விட்டால், அடுத்து, இடுப்பு வலிக்கான காப்புக் (அசுரத்தில், பரிகாரம்) கோவிலென்று அறிவிப்பார்கள் போலிருக்கிறது! 😁
🔸 இடுக்கு - இடுக்கி - ஒரு பொருளை கவ்வியெடுக்க உதவும் கலன் (கருவி).
🔸 பிள்ளையார் - அறிவு.
இரண்டையும் இணைத்தால் கிடைப்பது: கவ்வியெடுக்க உதவும் அறிவு!
இது, முருக வழிபாட்டில் வரும் சேவலுக்கு நிகரான குறியீடாகும். சேவலானது தேவைப்படும் போது தலையை சற்று நீட்டி, தேவையானதை கொத்தும். அது போன்று, நமது அறிவையும் தேவையான போது, வாழ்வுக்கு இன்றியமையாததின் மீது மட்டும் செலுத்தவேண்டும். இப்படி சிந்தித்து, தேவையானதை மட்டும் எடுத்துக் கொண்டால் தப்பிப்போம். இல்லையெனில்... "இடுப்பு வலி" ஏற்படும்!
🔸 இடுப்பு - உடலின் இடுப்புக்கு அடுத்திருக்கும் பாலுறுப்பு - உயிர்கள், பொருட்கள் மீது கொள்ளும் விருப்பு, வெறுப்பு (அசுரத்தில், காமம்) - பற்றுகள்.
🔸 வலி - பற்றுகளால் ஏற்படும் விளைவுகள் - தொல்லைகள்.
அதாவது, பற்றுகளில் சிக்கி அவற்றால் பல இன்னல்களை சந்திப்போம்.
இடுக்குப் பிள்ளையார் இருக்க இடுப்பு வலி எதற்கு? = அற்றம் காக்கும் அறிவிருக்க பற்றுகள் எதற்கு?
oOOo
அறிவு அற்றம் காக்கும் கருவி -- திருவள்ளுவர் 🌺🙏🏽🙇🏽♂️
அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽♂️
திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽♂️
🪻🌼🪷🌼🪻

No comments:
Post a Comment