Friday, December 21, 2018

வைகுண்ட #னஏகாதசி - நம்மாழ்வார் விடுதலை (முக்தி) அடைந்த நாள்!! 🌸🙏


#விழாநாதர் (#உற்சவர்) #நம்பெருமாள் (சிலை) திரு நம்மாழ்வாரைக் குறிக்கும். விழாநாதர் வடக்கு வாசல் (வைகுந்த/சொர்க்க வாசல்) வழியாக வெளிவருவது என்பது நம்மாழ்வார் அவரது கபாலத்தின் வழியே வெளியேறியதை (கபால மோட்சம்) குறிக்கும்.

விழாநாதருடனோ அல்லது தனியாகவோ வடக்கு வாசல் வழியாக வெளிவந்துவிட்டால் #நிலைப்பேறு (#வைகுண்டம்) நமக்கு கிடைத்துவிடுமா? உறுதியாக கிடைக்காது!!! 😀

மனம் அழிந்தால் மட்டுமே நிலைபேறு கிடைக்கும். மனதை அழிக்காமல், யோகப் பயிற்சியினால் கபால பிளவு ஏற்பட்டு, அதன் வழியாக உயிர் வெளியேறினாலும் நிலைபேறு கிட்டாது (எ.கா.: திரு காவியகண்ட கணபதி முனிவர்). மேலும், மனம் அழிந்த பின்னர் உயிர் எப்படி வெளியேறினால் என்ன? குடம் உடைந்த பின்னர், குடத்தின் உள்ளும் புறமும் எப்படி கலந்தால் என்ன?

திரு நம்மாழ்வார் போன்ற மெய்யறிவாளர்களை வணங்குவது, போற்றுவது, மரியாதை செய்வது என்பது அவர்களது அறிவுரைகளை கசடறக் கற்று, அவர்கள் காட்டிய வழியில் பயணிப்பதேயாகும்.

யானேயென்னை அறியகிலாதே
யானேயென்தனதே யென்றிருந்தேன்
யானேநீயென் னுடைமையும்நீயே
வானேயேத்து மெம்வானவரேறே

(திருநம்மாழ்வார், 3107, நாலாயிர திவ்யப் பிரபந்தம்)

பதம் பிரித்து...

யானே என்னை அறியகிலாதே
யானே என் தனதே என்றிருந்தேன்
யானே நீ என் உடைமையும் நீயே
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே

இப்பாடல் முழுவதும் அத்வைதம் வெளிப்படும். ஆனால், வைணவத்திற்கு ஏற்றவாறு பொருள் கூறியிருப்பார்கள்!! 😀 இது பற்றி #பகவான் திரு #ரமணர் அருளியதை கீழே இணைத்துள்ளேன். (Day by Day with Bhagavaan, Dhevaraaja Muthaliyaar)



🌼🌷🌺🌻🌼

திரு நம்மாழ்வாரின் விடுதலை நிகழ்வு இவ்வளவு சிறப்பாக திருவரங்கத்தில் கொண்டாடப்பட்டாலும், *அவர் சமாதியானது திருக்குருகூரில்* (#ஆழ்வார் #திருநகரி) தான். திருவரங்கத்தில் (மூலவருக்கு கீழே) சமாதியாகி உள்ளது 18 சித்தர்களில் ஒருவரான #சட்டைமுனி #சித்தர். 🌸🙏 முதன்முதலில் திருவரங்கத்தில் நம்மாழ்வாருக்கு விழா எடுத்தது திருமங்கையாழ்வார். பின்னர் வந்த ஆச்சார்யார்களால் 10 நாட்கள், 20 நாட்கள் என விரிவு படுத்தப்பட்டு தற்போதைய நிலையை பிற்காலத்தில் அடைந்தது.

🌼🌷🌺🌻🌼

ஏகாதசியன்று பட்டினி இருந்து, துவாதசியன்று அயல்நாட்டுக் காய்கறிகளை தவிர்த்து, உள்ளூர் காய்கறிகளைக் கொண்டு உணவு சமைத்து உண்ணுவது என்பது உடல்நலம் சார்ந்தது. பட்டினி கிடந்து உடல் வாடும் போது, மனதின் குவியும் திறன் அதிகரிக்கின்றது. இதைப் பயன்படுத்த தெரியாவிட்டால் ஆன்மிக பலன் ஏதும் கிடைக்காது. மற்றபடி இதற்கும் வைணவத்திற்கும் எந்தத் தொடர்புமில்லை. இதே போன்றது தான் ஏனைய மற்ற நாட்களும் (பிரதோஷம், சஷ்டி, "அமாவாசை முழுஇரவு உபவாச ஜெபம்" 😁).

#உபவாசம் எனில் "அருகில் இருத்தல்". எதனருகில்? "நான் என்னும் தன்மையுணர்வின்" அருகில்! இறை, இறையுணர்வு என்பதெல்லாம் இதுவே. தினசரி வாழ்க்கையில் நாம் சந்திக்கும் நிகழ்வுகள் நமது கவன ஆற்றலை (மனம் - அனுமார்) வெளிப்புறமாகவே இருக்கச் செய்துவிடும். இந்த கவன ஆற்றலை நம் மீது திருப்பி, நமதியல்பை சற்று நேரமாவது உணரவே தினசரி வழிபாடு, பூசை என சில ஏற்பாடுகளும், அடுத்த நிலையாக மாதத்தில் ஒரு சில நாட்கள் அருள் பெறவும் (#அருள் எனில் அருகில் இருத்தல்; இறையுருவிற்கு போடப்படும் மலர்மாலை எவ்வளவு அருகில் உள்ளதோ அவ்வளவு அருகில்) உடல் சீராகவும் ஒதுக்கி வைத்தனர் (இன்று, தினசரி மனதைக் கெடுத்துக் கொள்ள திறன்பேசிகளும், மாதம் சில முறை உடலை கெடுத்துக் கொள்ள உணவகங்களையும் தேடிச் செல்கிறோம் 😝).

🌼🌷🌺🌻🌼

💮 #திரு எனில் தன்மையுணர்வில் நிலைபெறுதலைக் குறிக்கும். மெய்யறிவாளர்களுக்குப் (ஞானிகளுக்கு) பொருந்தும்.

💮 #சைவம் எனில் அசைவற்று / உள்ளும் புறமும் ஒன்றுபட்டு என்று பொருள். சைவர்கள் அணியும் உருத்திராக்கம் அசைவற்றத் தன்மையைக் குறிக்கும். காட்சிகள் மாறிக்கொண்டே இருந்தாலும், மாறாத அசையாத வெண்திரை போன்றவர்கள் என்று பொருள்.

💮 #வைணவம் எனில் உள்ளும் புறமும் அற்று என்று பொருள்.

(சைவம் - கிறிஸ்டோபர் நோலன், வைணவம் - முருகதாஸ் 😁)

posted from Bloggeroid

Thursday, December 6, 2018

பாபாசாகேப் அம்பேத்கர் நினைவு நாள் - டிசம்பர் 6

ஒருசமயம் #அம்பேத்கர் தாம் ஏன் #இஸ்லாம் தழுவவில்லை என்பதை விளக்கினார்:

“நான் இஸ்லாத்தைத் தழுவியிருந்தால், கோடான கோடிப் பணம் எங்கள் காலடியில் கொட்டப் பட்டிருக்கும். ஆனால், ஐந்தாண்டுகளில் நாடே சீரழிந்து போயிருக்கும். ஆகையால், 'மாபெரும் அழிவு வேலையைச் செய்தவன்' என்று வரலாற்றில் இடம் பெற நான் விரும்பவில்லை’’ என்று கூறினார்

(Ambethkar – A Critical Study)

💥💥💥

அம்பேத்கர் இஸ்லாத்தைத் தழுவியிருந்தால் நாடு என்ன ஆகியிருக்கும் என்பதைப் பற்றி #பாலாசாகிப் #தேசாய் கூறுகிறார்:

‘‘இந்த நாட்டுக்கு மிகப் பெரிய சேவை செய்துள்ளார் பாபாசாகிப் அம்பேத்கர். பாரதத்தின் மீதும், அதன் பண்பாட்டின் மீதும் அவருக்கு அன்பு இருந்ததால்தான் அவர் #புத்தநெறி தழுவினார். அதை விடுத்து இஸ்லாம் மதம் போயிருப்பாரேயானால் என்ன நடந்திருக்கும் என்று எண்ணிப் பாருங்கள். நாடே சின்னாபின்னப்பட்டல்லவா போயிருக்கும்!’’

(Kamble, J.R. Rise and Awakening of the Depressed Classes in India, National Publishing House, New Delhi, 1979, P.211)

அதாவது இஸ்லாம் மதத்திற்கு மாறினால் நாடே சீரழியும் என்பது அம்பேத்கருக்கு தெரிந்திருந்த காரணத்தால்தான் அவர் இஸ்லாத்தை தேர்ந்தெடுக்கவில்லை.



💥💥💥

14-10-1956 அன்று அம்பேத்கர் புத்தமத தீக்‌ஷை பெற்ற போது பேசியதாவது :

….புத்தமதம் சிதைவுறுவதற்கு பிரதான காரணம் முஸ்லீம்களின் படையெடுப்புகளேயாகும். முஸ்லீம்கள் தங்கள் படையெடுப்புகளின்போது புத்தர் பிரானின் உருவச்சிலைகளை அழித்துச் சிதைத்தனர். இதுவே புத்தமதத்தின் மீது தொடுக்கப்பட்ட முதல் தாக்குதலாகும். இந்தப் படையெடுப்புகளுககு அஞ்சி புத்தபிக்குகள் தப்பிச் சென்றனர். சிலர் திபேத்துக்குச் சென்றனர். சிலர் சீனாவுக்கு சென்றனர். சிலர் வேறு எங்கோ சென்றனர்.’’ என்று கூறினார்.

ஆகவே அம்பேத்கர் இஸ்லாம் மதம் மாறாததற்கு, புத்தமதத்தை அழித்தது இஸ்லாம் என்று தெளிவாக அறிந்திருந்தது தான் காரணம்.


__(மூலம்: http://www.tamilhindu.com/2011/08/why_ambedkar_converted_to_buddhism-14/)__

posted from Bloggeroid

Wednesday, December 5, 2018

Clyde Tombaugh did not discover Pluto!!

Another cat is out ...


#Clyde #Tombaugh, like his predecessors (Newton, etc.), stole the discovery of #Pluto from a great astronomer of Bhaaratham - #Venkatesh #Bapuji #Ketkar!! 😡😡

Clyde must have been a proud White - a race that excels in stealing, usurping, backstabbing, leg pulling, parasitic living, sleeper cell creation and destruction of Mother Nature!! 😛😜😝

Wherever Whiteman sets foot, destruction is sure to follow!! ✊👊👊👊

(Attachment: Found it on Aravindhan Neelakandan's page on FB)

posted from Bloggeroid

Saturday, December 1, 2018

அனுமாரையும் குடும்பி ஆக்கிவிட்டார்கள்!! 😀


மனதைக் குறிக்க வைணவர்கள் உருவாக்கிய உருவம் தான் #ஆஞ்சநேயர் / #அனுமார்.

அலைபாயுதல் என்பது மனதின் இயல்பு. இதனால் தான் குரங்கைக் குறியீடாக எடுத்துக்கொண்டனர். இப்போது இந்த இயல்பை தனியாகப் பிரித்து, #சுவர்ச்சலா தேவி என்ற பெண்ணாக்கி, அப்பெண்ணிற்கு மனித முகத்தை வேறு கொடுத்துள்ளனர். அலைபாயும் தன்மை இல்லையெனில் மனம் மனமாகாது. அது "திரு" என்றாகும் வாய்ப்புள்ளது (திரு - நிலைத்த; நிலைபேறு - மெய்யறிவு - இறை)!!

"ஒரு நீர் நிலையில் உள்ள நீர் அசையாமலும் தெளிவாகவும் இருந்தால் நீர் தெரியாது. உள்புறம் மட்டுமே தெரியும்." என்கிறார் #பகவான் #ஸ்ரீரமணர் (பகவத் வசனாம்ருதம், எண் # 146; இதே விளக்கத்தை குங்ஃபூ பாண்டா - பாகம் 1 என்ற ஹாலிவுட் திரைப்படத்திலும் பயன்படுத்தியிருப்பர் (ஆசான் ஊக்வே ஆசான் ஷிஃபூவிற்கு மெய்யறிவு பற்றி விளக்கமளிக்கும் காட்சி)). இது போன்றே மனதின் அலைபாயும் தன்மையை விளக்கிவிட்டால் அங்கே மனம் இருக்காது; இறை வெளிப்படவே வாய்ப்புள்ளது. அப்படி வெளிப்படுங்கால், இணைப்பு படத்தின் பொருள் பெருந்தவறாகிவிடும் - பெருமாளும் சுவர்ச்சலா தேவியும் அமர்ந்திருப்பது போலாகிவிடும்!! 😀

இறையுருவம் என்பது ஒரு காலத்தில் ஒரு மெய்யறிவாளரின் (ஞானியின்) சமாதியைக் குறிப்பதற்காக (அடையாளத்திற்காக) பயன்படுத்தப்பட்டது. இன்று, அழிக்கப்பட வேண்டிய மனதிற்கு துணைவியைத் தரும் அளவிற்கு தரம் தாழ்ந்துள்ளது. பெரும்பாலான மதங்களும், நம் சமயத்தின் சில பிரிவுகளும் "மனதை அழி" என்று அறிவுறுத்தும் போது, நம் சமயத்தின் மீத பிரிவுகள் மட்டும் மனதைக் கொண்டாட 3 முக்கிய காரணங்கள்:

▶ மனதின் வழியாகத்தான் இறையை அடைய முடியும்
▶ உலகம் செவ்வனே இயங்க மனம் இன்றியமையாதது
▶ மனமும் இறைவனின் படைப்பே

வாழ்க்கை வண்டி ஓட வேண்டும் என்பதற்காக, மற்றவர்களிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் காண்பிக்க வேண்டும் என்பதற்காக எதையாவது செய்து வைக்கிறார்கள். பின்னர், அது நம் சமயத்திற்கே பெரும் கேடாக வந்து நிற்கின்றது!! 😔

மனதின் உருவை மறவாது உசாவ
மனமென ஒன்றில்லை உந்தீபற
மார்க்கம் நேர் யாவர்க்கும் இது உந்தீபற

-- பகவான் ஸ்ரீரமணர், உபதேச உந்தியார்


🌸🙏🌸🙏🌸


__(ஸ்ரீஆஞ்சநேயரைப் மேலும் அறிந்து கொள்ள: https://m.facebook.com/story.php?story_fbid=10156330139391052&id=698176051)__

posted from Bloggeroid

Friday, November 30, 2018

சிறைமீட்ட தமிழ்ப்பா -- முனைவர் எஸ். சந்திரா

#பரத்தைவயல் #நாக #முத்தையா என்ற புலவர் இராமநாதபுரத்திலுள்ள #நயினார் #கோயில் நாகநாத சுவாமியிடமும், சவுந்தர்யநாயகி அன்னையிடமும் பேரன்பு கொண்டவர்.

ஒரு சமயம், அவர் முத்துராமலிங்க சேதுபதி அரண்மனைக்குச் செலுத்தவேண்டிய பணத்தில் நூறு பொன் பாக்கி வைத்து விட்டார். அதனால் இரக்கமின்றி தாசில்தார் அவரை சிறையில் அடைத்துவிட்டார்.

சிறையில் வாடிய அவர் #நயினார்கோயில் இறைவனை நினைத்து இந்த பாடலை பாடினார்:

கையிலே ஒருகாசுக்கு இடமோ இல்லை
கடனென்றால் ஐஞ்ஞூறு பொன் மேலாச்சு
நெய்யிலே கைபோட்டுக் கொடுப்போம் என்றால்
நிருவாகம் அரண்மனையார் அறிய மாட்டார்
பையிலே பணமிருக்க நீரும் சும்மா
பார்த்திருக்க நீதியுண்டோ பரனே எம் ஐயா
மையிலே தோய்ந்த விழி உமையாள் பங்கா
மருதூரா என் வரிக்கே வழி செய்வாயே.

அவர் பாடிய பாடலைக் கேட்டு பரமனின் மனம் இளகியது! அன்பனுக்கு உதவ அன்றிரவே இறைவன் சேதுபதியின் கனவில் சென்று, "ஏன் என் மகன் நாகமுத்தனை சிறையில் அடைத்தாய்?" எனக் கேட்டு மறைந்தார்.

திடுக்கிட்டு எழுந்த சேதுபதிக்கு ஒன்றும் புரியவில்லை. சிறிது நேரம் யோசித்துவிட்டு மீண்டும் உறங்கச் சென்றார்.

ஆனால், சற்று நேரத்தில் அன்னையும் அவர் கனவில் தோன்றி, "மகனே, என் தாலிப்பொட்டை அடகு வைத்து, வரிப் பணத்தை வாங்கிக் கொள்" என்று சொல்லி மறைந்தார்.

நடுக்கத்துடன் விழித்தெழுந்த சேதுபதி விபரமறிய தாசில்தாரை வரவழைத்தார். நடந்ததை அறிந்து, தானே சிறைச்சாலைக்குச் சென்று, அவரை வணங்கி மன்னிப்புக் கேட்டு அவரை விடுவித்தார். அத்தோடு, தன் தவறுக்குப் பரிகாரமாக அவருக்கு இரண்டு கிராமங்களை நன்கொடையாக அளித்தார்.


(இந்தக் கட்டுரை #ஸ்ரீராமகிருஷ்ண #விஜயம், மார்கழி 2018 இதழில் வெளியாகி உள்ளது. அதன் ஒளியுருவை இங்கே இணைத்துள்ளேன். பின்னரும், எழுத்துருவாக பதிவேற்றக் காரணம், இணையத் தேடலில், இது போன்ற ஆராய்ந்து உறுதி செய்யப்பட்ட நிகழ்வுகள், இடம் பெற வேண்டும் என்பதால் தான்.)

posted from Bloggeroid

Thursday, November 29, 2018

173 வருடங்களில் ரூ. 70,67,500 கோடிகள் கொள்ளையடித்த பரங்கி ஓநாய்கள்!!

1765-1938 வரை பரங்கி ஓநாய்கள் நம்மிடம் கொள்ளையடித்த செல்வத்தின் மதிப்பு இன்றைய சந்தை நிலவரப்படி ரூ. 70,67,500 கோடிகளாம்!! 😡😡

▶173 வருடங்களில் ரூ. 70,67,500 கோடிகள்
▶1 வருடத்தில் ரூ. 40,853 கோடிகள்
▶1 நாளுக்கு ரூ. 112 கோடிகள்

அன்று அந்த ஓநாய் நாட்டின் மக்கள் தொகை சுமார் 1.50 கோடிகள். எனில், தலைக்கு சுமார் 75 ரூபாய்கள் பார்த்திருக்கிறார்கள்! இதனால் தான் மோகன்தாஸ், "நாங்கள் என்றும் ஆங்கிலேயர்களாக ஆக முடியாது. அப்படி ஆக வேண்டுமானால், நாங்கள் கொள்ளையடிக்க இன்னொரு பூமி வேண்டும்." என்று பஞ்ச் டயலாக் பேசினார். (இதுல ஒரு கொறைச்சலும் இல்ல. இந்தப் பக்கம் பஞ்ச் டயலாக் பேசிட்டு, அந்தப் பக்கம் அந்த ஓநாய்களோடயே அக்ரிமெண்ட்டு போட்டுக்க வேண்டியது. "பகத்சிங்க நீ போட்டுக்க. நான் கண்டுக்கல. நான் வெள்ளையனே வெளியேறுன்னு உதார் உடுவேன். நீ ஜகா வாங்குற மாறி கொஞ்சநாள் நடிச்சுக்கணும். டீல் ஓகேயா?" 😠)

இன்றும் கூட அந்நாட்டின் பொது திட்டங்கள் நடப்பது நம் பணத்தில் தான் என்று சில வருடங்களுக்கு முன் செய்தி வெளிவந்தது. இதற்குப் பிறகும் பற்றாக்குறை மற்றும் பேராசை!! இன்று வரை அவர்களது வீணாய்ப் போன மொழி, கல்வி, உணவு, மருந்து, அ(ழி)வியல், மதம் என்று பல நஞ்சுகளைக் கொண்டு நம்மையும் உலகையும் அழித்துப் பணம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

எதிர்காலத்தில் இங்கிலாந்து, அது செய்த பாவங்களின் பலனால், கடலுக்கடியில் போய்விடுமென்று ஸ்ரீராமசந்திர மகராஜ் என்ற மகான் சொல்லியிருக்கிறார். 👏👌👍😘 மகான்களின் வாக்கு பொய்யாகாது.

(https://www.livemint.com/Companies/HNZA71LNVNNVXQ1eaIKu6M/British-Raj-siphoned-out-45-trillion-from-India-Utsa-Patna.html)

Tuesday, November 27, 2018

ஜி யு போப் தமிழுக்கு தொண்டு செய்தானாம்!!!


எப்பொழுதெல்லாம் அடி, உதை அதிகமாக விழுகின்றதோ அப்பொழுதெல்லாம் மதச்சார்பின்மை, சிக்-குலரிஸம் போன்ற பதாகைகளை தூக்கிப் பிடித்துக் கொள்வர் சர்ச்சியர்கள். அதிலொரு பதாகை தான் இது.

நாவலரை #ஜி #யு #போப் என்ற ஒரு வெள்ளை நரியோடு சமன்படுத்தியிருக்கிறார்கள். இதற்கும், இந்த நரி, திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பது தனது இனம் தெரிந்து கொள்ளத் தான் என்று வெளிப்படையாகவே ஊளையிட்ட பிறகும், இது ஏதோ தமிழுக்கும் சைவத்திற்கும் நாவலரைப் போன்று அருந்தொண்டு புரிந்தது போன்று இன்று வரை படம் காட்டுகிறார்கள். இது செம்பொருளை (மெய்பொருள் / பரம்பொருள்) வேறு அறிந்ததாம். இதற்குத் தெரிந்ததெல்லாம் எந்த கருவூலத்தில் எவ்வளவு பொருள் இருக்கிறதென்பதும், எந்த அறிஞரிடம் என்ன அறிவு இருக்கிறதென்பதும் தான் (அதுவும் திருடுவதற்கும், பிடுங்கிச் செல்வதற்கும் தான்).

பதாகை தூக்கிப் பிடிக்கும் போதும் கருங்காலித்தனத்தை கைவிடவில்லை. நாவலர் தான் பரலோக சாம்ராஜ்ஜியம், பரிசுத்த ஆவி, கிருபை போன்ற சொற்களை உருவாக்கினாராம். அதாவது, இவர்களது சுவிசேஷம் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாக காரணம் இந்த சொற்கள் தானாம்! இவற்றை #நாவலர் தான் உருவாக்கியதால், அவர் தான் இவர்களது நிலைக்கு காரணமாம். சோத்துல செங்கல்!!!!

சில காலத்திற்கு முன்பு, மிஷ-நரிகள், "நாவலர் ஒன்றும் மொழி பெயர்க்கவில்லை. அதற்கு முன்னரே ஒரு தேவன் (தேவன் - வெள்ளையன்; பெயர் நினைவில்லை) வேலைகளை ஆரம்பித்துவிட்டான்." என்று பிட் போட்டுப் பார்த்தார்கள். இதற்குக் காரணம் நிற வெறி! சர்ச்சிய மதத்தின் தேவர்களாகிய வெள்ளையர்கள் எப்படி ஒரு கருப்பரிடம் உதவி பெறுவது? வெட்கக்கேடு! ஆகையால், பிட் தயாரித்து வரலாற்றை மாற்ற முற்பட்டார்கள். இன்று கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகியதால், நாவலரை முன் நிறுத்திவிட்டார்கள். வெள்ளை தேவர்கள் காப்பாற்றப் படவேண்டும். மதமானாலும் சரி, போபால் விஷவாயு கசிவானாலும் சரி, குரங்கணில்முட்டம் தீ விபத்தானாலும் சரி, வெள்ளையன் காப்பாற்றப்பட வேண்டும்!

நாவலர் ஒன்றும் புதிய மதத்தை உருவாக்கவில்லை. வெள்ளையர்கள் கொடுத்ததை தமிழில் மொழிப்பெயர்த்துக் கொடுத்தார். மூலத்தில் "பிம்பிளிக்கா பிலாபி" என்றிருந்தால் அவர் என்ன செய்யமுடியும்? மொழி பெயர்க்கும் போது, அவருக்குத் தோன்றியிருக்கும் ஐயங்களை வெள்ளையர் தாம் களைந்திருக்க வேண்டும். அந்த மடையர்கள் என்ன உளறி வைத்தார்களோ? இன்று தான் இவர்களது மதம் நமது அடையாளங்களை அடைய, உரிமை கொண்டாட துடிக்கிறது. ஆனால், அன்று தனி அடையாளங்களையே விரும்பியது. ஆகவே, நாவலரும் மற்ற மதங்களில் இல்லாத சில சொற்களைக் கொடுத்து அந்த புண்ணாக்குகளை தேர்ந்தெடுக்கச் சொல்லிப் பயன்படுத்தியிருப்பார். அடுத்து, நாவலர் மொழிப் பெயர்த்துக் கொடுத்ததை இவர்கள் திருத்தக்கூடாது என்று விதி ஒன்றுமில்லையே. இத்தனை வருடங்களில் மாற்றிக் கொண்டிருக்கலாமே. சமீப காலமாக தமிழில் உயர் மற்றும் முனைவர் கல்வி கற்பவர்கள் பெரும்பாலும் இவர்கள் மதத்தினர் தானே.

இறுதியாக, "மதவெறி கொண்ட யானைகள் மனிதனாக மாறட்டும்" என்று பஞ்ச் டயலாக் பேசி இருக்கிறார்கள். ஒருவேளை, தங்களுக்குத் தாங்களே அறிவுரை கூறிக் கொண்டிருப்பார்களோ? ஏனெனில், நமது சைவம் சமயம் எனப்படும். மற்ற அனைத்தும் மதம் எனப்படும். சமயம் x மதம். பக்குவம் x வெறி. "பக்குவ வெறி கொண்ட..." என்று வேண்டுமானால் நம்மை அவர்கள் புகழ்ந்து கொள்ளலாம்!

🔷🔶🔷🔶🔷🔶

சமீபத்தில் திரு. அரவிந்தன் நீலகண்டன் முகநூலில் பதிப்பித்த ஒரு இடுகையை சிறிதும் மாற்றாமல் கீழே கொடுத்துள்ளேன். அதில், #அருள் என்னும் புனிதச் சொல்லிற்கு #இஸ்ரேலிய அறிஞர்கள் கொடுத்திருக்கும் துல்லியமான மற்றும் அருமையான விளக்கத்தைக் கொடுத்துள்ளார். படித்துப் பயன்பெறுங்கள்.

🔷🔶🔷🔶🔷🔶

ஒவ்வொரு எழுத்திலும் நஞ்சு தோய்த்து வேலை செய்வது என்பதில் கை தேர்ந்தவர்கள் மிசிநரிகள். ஒவ்வொரு முறை நம்மவர்கள் ஜியு போப்பின் திருவாசக மொழி பெயர்ப்பை பாராட்டும் போது எனக்கு உடல் அருவெருப்பால் கூசும். ஜி.யு. போப் மிகத் தெளிவாகவே சைவத்தின் மீது தனக்கு மிகக் கீழ்மையான பரிவே (scanty sympathy) உண்டு என்றும் தான் இந்த மொழி பெயர்ப்பை செய்வதே ஆங்கிலம் படித்த நம்மவர்கள் அவர்களின் மத இலக்கியங்களை படிக்க வகை செய்ய என்று சொன்ன பின்னரும் ஏதோ ஜியு போப் இல்லை என்றால் தமிழும் இல்லை சைவமும் இல்லை என்பது போல போப் சொல்லாதவற்றை எல்லாம் சொல்லி அந்த ஆளைக் குறித்து புளகாங்கிதம் அடையும் அடிமையின் மோகம் என்னை கூசி குறுக வைக்கும் ஒன்று.

நான் மிகவும் மதிக்கும் ஒரு பிரபல சைவ சித்தாந்தி குறித்த ஒரு ஆவணப்படத்தில் அவர் வீட்டில் சைவம் குறித்து ஜி.யு.போப் சிலாகித்து சொன்னது போல ஒரு மேற்கோளை வைத்திருக்கிறார். அதை காட்டிய போது என் மனம் மிகுந்த வேதனைக்குள்ளாகியது. நம்மவர்கள் ரொம்பவே நல்லவர்கள். வெளுத்ததெல்லாம் பால் என நம்பிவிடுகிறார்கள்.

யூதர்களுக்கு கிறிஸ்தவ மதமாற்ற திரிபுகள் குறித்து இரண்டாயிரம் ஆண்டுகள் பரிச்சயம் உண்டு. எனவே அவர்களால் மிகச் சரியாக கிறிஸ்தவ மொழிமாற்ற தகிடுதத்தங்களை கண்டு பிடித்து விட முடியும். நாம் பல நேரங்களில் சாதாரணமாக எடுத்துக் கொண்டு கடந்து போகிற விஷயங்களில் மதமாற்ற விஷம் எப்படி ஊடுருவியிருக்கிறது என்பதை அவர்களால் சட்டென கண்டடைந்து விட முடிகிறது.

ஜி.யு.போப் அருள் என்பதை grace என மொழி பெயர்ப்பு செய்கிறார். நமக்கு இது ஒரு விஷயமாக அல்லது ஒரு திட்டமிட்ட திரிபாக தோன்றுவதில்லை. நாமுமே பல நேரங்களில் இதை அடியொற்றி அருளை grace என மொழி பெயர்க்கிறோம். டேவிட் சூல்மனும் டான் காண்டெல்மனும் யூதர்கள். ஜெருசலேம் பல்கலைக்கழகத்தினர். சைவ திருமுறைகளின் மொழி பெயர்ப்புகளில் அருள் என்பது grace என மொழி பெயர்க்கப்பட்டிருப்பதைக் காண்கிறார்கள். இனி அவர்கள் கூறுவதை கேளுங்கள்:

There is an unfortunate tendency to translate this critical term [அருள்], in nearly every context, as ‘grace,’ with its heavy Christian connotations. Arul can, it is true, correspond in Śaiva texts to Sanskrit anugraha, the god’s compassionate giving to his servants. More often, however, it approximates a notion of coming into being or freely becoming present, close, alive…Arul, for the Siddhantins, is śakti - an active and female aspect of Śiva. Not ‘grace’ but ‘emergent presence. It, or she, is dynamic and oriented toward freedom…an experiential process of full, unconstricted potentiality.

என் வருத்தமெல்லாம் நம் ஆதீனங்களிடம்தான். போப் மொழி மாற்றத்தில் மத மாற்ற தகிடுதத்தம் செய்கிறார் என்பதை சொல்ல நமக்கு ஒரு டேவிட் சூல்மன் தேவையில்லை. ஆனால் நேருவிய-திராவிடிய பண்பாட்டு அறிவின்மையின் விளைவாக ஒரு டேவிட் சூல்மன் இதை சொல்ல தேவைப்படுகிறார்.

ஜி.யு. போப் செய்த மொழி பெயர்ப்பு ஒரு மதமாற்ற உக்தி. அது உண்மையில் திருவாசகத்தின் தமிழின் மகோன்னதத்தை ஆன்மிக அனுபவம் சார்ந்த ஒரு மகத்தான இலக்கியத்தை ஒரு நம்பிக்கை சார்ந்த ஓரிறை மத கோட்பாட்டுக்குள் குறுக்கும் ஒரு உக்தி எனவே வெறும் கீழ்மையான திரிபு அன்றி வேறில்லை. இந்நிலையில் நம் ஆதீனங்கள் போப்பின் மொழி பெயர்ப்பை சித்தாந்த நிலைபாட்டிலிருந்து அக்கு வேறு ஆணி வேறாக கழற்றிக்காட்டி அதன் பொய்மையையும் சிறுமையையும் வெளிப்படுத்தியிருக்க வேண்டும். இதில் இன்னும் கொடுமை என்னவென்றால் நம் நேருவிய தலைமுறைகள் (நம் பெற்றோர், நாம் , நம் இளைஞர்கள்) எந்த பாரம்பரிய உரையையும் பொருளையும் தெரிந்து கொள்ளாமல் ’திருவாசகத்துக்கு நான் ஜி.யு.போப் உரையை வைத்திருக்கிறேன்’ என பெருமை பேசி திரிவதுதான்.

எனவே இதை நம் சைவ ஆதீன கர்த்தர்களிடமும் சித்தாந்த அறிஞர்களிடமும் ஒரு கோரிக்கையாகவே வைக்கிறேன். போப்பின் மொழி பெயர்ப்பு தமிழை சிறுமைப்படுத்துவது; சைவத்துக்கு புறம்பானது; கீழ்மையான மதமாற்ற நோக்கம் கொண்டது என அவர்கள் அனைவரும் இணைந்து அதிகார பூர்வமாக அறிவிக்க வேண்டும்.

🔷🔶🔷🔶🔷🔶

நமது #அருள் என்னும் சொல்லை வடமொழியின் #அனுக்கிரஹம் என்ற சொல்லோடு சமன்படுத்தியிருக்கிறார்கள். இது சரியே. ஆனால், அனுக்கிரஹத்திற்கு பொருள் கூறும் போது "இறைவனின் கருணை கலந்த கொடை" (Compassionate giving) என்று பொருள் கூறியிருக்கிறார்கள். இது தவறு. இது மீண்டும் #Grace என்ற சொல்லிற்கு சமமாக்கியது போலாகும்.

💠 அனு + கிரஹம் = அருகில் + இடம் = அருகிலுள்ள இடம்
💠 அனு + கிர + ஹ = அருகில் + உணர் + இறைவன் = இறையை அருகிலிருந்து உணர்தல்

இப்படி பொருள் கொண்டால் மட்டுமே இரண்டு சொற்களும் சமமாகும்.

அடுத்து, அருளை #சக்தி என்ற வடமொழி சொல்லோடு சமன்படுத்தி, அதற்கு "இறையுணர்வு தோன்றும் / வெளிப்படும் இடம்" (Emergent Presence) என்று பொருள் கூறியிருக்கிறார்கள். அருமை! இதைத் தான் #சந்நிதானம் என்று அழைக்கிறோம். சக்தி என்ற சொல்லின் சரியான பொருள் கலந்திருத்தல். இறை உருவிற்கு போடப்பட்ட மாலையின் நிலை போன்று என்று கூறலாம். மிக மிக மிக மிக அருகில் என்றும் கூறலாம்.

இறுதியாக, அருள் = அ + ரு + ள் = அருகில் + உட்கொண்டு செல்லுதல் + இடத்திலிருந்து = வெளியிலிருந்து என்னை உனதருகே கொண்டு செல்

(அ-வுக்கு பதிலாக இ எனில் மறுத்தல் / மறைத்தல் = இறைவன் மறுத்துவிட்டார் / மறைந்துவிட்டார். அ-வுக்கு பதிலாக ம எனில் நின்று / தங்கிப் போதல் = வெளி உலகிலேயே தங்கிவிடல்.)

ஆக, அருள், அனுக்கிரஹம், சக்தி, சந்நிதானம் எல்லாம் ஒரு பொருளையேத் தருகின்றன - இறைவனுக்கு மிக மிக அருகில். பிறவியெடுக்கும் ஒரு சீவன் அடையக்கூடிய மிக உயர்ந்த நிலையும் இது தான். இதை உணர்ந்த விதத்தில் ஏற்பட்ட தகராறு தான் இன்று பூமியிலுள்ள பல்வேறு மதங்கள்.

அடுத்த முறை, "இறைவா, எனக்கு உன் அருள் தா" என்று வேண்டும் போது, "இறைவா, உனக்கருகில் என்னை வைத்துக் கொள்" அல்லது "இறைவா, உனக்கருகில் நானிருக்க இடம் கொடு" என்று வேண்டுகிறோம் என்பதை உணர வேண்டும். அந்த இடமும் வேறெங்கோ இல்லை. நம்முள் தான் உள்ளது. அந்த இறைவனும் வேறு யாருமல்லர். நாமே தான் (நமது இயல்பு)!

தேடிக் கண்டுகொண்டேன் - திருமாலொடு நான்முகனும் 
தேடித் தேடொணாத் தேவனை என்னுளே தேடிக் கண்டுகொண்டேன்

- #அப்பர் #தேவாரம்

🙏 🙏 🙏 🙏 🙏 🙏

posted from Bloggeroid