"மனைவியை விட்டுப் பிரிந்து வாழ்ந்தால் மன்னராகலாம்" என்றொரு கூமுட்டை சொன்னதை நம்பி, மனைவியை விட்டுப் பிரிந்து வாழ்கிறாராம் ஒரு சிங்களத் தெலுங்கு நடிகர்! 😀
"3 துறவியரை வீட்டிற்குள் வரவழைத்து மரியாதை செய்தால், அரச பதவியை தக்க வைத்துக் கொள்ளலாம்" என்றொரு கூமுட்டை சொன்னதை நம்பி, 3 நாமாசுரரை வீட்டிற்குள் வரவழைத்து மரியாதை செய்திருக்கிறார் கொல்டியாள் முன்னேற்றக் கழகத்தின் (கொமுக) பட்டத்து இளவரசர்! 😃
"கையில் கருங்காலி வைத்திருந்தால் சிறப்பான எதிர்காலம் அமையும்" என்றொரு கூமுட்டை சொன்னதை நம்பி, கையும் கோலுமாக திரிகிறாராம் மதுரை தெலுங்கரின் மனைவி! 😄 இதே அறிவுரையை கேட்டு, காலை நடை பயணத்தின் போது, கருங்காலிக் கோலை பயன்படுத்துகிறாராம் தற்போதைய கொமுக மன்னர்! 😁
(அடியேனும் பிறப்பால் தெலுங்கன்தான். ஆனால், உணர்வால் திருநெறியத் தமிழன்! 🙏🏽)
oOo
🌷 மனைவியை விட்டுப் பிரிந்து வாழ்தல்
> கணவன் & மனைவி - அம்மையப்பர்
> கணவன் - அப்பன் (சிவன்) - நான் எனும் நமது தன்மையுணர்வு
> மனைவி - அம்மை - மனம்
> மனைவியை பிரிதல் - மனதை பிரிதல்
> மனதை பிரிதல் - மனதை கண்டுகொள்ளாதிருத்தல்
> மனதை கண்டுகொள்ளாதிருந்தால் - மனமடங்கும். தொடர்ந்து கடைபிடித்தால், காலப்போக்கில், அழிந்தே போகும்.
> மனமழிந்தால் மீதமிருப்பது - நமது தன்மையுணர்வு மட்டுமே. இதுவே அரச பதவியெனும் வீடுபேறாகும்.
🌷 கையில் கருங்காலி வைத்திருத்தல்
கருங்காலி மரம் உறுதி யானதாகும். முதலில், கருங்காலி மரத்தின் ஒரு பகுதியை / ஒரு கிளையை வெட்டியெடுத்து, சீர் செய்து, கோடாலிக்கு பிடியாக பொருத்திக்கொண்டு, பின்னர் அதைக் கொண்டே மரத்தை வெட்டிச் சாய்ப்பார்கள். இந்த அடிப்படையில், தான் சார்ந்துள்ள குடும்பத்தை, நிறுவனத்தை, குழுவை, இனத்தை, நாட்டை அழிப்பவரை கருங்காலிகள் என்றும், அவர்களது செயலை கருங்காலித்தனம் என்றும் அழைக்கிறோம்.
இந்த வையகத்தில், எதையும் நாம் மனதின் வழியாகத்தான் அறிய முடியும். ஓர் எடுத்துக்காட்டிற்காக, திரு அருட்கடல் பெருமானின் (அசுரத்தில், பகவான் இரமணர்) "நான் யார்?" என்ற அறிவுரையை எடுத்துக் கொள்வோம்.
மேற்கண்ட அறிவுரையை பற்றி படிக்கிறோம்; அல்லது, கேள்விப்படுகிறோம். உடனே, அது நமது மனதின் ஒரு கூறாகிவிடும். அடுத்து, அதைப்பற்றி சிந்திக்க தொடங்குகிறோம். செயல்படுத்துகிறோம். ஒரு சமயத்தில் மனமழிந்து தெளிவு பெறுகிறோம். இவ்வாறு, மனதின் ஒரு கூறாகி, பின்னர் மனதையே அழிப்பதால், "நான் யார்?" என்ற அறிவுரை கருங்காலியாகிறது!
காலையில் கண் விழித்தது முதல், இரவு உறங்கும் வரை, தன்னை நாடும் பயிற்சியை ("நான் யார் ?" என்ற சிந்தனை) இடைவிடாது செய்யவேண்டும். விட்டு விட்டு செய்தால் பயன்படாது. இதையே, "கருங்காலிக் கோலை எப்போதும் கையில் வைத்திருக்கவேண்டும்" என்று பதிவு செய்திருக்கின்றனர்!
மனமழிந்த பிறகு அங்கு செய்வதற்கு ஒன்றுமிருக்காது. எதுவும் நம்மை பாதிக்காது. வருவதை வரவிட்டு, போவதை போக விட்டு, திரைப்படத்தை பார்க்கும் ஒரு பார்வையாளனை போன்று வாழ்க்கையை பார்த்துக் கொண்டிருப்போம். இதுவே கருங்காலியால் கிடைக்கும் "சிறப்பான எதிர்காலமாகும்"!
🌷 வீட்டிற்குள் 3 துறவியரை வரவழைத்தல்
முன்னர் கண்ட இரண்டும் நிலைபேற்றினை போற்றுகிறதெனில், இது அலைபேற்றினை போற்றுகிறது.
> அலைபேறு - மனதை அலைபாய விடுவது, பற்றுகளை சேர்த்துக் கொள்வது, பிறவி சுழற்சியில் இருப்பது. அதாவது, இப்போது நாமிருக்கும் நிலை.
> வீடு - நமது உள்ளம்
> 3 துறவிகள் - நனவு, கனவு, தூக்கம் என்ற 3 நிலைகள்
"அன்பே வா" திரைப்படத்தில் ஒரு ஒரு காட்சியில் கம்பிச்செய்தி (அசுரத்தில், தந்தி) வரும். அதைப் படித்துவிட்டு,
நாகேஷ்: நாளைக்கு முதலாளி வர்றார்
மனோரமா: (ஏற்கனவே அங்கிருக்கும் எம்ஜிஆர்தான் முதலாளி என்பது இவருக்கு தெரியும். எனவே...) என்னது? முதலாளி வர்றாரா?
நா: பின்ன என்ன இங்கயா இருக்குறாரு?
இந்த நகைச்சுவை காட்சிக்கு இணையானதுதான் நனவு, கனவு & தூக்கம் என்ற 3 துறவிகளை நமக்குள்ளே வர விடுவதென்பது! ஏற்கனவே அவர்களை உள்ளே வரவிட்டுத்தான் அல்லல் பட்டுக் கொண்டிருக்கிறோம்! 😁 மறுபடியும் எங்கிருந்து உள்ளே வரவிடுவது?
எனில், "அரச பதவியை தக்க வைப்பது" என்பது... நாம் ஏற்கனவே வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையை தக்க வைப்பதாகும்! 😆🤭 இது மட்டும் கொமுக-வின் பட்டத்து இளவரசருக்கு தெரிந்தால், அந்த கூமுட்டையின் நிலை... 😂! இது போன்று, மற்றவருக்கும் அவர்கள் பின்பற்றிக் கொண்டிருக்கும் முட்டாள்தனத்தின் உண்மைப் பொருள் தெரிந்தால், அந்த கூமுட்டைகளின் நிலை... 🤣🤣!
கணியரில் சிலர் மற்றவரிடமிருந்து தங்களை வேறுபடுத்தியும், உயர்த்தியும் காட்டுவதற்காக, உட்பொருளை உணராமல் மெய்யியல் சொற்றொடர்களை சோதிடத்திற்குள் புகுத்தி, அதை கெடுத்து, அதன் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை அழித்துக் கொண்டிருக்கின்றனர்!!
oOOo
அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽♂️
திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽♂️
🪻🌼🪷🌼🪻
No comments:
Post a Comment