Saturday, May 29, 2021
ஆச்சாரம் பார்க்கிறவன் காசிக்கு போன கதை - கதையும், உட்பொருளும்!
Thursday, May 27, 2021
திருஞானசம்பந்தர் 🌺🙏🏽🙇🏽♂️ திருநாள்!!
Monday, May 24, 2021
ஒண்டர் வுமன் 1984, ப்ளேட் ரன்னர் 2049 & ஃபோர்ட் x ஃபெர்ராரி
Friday, May 14, 2021
நந்தி எனும் சிவன்காளை என்பது நமது மனம்!!
நம் முன்னோர் வடித்த மிகச்சிறப்பான வடிவங்களில் ஒன்று. இவ்வுலகில் நாம் எப்படி வாழ வேண்டுமென்பதை உணர்த்துவது. அன்றைய பெருந்தொழிலான உழவை அடிப்படையாகக் கொண்டது.
காளையின் தலைவன் அதன் முதலாளி. அவன் இட்ட பணிகளை பலன் எதிர்பார்க்காமல் செவ்வனே செய்யும். விளைந்த நெல்லை தலைவன் எடுத்துக் கொள்ள, அவன் கழித்து விட்டுச்சென்ற தட்டையை உண்டு உயிர் வாழும். காளையின் கழிவுகளால் நிலம் மேம்படும். எந்த வேலையில் ஈடுபட்டிருந்தாலும், தலைவன் மீது கவனம் வைத்திருக்கும்.
இவ்வாறே, நாமும் இவ்வுலகில் வாழவேண்டும். இறைவன் நம் தலைவன். பிரதிபலன் எதிர்பார்க்காமல், வாழ்வை சேவையாகக் கருதி வாழவேண்டும். நமது கழிவுகளால் உலகம் மேம்படவேண்டும் (#பகவான் திரு #ரமண மாமுனிவரின் 🌺🙏🏽🙇🏽♂️ கழிவு: நான் யார்?). எந்த வேலையில் ஈடுபட்டிருந்தாலும், நமது தன்மையுணர்வின் மீது கவனம் இருக்கவேண்டும். ("ஒருவன் உழைக்க வேண்டியிருக்கும் வரையில் தன்னையறியும் முயற்சியையும் கைவிடக்கூடாது" என்பது பகவானது வாக்கு.)
oOOo
8ம் நூற்றாண்டில், பௌத்தத்திலிருந்து தோன்றிய வைணவத்திலுள்ள பசுமாட்டுச் சடங்கிற்கும் சைவத்தின் சிவன்காளைதான் அடிப்படை!
நமது பெரியவர்கள், காளையை இறைவன் முன் அமரவைத்து உழவிற்கு பெருமை சேர்த்தனர் என்பதால் வைணவர்கள், திருப்பள்ளியெழுச்சி சடங்கின் போது, பெருமாளின் முன் பசுமாட்டை திருப்பி நிற்க வைத்து உழவிற்கு பெருமை சேர்த்தனர் (சைவத்தில் உள்ளவை யாவும் வைணவத்தில் இன்னும் சிறப்பாக, பெரிதாக இடம் பெற்றிருக்கவேண்டுமே!! ☺️).
பசுவின் பின்புறத்தின் வழியாக சிறுநீரும், சாணமும் வெளியேறும். இவற்றை நிலத்தில் சேர்த்தால், நிலம் வளம் பெரும். வளமடைந்தால், விளைச்சல் பெருகும். விளைச்சல் பெருகினால் வருமானம் (செல்வம்) பெருகும். ஆக, வருமானம்=செல்வம்=லட்சுமி இருக்குமிடம் பசுவின் பின்புறம்!!
மற்ற உயிரிகளின் சாணத்தை விட, நம் நாட்டுப்பசுவின் சாணத்தில் பலமடங்கு நல்லது செய்யும் நுண்ணுயிரிகள் உள்ளன.
திருப்பள்ளியெழுச்சியின் போது, பெருமாளின் முன்புறம் பசுமாட்டை திருப்பி நிற்கவைப்பார்கள். இதற்கு, "பெருமாள் தனது மனைவியை பார்த்துக்கொண்டே எழுகிறார்" என்பார்கள். சிலர், பசுமாட்டைக் கண்டவுடன் அதன் பின்பகுதியைத் தொட்டு வணங்குவார்கள். இவ்விரண்டிற்கும் உட்பொருள் மேற்கண்ட விளக்கம் தான்.
இப்படிப்பட்ட சடங்கு மற்றும் செயல்களின் மூலம் நாட்டுப்பசுவினுடைய கழிவுகளின் மேன்மையைப் பற்றிய அறிவை பதிவு செய்து காப்பாற்றியிருக்கிறார்கள்!!
oOOo
🔹திருபுன்கூரில் "நந்தனாருக்காக விலகிய நந்தி" எனில், அவ்விடத்தில், உலக காட்சிகள் நீங்க பெற்று, நந்தனார் நாயனார் 🌺🙏🏽🙇🏽♂️ சமாதித் துய்ப்பு பெற்றுள்ளார் என்று பொருள். இதேதான் "பட்டீச்சுரத்திலுள்ள திருஞானசம்பந்த பெருமானுக்காக 🌺🙏🏽🙇🏽♂️ விலகிய நந்தி" என்பதன் பொருளும். அவ்விடத்தில் பிள்ளையார் சமாதித் துய்ப்பு பெற்றுள்ளார்.
🔹திருவல்லத்தில் (முதலாம் ராஜராஜ சோழரின் மாமனும், படைத்தளபதியுமான வந்தியத்தேவனின் ஊர்) கஞ்சனுடன் போராடிய நந்தி: கஞ்சன் என்பது உலகக்காட்சி. கஞ்சனை வெல்வது என்பது உலகக் காட்சிகளின் பொய்த்தன்மையை உணர்வதாகும்!!
இங்குள்ள மூலவருக்கு முன்னுள்ள பலிபீடம் போன்ற அமைப்பின் கீழே தான் சனத்குமார மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽♂️ சமாதியடைந்துள்ளார் என்பது தொன்நம்பிக்கை.
🔹நந்தா - முடிவில்லாதது. உள்ளபொருள்.
நந்தி - முடிவுள்ளது. மனம்.
oOOo
எனது நண்பர் ஒருவர், நம் திருத்தலங்களில் மூலவர் முன் அமர்ந்திருக்கும் சிவன்காளைகளைப் பற்றிய ஒரு நீண்ட இடுகையை அனுப்பியிருந்தார். அவருக்கு நான் அனுப்பிய கருத்துகளின் தொகுப்பே இந்த இடுகையாகும். நன்றி. 🙏🏽
oOOo
கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽♂️
திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽♂️
🌸🌼🌻🏵️💮
Saturday, May 8, 2021
திரு அண்ணாமலையாரும் தோகை விரித்தாடும் மயிலும்!
இது ஒரு அருமையான படம்!! 👌🏽
படமும் அழகு! அது உணர்த்தும் தத்துவமும் அழகு!!
🌷 நாம் காணும் உலகம், திரையில் காணும் காட்சிகளைப் போன்றது. திரை அசைவதில்லை. காட்சிகளால் மாற்றம் அடைவதில்லை. இதை உணர்த்துவது போல், பின்புறம் அசையா அண்ணாமலையார்! முன்புறம் அசைந்தாடும் மயில்!!
🌷 இன்னொரு வகையில், எத்தனை பிறவிகள் எடுத்தாலும், ஆன்மா மாறுவதில்லை; அழிவதில்லை. பிறவிகளே (உடல்களே) மாறுகின்றன; அழிகின்றன. இந்த பேருண்மையை, மயிலை அணைத்தபடி இருக்கும் முருகப்பெருமானின் திருவுருவம் உணர்த்தும். முருகப்பெருமான் உள்ளபொருளைக் குறிக்கிறார். அவரது வேல் மெய்யறிவைக் குறிக்கும். அவர் அணைத்திருக்கும் மயிலின் தோகையிலுள்ள கண்கள் பிறவிகளைக் குறிக்கும். இது போன்று, அண்ணாமலையார் அழியாத, மாறாத உள்ளபொருளையும், முன்னர் நிற்கும் மயிலின் தோகையிலுள்ள கண்கள் பிறவிகளையும் குறிக்கும்.
🌷 இன்னுமொரு வகையில், எத்தனையோ கோடி உயிரிகள் உலகில் வாழ்வது போல் தோன்றினாலும், அனைத்துள்ளும் இருப்பது ஓர் ஆன்மாதான். ஆன்மாவை முருகப்பெருமானும் (இங்கு அண்ணாமலையாரும்), பிறவிகளை மயிலின் தோகையிலுள்ள கண்களும் குறிக்கின்றன.
🌷 இறுதியாக, திரை-காட்சிகள் உவமைக்கு திரும்புவோம். வைணவத்தின் திரு சக்கிரத்தாழ்வார் திருவுருவம் உணர்த்துவதும் இதுவே. முன்புறமுள்ள சக்கிரத்தாழ்வார் இயங்கும் உலகிற்கு (காட்சிகளுக்கு) சமம். பின்புறமுள்ள வடக்கிருக்கும் சிங்கப்பெருமாள் திரைக்கு சமம்.
(மதுரையம்பதியில் கால்மாறி ஆடிய கூத்தப்பெருமானின் திருவுருவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டவர் சக்கிரத்தாழ்வார். பெருமானின் வலது காலும், ஆழ்வாரின் பாதங்களும் குறிப்பது இயங்கும் உலகத்தை!)
oOOo
கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽♂️
திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽♂️
🌸🌼🌻🏵️💮
Friday, April 16, 2021
அனைவருக்கும் இனிய கீழறை (பிலவ) புத்தாண்டு¹ நல்வாழ்த்துகள்!! 💐🙏🏽
"பகுத்தறிவால்" நம் தமிழ்த்தாய் வாழ்த்தில் இடம் பெறாமல் போன மனோன்மணியச் செய்யுள்:
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள் முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையா ளமுந்துளுவும்
உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடுனும்
ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாஉன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!!
"முழுமையிலிருந்து முழுமையை எடுத்த பிறகும், முழுமை முழுமையாகவே இருக்கிறது" என்ற திருமறைக் கருத்தை பயன்படுத்தி, தமிழிலிருந்து மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் துளு ஆகிய மொழிகள் தோன்றிய பின்னரும், ஆரியம் போன்று வழக்கொழியாமல், தமிழன்னை சீர் கெடாமல், இளமையாகவே இருப்பதைக்கண்டு வியந்து, செயல்மறந்து (நான் என்ற தன்மையுணர்வை எக்கணமும் மறக்க முடியாதல்லவா? எனவே, "தன்னை மறந்து" என்று குறிப்பிடாமல், "செயல்மறந்து" என்கிறார் 👏🏽👏🏽👌🏽) அன்னையைப் போற்றுகிறார் சுந்தரம் பிள்ளையவர்கள்! 🙏🏽
திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽
oOOo
¹ ஆண்டு என்றாலே அது தமிழ் புத்தாண்டுத்தான்! இந்த அறிவியலை கண்டுணர்ந்து வெளிப்படுத்தியவர்கள் தமிழர்களே. இதன் பிறகே ஏனைய ஆண்டுகள் உருவாயின. எனவே, "தமிழ்" என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை.
(ஆப்பிள் தலையில் விழுந்ததும் புவியீர்ப்பு விசையை உணர்ந்து கொண்ட அதிமேதாவிகளான (🤭) பரங்கியர்களின் ஆண்டு ஆண்டே அல்ல! அறிவியல், வரலாறு, இயற்கை, மதம் என்று எந்த அடிப்படையும் அதற்கில்லை. "காக்கை உட்கார பனம்பழம் விழுந்தது" என்ற கதையாக இருந்ததை, 500 ஆண்டுகளுக்கு முன், நம்முடன் மீண்டும் ஏற்பட்ட தொடர்பால் சரி செய்து கொண்டனர். கேட்டால், "கிரிகோரி உருவாக்கினார்" என்று பீலா விடுவார்கள்! 👊🏽👊🏽👊🏽)
Friday, April 9, 2021
சோதிடம் - ஒளியைப் பற்றிய அறிவியல்!!
ஒரு வயதான சோதிடர், சோதிடத்தின் பெருமையைப் பற்றி பேசுகையில், நியூட்டன், கெப்ளர் போன்ற பரங்கியர்களும் சோதிடர்களாக இருந்தனர் என்று கூறி மகிழ்ந்தார். அதாவது, அப்பரங்கியர்களால் சோதிடம் பெருமையடைவது போல் பேசினார். அவருக்கு நான் கொடுத்த பதிலை சற்று மாற்றி இங்கு பதிவிட்டுள்ளேன். நன்றி.
oOOo
🔸சோதிடம் என்பது திருமறைகளின் ஒரு பகுதி. அதன் மதிப்பை, புராதனத்தை உணர இந்த ஒரு தகவல் போதும். நியூட்டன், கெப்ளர், ஆர்க்கிமிடிஸ் போன்ற திருட்டுப்பயல்களின் வரலாறு தேவையில்லை. பராசரர், வராகமிகிரர், ஸ்ரீபதி, பரமேஸ்வரா போன்ற மேதைகள் நம்மிடமிருக்க, எடுத்துக்காட்டிற்குக்கூட நம்மை சீரழித்த பரங்கியர்களைப் பயன்படுத்தக்கூடாது.
🔸அக்காலத்தில் மருத்துவர்களே சோதிடர்களாகவும் இருந்தனர் என்று கேள்விப்பட்டதுண்டு. அதாவது, மக்களின் துயர் துடைக்க உருவாக்கப்பட்ட ஓர் அறிவியலே சோதிடம்!
🔸தாங்கள் சொல்வது போல் நமது முன்னோர்களின் அண்ட-பிண்ட ஆரய்ச்சியின் விளைவாக தோன்றியவற்றில் ஒன்றாக சோதிடமும் இருக்கும்.
🔸திருமறைகளின் இறுதி நோக்கம் மனிதன் மெய்யறிவு (ஞானம்) பெற்று நிலைபேறு (சமாதி - மரணமில்லாப் பெருவாழ்வு) பெறுவதே. எனில், அவற்றின் ஒரு பகுதியான சோதிடமும், அந்நோக்கத்தை அடைவதற்கு உதவி புரிவதற்காகத்தான் உருவாக்கப்பட்டிருக்கும் என்பது எனது கருத்து.
🔸சோதிடம் - ஜோதிடம் - ஜோதிஷா - ஜோதி = ஒளி. ஒளியைப் பற்றிய அறிவியல்.
🔸ஜோதிஸ - ஜோதிஸ் + அ = சாபம் அல்லது மதி மயக்குவது. உடலல்லாத நம்மை உடலாக நாம் காணுவதற்கு முக்கிய காரணமான ஒளியை "மதி மயக்குவது" என்றும், இப்படி மதி மயங்கி கிடப்பதை சாபம் என்றும் கொள்ளலாம்.
oOOo
எனது சோதிட ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!! 🙏🏽