Showing posts with label அப்பர் பெருமான். Show all posts
Showing posts with label அப்பர் பெருமான். Show all posts

Tuesday, August 19, 2025

திருக்கயிலாயக் காட்சி எனும் சூழ்ச்சியில்லாக் காட்சி!

அப்பர் பெருமான் 🌺🙏🏽🙇🏽‍♂️ திருக்கயிலாயக் காட்சியை கண்ட போது, அம்மையப்பரோடு சில அசுரர்களும் காட்சி கொடுத்தனர் போலிருக்கிறது! 😜

oOo

திருக்கயிலாயக் காட்சி:

ஒரு நீர் நிலையில், பாதியுடல் நீருக்குள் இருக்குமாறு, அப்பர் பெருமான் நின்று கொண்டிருப்பார். அவருக்கு எதிரே, விடை மீது அமர்ந்தவாறு திரு அம்மையப்பர் காட்சி கொடுத்துக் கொண்டிருப்பர்.

> அப்பன் + அம்மை + விடை = 
> அவன் + அவள் + அது = 
> காண்பான் + காட்சி + காணும் செயல் = 
> தன்மையுணர்வு + காட்சி (படைப்பு) + மனம்

நமது அன்றாட வாழ்வும் இத்தகையதே. நாமும் ஒரு காட்சியை காணும் போது உணர்வுடன் இருக்கிறோம். காட்சி தோன்றுகிறது. காணுதல் எனும் செயலும் நடக்கிறது. எனில், நாம் காணும் காட்சிக்கும், பெருமான் கண்ட திருக்கயிலாயக் காட்சிக்குமுள்ள வேறுபாடென்ன?

இதற்கான விடையை திரு திருவாதவூரடிகள் (அசுரத்தில், மாணிக்கவாசகர்) கொடுக்கிறார். அப்பர் பெருமான் பெற்ற அதே காட்சியை, அடிகளார் திருக்கழுக்குன்றத்தில் பெறுகிறார். அதை, "சூழ்ச்சியில்லாக் காட்சி" என்றழைக்கிறார்.

இப்போது நம்மிடம் வந்து, "நீ வேறு. உனது மனமும், உடலும், வையகமும் வேறு." என்று சொன்னால் ஏற்றுக் கொள்வோமா? ஏற்றுக்கொள்ள மாட்டோம். ஏன்? நமக்கு கிடைக்கும் நுகர்வு (அசுரத்தில், அனுபவம்) அத்தகையது. உண்மையை இம்மியளவு கூட உணர முடியாதவாறு காட்சிகள் திறம்படத் தோன்றுகின்றன. இதுவே அன்னை / பெருமாளின் சூழ்ச்சியாகும் (அசுரத்தில், மாயை).

திருக்கயிலாயக் காட்சியில் சூழ்ச்சிக்கே இடமிருக்காது. யாவற்றிலிருந்தும் நாம் விலகியிருப்போம். அக்காட்சியை காண்பதால் தெளிவு கிட்டும். தெளிவு கிட்டியதால்தான், "கண்டறியாதன கண்டேன்" என்று பாடினார் அப்பர் பெருமான்.

ஒவ்வொரு ஆண்டும் திருக்கயிலாயக் காட்சியை நினைவு கூறுவது எதற்காக? சிந்திப்பதற்காக. பெருமான் பெற்ற தெளிவை நாமும் பெறுவதற்காக. தெளிவு பெற்று, பிறவிச் சூழற்சியிலிருந்து மீள்வதற்காக.

எனில், சூழ்ச்சியில்லா காட்சியில் சூழ்ச்சியின் மனித வடிவங்களில் ஒன்றான அசுரருக்கென்ன வேலை? 👊🏽👊🏽😍😌

oOOo

அசுரம் தவிர். தமிழ் பயில். 💪🏽

அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻