Tuesday, October 31, 2023
பரிகாரம் - சிறு விளக்கம்
Tuesday, October 24, 2023
ஆக்கம் பெருக்கும் மடந்தையின் (ஆரியத்தில், சரசுவதி) திருநாள்!
Sunday, October 22, 2023
தட்சிண கயிலாயமா? உத்திர திருவண்ணாமலையா?
Friday, October 13, 2023
ஆங்கில மொழி பெயர்ப்பில் ஆரியம் கலக்காதபோது, தமிழில் மட்டும் ஏன் ஆரியம் கலந்திருக்கவேண்டும்?
Wednesday, October 4, 2023
நாகபஞ்சமி - புனைவுக்கதையும் உட்பொருளும்
Tuesday, September 26, 2023
அட்டமங்கலம் = 8 உகந்த பொருட்கள் = எண்பொருட்கள்: உட்பொருள்
அட்டமங்கலம் என்பது பின்வரும் 8 உகந்த பொருட்களை குறிக்கும்:
கண்ணாடி
நிறைகுடம்
கொடி
விசிறி
தோட்டி
முரசு
விளக்கு
இரு மீன்கள் - இணைக்கயல்
இவற்றை தனித்தனி பொருட்களாகவோ, அல்லது, அனைத்தையும் ஒன்றாக ஒரு தாமிரத்தகட்டில் அச்சடித்தோ, சிலர் தங்களது வழிபாட்டு அறையில் வைத்திருப்பதை காணலாம்.
oOo
முதற்கண் தெரிந்துகொள்ளவேண்டியது மங்களம் & மங்கலம் ஆகிய இரு ஆரியச் சொற்களுக்கு இடையேயுள்ள வேறுபாடு:
மங்களம் - நிறைவு
மங்கலம் - உகந்தது / நற்குறி
அட்டமங்கலம் = 8 உகந்த பொருட்கள் = எண்பொருட்கள்.
1. கண்ணாடி
இது எதற்கு உதவுகிறது? முகம் பார்க்க. முகம் பார்த்து என்ன செய்யப்போகிறோம்? நம்மை சீர் செய்து கொள்ளப்போகிறோம். இவ்வாறே நமக்கு அமைந்திருக்கும் உடல், நம் கண் முன்னே விரியும் வையகம், நமக்கு தோன்றும் எண்ணங்கள் என யாவும் நமக்கு கண்ணாடி போன்றவையாகும். இவற்றினால் நாம் சீராகவேண்டும் / மேம்படவேண்டும் என்பது உட்பொருளாகும்.
2. நிறைகுடம்
முழுமையான அறிவு - எதையறிந்தால் நமது மனம் நிறைவடையுமோ அதைப் பற்றிய அறிவு. அதாவது, மெய்யறிவு.
3. கொடி
தரையில் படராமல், மேலெழும்பும் கொடிவகைகளைக் குறிக்கும். அவற்றை போன்று, மேலான குறிக்கோளை நோக்கி செல்லவேண்டும். எது மேலான குறிக்கோள்? உள்ளபொருள் / பரம்பொருள்!
4. விசிறி
அ. இளைப்பாறுதல். மொத்தப் பிறவியே இளைப்பு-ஆறுவதற்காகத்தானே! எனவே, எதையும் பொறுமையாக அணுகவேண்டும்.
ஆ. விசிறியை வீசிக்கொண்டிருந்தால் ஈ, கொசு முதலான பூச்சிகள் நம்மை அண்டாது. இதுபோன்று, "தீய எண்ணங்களை / தீய நபர்களை அண்டவிடாதே" என்றும் பொருள் கொள்ளலாம்.
5. தோட்டி
தோட்டி எனில் அங்குசமாகும். வெறி பிடிக்காமல் இருப்பதற்காக. யானைக்கு மதம் பிடித்தால், பாகன் தோட்டியை பயன்படுத்துவதை பார்த்திருக்கலாம். அதுபோன்று, ஒரு வேளை, நமக்கு வெறி பிடித்தால் நமது தோட்டியை பயன்படுத்தி வெறியை அடக்கவேண்டும். யானைக்கு தோட்டியென்பது ஒரு பொருளாகும். நமக்கு தோட்டியென்பது நமது மெய்யாசிரியர், நமது அறநூல்கள், நமது நலம்-விரும்பிகள், நம் வாழ்வில் என்றோ நடந்த நிகழ்வுகள் என யார் / எது வேண்டுமானாலும் இருக்கலாம்.
தோட்டிக்கு பதிலாக மழு இருக்கலாம். அப்படி மழுவை வைத்தால் நமக்கு கிடைக்கும் பொருள்: பற்றுகளை அறுத்தெறி. அல்லது, பற்றுகளை சேர்த்துக்கொள்ளாமல் இரு.
6. முரசு
போர்முரசு. ஒலித்தவுடன், எல்லாவற்றையும் விட்டுவிட்டு போருக்கு புறப்படுதல். இவ்வாறே, செயல் / கடமை என்று வந்தவுடன், உடனடியாக, முனைப்புடன் ஈடுபடவேண்டும்.
7. விளக்கு
விளக்கு எரிவதால் மற்றவர்களுக்கே பயன் கிட்டும். விளக்கிற்கு பயனில்லை. இது போன்று, தந்நலம் கருதாது மற்றவர்களுக்கு உதவிடவேண்டும்.
8. இணைக்கயல்
அன்னை அங்கையர்கண்ணியின் இரு விழிகளைக் குறிக்கும்: விழித்திரு!
வள்ளற்பெருமான் அறிவுருத்திய 3 சொற்களில் ஒன்றாகும். நமது தன்மையுணர்விலிருந்து ஒரு நொடி தவறினாலும், மாயையின் பிடிக்குள் சிக்கிக் கொள்வோம். எனவே, எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.
(ஒரு சாரர், இக்குறியீடு பிறவிகளின் தொடர்ச்சியை, அதாவது, மறுபிறவியை விரும்புதலைக் குறிக்கும் என்று எடுத்துக் கொள்கின்றனர். இது தவறாகும். இப்படி பொருள் கொண்டால், நம் முன்னோர்கள் வகுத்த அறம், பொருள், இன்பம் & வீடு என்ற 4 வழிகளில், வீடு என்ற மேலான வழி தவறானது / தேவையற்றது என்றாகிவிடும். மனிதப்பிறவியின் குறிக்கோள் பிறப்பறுப்பதாகும்.)
oOOo
கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽♂️
திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽♂️
🪻🌼🪷🌼🪻