Showing posts with label சீதை. Show all posts
Showing posts with label சீதை. Show all posts

Sunday, November 24, 2024

"கும்பகர்ணன் ஒரு சிறந்த தொழிற்நுட்ப வல்லுநர்" என்ற கருத்தின் உட்பொருள்


இராமாயணம் என்பது மெய்யியல் குறியீடுகளின் தொகுப்பு என்ற உண்மை தெரிந்திருந்தால், இந்த ஆளுநர் கேலிக்கு உள்ளாகியிருப்பாரா? இவரது "கற்பித" அறியாமைக்கு யார் பொறுப்பு? 😏

oOo

மொத்த இராமாயணத்தை சுருக்கினால்: உடலின் (இராவணன்) தொடர்பு ஏற்பட்டவுடனேயே மனம் (இராமன்), தனது குளுமையை / நிம்மதியை (சீதை) இழந்துவிடுகிறது. பின்னர், பல போராட்டங்களுக்குப் பிறகு, இறையருளால், மெய்யறிவாளர்களின் தொடர்பு ஏற்பட்டு, தன்னைப் பற்றியும், உடல்- வையகக் காட்சியை பற்றியும் தெரிந்து கொண்டு அடங்குகிறது. அடங்கியவுடன், குளுமையை / நிம்மதியை திரும்பப் பெறுகிறது.

oOo

இராமாயணம் என்பது எம்சியு (மார்வெல் சினி மேடிக் யுனிவர்ஸ்) போன்றொரு கதைத் தொகுப்பாகும். ஒவ்வொரு காட்சியையும் தனித்தனியே அணுக வேண்டும். ஓரிடத்தில், இராமன் என்பது மனதை குறித்தால், இன்னொரிடத்தில் உள்ளபொருளை குறிக்கும். பொதுவாக,

🔸 இராவணன் - உடல்
🔸 இராமன் - மனம்
🔸 இலக்குவன் - அறிவு
🔸 சீதை - நிம்மதி

இராவணன் என்பது உடலெனில், அவரது உடன்பிறப்புகள்...

🔸 கும்பகர்ணன் - விழிப்புணர்வு
🔸 விபீடணன் - வலு

🌷 கும்பகர்ணன் - 6 மாதம் தூக்கம், 6 மாதம் விழிப்பு

இன்று, பல மணி நேரம், இரவெல்லாம் விழித்துக் கொண்டிருக்கிறோம். அன்று, கதிரவன் தோன்றுவதில் தொடங்கி, கதிரவன் மறைவதோடு நாள் முடிந்துவிடும். பின்னர், ஓய்வு & உறக்கம். அதாவது, அரை நாள் உழைப்பு; அரை நாள் ஓய்வு. இதையே, "கும்பகர்ணன் 6 மாதம் தூங்கினார். 6 மாதம் விழித்திருந்தார்." என்று புனைந்திருக்கிறார்கள்.

🌷 கும்பகர்ணன் - கருவிகள்

கருவி என்றதும் கத்தி, கத்திரிக்கோல், திருப்புளி என்று எண்ணிக்கொள்வோம். ☺️ இங்கு, கருவி என்பது நமது அறிவு, மனம், கை-கால் போன்ற உடலுறுப்புகளை குறிக்கும். விளைவுகளை ஏற்படுத்தும் யாவும் கருவிகள் என்று கொள்ளலாம்.

எ.கா.: இவ்விடுகையை எழுதத்தூண்டியதால் ஆளுநரின் பேச்சு ஒரு கருவியாகிறது. இவ்விடுகை சில விளைவுகளை ஏற்படுத்துமானால் இதுவும் ஒரு கருவியாகும்.

விழித்திருக்கும்போது, நமது சொல், செயல், சிந்தனைகளைக் கொண்டு பல விளைவுகளை ஏற்படுத்துகிறோம் என்பதையே "கும்பகர்ணன் பல கருவிகளை படைத்தார்" என்று புனைந்திருக்கிறார்கள்.

🌷கும்பகர்ணன் - தொழிற்நுட்ப வல்லுநர்

நமக்கு வாய்த்திருக்கும் கருவிகளையும் (அறிவு, மனம், உடல்), நமக்கு வந்துசேரும் மற்றவரது கருவிகளையும் (சொல், செயல் & எழுத்து) கொண்டு பல கருவிகளை (விளைவுகளை) நாம் படைக்கிறோம் என்பதையே "கும்பகர்ணன் ஒரு சிறந்த தொழிற்நுட்ப வல்லுநராக விளங்கினார்" என்று புனைந்திருக்கிறார்கள்.

🌷 விபீடணன் - இராமன் பக்கம் வருதல்

இளம் வயதில் உடல் வலுவாக இருக்கும். ஆண்டுகள் உருண்டோடி, உடல் தளரத் தொடங்கியதும், மனம் வலுப்பெறத் தொடங்கும். 

அல்லது, இறையருளால், இளம் பருவத்திலேயே மெய்யறிவாளர்களின் தொடர்பு ஏற்பட்டு, நல்லறிவு கிடைத்ததும், உடலைப் பேணுவதை குறைத்துக் கொண்டு, மனதை சீர் செய்யத் தொடங்குவோம். இதனாலும் மனம் வலுப்பெறத் தொடங்கும்.

இவ்வாறு, உடல் வலுவிழந்து, மனம் வலுப்பெறுவதையே, "விபீடணன் (வலு) இராவணனிடமிருந்து (உடல்) இராமன் (மனம்) பக்கம் வந்தான்" என்று புனைந்திருக்கிறார்கள்.

🌷 மொத்தத்தில், இராமாயணம் என்பது பிறப்பு முதல், மெய்யறிவு அடையும் வரையிலான நமது வாழ்க்கைப் பயணமாகும்!

oOo

இராமாயணத்தை வரலாறு / உண்மை என்ற கண்ணோட்டத்தில் அணுகினால்... "மோகன்தாசும், ஜவகரும் போராடி, நமக்கு விடுதலை பெற்றுத் தந்தார்கள்", "இராமசாமி சாதியை ஒழித்தான்", "தட்சிணாமூர்த்தி தமிழர்களுக்காக உழைத்தான்" என்ற வகையை சேர்ந்ததாகும்!! 😏

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Friday, January 26, 2024

இராமாயணம் = மனம் அடங்குதல்!!


🌷 படத்தின் மேல் பகுதி:

> மனதின் (பெருமாளின்) அடிப்படைத் தன்மை அசைவாகும். அத்தன்மையை மனதிற்கு வழங்குவது இறைவனாகும்!

> உள்ளபொருள் (நமது தன்மையுணர்வு) தன்னொளி கொண்டது. சிவந்த நிறத்தில் காண்பித்திருக்கிறார்கள். மனம் தன்னொளியற்றது. கருமை நிறத்தில் காண்பித்திருக்கிறார்கள்.

🌷 படத்தின் நடுப்பகுதி:

> நீரோட்டம் - வையகம்.

> இலங்கை - நீரோட்டத்திலுள்ள திட்டு (அசுரத்தில், தீவு). "நான் இன்னார்" என்ற எண்ணமுள்ள மனிதன்.

மெய்யறிவில் நிலைபெற்றிருப்போர் (மெய்யறிவாளர்கள்) தங்களை படைப்பிலிருந்து வேறாக உணரமாட்டார்கள். ஏனையோர் தம்மை வேறாக, தனிமனிதர்களாக உணர்கிறாரகள். இப்படிப்பட்டவர்களையே இலங்கை என்ற சொல் குறிக்கிறது.

> குரங்குப்படை - எண்ணங்கள்.

மேற்கண்ட "இலங்கை" நிலையிலிருப்போரையே - அதாவது, தன்னை தனிமனிதனாக உணர்பவரையே - எண்ணங்கள் தாக்குகின்றன. மெய்யறிவாளர்களை குரங்குப்படை தாக்காது.

🌷 படத்தின் கீழ் பகுதி:

> இராவணனின் 10 தலைகள் - ஐம்புலன்கள் & ஐந்து உறுப்புகள் - உடல்.

> இராமன் - மனம்.

> உடலின் தொடர்பு ஏற்பட்டவுடனேயே, மனம் தனது குளுமையை / நிம்மதியை (சீதை) இழந்துவிடுகிறது. பின்னர், பல போராட்டங்களுக்குப் பிறகு, இறையருளால் மெய்யறிவாளர்களுடன் தொடர்பு ஏற்பட்டு, தன்னைப் பற்றியும், உடல் & வையகத்தைப் பற்றியும் புரிந்துகொண்டு அமைதியடைகிறது (சீதையை மீண்டும் பெறுதல்).

oOo

இராமாயணம் போன்ற உவமைகள் மிகுந்த கதையை மிகுந்த எச்சரிக்கையுடன் கையாளவேண்டும். ஓரிடத்தில் இராமன் மனதை குறிப்பார். இன்னொரு இடத்தில் தசரதன் மனதை குறிப்பார். வேறோரிடத்தில் இராவணன் மனதைக் குறிப்பார். இன்னுமொரு இடத்தில் சீதை மனதை குறிப்பார். ஒவ்வொரு காட்சியையும் / நிகழ்வையும் தனித்தனியாக சிந்திக்கவேண்டும்.

ஓர் எடுத்துக்காட்டிற்காக, வாலியின் கதையை பார்ப்போம்.

> வாலி - மனம்
> வாலி பறித்துக்கொண்ட ருமா (சுக்கிரீவனின் மனைவி) - உடல் 
> சுக்கிரீவன் - நல்லறிவு
> மறைந்திருந்து கொல்லும் இராமன் - உள்ளபொருள்
> இராமன் எய்தும் அம்பு - மெய்யறிவு

வாலிக்கும் சுக்கிரீவனுக்கும் நடக்கும் சண்டையென்பது மனதிற்கும் அறிவுக்கும் நடக்கும் போராட்டமாகும். இதே சண்டையை, திருவானைக்கா திருக்கோயிலில் சிலந்தி-யானை சண்டையாக காண்பித்திருப்பார்கள்!

மொத்த இராமாயணத்தை பொருத்தவரை இராமன் மனமெனில், இவ்விடத்தில் உள்ளபொருளாகிறார்!

இராமாயணத்தை ஒரு MCU-வாக (Marvel Cinematic Universe) வைத்துக்கொண்டால், அதில் வரும் தசரதன், இராமன், குரங்குகள் கதைகளை MCUவில் வரும் Iron Man, Thor, Dr Strange போன்ற கதைகளாக கொள்ளலாம். ஒவ்வொன்றிலும் கதாபாத்திரங்கள் & சூழ்நிலைகள் வெவ்வேறாக இருக்கும். ஆனால், ஒரே கரு தானிருக்கும். MCUவில், தீயது அழிதல்; இராமாயணத்தில், மனம் அழிதல் / மனம் அமைதியடைதல்.

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Monday, April 11, 2022

அசோக மரக்காட்டில் இருந்தபோது அன்னை சீதை அமர்ந்திருந்த கல்!!


இலங்கையிலிருந்த அசோக மரக்காட்டில் சிறை வைக்கப்பட்டிருந்தபோது, திரு சீதை அன்னை இக்கல்லின் மீது அமர்ந்திருந்தார் என்பது தொன்நம்பிக்கை. பன்னெடுங்காலமாக, இலங்கையில் வழிபாட்டிலிருந்த இந்த கல் தற்போது அயோத்திக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. திரு இராமர் கோயில் கட்டி முடித்தபின், அங்கு இந்த கல் நிறுவுப்படும்.

oOOo

மெய்யியல் கணக்கில்:

🌷 இராவணன் என்பது நம் மனம். அவரது பத்து தலைகள் என்பது ஐம்புலன்களையும், ஐங்கருவிகளையும் குறிக்கும். இவற்றை மேற்கொண்டு விரித்தால், நமதுடல், நாம் காணும் உலகம் என்று விரியும்.

🌷 இராமன் என்பது நாமே - நமது தன்மையுணர்வே.

🌷 நம்மைப் பற்றிய மெய்யறிவு கிடைத்தவுடன் என்ன நடக்கிறது என்பதை நமது மாமுனிவர்கள் பலவிதமாக பதிவு செய்துள்ளனர். இராம காதையை எழுதியவர், "[வேட்கை] தணிதல்" என்று உருவகப்படுத்தியுள்ளார்.

பல காலம், தேடியலைந்த பொருள் கிடைக்கும்போது நமக்கு எப்படியிருக்கும்? "அப்பாடி" என்றிருக்கும்.

இந்த அப்பாடி என்ற உணர்வுதான் தணிதல் - சீதை - எனப்படுகிறது!

oOOo

இராமர்-சீதை வாழ்ந்தது திருத காலம். ஏறக்குறைய 17 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர். இதை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும், பன்னெடுங்காலத்திற்கு முன்னர் என்று எடுத்துக் கொள்ளலாம்.

வைணவம் உருவாக்கப்பட்டது ஏறக்குறைய 1,300 ஆண்டுகளுக்கு முன்னர். அவர்களது நாமச்சின்னம் உருவாக்கப்பட்டது ஏறக்குறைய 850 ஆண்டுகளுக்கு முன்னர். எனில், அன்னை அமர்ந்திருந்த கல்லுக்கு எப்படி வைணவச்சின்னத்தை அணிவிக்கலாம்?

இராம பிரானுக்கும் திரு வசிட்ட மாமுனிவருக்கும் 🌺🙏🏽🙇🏽‍♂️ இடையே நடந்த உரையாடல் "யோகா வாசிட்டம்" என்ற அத்வைத நூலாகியுள்ளது. வைணவமே இல்லாத காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு எப்படி வைணவச்சின்னத்தை அணிவிக்கலாம்?

oOOo

கைப்புள்ள கட்டதுரை போன்று "இராவணன் இப்படி அழுதான்", "அப்படி பயந்தான்" என்று இன்றுவரை ஆரியர்கள் புனைவதைப் பார்த்தால், பேரரசர் இராவணன் அவர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்திருக்கிறார் என்பது உறுதியாகிறது!

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Thursday, July 29, 2021

பாதங்களை நன்கு பார்க்கவேண்டுமாம்! உலகில் வேறெங்கும் இப்படியொரு அமைப்பு கிடையாதாம்!! 🤦



இந்த சிலைகள் என்ன தாமாகவே முளைத்தவையா? பாதங்கள் சற்று மாறியிருக்கும்படியான சிலைகளை இவர்களே செய்து வைத்து விட்டு, "இப்படி இருக்கிறது, பார்", "அப்படி இருக்கிறது, பார்" என்று கதைவிடுகிறார்கள்!!

கருவறையில் இருக்கும் திரு சீதை-ராம-லட்சுமணர் திருவுருவங்கள் உணர்த்துவது:

🌷 ராமர் - மரா எனில் இறப்பு. ராம எனில் இறப்பற்றது. பரம்பொருள்.
🌷 லட்சுமணர் - பரம்பொருளுடன் என்றுமே இருக்கும் அறிவு
🌷 சீதை - மெய்யறிவு கிடைத்த பின்னர் கிடைக்கும் குளுமை

அது சமாதித்தலமெனில், அங்கு சமாதியாகி இருக்கும் பெருமானின் நிலையை இவ்வுருவங்கள் உணர்த்துகின்றன.

இங்கு ராமர் (இருள்) முதலில் தோன்றியவர். லட்சுமணர் (ஒளி) பின்னர் தோன்றியவர். மெய்யறிவு கிடைத்தவுடன் துய்க்கப்படும் குளுமை (சீதை) ராமரின் மனைவியாகிறார். இங்கு அண்ணன்-அண்ணி & தம்பி என்பது பூரி திரு ஜெகந்நாதர் திருக்கோயிலில் சகோதர சகோதரியாகிவிடும். மேலும், அங்கு ஒளி (பலராமர்) முதலில் தோன்றியதாகவும், இருள் (கண்ணபிரான்) பின்னர் தோன்றியதாகவும், மெய்யறிவு கிடைத்தவுடன் துய்க்கப்படும் மகிழ்ச்சி தங்கையாகவும் (சுபத்ரை) கருதப்படுகிறது.

ஒரே வைணவத்திற்குள் ஏன் இவ்வளவு மாறுபாடுகள் என்று சிந்தித்தால் நாமும் ராம பிரானாகலாம் அல்லது கண்ண பிரானாகலாம். இதை விட்டு, மாறுபட்ட கால்களை நன்கு உற்றுப்பார்த்து 😳, உற்றுப்பார்த்ததை அவ்வப்போது நினைவிலும் நிறுத்திக்கொண்டிருந்தால் 😖, எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் என்ற விதியின் படி நாமும் அம்மாறுபட்ட கற்பாதங்களாக ஆகலாம்!! 🥴

("அன்பே வா" நாகேஷ் பாணியில்) எப்படி நம்ம வசதி? 😁

Sunday, June 12, 2016

🎭 வேறு உடை பூண்ட வைரமுத்து 😉


இந்த வாதம் ஸ்ரீராமனுக்கு மட்டும்தானா? இல்லை, ஞானி யேசுவுக்கும் அவர் தம் அன்னை மேரிக்கும், மனைவி மேக்தலினுக்கும் பொருந்துமா?

இல்லை இப்படி எழுதினால் இவ்வளவு கொடுக்க வேண்டும் என்று பரங்கிகளிடம் ஒப்பந்தம் ஏதும் போட்டுவிட்டானா இந்தக் கருங்காலி?

😡😡😡

🌸🌹🍀🍁🌺🌻🌼

This is what Bhagavaan Sri Ramana Maharshi had to say about Lord Sri Raamar:

Ramana Mahashi recounts: “Rama and Lakshmana were wandering in the forest in search of Sita. Rama was grief-stricken. Just then Siva and Parvati happened to pass close by. Siva saluted Rama and passed on. Parvati was surprised and asked Siva to explain why He, the Lord of the Universe, being worshipped by all, should stop to salute Rama, an ordinary human who having missed his consort was grief-stricken and moving in anguish in the wilderness and looking helpless. Siva then said: “Rama is simply acting as a human being would under the circumstances. He is nevertheless the incarnation of Vishnu, and deserves to be saluted. You may test him if you choose.” Parvati considered the matter, took the shape of Sita and appeared in front of Rama, as he was crying out the name of Sita in great anguish. He looked at Parvati appearing as Sita, smiled and asked, “Why, Parvati, are you here? Where is Sambhu? Why have you taken the shape of Sita?” Parvati explained how she meant to test him and sought an explanation for Siva saluting him. Rama replied: “We are all only aspects of Siva, worshiping Him at sight and remembering Him out of sight.”

posted from Bloggeroid