Tuesday, November 28, 2023

மாதம் மும்மாரி பொழியட்டும்!!


இவ்வாழ்த்துரை உண்மையானால், அதாவது, மாதம் மூன்று முறை மழை பெய்தால்... அப்பகுதி சதுப்பு நிலமாகிவிடும்! 😃 மனிதர் வாழத் தகுதியற்றதாகிவிடும்!! எனில், இதன் உட்பொருளென்ன?

மாதம் + 3 மாரி + பொழி + அட்டும் என்று பிரிக்கலாம்.

🔸 மாதம் - புவியின் நகர்வு. பகலவனை புவி சுற்றிவர, மாதங்கள் உருண்டோடும்.

🔸 3 மாரி - இங்கு மாரி என்பது மழையை குறிக்காது. இறப்பை குறிக்கும்! மாரி என்ற சொல்லின் பல பொருட்களுள் ஒன்று இறப்பாகும்.

3 இறப்புகள் - கனவு, நனவு, தூக்கம். ஆரியத்தில், இவற்றை அவஸ்தைகள் என்பர். நமது சமயம் இவற்றை இறப்பாக காண்கிறது.

கனவு, நனவு, தூக்கம் எப்போது வரும்? ஒவ்வொரு நாளும் வரும். எனில்,

கனவு, நனவு, தூக்கம் = 1 நாள்.

🔸 பொழி - கடலருகேயுள்ள சிறு தீவு.

கடல் - மாயை / வையகம் / படைப்பு. 
தீவு - மாயையிலிருந்து மீண்டவர்.

🔸 அட்டும் - நடக்கட்டும். ஆணையிடுதல்.

இப்போது எல்லாவற்றையும் இணைப்போம்:

🌷 மாதம் - காலங்கள் உருண்டோடட்டும் / இயற்கையின் சுழற்சி நிற்காது நடக்கட்டும்.

🌷 மும்மாரி - நாட்கள் உருண்டோடட்டும்.

🌷 பொழி - நீ அவற்றில் சிக்கிக் கொள்ளாமல், பார்வையாளனாக மட்டுமிரு.

இன்னும் எளிமையாக்கினால்:

பிறவியுள்ளவரை இயற்கை நன்கு இயங்கட்டும். பிறவி முடிந்த பிறகு, பிறவாமை கிட்டட்டும்.

இவ்வளவுதானே உருப்படியான பிறவியெடுத்த ஒவ்வொருவருக்கும் வேண்டும்?

oOOo

என்றுமுள தென்தமிழ் வாழ்க 🌺🙏🏽

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

No comments:

Post a Comment