாம் திருந்தப் போவதேயில்லை!! 😡

(தினமலர் - சென்னை - 02/06/2016)
ஜாதி என்ற வார்த்தையின் நேர்பெருள் "தன்மை". தொழிலை அடிப்படையாகக் கொண்டதை பிறப்பின் அடிப்படையாக மாற்றியவர்கள் இவர்களே! 😠
🌋 தான் ஞானமடைந்தது மட்டுமல்லாமல், தான் அடைந்த நிலையை அனைவரும் அடையலாம் என்று முழங்கியதோடு நிற்காமல், தான் அடைந்த வழியை அனைவருக்கும் திறந்துவிட்டு, ஒரு ஞானப் புரட்சி செய்த பகவான் ஸ்ரீகிருஷ்ணர் என்ன ஜாதி?
🌋 ஒரு வேதத்தை சரியாகக் கற்பதே பிரம்ம பிரயத்தனம் எனும் போது, அனைத்து வேதங்களையும் கற்றுத் தெளிந்து அவற்றைப் பிரித்து, பின்னர் அது அனைவருக்கும் சென்று சேரவேண்டும் என்ற உயரிய எண்ணத்தினால் பிரம்மசூத்திரம் முதல் மகாபாரதம் வரை இயற்றிய ஸ்ரீவேதவியாசர் என்ன ஜாதி?
🌋 எல்லாவற்றிற்க்கும் மேலாக இவர்கள் என்ன ஜாதி? கைபர், போலன் கனவாய்கள் வழியாக உள்நுழைந்த காட்டுமிராண்டி ஆரியர்களின் வாரிசுகள் தானே இவர்கள்? காட்டுமிராண்டி ஜாதி தானே? நம்மால், நம்மிடமிருந்தவையால் செம்மையானவர்கள் தானே இவர்கள்!
நம்மிடமிருந்து எடுத்துக் கொண்டதையாவது நல்லபடியாக வைத்துக் கொள்ளத் தெரிந்ததா? இல்லை. குப்பையாக்கினார்கள். 😛 சீர்திருத்த பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தேவைப்பட்டார். மீண்டும் குப்பையாக்கினார்கள். 😜 இம்முறை பகவான் புத்தர் வந்துதித்தார். அவர் மறைவுக்கு பின்னர் அவருடையதும் குப்பையானது. இவர்களும் குப்பையானர்கள். 😝 மீண்டும் சீர்திருத்தம் ஆதிசங்கரர் வடிவில் நடந்தது. அவர் மறைந்த உடனேயே குப்பையாக்கும் வேலையை மீண்டும் ஆரம்பித்தார்கள். அதன் பின்னர் வலுவான பேரரசுகள் அமையாததினாலும், தொடர்ந்த படையெடுப்புகளாலும் இன்று வரை பெரிய சீர்திருத்தம் நடைபெறவில்லை.
ஆக, குப்பைக்காரர்களுக்கு இடையே நம் வள்ளுவப் பெருந்தகை நின்று மண்டை காயவேண்டுமா என்று நாம் தான் முடிவு செய்யவேண்டும்!! 😎
என்னை பொறுத்தவரை கங்கையம்மனை விட நம் காவரித்தாய் மேலானவர்! என்னுடைய அளவுகோல்: கங்கை நதி நெடுக எத்தனை மகான்களின் சமாதிக் கோயில்கள் உள்ளன? காவிரி நதி நெடுக எத்தனை உள்ளன? 💥💥😘
கணக்கிட்டால், நம் காவிரித்தாய் வேறெந்த நதியும் நெருங்க முடியாத தூரத்தில் இருப்பார். அத்தனை மகான்கள் உருவாகக் காரணமான புனிதமான காவிரித்தாயின் மடியில் வைத்து அழகு பார்ப்போம்!! 👍👍👍
(பி.கு.: புனித கங்கை நதியை எவ்விதத்திலும் சிறுமைபடுத்த நான் முயலவில்லை. அவரின் புனிதத்தன்மையை அனுபவித்து உணர்ந்தவன் நான். 🙏)
posted from Bloggeroid
Saturday, March 19, 2016
கோ பூஜையின் உள்ளர்த்தம்!!

மேலே இணைக்கப்பட்டிருக்கும் செய்தியை முதலில் படியுங்கள் (தினமலர் - ஆன்மிகமலர் - சென்னை - 15/03/2016).
அதில் விளக்கியபடி கோ பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள்:
- நம் 'பெண்டு' நிமிரும்
- #சாணம் கிடைக்கும் - மாடு மிரள்வதால்
- நீலத்தடி நீர் மட்டம் குறையும்
- சுற்றுப்புற சூழல் கெடும் - இன்று மஞ்சள், குங்குமம், பூ சாகுபடி என அனைத்திலும் அளவுக்கதிகமான ரசாயனங்கள் உபயோகிப்பதால்
😂😂😂
வேறு புண்ணியம் ஏதும் கிடையாது.
வசதியில்லாதோர் இதை செய்யப் போவதில்லை. வசதிபடைத்தோரும் பயம், குடும்ப பாரம்பரியம், சமூக அந்தஸ்து போன்ற காரணங்களுக்காகத்தான் இதைச் செய்வர். அவர்களும் நேரடியாக செய்யப் போவதில்லை. 'மம' சொல்லிவிட்டு வாத்யாரிடம் ஒப்படைத்துவிடுவர்.
பிறகென்ன, வாத்யார் சிறப்பாக பூஜை செய்கிறாரா என எஜமானனும், எஜமானன் மனம் குளிர்ந்தாரா என வாத்யாரும் "பூஜையில்" முனைப்புடன் ஈடுபட்டிருப்பர். இருவருக்கும் புண்ணியம் சேர்த்தாற் போலத்தான்!! 😀
கோ பூஜை விளக்கத்தில் உள்ள மிக முக்கியமான செயல் பசுமாட்டின் பின்புறத்தைத் தொட்டு வணங்குவது. அங்கே மகாலஷ்மி வாசம் செய்வதாகக் கூறுவர்.
அங்கே மகாலஷ்மியா வாசம் செய்கிறார்? சாணமல்லவா வாசம் செய்கிறது!
சாணமே செல்வம்!!
சாணமே மகாலஷ்மி!!!
பசுஞ்சாணத்தில் கோடானகோடி நுண்ணுயிரிகள் வாசம் செய்கின்றன. அதை நிலத்தில் இடுவதால் நிலம் வளம் பெறுகிறது. வளமடைந்த நிலம் அமோக விளைச்சலைத் தருகிறது. அமோக விளைச்சல் செல்வமாகிறது. அதாவது, மகாலஷ்மியாகிறது. சாணமே மகாலஷ்மியாகிறது. செல்வத்திற்கு மூலமாகிய சாணத்தைத் தரும் மாடுகளை சீதனமாகக் கொண்டு வருவதால் மருமகள் மாட்டுப்பெண் ஆனாள். அவளை "எங்க வீட்டு மகாலஷ்மி" என அழைப்பதும் இதன் அடிப்படையில் தான். இதே அடிப்படையில் தான் திருவள்ளுவர் செல்வத்தையும் மாட்டையும் சமமாக்கி எழுதினார். 👍👌👏
(சாணம், நுண்ணுயிரி பற்றிய விரிவான விளக்கத்திற்கு - https://plus.google.com/+SaravananG_Enum_Dhasaman/posts/No1Tpyzsqgf)
இப்பேருண்மை காலத்திற்கும் காப்பாற்றப்பட வேண்டியது, போற்றப்பட வேண்டியது, வாழையடி வாழையாக எடுத்துச் செல்ல வேண்டியது. செழிப்பான குடும்பங்கள் செழிப்பான சமூகத்திற்கும், செழிப்பான சமூகங்கள் செழிப்பான நாட்டிற்கும் அடிப்படை. இத்தனை செழிப்பிற்கும் அடிப்படை பசுஞ்சாணம், அது தரும் பசுமாடுகள். ஆகையால், கோ பூஜைக்கு இவ்வளவு முக்கியத்துவம்.
ஆனால், இத்தனை படிகளை சொன்னால் அதன் மதிப்பு வேண்டுமானால் உயரும். அனைவரையும் சென்று சேராது. அனைவரையும் சென்றடையும் வகையில் எளிதாக்கினால் மதிப்பு போய்விடும். ஆகையால், இருவருக்கும் ஏற்றவாறு விளக்கமளிக்கலாம்.
சுவாமி சிலைகளை வணங்குவது போன்றது தான் பசுவின் பின்புறத்தைத் தொட்டு வணங்குவது. சிலையை வணங்குதல் என்பது அந்தச் சிலை உணர்த்தும் உண்மைகளை நினைத்துப் பார்த்தல், சிந்தித்தல், மதித்தல், செயல்படுத்துதல் மற்றும் அப்பேருண்மையாகவே ஆகுதல் (சாயுஜ்யம் அடைதல்).
அங்ஙனமே, பசுவின் பின்புறத்தைத் தொடுதல் என்பது சாணத்தைப் பற்றிய மேற்கூரிய உண்மைகளை நினைத்துப் பார்த்தல், சிந்தித்தல், மதித்தல் மற்றும் செயல்படுத்துதல்.
"யாவர்க்குமாம் பசுவிற்கொரு வாயுறை" -- திருமந்திரம்
posted from Bloggeroid