Friday, September 17, 2021

திருத்தலங்களில் நாம் என்ன செய்யவேண்டும்?

சனாதன தர்மம் எனில் பூஜை, விரதம், ஹோமம், தர்ப்பணம், திதி, யாத்திரை, அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை என்று நினைத்துக்கொண்டிருந்த ஒரு நபருக்கு, திருவாலங்காடு திருத்தலத்திலிருக்கும் திரு இரத்தின சபையை மட்டும் வைத்து நம் சமயத்தைப் பற்றி சிறிது விளக்க முற்பட்டேன். அதன் தொகுப்பே இந்த இடுகையாகும். மேற்சொன்ன "நம்பிக்கைகளுடன்" ஆரியம் பேசினாலே மேன்மையானவராக ஆகிவிடுவோம் என்றொரு "நம்பிக்கையும்" அவரிடம் இருந்தது! 🤭

(தமிழ் அர்ச்சனை அரசாணையை எதிர்த்து பலர் வழக்குத் தொடுத்திருக்கிறார்களாம். அவர்களில் ஒருவர், "சிவபெருமானுக்கு தமிழ் தெரியாது. ஆகையால், தமிழில் அர்ச்சனை செய்யக்கூடாது" என்று வாதிட்டுள்ளாராம்!! 😂😂🤣)

oOOo


பல ஆண்டுகளுக்கு முன்னர் திருவாலங்காடு திருத்தலம் சென்றிருந்தேன். அங்குள்ள இரத்தின சபையின் வடிவமைப்பு பின்வருமாறு இருக்கும்:

+----------------------------------------+
|                                                |
|                                                |
|                                                |
|          +------------------+            |
|          |    @ @ @     |            |
|          |                      |            |
+--------+                      +----------+

@ - திரு பேயார் எனும் காரைக்கால் அம்மையார், திரு இரத்தின சபாபதி (ஊர்த்துவதாண்டவப் பெருமான்) மற்றும் திரு அருகிலிருந்து வியந்த அம்மை (சமிசீனாம்பிகை)

🌺🙏🏽🙇🏽‍♂️

சபையை கவனித்தவாறே வலம் வந்துவிட்டு, அங்கிருந்த ஆரியப்பூசாரியிடம் கேட்டேன், "சிலைகளுக்கு பின்னாலுள்ள இடத்தில் என்ன உள்ளது?". சற்றே துணுக்குற்ற அவர், "நீங்க சிலைங்கறேள். நாங்க சுவாமிம்போம்." என்று நிறுத்திக்கொண்டார். "சரி, இவருக்கு சிலைகள்தாம் பரம்பொருள் போலிருக்கிறது." என்று எண்ணியவாறு விலகிவிட்டேன்.

அடுத்தமுறை சென்றிருந்த போது ஓர் இளம்வயது ஆரியப்பூசாரி இருந்தார். மக்களைக் கவர வேண்டுமென்ற ஆர்வமும் வேகமும் அவரிடம் இருந்தன. அவரிடம், "உள்ள 3 சுவாமிங்க இருக்காங்க. ஆனா, சபை பெரிசா இருக்கே. பின்னாடி என்ன இருக்கு?" என்று கேட்டபோது, "உள்ளே, சிவபெருமான் நடனமாடிண்டிருக்கா. காரைக்கால் அம்மையார் பாத்து ரசிச்சிண்டிருக்கா." என்று தொன்மவழியில் பெருமையுடன் பதில் கூறினார். 😊 அவர் சொன்ன பதிலின் ஆழத்தை அவர் அறிந்திருக்கவில்லை.

பின்னர், வேறு வழிகளின் மூலம் நான் தெரிந்துகொண்டதும் & உணர்ந்துகொண்டதும்:

☀️ இரத்தின சபை என்பது திரு பேயார் மற்றும் இன்னொரு பெருமானின் ஜீவசமாதித் தொகுப்பாகும். பெயர் தெரியாத அப்பெருமான் 🌺🙏🏽🙇🏽‍♂️ பேயாருக்கும் மூத்தவர். பேயார் சமாதியடைந்த பின், அப்பகுதியை ஆண்ட மன்னர், இரு சமாதிகளையும் சுற்றி சபையை எழுப்பியுள்ளார். ஆனால், ஓர் அடையாளத்தை மட்டும் வைத்துள்ளார்.

☀️ பேயாரின் திருவுருவம் அவரை மட்டும் குறிக்கும். ஆனால், அம்மையப்பரின் திருவுருவங்கள் இரண்டாக இருந்தாலும் அவற்றை இணைத்து ஒன்றாகக் கருதவேண்டும். இத்திருவுருவங்கள் உள்ளே சமாதியிலிருக்கும் இருவரது நிலையையும் குறிக்கும். அது என்ன நிலை?

☀️ அம்மை என்பது நம் உடல் முதல் நம் கண் முன்னே விரியும் உலகனைத்தையும் குறிக்கும். அப்பன் என்பது நான் எனும் நமது தன்மையுணர்வைக் குறிக்கும். 

☀️ எவ்வளவு முயன்றாலும் உலகை (காளியை - அம்மையை) வெல்லமுடியாது. வெல்வதற்கு ஒரே வழி நம் கவன ஆற்றலை நம் மீது (நம் தன்மையுணர்வின் மீது - அப்பன்) திருப்புவது ஒன்றே. பெருமான் தனது காலை உயர்த்தி தனது காதணியை தானே கழட்டுவது என்ற சித்தரிப்பின் பொருள் இதுவே.

☀️ இந்த உத்தியை தன்னாட்டம் (ஆத்ம விசாரம்) என்றழைக்கிறார் பகவான் திரு ரமண மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️.

🔹யாருக்காக இவ்வளவு செய்திகளையும் பெயர்கள், உருவங்கள், கோயிலின் அமைப்புகள், பாடல்கள், தல வரலாறுகள் போன்றவற்றின் மூலமாக பதிவு செய்துவிட்டுச் சென்றுள்ளனர் நம் முன்னோர்கள்? நமக்காக. இனி வரும் தலைமுறையினருக்காக.

🔹எதற்காக பதிவு செய்துள்ளனர்? பேருண்மைகளை நாம் உணர்வதற்காக. பிறவிக் கடலிலிருந்து கரையேறுவதற்காக.

🔹ஆனால், என்ன நடந்திருக்கிறது? அபிஷேகம், அலங்காரம், லட்சார்ச்சனை, உற்சவம், சிறப்பு யாகம், அஷ்டபந்தன கும்பாபிஷேகம்...

🔹பேயார் என்ன செய்திருக்கிறார் திருத்தலத்தில்? வடக்கிருந்திருக்கிறார். 

🔹எனில், நாம் என்ன செய்யவேண்டும்? நாமும் வடக்கிருக்கவேண்டும். 

🔹ஆனால், என்ன செய்கிறோம்? அர்ச்சனை, சிறப்பு தரிசனம், பிரசாதம், நேர்த்திக்கடன்...

🔹வடக்கிருக்க வேண்டிய திருத்தலங்கள் சுற்றுலாத் தலங்களாக, அருங்காட்சியகங்களாக, சிறப்பு பொருளாதார மண்டலங்களாக மாற்றப்பட்டுவிட்டன.

🔹என்றுமே நமது திருத்தலங்கள் இப்படித்தான் இருந்தனவா? இல்லை. என்றுமே அங்கு நடந்து கொண்டிருந்த நிகழ்வு ஒன்றுதான்: வடக்கிருத்தல். இன்று இது தவிர மற்றனைத்தும் நடக்கின்றன. கடந்த 1800 ஆண்டுகளாக வடக்கிலிருந்தும், வெளியிலிருந்தும் நிகழ்ந்த மத & அரசியல் படையெடுப்புகளால் நாம் இழந்தவைகளில் மெய்யறிவியலும் ஒன்று. 

முகம்மதியர்களின் கத்திக்காகவும், கிறித்தவர்களின் மூளைச்சலவையாலும்தான் நம் முன்னோர்கள் மதம் மாறினர் என்று நம்மில் பெரும்பாலானோர் நம்பிக்கொண்டிருக்கிறோம். இன்னொரு முக்கிய காரணமும் இருக்கிறது. திருவிசயநல்லூர் திரு ஸ்ரீதர அய்யாவாள் 🌺🙏🏽🙇🏽‍♂️ வரலாற்றில் அக்காரணம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

சனாதன தர்மம் என்ற சொற்களுக்கு பல பக்கங்களைத் தாண்டும் மேன்மையான விளக்கம் இருக்கலாம். ஆனால், நடைமுறையில்?

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலக மெல்லாம் 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Saturday, September 11, 2021

அக்ஷரமணமாலையின் காப்புச் செய்யுளுக்கு மாற்று விளக்கம்


அருணாசல வரற்கேற்ற அக்ஷரமண மாலைசாற்றக் 
கருணாகர கணபதியே கரமருளிக் காப்பாயே!!

-- அக்ஷரமணமாலை பாடலுக்கு பகவான் திரு ரமண மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️ எழுதிய காப்புச் செய்யுள்

பொருள்: அருணாசல வானவனுக்கு ஏற்ற எழுத்துக்களால் ஆன பாமாலையை நான் சாற்ற/இயற்ற கருணைக் கடலான கணபதி பெருமானே உனது திருக்கரம் கொடுத்து என்னைக் காக்க வேண்டுகிறேன்.

பகவான் மேற்சொன்ன பொருளில் அன்புவழிக்கேற்ப பாடியிருந்தாலும் அவரது மெய்யறிவு வழிக்கேற்ப சற்று மாற்றிப் பார்த்தேன்.

🔹அருணாசல வானவன் - உள்ளபொருள்

🔹எழுத்து - இதற்கு பல பொருள்கள் உள்ளன. சித்திரம் என்பதும் ஒரு பொருளாகும். நமது வாழ்வும் ஒரு சித்திரமாகும். எனில், சாற்ற/இயற்ற என்பதை "வாழ" என்று கொள்ளலாம்.

இவற்றை வைத்து மேற்கண்ட பொருளின் முற்பகுதியை "உள்ளபொருளுக்கு ஏற்ற வாழ்வை நான் வாழ" என்று மாற்றலாம். அதென்ன உள்ளபொருளுக்கு ஏற்ற வாழ்வு? உள்ளபொருளை அடைவதற்கேற்ற வாழ்வு. உள்ளபொருளாய் சமைவதற்கேற்ற வாழ்வு.

உள்ளபொருளாய் சமைவதெப்படி?

இதற்கு பகவானின் உள்ளது நாற்பதிலும், உபதேச உந்தியாரிலும் விடைகள் உள்ளன:

🌷 உள்ளத்தே உள்ளபடி உள்ளதே உள்ளல்
🌷 தானாய் இருப்பதே தன்னை அறிதல்

அதாவது, நமது தன்மையுணர்வை விடாது பற்றவேண்டும்.

அடுத்து, கணபதி கடவுள். இவர் நமது அறிவைக் குறிப்பவர். இவரது திருக்கரம் என்பது நமதறிவை ஒன்றின் மேல் செலுத்துதல் அல்லது அறிவால் ஒன்றைப் பற்றுதல் எனக் கொள்ளலாம்.

இப்போது அனைத்தையும் இணைத்தால்: உள்ளபொருளாய் சமைவதற்கேற்ற வாழ்வை நான் வாழ எனது அறிவே தன்மையுணர்வை விடாது இறுகப் பற்றுவாயாக!!

(பட்டினத்தடிகள் 🌺🙏🏽🙇🏽‍♂️ தனது நெஞ்சை நோக்கி தானே பாடுவது போன்றமைத்துள்ளேன்.)

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Saturday, September 4, 2021

"நான் இயேசுவின் தூதுவர்... 3வது நாள் நானும் உயிர்த்தெழுவேன்... சவக்குழியில்சவக்குழியில் புதைந்த பாதிரியார் பலி!!"

(https://m.dinamalar.com/detail-amp.php?id=2833095)

ஒருவிதத்தில் கிறித்தவம் பைசா நகர சாய்கோபுரம் போன்றது. கட்டிடத்தைக் கட்டத் தெரியாமல் கட்டி, அது சாயத் தொடங்கியவுடன், உலக அதிசயம் என்று கதை விட்டு இன்று வரை காசு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் பரங்கியர்கள். உண்மையில் அது "கட்டிடக்கலையின் அவமானம்" ஆகும்! 👊🏽

இது போன்றே, இஸ்ரவேலர் இயேசுவின் அறிவுரைகளை வைத்து ஒரு சமயத்தை வளர்த்தெடுக்கத் தெரியாமல், கூட்டம் சேர்த்து காசு பார்க்கும் தொழிலாக, அரசுகளை ஆட்டிப்படைக்கும் கருவியாக வளர்த்துவிட்டார்கள். மக்களை நெறிப்படுத்தும் சமயமாக இல்லாமல், மூளையை மழுங்க வைக்கும் மதமாக ஆக்கிவிட்டார்கள்! இதனால் ஏற்பட்ட பல மோசமான விளைவுகளில் ஒன்று: இணைக்கப்பட்டிருக்கும் படத்திலுள்ள நிகழ்வு - தேவையற்ற உயிர்பலி!!

கதைகளும் குறியீடுகளும் உணர்த்தும் உண்மைகளை உணராமல், அவற்றை உண்மை என்று நம்பி மக்கள் மோசம் போகிறார்கள்.

☀️ குறுக்கை - உயிரற்றதை, குறிப்பாக உடலைக், குறிக்கும். (வரலாற்றின் படி, இது ஒன்றும் மேன்மையான குறியீடு அல்ல. குற்றவாளிகளை தண்டிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட கருவியாகும்.)

☀️ குறுக்கையில் அறையப்பட்டிருக்கும் இயேசு - குறுக்கை என்பது உடல். இயேசு என்பது மனம். பல காலம் பலவித உத்திகளைக் கையாண்டு (வடக்கிருந்து) பலவீனமாக்கப்பட்டு, அடக்கப்பட்ட மனம் என்பதைக் குறிக்கவே இயேசு குற்றுயிராக, தொங்கிக்கொண்டிருப்பது போன்று சித்தரித்துள்ளனர். அதாவது, இவ்வுருவைக் கண்டதும் "எப்பாடுபட்டேனும் மனதை அட(ழி)க்கவேண்டும்" என்ற எண்ணம் ஒரு கிறித்தவனுக்குத் தோன்றவேண்டும்.

(இவ்வுருவை உருவாக்கியவர், பகவான் திரு ரமண மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️ போன்றொருவரை சந்தித்திருந்தால் சித்தரிப்பு இப்படி இருந்திருக்காது. "மனதின் உருவை மறவாது உசாவ (ஆராய) மனமென ஒன்றில்லை" என்பதை உணர்ந்து, அதற்கேற்றாற் போல் ஓர் உருவை உருவாக்கியிருப்பார்.)

☀️ உயிர்த்தெழுதல் - பல போராட்டங்களுக்குப் பின்னர் கிடைக்கும் சமாதி துய்ப்பின்போது கிடைக்கும் மெய்யறிவு. இதுவரை நம்மைப் பற்றி தவறாக புரிந்துகொண்டிருப்போம். இதன் பிறகே நாம் யாரென்று சரியாக உணர்ந்துகொள்வோம். மெய்யறிவு பெறுவதற்கு முன்னரும் சரி, பின்னரும் சரி நாம் நாம்தான். வேறுபாடு அறிவு மட்டும்தான். இதனால்தான் குறுக்கையில் அறையப்பட்டிருப்பதும் இயேசுவாகவும், உயிர்த்தெழுவதும் இயேசுவாகவும் சித்தரித்துள்ளனர். வேறுபாடு வெளிப்புறத் தோற்றம் மட்டும்தான்.

உயிர்த்தெழுதல் = மெய்யறிவு பெறுதல்.

(நல்ல வெள்ளிக்கும் உயிர்த்தெழுதல் ஞாயிறுக்கும் ஏன் 3 நாட்கள் இடைவெளி, இச்சடங்குகள் எங்கிருந்து வந்துள்ளன என்று ஆராய்ந்தால் "உயிர்த்தெழுதல்" என்பதன் பொருள் முற்றிலும் மாறுபடும். ஏன் கிறித்தவம் மேற்கண்ட பொருளில் பயன்படுத்துகிறது என்பதும் புரியும். இதை வேறொர் இடுகையில் பார்ப்போம்.)

oOOo

இஸ்ரவேலரின் இனம் பல நூற்றாண்டுகளாக ஐரோப்பியர்களிடம் அடிமையாக இருந்தது. கல்வி மறுக்கப்பட்டு பண்பாடற்று இருந்தது. இந்த இனத்தை உய்விக்கவே இயேசு பாரதம் வந்து மெய்யறிவியல் கற்றுத் திரும்பினார். பல பாடுகளும் பட்டார். ஆனால், தோல்வியடைந்தார். மீண்டும் பாரதத்திற்கே திரும்பி, காஷ்மீரத்தில் சமாதியடைந்தார். ஆனால், அவரது அறிவுரைகளோ தகுதியற்றவர்களிடம் சிக்கி உருத்தெறியாமல் போய்விட்டன.

தூக்கி எறியப்படவேண்டிய குறுக்கையை மதத்தின் சின்னமாக்கிவிட்டனர் (குறுக்கை = உயிரற்ற உடல் = பிணம் = பிணக்குறியீடு). அதில் அறையப்பட்டிருக்கும் இயேசுவைக் கண்டதும் "மனதை அழி" என்ற எண்ணம் தோன்றுவதற்குப் பதிலாக "2,000 வருசத்துக்கு முன்னாடி உன்னக் கொன்னுட்டாங்களேயா" என்று ஒப்பாரி வைக்கும்படி செய்துவிட்டனர்!!

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Thursday, August 26, 2021

நிருவாண பூசை என்றால் என்ன?

"நிருவாண பூசை நடத்தி இளம்பெண்ணை பலமுறை சீரழித்த சாமியார்! உடந்தையாக இருந்த கணவன்!!"

இந்நிகழ்வின் பின்னணியில் கணவனின் அறியாமை, இயலாமை & பொருளாசை மற்றும் சீரழித்தவனின் பெண்ணாசை & பொருளாசை ஆகிய காரணிகள் இருந்தாலும் இதற்கும் ஒரு மெய்யறிவியல் (ஆன்மிகம்) அடிப்படை உண்டு!

நிருவாணம் எனில் உடைகளைக் களைந்துவிட்டு பிறந்தமேனியாதல் அல்ல. "நான் இன்னார்" என்பதிலுள்ள இன்னாரைக் களைதலாகும். நான் ஆண்/பெண், இன்ன படித்தவன், இன்ன நிறுவனத்தில் இன்ன பதவி வகிக்கிறேன், எனது மதிப்பு இவ்வளவு ... இவற்றையெல்லாம் களைய வேண்டும்.

🔹இவற்றைக் களைய முற்படும் பணி தான் நிருவாண பூசை.

🔹அனைத்தையும் களைந்த பின்னர், மீதமிருக்கும் நான் எனும் தன்மையுணர்வாய் மட்டும் இருப்பதுதான் நிருவாண நிலை.

🔹இந்நிலையை அடைவதற்கு முன் (மேற்சொன்ன பூசையின் போது) நமக்கு கிடைக்கும் பலவிதமான துய்ப்புகள்தாம் செல்வம் (லட்சுமி) எனப்படும். இறுதியாக கிடைக்கும் மெய்யறிவு பெருஞ்செல்வமாகும் (மகாலட்சுமி).

பற்றுகளை விட விட மெய்யறிவு பெருகும். பெண்தெய்வ வழிபாட்டைப் பொறுத்தவரை சீவர்கள் அனைவருமே பெண்கள்தாம். எனவே, பெண்கள் (சீவர்கள்) நிருவாண பூசை செய்தால் (பற்றுகளை விட்டால்) செல்வம் (மெய்யறிவு) பெருகும்!!

முழுவதும் மெய்யறிவியலை அடிப்படையாகக் கொண்ட ஓர் உத்தியை எவ்வளவு தவறாக புரிந்து கொள்ள முடியுமோ அவ்வளவு தவறாக புரிந்து கொண்டுள்ளனர். அல்லது, எவ்வளவு தப்பாக பயன்படுத்த முடியுமோ அவ்வளவு தப்பாக பயன்படுத்துகின்றனர். என்ன செய்வது, ஈனவெங்காயங்கள் எல்லாத்துறைகளிலும் பிறக்கத்தானே செய்கின்றன! (ஈனவெங்காயம் - கோணல் புத்தியுடையவன்; சாக்கடை 👊🏽)

நாம் பரவாயில்லை என்றுதான் சொல்லவேண்டும். இங்கு ஈனவெங்காயங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பிறக்கின்றன. மறைந்து தொழில் செய்கின்றன. ஆனால், ஒரு மதமே இப்படியுள்ளது! அங்கு இந்த அநீதியை செய்பவர்கள் துணிவுடன், வெளிப்படையாக, நீதிமன்றங்களின் ஆதரவுடன் செய்கிறார்கள்!!

oOOo

ஒரு பெண்ணைக் கற்பழித்துவிட்டு, அவளது அழகுதான் தன்னை கற்பழிக்கத் தூண்டியது என அவள் மீதே பழியை போடுவான். புண்ணாக்கு நீதிபதியும் இந்த வாதத்தை ஏற்று, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தண்டனையளிப்பான்!

இதற்கும் அடிப்படை மெய்யறிவியல்தான்!!

உலகில் நடக்கும் யாவற்றிற்கும் காரணம் மனம். மனதை பெண்ணாகக் கருதுவது மரபு (நம் சமயத்தில், அன்னை மாயை/காளி) (வைணவம் மாயக்கண்ணன் என்றழைத்தாலும் அடிப்படை பெண்தன்மைதான்.) அழகாகவிருக்கும் ஒரு பெண்ணைத் துய்க்கவேண்டும் என்ற எண்ணத்தை தோற்றுவிப்பது மனம் (பெண்) என்பதால் தனது செயலுக்கு பெண்தான் காரணம் என்று வாதிடுவான். உண்மையில் இவனுக்குள்ளிருக்கும் பெண்தான் (இவனது மனம்) தண்டிக்கப்படவேண்டும். மனம் சொன்னால் அப்படியே கேட்டுவிடுவதா? சீர்தூக்கிப் பார்த்து செயல்பட வேண்டிய புத்தி எங்கே போயிற்று?

கேட்டால், பெண் என்ற படைப்பே புணருவதற்குத்தான் என்பான். பெண்ணைக் கண்டதும் புணரும் எண்ணம் தோன்ற வேண்டும் என்பதற்காகத்தான் அவளுக்கு கருப்பு ஆடை கொடுக்கப்பட்டிருக்கிறது என்பான் (அம்மதத்தில், கருப்பு ஆடை போர்த்திக்கொண்டிருக்கும் பெண் பெண்குறிக்கு சமம்).

கருப்பு ஆடை போர்த்தியிருக்கும் பெண்ணைக் கண்டால் புணரும் எண்ணம் தோன்றவேண்டுமென்று ஈனவெங்காயம் கூட சொல்லியிருக்காது. எனில், உண்மையான பொருள்தான் என்ன?

கருப்பு என்பது அன்னை மாயையைக் குறிக்கும் (கருப்பாயி - கருப்பு + ஆயி - காளி). நம் மனதில் தோன்றும் எண்ணம் முதல் நம் கண் முன்னே விரியும் உலகக்காட்சிகள் யாவற்றுக்கும் இவர் தான் காரணம். நம் மனதில் ஓர் எண்ணம் தோன்றிவிட்டால் அதன் பின்னே சென்றுவிடக்கூடாது. நம் கண் முன்னே தோன்றும் உலகக் காட்சிகளில் சிக்கிக் கொள்ளக்கூடாது. இவை நடந்தால், உடனடியாக, நமது கவனத்தை நம் மீதே திருப்பிக்கொள்ளவேண்டும். இதற்குத்தான் ஓர்தல் / [தன்னைத்தான்] புணருதல் என்று பெயர்.

கருப்பைக் கண்டால் (எண்ணம் தோன்றினால், உலகத்திற்குள் கவனம் சென்றால்) ஓர்ந்துவிடவேண்டும் (கவனத்தை நம் மீது திருப்பவேண்டும்)!!

எளிமையான இவ்வறிவுரை தாெடக்கத்தில் கண்ட நிருவாண பூசையை விட மிகவும் திரிந்துபோய் / திரிக்கப்பட்டு பெண்ணடிமைத்தனத்தில் முடிந்துள்ளது. 😔

oOOo

இருப்பது ஒரு பொருள்தான். அதுவே யாவுமாகியுள்ளது. நிலைத்த பொருளும் அதுவே. நிலையில்லாத பொருளும் அதுவே. எப்போது ஒன்றை ஆண் என்றும், மற்றொன்றைப் பெண் என்றும் அழைக்கத் தொடங்கினார்களோ அப்போதே ஈனவெங்காயங்களுக்கும், காட்டுமிராண்டிகளுக்கும் வித்திட்டுவிட்டனர்! 😔

oOOo

நம் மண்ணும், நம் மண்ணின் மைந்தர்களும் எவ்வளவு தூரம் பண்பட்டவர்கள் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு:

உலகக்காட்சி பற்றி பகவான் திரு ரமண மாமுனிவரிடம் 🌺🙏🏽🙇🏽‍♂️ ஓர் அன்பர் கேட்டார்: உலகக் காட்சி என்பது எதற்காக?

பகவானின் பதில்: [அதைக்] காண்பான் என்றொருவன் இருப்பதை உணருவதற்காக!!

👏🏽👏🏽👏🏽👌🏽🙏🏽😍

oOOo

தன்னை உபாதிவிட்டு ஓர்வது தான் ஈசன்
தன்னை உணர்வதாம் உந்தீபற
தானாய் ஒளிர்வதால் உந்தீபற

-- உபதேச உந்தியார் #25

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Sunday, August 22, 2021

உண்மைக்காகவும் தமிழுக்காகவும் போராடுபவன் அசுரனா?

"என்னுடைய மதம்தான் சிறந்தது என்பவன் அசுரன்"

"மற்ற மதத்தின் மேல் உனக்கு அன்பு தோன்றவில்லையென்றால் நீ சைவனல்ல"

சில நாட்களாக இப்படிப்பட்ட செய்திகளே எந்த சமூக வலைதளத்திற்குள் சென்றாலும் என் கண்ணில் படுகிறது. இவை யாருடைய திருப்பணி, கைங்கர்யம், சேவை, ஊழியம், இறைத்தொண்டு என்று தெரியவில்லை. அல்லது, எதேச்சையாக தோன்றுகின்றனவா என்றும் தெரியவில்லை.

எப்படியானாலும் எனது பதில் பின்வருமாறு:

🔹அசுரன் எனும் ஆரியச் சொல்லின் பொருள்: காணும் உலகை உண்மை என்று கருதுபவன்.

🔹சைவன் எனும் தமிழ்ச் சொல்லின் பொருள்: உள்ளும் புறமும் இணைந்தவன். அதாவது, தான் வேறு தான் காணும் உலகம் வேறு என்று காணாதவன். உலகம் என்பது திரை போன்ற தன்னில் தோன்றும் காட்சி போன்றது என்பதை உணர்ந்தவன்.

இந்த விளக்கங்களைக் கொண்டு பார்த்தால் மெய்யறிவு பெற்றோர் மட்டுமே சைவர்களாவர்! மீதமுள்ள அனைவரும் அசுரர்கள் ஆவர்!! ☺️

சைவம் = சிவம் = உள்ள பொருள் = உண்மை. இதை வைத்து தொடக்கத்தில் கண்ட செய்திகளை மாற்றியமைத்தால்...

> உண்மைதான் சிறந்தது என்பவன் அசுரன்!
> பொய்களின் மேல் உனக்கு அன்பு தோன்றவில்லையென்றால் நீ சைவனல்ல!!

😂

அடுத்து, திருஞானசம்பந்தப் பெருமானை 🌺🙏🏽🙇🏽‍♂️ எடுத்துக்கொள்ளவும். அன்று அவர் வடக்கிலிருந்து வந்த வெட்கங்கெட்ட சமணர்களையும், நம்மை மொட்டையடித்துக் கொழுத்துக் கிடந்த பெளத்த மொட்டைகளையும் விரட்டியடிக்காமல் போயிருந்தால் இன்று நம் தமிழ், சைவம், ஏனைய அடையாளங்கள் மற்றும் நமது வளங்களை என்றோ இழந்திருப்போம். நம்மைக் காப்பாற்றிய பெருமான் அசுரரா? அன்பில்லாதவரா?

(பெருமானோடு என்னை ஒப்பிட்டுக்கொள்ளவில்லை. அவரது கால் தூசியில் ஒரு இம்மியளவு பங்கிற்குக் கூட நான் சமமாகமாட்டேன். பொய்களை, பொய்யர்களை எதிர்ப்பது சரி என்பதை உணர்த்தவே பெருமானது திருப்பணியைப் பற்றிக் குறிப்பிட்டேன்.)

oOo

பகவான் திரு ரமண மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️ உடல் தாங்கியிருந்த ஒரு சமயம், அவரது ஆச்சிரமத்தில் அமர்ந்திருந்த அன்பர்களிடையே, இவ்வுலகத்திற்கு பகவானது தேவையைப் பற்றிய பேச்சு வந்தது. அப்போது அங்கிருந்த திரு முருகனார் சுவாமிகள் 🌺🙏🏽🙇🏽‍♂️, "இன்னும் 300 ஆண்டுகள் கழித்து இவ்வுலகத்திற்கு பகவான் இன்றியமையாதவராகிவிடுவார்" என்று அருளினார்!

இந்நிகழ்வு என்று நடந்தது என்று எனக்கு நினைவில்லை. இறுதி காலத்தில் என்று வைத்துக்கொண்டால் கூட, பகவானது உடல் மறைந்து இன்று 71 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் 229 ஆண்டுகள் உள்ளன.

இன்னொரு சமயம், பகவான், "எதிர் காலத்தில், திருவண்ணாமலை பெருநகரமாக மாறிவிடும். வானளாவிய கட்டிடங்கள் தோன்றிவிடும்." என்று அருளினார்.

திரு ராமச்சந்திர மகராஜ் என்ற மெய்யறிவாளர் 🌺🙏🏽🙇🏽‍♂️, "இன்னும் சில நூற்றாண்டுகளில் பாலைவன மதங்களில் ஒன்று முற்றிலுமாக வேரறுக்கப்பட்டு பூமியிலிருந்து தூக்கி எறியப்படும்." என்று அருளியிருக்கிறார். (அம்மதத்தின் பெயரை அவர் நேரடியாக குறிப்பிட்டுள்ளார். நான் இங்கு எழுதவில்லை.)

இந்நிகழ்வுகளை வைத்துப் பார்க்கும் போது, இன்னும் மோசமான காலங்கள் வரும். பாலைவன மதங்களின் அட்டூழியம் பெருகும். பின்னர், ஒரு திருப்புமுனையும் வரும். ஒன்று அழிந்துபோகும். இன்னொன்று நம் சைவத்திற்குள் அடங்கிவிடும். இங்கு மண்டியிருக்கும் நச்சு முட்புதர்களும், பதர்களும் காணாமற்போகும். எல்லா மலங்களும் நீக்கப்பெற்ற தமிழும் (அன்னையும்) சைவமும் (அப்பனும்) நம் முன்னோரை வழிநடத்திக் காத்தது போன்று நம்மையும் காத்திடுவர்.

oOOo

என்றும் வாய்மையே வெல்லும்! 💪🏽

மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலக மெல்லாம் 🌺🙏🏽🙇🏽‍♂️

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Wednesday, August 18, 2021

சைவத்தின் மீது தற்போது வீசப்பட்டுள்ள கல்: ஆப்கானிஸ்தான், சரியத் & முகம்மதியம் இவற்றிலிருந்து நமது கவனத்தை திசை திருப்புவதற்காக!!

உலகின் கவனம் தற்போது ஆப்கானிஸ்தான் மீதுள்ளது. அங்கு மீண்டும் அரங்கேறும் தாலிபானின் அட்டூழியங்களால் அன்பு மார்க்கத்தின் மீதுள்ள மதிப்பும் மரியாதையும் இறங்குமுகமாகிவிட்டது (ஏற்கனவே ஏதே உச்சத்தில் இருந்தது போல 😏). இதை தடுக்க, உலகின் கவனத்தை ஆப்கானிஸ்தானிலிருந்து மாற்ற, தமிழ்நாட்டில் அரங்கேற்றப்பட்டுள்ள இறைத்தொண்டுதான் சைவம்-பௌத்தம்-நாகர்கள் பிட்டு!

எப்போதெல்லாம் நாசகார & நயவஞ்சக மதங்கள் அடி வாங்குகின்றனவோ அப்போதெல்லாம் இத்தகைய இறைத்தொண்டும் ஊழியமும் அரங்கேறும். அன்னை ஆண்டாள், திருமலைப் பெருமாள், கந்தசஷ்டி கவசம் வரிசையில் இப்போது சைவம்.

இவற்றிற்கெல்லாம் பெரும் பொரை கிடைப்பதால் தலைவர்களே நேரடியாக குலைக்கிறார்கள். "கீழடியில் பூசைப் பொருட்கள் ஏதும் கிடைக்கவில்லை. ஆகையால், தமிழர்கள் இறைநம்பிக்கை இல்லாதவர்கள்." போன்ற பிட்டுகளுக்கு பொரை குறைவு என்பதால் துண்டு, துக்கடாக்களிடம் தள்ளிவிடுகிறார்கள்.

oOOo

பகவான் திரு ரமண மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️ திருவருணை வந்துசேர்ந்து 100 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, சென்ற 1996ஆம் ஆண்டு திரு ரமணாச்சிரமம் சிறப்பு மலர் ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் அண்ணாமலையாரின் மலைவலப் பாதையிலுள்ள எட்டு திசை லிங்கங்களைப் பற்றிய செய்தியொன்று இருந்தது:

விண்மீன்களை வைத்து நிறுவப்பட்ட திசை லிங்கங்கள் யாவும் அதனதன் திசையிலிருந்து 3° விலகியிருக்கின்றன. இதற்கு காரணம் நமது பகலவன் குடும்பத்தின் நகர்வு!! எவ்வாறு நமது பூமி தன்னைத்தானே சுற்றிக் கொண்டும், தனது தலைவனான பகலவனையும் சுற்றி வருகிறதோ, இவ்வாறே நமது பகலவன் குடும்பமும் பால்வெளியில் சுழன்றுகொண்டும், நகர்ந்துகொண்டும் இருக்கிறது. 1° நகர்வதற்கு சுமார் 10,000 ஆண்டுகள் ஆகிறது. இதன்படி 3° நகர்வதற்கு 30,000 ஆண்டுகள் ஆகியிருக்கும். எனில், திசை லிங்கங்களின் வயது குறைந்தது 30,000 ஆண்டுகளாகும்.

திசை லிங்கங்களின் வயதே 30,000 ஆண்டுகள் எனில் மூலவர் திரு அண்ணாமலையாரின் வயது எவ்வளவு இருக்கும்?

இவ்வளவு பழமையும், கணக்கிட முடியாத பெருமையும் கொண்ட இந்த மண்ணின் அருமைப்பெருமைகளை கிடைக்கும் சில பொரைகளுக்காக சிறுமைப்படுத்த முயற்சிக்கிறது ஒரு கேடுகெட்டக் கூட்டம்!!

oOOo

நம் சமயத்தின் மீது சாணி வீசும் ஊழியத்தின் ஒரு பகுதி: நமது இலக்கியங்களை வடக்கிலிருந்து வந்த வெட்கங்கெட்ட சமணத்தோடும், நம்மை மொட்டையடித்துக் கொழுத்துக் கிடந்த பெளத்தத்தோடும் அடையாளப்படுத்துவது!

- நாசகார மதத்தின் வயது 1,400 ஆண்டுகள்.
- நயவஞ்சக மதத்தின் வயது சுமார் 1,700 ஆண்டுகள். (2,000 ஆண்டுகளல்ல. ரோமாபுரி மன்னன் கான்ஸ்டன்டைன் காலத்தில்தான் இம்மதம் நிலைபெறுகிறது.)
- வடக்கத்திய அம்மண & மொட்டை மதங்களின் வயது சுமார் 2,500+ ஆண்டுகள்.

இவர்கள் வருவதற்கு முன் நாம் என்ன செய்துகொண்டிருந்தோம்? 10 வயதில் ஆசிரியையின் இடுப்பைக் கிள்ளி, செருப்படி பெற்று, வளர்த்த மகளை மணந்து கொண்டு, என்றாவது ஒரு நாள் குளித்து, தாசிமகன்களை சுற்றி வைத்துக்கொண்டு, வீட்டில் மனைவி இருக்கும் போதே பரத்தையை அழைத்துவந்து கூத்தடித்துக் கொண்டிருந்தோமா? வடக்கத்தியர் வந்துதான் நம்மை பக்குவப்படுத்தினார்களா? யார் யாரால் பக்குவமானார்கள்? இன்றைய சைபீரியா-ரஷ்யா பகுதிகளிலிருந்து காட்டுமிராண்டிகளாக வந்த வடக்கத்தியர்தாம் நம்மால் பக்குவமானார்கள்.

நம்மை காட்டுமிராண்டிகள் என்று அழைத்தவன் பெளத்த அசோகன்! இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்று குவித்தவர்கள் பௌத்தர்கள்!! சயாம் தொடரிப்பாதையிலுள்ள ஒவ்வொரு குறுக்குக் கட்டைக்கும் ஒரு தமிழனை பலி கொடுத்தவர்கள் பெளத்தர்கள்!!!

இன்றும் வடக்கை வாழவைத்துக் கொண்டிருக்கும் சில மாநிலங்களில் ஒன்று நம் தமிழ்நாடு. ஒரு ரூபாயை வரியாக இழந்து, வெறும் 15 பைசாவை திரும்பப்பெற்றுக் கொண்டிருக்கிறோம்!!

oOOo

நமது முன்னோர்களிடம் இறை நம்பிக்கை இருந்தது என்பதற்கும், அந்நம்பிக்கை எப்படிப்பட்டதாக இருந்தது என்பதற்கும் சில சங்க கால இலக்கிய சான்றுகளைப் பார்ப்போம்.

🔹திருக்குறள்

பாயிரத்தில் இறைவனைக் குறிக்க வள்ளுவப்பெருந்தகை பயன்படுத்தியிருக்கும் சொற்களை / சொற்றொடர்களைக் கொண்டே நம் முன்னோர்களின் இறை நம்பிக்கையைப் பற்றிய பல செய்திகளை வெளிக் கொணரலாம்:

- வாலறிவன்
- மலர்மிசை ஏகினான்
- வேண்டுதல் வேண்டாமை இலான்
- இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
- பொறிவாயில் ஐந்தவித்தான்
- தனக்குவமை இல்லாதான்
- அறவாழி அந்தணன் (எவ்வுயிரையும் தம் உயிர்போல் கருதுபவர்)
- எண்குணத்தான்
- இறைவன்

🔹புறநானுறு

இந்நூலின் கடவுள் வாழ்த்து சிவப்பரம்பொருளை நேரடியாக, இன்று நாம் அறிந்திருக்கும் வண்ணம் புனைந்துரைக்கிறது (கொன்றை மலர், விடை ஊர்தி...).

("கண்ணி கார்நறுங் கொன்றை" என்று தொடங்கும் அப்பாடலை, தயவு செய்து, இணையத்தில் தேடிப் படித்துக் கொள்ளவும்.)

🔹தொல்காப்பியம் (சங்க காலத்திற்கும் முற்பட்டது)

>> வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதல் நூலாகும்

"செயலை நான் செய்கிறேன்" என்ற தவறான அறிவு நீங்கியவர் (மெய்யறிவு பெற்றவர்) எழுதும் நூலே முதல் நூல் எனப்படும். பகவான் ரமணரிடமிருந்து வெளிப்பட்ட "உள்ளது நாற்பது" ஒரு சிறந்த முதல் நூலாகும்.

(நாம் பயன்படுத்தும் முனைவர் என்ற சொல் இந்த செய்யுளில் இருந்துதான் எடுக்கப்பட்டது.)

>> மாயோன் மேய காடு உறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே

இப்பாடல் நிலப்பரப்பின் வகைகளைப் பற்றிக் கூறுகிறது. இப்பாடலில் மாயோன் என்பது பெருமாளையும், சேயோன் என்பது முருகப்பெருமானையும் குறிக்கும்.

>> கொடிநிலை கந்தழி வள்ளி என்ற
வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே

- கொடிநிலை - உலகம் உண்மை என்று கருதும் மனநிலை
- கந்தழி - தன்மையுணர்வை விடாது பிடித்துக் கொண்டு, மற்றனைத்தையும் ஒதுக்கிக் கொண்டிருத்தல். வடக்கிருத்தல்.
- வள்ளி - முழுமை

(இம்மூன்று சொற்கள்தாம் திருக்குறளின் பாயிரப் பகுதிக்கு அடிப்படை என்பது கற்றறிந்தோரின் கருத்தாகும்)

>> காமப்பகுதி கடவுளும், வரையார்,
ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர்

இப்பாடலில் உள்ள "கடவுள்" என்ற ஒரு சொல் போதுமே நமது முன்னோர்களின் இறை நம்பிக்கை மற்றும் இறைவனைப் பற்றிய அவர்களது புரிதல் எப்படிப்பட்டதாய் இருந்தது என்பதை தெரிந்துகொள்ள!

கடவுள் - கட + உள் - எல்லாவற்றையும் கடந்து இருப்பவர். உள் - இரு.

🔹கலித்தொகை, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என பல சங்க கால நூல்களில் சிவபெருமானை நேரடியாகவும், குறிப்பாலும் உணர்த்தும் பல பாடல்கள் உள்ளன.

oOOo

"நல்லதை விலக்கி, அல்லாததை உயர்த்தி" என்ற ஏமாற்று வேலையால் பல நாடுகள் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன. இன்னும் ஒரு தலைமுறைக்குள் இந்நிலை மாறும். "அல்லாததை விலக்கி, நல்லதை உயர்த்தி" என்ற நம் முன்னோர்களின் கொள்கைதான் என்றுமே நிலைத்து நிற்கும்.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Saturday, August 14, 2021

ஆடி விளக்கு (சுவாதி) திருநாள்: திரு சுந்தரமூர்த்தி நாயனார் & திரு சேரமான் பெருமாள் நாயனார் திருநாள்




இன்று (14/08/2021) ஆடி மாத விளக்கு (சுவாதி) விண்மீன் திருநாள். தம்பிரான் தோழரான திரு சுந்திரமூர்த்தி நாயனார் மற்றும் கழறிற்றறியும் பேறு பெற்ற திரு சேரமான் பெருமாள் நாயனார் ஆகியோரின் திருநாள்.

🌺🌺🙏🏽🙏🏽🙇🏽‍♂️🙇🏽‍♂️

சேரமான் பெருமாள் நாயனார் பற்றி சற்று பார்ப்போம்:

🌷 சுந்திரமூர்த்தி நாயனாரின் சம காலத்தவர் (8ஆம் நூற்றாண்டு) மற்றும் அவரது சிறந்த நண்பர்
🌷 மகோதை எனும் கேரளாவை ஆண்டவர் (பேரரசர் இராஜேந்திர சோழரின் மகனான இராஜாதிராஜ சோழர் சோழப்பேரரசின் மேற்கு எல்லையாக மகோதையைக் குறிப்பிடுகிறார்)
🌷 தில்லை கூத்தப் பெருமானின் சலங்கை ஒலியைக் கேட்கும் பேறு பெற்றிருந்தார்
🌷 ஓரறிவு முதல் ஆறறிவு பெற்ற உயிரிகள் வரை அனைவரின் குறைகளை அறியும் திறன் பெற்றிருந்தார்
🌷 பெரும் கொடை வள்ளல்
🌷 கழறிற்றறிவார் என்பது சிறப்பு பெயர்

அது என்ன கழறிற்றறிவார்?

கழல் இற்று அறிவார். இறைவனது திருப்பாதம் (கழல்) இத்தகையது (இற்று) என்று தெள்ளத்தெளிவாக அறிந்தவர் (அறிவார்). அதாவது, என்றுமே அழியாத, மாறாத, தன்னொளி பொருந்திய, இடைவிடாது இருக்கின்ற, மாசற்ற தனது தன்மையுணர்வைப் (திருப்பாதம் - கழல்) தெளிவாக அறிந்தவர். சுருக்கமாக, தன்மையுணர்வில் இருப்பவர் - மெய்யறிவு பெற்றவர்!!

நாயனார்களின் இறுதிக்காலம்:

🔹மரபுவழிச் செய்தி:

திருவஞ்சைக்களம் திருத்தலத்திலிருந்து சுந்திரமூர்த்தி நாயனார் வெள்ளை யானை மீதேறி கயிலாயம் சென்றார். இதையறிந்த சேரமான் பெருமாள் நாயனார் வெள்ளைக் குதிரை மீதேறி கயிலாயம் சென்றார்.

🔹இதன் பொருள்:

🌷 இருவரும் திருவஞ்சைக்களம் திருத்தலத்தில் சமாதியடைந்துள்ளனர்
🌷 தம்பிரான் தோழர் அறிவைக் கொண்டும் (வெள்ளை யானை - மூளை), கழறிற்றறிவார் யோக வழியிலும் (குதிரை மூச்சைக் குறிக்கும்) நிலைபேறு அடைந்துள்ளனர்

oOOo

கார் கொண்ட கொடைக் கழறிற்றறிவார்க்கும் அடியேன்!! 🌺🙏🏽🙇🏽‍♂️

வாழி திருநாவலூர் வன் தொண்டர் பதம் போற்றி!! 🌺🙏🏽🙇🏽‍♂️

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகெலாம் 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮