Showing posts with label காளமேகப் புலவர். Show all posts
Showing posts with label காளமேகப் புலவர். Show all posts

Sunday, May 12, 2019

வெங்காயம் சுக்கானால்... 😍

வெங்காயம் சுக்கானால்
வெந்தயத்தால் ஆவதென்ன
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை
மங்காத சீரகத்தை தந்தீரேல்
வேண்டேன் பெருங்காயம்
வேரகத்துச் செட்டியாரே!!

-- #காளமேகப் #புலவர் 🙏🏼

சமையலறை சரக்குகளை வைத்தே ஒரு அருமையான ஆன்மிக #சிலேடை பாடலை எழுதியிருக்கிறார்! 👏🏼👌🏼😍 சிலேடை பாடல்கள் இரு பொருள் தரும். இப்பாடலின் ஆன்மிக பொருளை மட்டும் இங்கு பார்ப்போம்.

🔶 வெங்காயம் - வெறும் காயம் - வெங்காயத்தை இறுதி வரை உரித்தாலும் எதுவும் இருக்காது. அவ்வாறே இவ்வுடலையும் இறுதி வரை உரித்துப் பார்த்தாலும் உள்ளே யாரும் இருக்கமாட்டார்கள்.

🔶 சுக்கானால் - காய்ந்து சாரமற்ற இஞ்சி போன்று உயிர் பிரிந்த உடல் (காயம்).

🔶 வெந்தயத்தால் ஆவதென்ன - உயிர் பிரிந்த உடலை எரிப்பதால் கிடைப்பதென்ன? வெறும் சாம்பல் மட்டுமே.

🔶 இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை - இந்த உலகில் யார் இறந்த உடலை வைத்துக்கொள்ள விரும்புவர்?

🔶 மங்காத சீரகத்தை தந்தீரேல்  - சீரகம் - சீரான அகம் - அலைபாயாத மனம் - சஞ்சலமற்ற அறிவு - நிலைபேறு. நிலைபேற்றை கொடுத்தீர்களேயானால்...

🔶 வேண்டேன் பெருங்காயம் - பெரும் / பெருமைக்குரிய உடல். மனித பிறவியே கிடைத்தற்கரிய பிறவியாதலால், இங்கு பெருங்காயம் மனித உடலைக் குறிப்பதாக எடுத்துக் கொள்ளலாம். கவன ஆற்றலை நான் என்னும் தன்மையுணர்வின் மீது திருப்புவது என்பது மனிதப் பிறவியால் மட்டுமே முடியும். ஏனைய பிறவிகளுக்கு ஊழ்வினையில் கொடுப்பினை இருந்தால் மட்டுமே சாத்தியம். (இங்குதான் பேயாரின் (காரைக்கால் அம்மையார்) 🌺🙏🏼 அறிவுத் திறனை நாம் பாராட்ட வேண்டும். பெருங்காயமோ, சிறுகாயமோ, உன்னை என்றும் மறவாதிருக்கவேண்டும் என்று கேட்டுவிட்டார்! 😀)

🔶 வேரகத்து செட்டியாரே - வேரகம் - #திருவேரகம் - #சுவாமிமலை. செட்டியார் - (இங்கு) பலசரக்கு வாணிபம் செய்பவர். இவ்வண்டத்திலுள்ள அனைத்து சரக்குகளையும் வைத்து, அவற்றை உயிர்கள் அனுபவிக்க உழைப்பு என்னும் குடியிறையைப் பெற்றுக் கொண்டு வாணிபம் நடத்தும் சுவாமிமலையில் சமாதியாகியுள்ள பெருமான் - #தகப்பன் #சுவாமி!! 🌺🙏🏼

படிக்கும்போதே மனதிற்கு குதூகலத்தையும் 😊, பொருளை உணரும் போது பெரும் மகிழ்ச்சியையும் 😍 கொடுக்கும் இது போன்ற உயர்ந்த பொருள் பொதிந்த சிலேடைப் பாடல்களைப் இனி யார் தமிழன்னைக்கு அணிவிக்கப் போகிறார்கள்? 😔

🌱🌿🌳🌴

இந்த பாடல் எனக்கு கிடைக்கும் போதே நாமப்பேர்வழிகளின் கைங்கரியத்துடன் தான் கிடைத்தது. சீரகம் என்றால் ஸ்ரீ + அகமாம்! 😝 ஏரகம் என்றால் வைகுண்டமாம!! 😂 (கணவனும் மனைவியும் தனிதனிக் குடித்தனம் போலிருக்கிறது!! 😁) வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்தக் கூட்டம் சைவத்திலிருந்தோ, அத்வைதத்திலிருந்தோ கதைகளை சுட்டு வைணவ காப்புரிமை (நாமம்) போட்டுவிடும் என்பதை நன்கு அறிவேன். இது தான் முதல் முறை ஒரு சைவப் பாடலை சுடுவதைப் பார்க்கிறேன். அன்னை தமிழை யாரும் சரியாக கவனிப்பதில்லை என்பதாலா? "யாரும் சரியாக கவனிக்காத போது", "அனைவரின் கவனமும் வேறு திசையில் இருக்கும்போது", "இன்னும் புகழ் பெறாத மகான்"... எல்லாம் இவர்களது தொழிலின் உட்கூறுகள்!! அந்த கொங்கணவச் சித்தரும் (திருமலை பெருமாள் 🌺🙏🏼), சட்டை முனி சித்தரும் (திருவரங்கப் பெருமாள் 🌺🙏🏼) தான் இவர்களை திருத்த வேண்டும்.

💥💥💥💥💥

இப்படியே போனால் இவர்களது பாதையில் தொடர்ந்து வரும் பரங்கி மதத்தினர் இன்னும் சில தலைமுறைகளில் இப்பாடலை தமதாக்கி, சீரகம் எனில் உள்ளூர் கிளை என்றும், ஏரகம் எனில் இத்தாலியிலுள்ள தலைமை அலுவலகம் என்றும் கதை விட வாய்ப்புள்ளது!! 🤣🤣

💥💥💥💥💥

இன்று வரை வெட்டு, குத்து, குண்டு என்று தொழிலை ஓட்டும் வெடிகுண்டு மதத்தினர் ஒரு வேளை நாம பேர்வழிகளின் வழியில் பயணிக்க நேர்ந்தால்... சீரகம் எனில் உள்ளூர் தீவிரவாத பயிற்சி கூடத்திலுள்ள சுவர் என்றும், ஏரகம் எனில் கருப்புத்துணி மூடிய கட்டிடம் என்றும் கதை விடுவார்கள் என்று உறுதியாக கற்பனை செய்து கொள்ளலாம்!! 🤣🤣🤣