Monday, May 29, 2023

செங்கோலில் இடம்பெற்றிருக்கும் 3 சின்னங்கள்


செங்கோலில் இடம்பெற்றிருக்கும் 3 சின்னங்கள்: விடை, அன்னை மலர்மகள் & மேலெழும் கொடி.

🔸 விடை

- அயராத உழைப்பின் அடையாளம்
- தன் தலைவன் இட்ட பணியை, பயன் கருதாமல், செய்து முடிக்கும்
- தனது கழிவுகளால் நிலத்தை வளப்படுத்தும்

இங்ஙனமே, ஒரு மன்னவன், தனது கடமைகளை (இறைவன் இட்ட பணிகளை) பயன் கருதாமல், செய்து முடிக்கவேண்டும்; அயராது உழைக்கவேண்டும். தனது சொல் & செயலால் (கழிவுகளால்) தனது நாட்டை மேம்படுத்தவேண்டும்.

🔸 அன்னை மலர்மகள்

மெய்யறிவைக் குறிக்கிறார்.

நம்மை நாம் அழியும் உடலாக காணும்வரை ஆசைகளுக்கு முடிவிருக்காது. ஆசை -> சுயநலம் -> அநீதி -> குற்றங்கள்... என பெருகிக்கொண்டேப்போகும்.

எப்போது "நாமே அழியாப் பரம்பொருள்" என்ற நமதுண்மையை உணர்கிறோமோ, அப்போது யாவும் கட்டுக்குள் வரும்; அல்லது, அற்றுப்போகும்.

🔸 மேலெழும் கொடி

அளப்பரிய ஆற்றல்.

ஒரு மன்னவன், எக்கணமும் மக்களின் துயர்துடைக்க, நாட்டுநலனை காக்க அணியமாக (தயாராக) இருக்கவேண்டும். இதற்கு வற்றாத ஆற்றல் வேண்டும்.

மேற்சொன்ன தன்மைகளை உடைய மன்னவன் ஆளும் நாட்டில், அப்படிப்பட்ட மன்னவனை பின்பற்றி வாழும் மக்கள் நிறைந்த நாட்டில் எதற்கு குறைவிருக்கும்?

(தெருமாக்களுக்கு, திராவிடியாள்களுக்கு, பகுத்தறிவுவியாதிகளுக்கு, மெக்காலே -மண்டையர்களுக்கு குறைவிருக்கும்! 😁)

oOOo

மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம் 🌺🙏🏽🙇🏽‍♂️

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌼🌼🌼🌼🌼

No comments:

Post a Comment