😔 டில்லி தொடரி நிலைய நெரிசலில் சிக்கி 18 பேர் இறப்பு!
😔 300 கிமீ நீளத்திற்கு போக்குவரத்து நெரிசல்!
😔 பிரயாக்ராஜ் ஆறுகள் குளிக்க தகுதியற்றவை - நடுவண் மாசுக் கட்டுப்பாடு வாரியம்
ஒரு குறிப்பிட்ட சமயத்தில், ஒரு குறிப்பிட்ட நீர் நிலையில் மூழ்கியெழுந்தால் வீடுபேறு கிட்டுமென்று நம்புவது முட்டாள்தனம்!!
🌷 கங்கை - வெள்ளை.
🌷 யமுனை - கருப்பு.
🌷 கங்கையும் யமுனையும் கலக்குமிடம் - வெள்ளையும் கருப்பும் கலக்குமிடம் - ஒளியும் இருளும் கலக்குமிடம்.
🌷 வெள்ளை / ஒளி - நாம் - நமது தன்மையுணர்வு (சிவம்).
🌷 கருப்பு / இருள் - நம்மைத் தவிர மீதமனைத்தும் - மனம், உடல், வையகம் என மொத்த படைப்பு (அன்னை).
🌷 கங்கை+யமுனை = வெள்ளை+கருப்பு = ஒளி+இருள் = உணர்வு+படைப்பு = நாமெடுத்திருக்கும் பிறவி. அல்லது, நாம் வாழும் வாழ்க்கை!
🌷 காளை வீடு (அசுரத்தில், ரிஷப இராசி) - நிலைத்த வீடுகளிலொன்று (அசுரத்தில், ஸ்திர இராசி).
🌷 வியாழன் (அசுரத்தில், குரு) - இறையருள் / மெய்யாயரின் அருட்பார்வை (அசுரத்தில், குருவின் அருட்பார்வை).
🌷 கூடுதுறையில் (அசுரத்தில், சங்கமத்தில்) மூழ்கியெழும்போது, அதுவரை உண்ட ஒரு காய்கறியை, "இனி உண்ணமாட்டேன்" என்று உறுதி பூண்டல்:
🔸 காய்கறி - காய் - அசுரத்தில், காயம் - உடல்.
🔸 காயை விடுதல் - காயத்தை விடுதல் - "நான் இவ்வுடல்" என்ற எண்ணத்தை விடுதல்.
(உறுதி பூணாமல் வெறுமனே மூழ்கியெழுந்தாலும் இவ்விளக்கம் பொருந்தும்.)
🌷 இறுதியாக, யாவற்றையும் இணைப்போம்: காளை வீடு + வியாழனின் பார்வை + மூழ்கியெழுதல்:
ஒரு சமயத்தில், இறையருளால், அல்லது, பகவான் திரு இரமண மாமுனிவர் போன்ற பெருமானின் அருட்பார்வையால், "நாம் இவ்வுடலல்ல" என்ற அறிவு தோன்றும். அப்போது அவ்வறிவை இறுகப் பற்றிக்கொண்டு, வாழ்வை உதறிவிடவேண்டும்.
"சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொன்னால்" என்பது போல, செய்யும் வினைமுறைகளின் (அசுரத்தில், சடங்குகளின்) பொருளுணர்ந்து செய்தால் பயன் விளையும். இல்லையெனில், பொருட்செலவு, வீண் அலைச்சல், உயிரிழப்பு, நோய் தொற்று... போன்றவைதான் விளையும்!!
oOOo
அருள் நிறைவான அமுதக்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽♂️
திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽♂️
🪻🌼🪷🌼🪻
No comments:
Post a Comment