Showing posts with label திருப்பதி. Show all posts
Showing posts with label திருப்பதி. Show all posts

Thursday, July 28, 2022

பெருமாளே பயந்துபோய் எங்க பின்னாடி ஒளிஞ்சிண்டிருக்கார்!!


படத்தைப் பார்த்ததும் "அடப்பாவிகளா!" என்ற உணர்வுதான் எனக்கு உடனடியாகத் தோன்றியது. ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, இப்போது, பெருமாளையே கடித்திருக்கிறார்கள்! 😡

இவர்களது (நாமப்பேர்வழிகள்) கணக்கின் படி, நிலையற்ற பொருளை குறிக்கும் பெருமாள்தான் அனைத்திற்கும் மூலப் பொருளாகிறார். எனில், மூலப்பொருளால் இவர்களா? அல்லது, இவர்களால் மூலப்பொருளா? இவர்களால்தான் மூலப்பொருள் காக்கப்படுகிறதெனில், அப்படிப்பட்ட இரண்டாந்தர பொருளை நாம் ஏன் வணங்கவேண்டும்? நாமப்பேர்வழிகளையே வணங்கிவிட்டுப் போகலாமே!

பெருமாள் என்பது ஒரு கற்சிற்பம் மட்டுந்தானா? அதன் கீழ் திருநீற்று (சமாதி) நிலையிலிருக்கும் திரு கொங்கணவ சித்தரைக் 🌺🙏🏽🙇🏽‍♂️ குறிக்கும் அடையாளமல்லவா!

அடுத்தது, திரு கொங்கணவ சித்தரென்பவர் யார்? நம்மைப் போல் அழியும் உடல் தாங்கியவரா? "நான் இன்னார்" என்ற எண்ணம் கொண்டவரையா நம் முன்னோர்கள் வணங்கச் சொன்னார்கள்? கொங்கணவர் தனது உடலைத் தாண்டியவர். தான் ஓர் அழியும் உடலல்ல என்ற மெய்யறிவைப் பெற்றவர். அவ்வறிவிலே நிலைபெற்றவர். மாசிலாமணி.

காட்டுமிராண்டிகளும், நரித்துவ கொடூர வாஸ்கோடகாமாவும் செய்ததுபோல் பெருமாள் சிலையை உடைத்தெறிந்தாலும், காட்டுமிராண்டி மாலிக்காபூர் செய்ததுபோல் கருவறையை அப்படியே பெயர்த்தெடுத்தாலும், வெட்கங்கெட்ட சமணர்களும், பேராசைப்பிடித்த பௌத்தர்களும் செய்ததுபோல் பெருமாள் சிலையை எடுத்துவிட்டு, அவர்களது சிலைகளை வைத்தாலும், உள்ளபொருளாய் சமைந்துள்ள கொங்கணவருக்கு ஏதுமாகிவிடாது!

பெருமாள் எனும் கற்சிலையை வணங்குவதென்பது கொங்கணவரை வணங்குவதாகும். கொங்கணவரை வணங்குவதென்பது அவர் காட்டிய வழியில் பயணித்து, அவரைப் போன்று மெய்யறிவில் நிலைபெறுவதாகும்.

oOOo

மால்தீர்ந்த கொங்கணவர் தாள் போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌸🌼🌸

Sunday, June 19, 2016

🔥 ஸ்ரீ & வராக ஆயுதங்கள் 🔥

இன்றைய நிலையில் முகம்மதிய காட்டுமிராண்டிகள் மீண்டும் படையெடுத்து வந்தால் அவர்களை தடுக்கவும், மீண்டும் தலைதெறிக்க ஓட வைக்கவும் இரண்டு யுக்திகள் உள்ளன:


(தினமலர் - சென்னை - 19/06/2016)

1. வீர பெண்களால் ஆன படையை முன்னிருத்தி தாக்குதல். இந்த முறையைத் தான் ஈராக்கின் குர்தி (யாசிடி) இன மக்கள் தற்போது உபயோகப்படுத்துகின்றனர். இவர்கள் இந்துக்களே! இவர்களது வழிபாட்டுமுறைகளும், சடங்குகளும், மதச் சின்னங்களும் நம்மோடு பலவிதத்தில் ஒத்துப்போகின்றன. "நாங்கள் இந்துக்களே! இந்து சகோதரர்களே எங்களுக்கு உதவுங்கள்!!" என்று எழுதிய பதாகைகளைக் கையில் ஏந்தி உதவி கேட்பது போன்ற படங்களை இணையத்தில் பார்த்திருக்கலாம். (அருகில் இருக்கும் இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டபோது ஆட்சியிலிருந்த நரமாமிச உண்ணிகளுக்கு மீண்டும் 89 இருக்கைகளைக் கொடுத்த பொன்னான நாடு இது. 😠 இவர்களிடம் உதவி எதிர்பார்ப்பதை விட தம் பெண்டிரை நம்பலாம் என்று களமிறங்கிவிட்டனர் போலும்.)

2. பெரும் பன்றிகளை முன்னிருத்துதல்! 🐷🐷🐷

விளையாட்டில்லை!! 😀 இன்று ஹங்கேரி இவர்களின் ஊடுருவலைத் தடுக்க இந்த யுக்தியைத் தான் கையாள்கிறது.


(திருப்பதி ஸ்ரீஆதிவராகர்)

கொங்கண சித்தரின் சமாதித் தலமான திருப்பதியைத் தாக்க முடிவு செய்து தக்காண பீடபூமி சுல்தான்கள் ஒற்றர்களை அனுப்பியபோது, அவர்களை விரட்டியடிக்க, அங்கிருந்த பட்டர்கள் உபயோகப்படுத்தியது பன்றிகளைத் தான்! அவர்கள் வரும் வழிகளில் பன்றிகளை உலவவிட்டார்கள். 😂 அவைகளைக் கண்டு அருவருப்படைந்த ஒற்றர்கள் மீண்டும் திருமலை வர விரும்பாததால் அடிவாரத்தில் முகாமிட்டிருந்த சுல்தானின் தளபதியிடம் பொய்த் தகவலைக் கூறினர் ("மேலே சிறு கோயில் தான் இருக்கிறது. செல்வ செழிப்பில்லாதது.") அவனும், ஏன் மெனக்கெட வேண்டும் என்று வேறிடம் சென்றுவிட்டான். 😜 இதற்கு நன்றிக்கடனாக எழுப்பப்பட்ட கோயில் தான் ஸ்ரீவராகமூர்த்தி திருக்கோயில். பக்தர்கள் மனதில் என்றென்றும் இந்நிகழ்வு நிலைத்திருக்க வேண்டுமென்று தான் பெரியோர்கள் பெருமாளை தரிசிக்கும் முன் ஸ்ரீவராகரை தரிசிக்கச் சொன்னார்கள்!!

திப்பு சுல்தானால் பல கொடுமைகளுக்கும் கட்டாய மதமாற்றத்திற்கும் உள்ளான கர்நாடகாவின் குடகு பகுதியில் உள்ள மக்கள் தங்களைக் காத்துக்கொள்ள பன்றிகளை வளர்க்க ஆரம்பித்தனர். அப்பாதுகாப்பு உணர்ச்சியின் தொடர்ச்சியாக இன்றும் அம்மக்கள் பன்றிகளை வளர்ப்பதைக் காணலாம்.

posted from Bloggeroid