Showing posts with label திருக்கயிலாயம். Show all posts
Showing posts with label திருக்கயிலாயம். Show all posts

Sunday, October 22, 2023

தட்சிண கயிலாயமா? உத்திர திருவண்ணாமலையா?


👊🏽 பாரதத்தின் மான்செஸ்டர்
👊🏽 பாரதத்தின் டெட்ராயிட்
👊🏽 பாரதத்தின் நெப்போலியன்

சமுத்திர குப்தர் வாழ்ந்தது 4ஆம் நூற்றாண்டில். நெப்போலியன் வாழ்ந்தது 18ஆம் நூற்றாண்டில். சமுத்திர குப்தர் ஒரு பேரரசர். நெப்போலியன் ஒரு சிற்றரசன். சமுத்திர குப்தர் வெற்றிவாகை சூடியவர். நெப்போலியன் தோற்று மடிந்தவன். இவ்வளவு வேறுபாடுகளிருந்தும், நயவஞ்சக வெள்ளையர்களை உயர்த்திக் காட்டுவதற்காகவும், நம்மை தாழ்த்துவதற்காகவும், நம் மனதில் அடிமை மனப்பான்மையை வளர்ப்பதற்காகவும் சமுத்திர குப்தரை நெப்போலியனோடு ஒப்பிட்டு சிறுமைபடுத்தியிருப்பார்கள்.

இதுபோன்றொரு நயவஞ்சக செயல்தான் திருவருணையை "தட்சிண கயிலாயம்" என்றழைப்பதாகும்!! 👊🏽👊🏽

💥 திருக்கயிலாயத்தின் வயது இலட்சங்களில். திருவருணையின் வயது கோடிகளில்.

💥 புவிப்பந்தின் வயதில் மூன்றிலொரு பங்கு வயதுடையது திருவருணை. ஒப்பிடுகையில், திருக்கயிலாயமோ அண்மையில் தோன்றியது. 

💥 இருவிடங்களிலும் பல பெருமான்கள் வடக்கிருந்து (ஆரியத்தில், தவமிருந்து) திருநீற்று நிலையை (ஆரியத்தில், சமாதி) அடைந்துள்ளனர். ஆனாலும், "அடிக்கொரு இலிங்கம்" என்ற புகழ் திருவருணைக்குத்தான் உண்டு (அத்தனை பெருமான்கள் திருநீற்று நிலையிலுள்ளனர் என்பது பொருளாகும்!).

💥 இயக்கமற்ற உள்ளபொருளுக்கு (சிவம்) வலப்புறத்தையும், எண்ணங்கள் & காட்சிகளை தோற்றுவிக்கும் ஆற்றலுக்கு (அன்னை) இடப்புறத்தையும் ஒதுக்கலாமென்று முடிவு செய்யப்பட்டது திருவருணையில்தான்!

🙏🏽 "திருக்கயிலாயம் சிவன் குடியிருக்கும் இடம் மட்டுமே. திருவண்ணாமலையோ சிவனேயாவார்!" என்பது பகவான் திரு இரமண மாமுனிவரின் வாக்காகும்.

🙏🏽 செயற்கரிய செயல்கள் புரிந்து, தம்மை நாடி வந்த திரு காரைக்கால் அம்மையாரையும், திரு அப்பர் பெருமானையும் தமிழகத்திற்கே திருப்பியனுப்பி வைத்து, திருவாலங்காட்டிலும், திருவையாறிலும் குடியிருக்கும் பெருமான்களை சிறப்பித்தனர் அன்று திருக்கயிலையில் உடல் தாங்கியிருந்த பெருமான்கள்.

ஆனால், வயிற்றுப் பிழைப்பிற்காகவும், குறி மதத்தான்களிடமிருந்து உயிர் தப்புவதற்காகவும் இங்கு வந்து தஞ்சமடைந்த புல்லுருவிகள், காரியம் செய்யப்பட வேண்டிய ஆரியத்தையும், சிறு பிள்ளைகள் வைத்து விளையாட வேண்டிய உயிரற்ற பொம்மைகளையும், நெருப்புக்குழிகளையும் வைத்துக்கொண்டு, "தட்சிண கயிலாயம்", "தட்சிண கங்கை" என்று வாழ்வளித்த மண்ணின் அடையாளங்களை சிறுமை படுத்திக்கொண்டிருக்கின்றன!!! 👊🏽👊🏽👊🏽🤬😡

திருக்கயிலாயத்தை திருக்கயிலாயமாக பார்ப்போம். திருவருணையை திருவருணையாக பார்ப்போம்.

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Saturday, August 6, 2022

கடகம் - விளக்கு: திரு சுந்தரமூர்த்தி நாயனார், திரு சேரமான் பெருமாள் நாயனார் & திரு ஒளவையார் திருநாள்

கடகம் (ஆடி) - விளக்கு (சுவாதி)

திரு சுந்தரமூர்த்தி நாயனார், திரு சேரமான் பெருமாள் நாயனார் & திரு ஒளவையார் திருநாள்


🌷 தம்பிரான் தோழராகிய திரு சுந்தரமூர்த்தி நாயனாரைப் பற்றி எழுதுவதற்கு ஓர் இடுகை போதாது. ஒரு நூலே எழுதவேண்டும். அவ்வளவு செய்திகள் உள்ளடங்கியது அவரது வரலாறு!


🌷 விநாயகர் அகவல் பாடிய திரு ஒளவைப் பாட்டியின் பெயர் அறம் என்ற சொல் உள்ளவரை நிலைத்திருக்கும்! "எந்த நூல் அழிந்தாலும் தமிழன்னைக்கு குறையில்லை. ஆனால், பாட்டியின் நூல்கள் அழிந்தால் அது பெருங்குறையே!" என்ற மகாகவிஞரின் புகழுரை போதும் பாட்டியின் சிறப்பையும், அன்னைத் தமிழுக்கு அவரது பங்களிப்பையும் உணர!


🌷 திரு சேரமான் பெருமாள் நாயனார் பற்றி சற்று பார்ப்போம்:

🔸 சுந்திரமூர்த்தி நாயனாரின் சம காலத்தவர் (8ஆம் நூற்றாண்டு) மற்றும் அவரது சிறந்த நண்பர்
🔸 மகோதை எனும் கேரளாவை ஆண்டவர் (பேரரசர் இராஜேந்திர சோழரின் மகனான பேரரசர் இராஜாதிராஜ சோழர் சோழப்பேரரசின் மேற்கு எல்லையாக மகோதையைக் குறிப்பிடுகிறார்)
🔸 தில்லை கூத்தப் பெருமானின் சலங்கை ஒலியைக் கேட்கும் பேறு பெற்றிருந்தார்
🔸 ஓரறிவு முதல் ஆறறிவு பெற்ற உயிரிகள் வரை அனைவரின் குறைகளை அறியும் திறன் பெற்றிருந்தார்
🔸 பெரும் கொடை வள்ளல்
🔸 கழறிற்றறிவார் என்பது சிறப்பு பெயர்

🌷 அது என்ன கழறிற்றறிவார்?

கழல் இற்று அறிவார். இறைவனது திருப்பாதம் (கழல்) இத்தகையது (இற்று) என்று தெள்ளத்தெளிவாக அறிந்தவர் (அறிவார்). அதாவது, என்றுமே அழியாத, மாறாத, தன்னொளி பொருந்திய, இடைவிடாது இருக்கின்ற, மாசற்ற தனது தன்மையுணர்வைப் (திருப்பாதம் - கழல்) தெளிவாக அறிந்தவர். சுருக்கமாக, தன்மையுணர்வில் இருப்பவர் - மெய்யறிவு பெற்றவர்!!

🌷 நாயனார்களின் இறுதிக்காலம்:

மரபுவழிச் செய்தி:

திருவஞ்சைக்களம் திருக்கோவிலிலிருந்து சுந்திரமூர்த்தி நாயனார் வெள்ளை யானை மீதேறி கயிலாயம் சென்றார். இதையறிந்த சேரமான் பெருமாள் நாயனார் வெள்ளைக் குதிரை மீதேறி கயிலாயம் சென்றார். இந்நிகழ்வுகளை உணர்ந்த ஒளவையார், தான் செய்துகொண்டிருந்த பிள்ளையார் வழிபாட்டை விரைவாக்கினார். அதைக்கண்ட பிள்ளையார், அவரை தடுத்து நிறுத்தி, வழிபாட்டை செவ்வனே முடிக்க அறிவுருத்தினார். வழிபாட்டிற்குப் பின்னர், நாயன்மார்களுக்கு முன்னதாக, பாட்டியை தாமே திருக்கயிலாயத்திற்கு கொண்டுசேர்ப்பதாக உறுதியளித்தார். வழிபாட்டிற்குப் பின்னர் அவ்வாறே கொண்டுசேர்த்தார்.

இதன் பொருள்:

🔸 நாயன்மார்கள் இருவரும் திருவஞ்சைக்களம் திருத்தலத்தில் திருநீற்று நிலையடைந்துள்ளனர்

🔸 தம்பிரான் தோழர் அறிவைக் கொண்டும் (வெள்ளை யானை - மூளை), கழறிற்றறிவார் யோக வழியிலும் (குதிரை - மூச்சுக்காற்று) நிலைபேறு அடைந்துள்ளனர்

🔸 ஒளவைப் பாட்டியைப் பற்றிய உருவகம்:

- ஒருவர் வாழும் வாழ்க்கையே வழிபாட்டிற்கு சமம்
- ஒளவையார் அறிவைப் போற்றி, சந்தித்தோரின் அறிவுப்பசி நீக்கி வாழ்ந்தவர்
- சிவ குடும்பத்திலுள்ள பிள்ளையார் அறிவைக் குறிப்பவர்
- எனில், அறிவைப் போற்றிய அவரது வாழ்க்கை = பிள்ளையார் (அறிவு) வழிபாடு (வாழ்க்கை)!!
- "வழிபாட்டை செவ்வனே செய்" என்பது அன்றாட வாழ்வை சரியாக வாழ்வது; கடமைகளை சரிவர செய்வது என்பதாகும்.
- "வழிபாட்டிற்குப் பின்னர் பாட்டியை பிள்ளையார் கயிலாயத்திற்கு கொண்டுசேர்த்தது" என்பது செவ்வனே வாழ்ந்து முடித்த பிறகு, உடல் உலக காட்சிகள் நீங்கி, தன்மையுணர்வில் (கயிலாயத்தில்) நிலைபெறுவதாகும் (கொண்டுசேர்த்தது)
- "நாயன்மார்களுக்கு முன்னதாக கயிலாயம் சேர்ந்தது" - நாயன்மார்கள் இருவரும் சற்றேனும் முயற்சி செய்து நிலைபேற்றினை அடைந்துள்ளனர். பாட்டியோ, எந்த வகை முயற்சியுமின்றி அடைந்துள்ளார். நாயன்மார்களின் முயற்சி 1 மணித்துளியெனில், பாட்டியின் முயற்சி 0 மணித்துளியாகும்.

"முன்னதாக" என்பதற்கு "நாயன்மார்கள் கயிலாயம் சென்றுசேர்வதற்கு முன்னர்" என்று தவறாக பொருள் கொள்வதற்கு அடிப்படை "கயிலாயம் என்ற இடம் எங்கோ இமயத்தில் / வானத்தில் இருப்பதாக" கருதும் அறியாமையாகும்!

நமது தன்மையுணர்வே திருக்கயிலாயம்.
இதை உணர்வதே மெய்யறிவு.
இவ்வறிவில் நிலைபெறுவதே விடுதலை.

oOOo

சிவாய நம என்று சிந்தித்திருந்த அம்மை அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

கார் கொண்ட கொடைக் கழறிற்றறிவார்க்கும் அடியேன் 🌺🙏🏽🙇🏽‍♂️

வாழி திருநாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகெலாம் 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌸🌸🌸🌸

Wednesday, May 13, 2020

அண்ணாமலை வெண்பா பாடல் #16 - "மாதுடனே வெள்ளிமலை வீடாக" - விளக்கம்



இன்று (13/05/20) காலை #அண்ணாமலை #வெண்பா திரட்டிலிருந்து பாடல் 16ஐ பதிவிட்டிருந்தேன். இப்பாடலில் வரும் "#மாதுடனே #வெள்ளிமலை #வீடாக" என்ற சொற்றொடருக்கு நான் கொடுத்த விளக்கத்திற்கு ஒரு ரமணடியார் பின் வரும் கருத்தை அனுப்பியிருந்தார்:

அருணாசலமே சிவன். திருக்கைலாயம் சிவபெருமானின் இருப்பிடம் மட்டும் தான். இது பகவான் வாக்கு.

அவருக்கு நான் கொடுத்த விளக்கம் பின்வருமாறு (பாடலும், அதற்கான எனது விளக்கத்தையும் இறுதியில் இணைத்துள்ளேன்):

இது பகவானது 🌺🙏🏽 வாக்கு என்பதை அறிவேன், ஐயா! குரு நமச்சிவாயரும் 🌺🙏🏽 வெள்ளிமலையை (திருக்கைலாயத்தை) வீடு என்றே குறிப்பிடுகிறார். பேயாரும் 🌺🙏🏽 #திருக்கைலாயம் சென்ற போது இறைவன் உமையன்னையுடன் இருந்ததாகவே பாடியிருக்கிறார்.

தமிழகத்தில் பல திருத்தலங்களில் "அகத்தியருக்கு திருக்கைலாயக் காட்சி கிடைத்தவிடம் " என்று எழுதியிருப்பதைக் காணலாம். இது ஒரு நிலை. கயிற்றை பாம்பாகக் காண்பது ஒரு நிலை. கயிற்றை கயிறாகவே காண்பது ஒரு நிலை. பாம்பாக தோன்றிய தோற்றம் மறைந்து, உண்மையான கயிறு தோன்றும் தருவாயில் இரண்டுமே தோன்றும். இந்நிலையை அவ்வப்போது மாமுனிவர்கள் (அகத்தியர்கள்) பெற்றிருக்கிறார்கள். திரு ரிஷபதேவரோ 🌺🙏🏽 இந்நிலையிலேயே நிலைபெற்றிருக்கவேண்டும். எனவே, "மாதுடனே" (பாம்புடனே) என்று குரு நமச்சிவாயர் பாடியிருக்கிறார். பகவானும், "திருக்கைலாயம் ஈசனது வீடு" என்று கூறிவிட்டார். திரு இடைக்காடரோ (அண்ணாமலையார்) கயிறு என்ற நிலையிலேயே (சிவமாக) இருந்திருக்கவேண்டும். எனவே, "அருணாசலமே சிவன்", என்று கூறிவிட்டார் பகவான்.

நன்றி, ஐயா!

🌸🌼🌻🏵️💮

வெண்பா #16:

வைத்தநிதி ஓம்நமச்சி வாயகுரு நாள்தோறும்
மெய்த்தமிழி னால்புகழ்ந்து மேவுமலை - எத்திசையும்
மின்னுமலை மாதுடனே வெள்ளிமலை வீடாக
மன்னுமலை அண்ணா மலை

🔸#வைத்தநிதி - வைத்த என்பது நிலைபேற்றினைக் குறிக்கும். நிதி என்பது அபரிமிதமான / பொங்குகின்ற என்ற பொருளைக் குறிக்கும். நிலைபேறு என்பது ஒரு நிலை தான். அதெப்படி பொங்கும்? எனில், நிலைபேற்றில் விடாப்பிடியாக, சற்றும் அசையாமல் நிலை பெற்றிருப்பவர் என்று பொருள். மாமுனிவர். 🌺🙏🏽

🔸மெய்தமிழ் - தொல்காப்பியர் நிறைமொழி என்றழைத்தது போல குரு நமச்சிவாயர் மெய்தமிழ் என்றழைக்கிறார். தமிழைச் சரியாக கற்றாலே மெய்யறிவு கிடைத்துவிடும்.

🔸#மாதுடனே #வெள்ளிமலை #வீடாக - இரண்டு பொருள்கள். ஒரு பொருள், திபெத்திலுள்ள திருக்கைலாயத்தில் சமாதியான திரு #ரிஷபதேவர். 🌺🙏🏽 இன்னொரு பொருள், நமது மூளையைக் குறிக்கும். விழிப்பு நிலையில் பரமனும் சீவனும் (ஆரியத்தில், விஸ்வம் & விராட்) மூளையிலிருந்து இயங்குவதாகக் கணக்கு.

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙏🏽

#குருநமச்சிவாயர்
#பகவான் #ரமணர்