Thursday, June 11, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு - பாடல் #40: திருவைந்தெழுத்து - சிறு விளக்கம்

அனைத்துலகும் போற்றுதிரு ஐந்தெழுத்தை ஓதித்
தனைத்தொழுது பேணும் தவத்தோர் - நினைத்தவரம்
நல்குமலை எந்நாளும் நல்லோரும் நன்னெறியும்
மல்குமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #40

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙏🏽

🔸#திருவைந்தெழுத்து

அருளாளர்கள் பலராலும் போற்றப்பட்ட ந, ம, சி, வா, ய ஆகிய 5 திருவெழுத்துகள். திருஞானசம்பந்தர் 🌺🙏🏽 பாடிய கடைசி திருப்பதிகம் (காதலாகி கசிந்து...) முடிவதும் இவற்றுடன் தான். "நாதன் நாமம் நமச்சிவாயவே" என்று மெய்ப்பொருளின் பெயரே இவ்வைந்தெழுத்துதான் என்று முடிக்கிறார்!

ந - இல்லை
ம - நான்
சி - அழியாதது. மாறாதது. தேயாதது. வேறெது? மெய்ப்பொருள்.
வா - வீசும்
ய - ஒளி

பொருள்: எதுவும் நானில்லை. எல்லாம் மெய்ப்பொருளின் வெளிப்பாடே. 🌺🙏🏽

தொடர்ந்து சிந்திப்பதால் கிடைக்கும் பயன்: ஆணவம் அழியும். ஒப்புவித்து வாழும் மனப்பான்மை பெருகும். இறுதியில், நிலைபேற்றில் முடியும்.

தமிழிலும் சரி, ஆரியத்திலும் சரி இவ்வைந்தெழுத்து சொல் என்று அழைக்கப்படுவதில்லை. ஐந்தெழுத்து என்றே அழைக்கப்படுகிறது. மேற்சொன்ன பொருள் தவிர, இவ்வெழுத்துகளுக்கு பல பொருள்கள் உண்டு. இவை ஐம்பூதங்களையும் குறிக்கும். இறைவனது ஐந்தொழில்களையும் குறிக்கும். சற்று மாற்றினாலும் பொருள் முற்றிலும் மாறிப்போகும்.

🔹#சிவாயநம - மேற்கண்ட நமசிவாய வரிசைக்கு எதிர்பொருளைக் கொடுக்கும். "எல்லாம் நீயே" என்பது போய் "எல்லாம் பொய். நான் மட்டுமே மெய்." என்ற பொருளைக் கொடுக்கும். பகவானும் 🌺🙏🏽, பல இடங்களில், "நீ காண்பதும் கேட்பதும் பொய். நீ மட்டுமே மெய்." என்று அறிவுறுத்தியுள்ளார்.

"சிவாயநம என்று சிந்தித்திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை" என்பது புகழ்பெற்ற வசனம். தானே தானாய் இருப்போரை யார்தான் எதுதான் என்னதான் செய்துவிடமுடியும்? எனவே, அபாயம் ஒருநாளும் இல்லை!!

🔹#சிவசிவ - முதல் சிவ மெய்ப்பொருளையும், இரண்டாவது சிவ அதிலிருந்து வெளிப்பட்ட அனைத்தையும் குறிக்கும். இரண்டுமே சமமானது. முழுமையிலிருந்து முழுமையை எடுத்த பின்னும் முழுமை முழுமையாகவே இருக்கிறது என்ற திருமறைச் சொற்றொடருக்கு சமமானது. அம்மையப்பன், மாதொருபாகன், சங்கரநாராயணன் போன்ற இறையுருவங்கள் இதன் உருவ வடிவம்.

🔹சிவ - அழியாதது. மாறாதது. தேயாதது. வலிமையானது. நல்லது.

🔹சி - மெய்ப்பொருள் மட்டுமே. "நான் என்ற எண்ணம் கிஞ்சித்தும் இல்லாத இடமே மெளனம் (மெய்ப்பொருள்) எனப்படும்" என்கிறார் பகவான்.

oOOo

அக்கரம் அதோர் எழுத்தாகும் இப்புத்தகத்தோர்
அக்கரமாம் அஃதெழுத வாசித்தாய் - அக்கரமாம்
ஒரெழுத்து என்றும் தானாய் உள்ளத்தொளிர்வதாம்
ஆரெழுத வல்லார் அதை

இப்பாடல், யோகி ராமைய்யா என்ற அன்பர் கேட்டுக்கொண்டதற்காக, அவரது காகிதப் புத்தகத்தில் பகவான் எழுதிக் கொடுத்தது. #அக்கரம் என்பது #அக்ஷரம் என்ற ஆரிய சொல்லாகும். இதற்கு எழுத்து & அழியாதது என்று 2 பொருள்கள் உள்ளன.

பொருள்: அக்கரம் என்பது ஓர் எழுத்தாகும். இந்த காகிதப் புத்தகத்தில் நான் எழுதிய அக்கரத்தை வாசித்தாய். ஆனால், என்றும் அழியாத ஓர் அக்கரம் எல்லோர் உள்ளத்திலும் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. யாரால் அதை எழுத முடியும்? (யாராலும் எழுத முடியாது. அதுவாய் ஆகத்தான் முடியும் என்பது கருத்து.)

பகவான் குறிப்பிடும் அழியாத அவ்வெழுத்து எது? மேற்கண்ட 'சி' என்ற திருவெழுத்து உணர்த்தும் மெய்ப்பொருளே அது!!

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

Tuesday, June 9, 2020

Definition of #Government!! 👌🏽

The following dialogue is from the famous 2002 American serial Firefly (Episode #10 - War Stories). Simon & Book are 2 characters from the episode.

oOOo

Simon is analyzing data on a vid screen. Book is moving about the infirmary behind him.

BOOK
Did you ever read the works of Shan Yu?

SIMON
Shan Yu, the psychotic dictator?

BOOK
Yep. Fancied himself quite the
warrior-poet. Wrote volumes on
war, torture... the limits of
human endurance.

SIMON
(mildly)
That's nice.

BOOK
He said... "Live with a man forty
years. Share his house, his meals,
speak on every subject. Then tie
him up and hold him over the volcano's
edge, and on that day, you will
finally meet the man."

SIMON
What if you don't live near a volcano?

BOOK
I expect he was being poetical.

SIMON
Sadistic crap legitimized by florid prose.
(beat)
Tell me you're not a fan.

BOOK
I'm just wondering if they were.
The people who did this to your sister.

SIMON
The government did this to her.

BOOK
The government is a body of people,
usually notably ungoverned. 👏🏽👏🏽👏🏽

oOOo

Beautifully defined! 👌🏽 Matches all types of governments. Especially the ones elected by so called people. 😁

அண்ணாமலை வெண்பா திரட்டு - பாடல் #39: வீடுபேறு - சிறு விளக்கம்

வீடு முதலா விரும்பும் பொருள்அனைத்தும்
பாடும்அடி யார்க்குப் பலிக்குமலை - நீடுபுகழ்
பூண்டமலை சற்குருவாய்ப் பொல்லாச் சிறியேனை
ஆண்டமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #39

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙏🏽

🔸வீடு - வீடுபேறு

நம் நிறைமொழியில் ஒரு விதி உண்டு: குறில் குறிப்பதின் எதிர்பொருளை நெடில் குறிக்கும். இவ்விதியின் படி, வீடு என்பது விடு என்பதின் எதிர்பொருளைத் தர வேண்டும். விடு என்றால் வைத்திருக்கும் ஒன்றை விடுவது. எனில், வீடு என்றால் விடாதிருப்பது. எதை விடாதிருப்பது? தன்னை விடாதிருப்பது ("தன்னை விடாதிருப்பதே மெய்யறிவு" - பகவான் 🌺🙏🏽). தன்னை எனில் தன்மையுணர்வு. என்றால் என்ன?" யாருக்கும், "தான் இருக்கிறோமா? இல்லையா?" என்று கேள்வி எழுவதில்லை. ஏன்? நாம் இருக்கிறோம் என்பது நமக்கு தெரியும். இது தான் தன்மையுணர்வு!

இவ்வுணர்வாகவே நாமிருந்தும், நம்மை நாம் தெளிவாக உணரமுடியாமல் குழப்பமும், ஐயமும் ஏற்படக் காரணம் எண்ணங்கள், உடல் மற்றும் உலகம். இவற்றையெல்லாம் ஒதுக்கி விட்டு, நம்மை நாம் தெளிவாக உணர்ந்து கொள்ளத் தான் தீ மிதித்தல், தீச்சட்டி தூக்குதல், பால்குடம் சுமத்தல், காவடி தூக்குதல், அலகு குத்துதல், உடலுறவு, வடக்கிருத்தல், திருத்தலப்பயணம் என பல உத்திகளை நமது மாமுனிவர்கள் உருவாக்கித் தந்துள்ளனர்!! 👏🏽👌🏽🙏🏽🙏🏽

(உலகில் வேறெங்காவது இத்தனை உத்திகளைக் கொண்ட ஒரு இனம்/சமூகம் இருக்கிறதாவென்று தேடிப்பாருங்கள். இருக்காது. ஏதேனும் இருந்தாலும் அது இங்கிருந்து சென்றதாகத்தான் இருக்கும். இவ்வளவு தூரம் பண்பட்டதாலேயே "நிறைமொழி மாந்தர்" என்று அழைக்கப்பட்டோம். நம் மொழி நமது தேவைகளை நிறைவு செய்துகொள்வதற்கு மட்டுமல்ல. நம்மை வழிநடத்தும் மெய்யாசிரியரும் கூட. 🌺🙏🏽😍)

மேற்சொன்ன உத்திகளைப் போன்று ரமண மாமுனிவர் அறிவுறுத்திய உத்திகள் 2: தன்னாட்டம் & மலைவலம். இறுதியில் எல்லோரும் தன்னாட்டத்திற்கு தான் வந்தாக வேண்டும் என்றாலும், ஆரம்பநிலையில் எல்லோராலும் கடைபிடிக்க முடியவில்லை என்பதால் மலைவலத்தை அறிவுருத்தினார் பகவான். எப்படி மலைவலம் வர வேண்டும்? ஒரு நிறைமாத சூலியான (கர்ப்பிணியான; அன்னையின் பெயர்களில் ஒன்று சூலி. மொத்த அண்டமும் அன்னையின் கருப்பை. நாமெல்லாம் அந்த கருப்பையிலுள்ள குழந்தைகள்.) பேரரசி நடைபயில்வதைப் போல வலம் வர அறிவுறுத்தினார். இப்படி வரும்போது, அடி அண்ணாமலை திருத்தலம் வருவதற்குள் உடல் மரத்துவிடும். உடல் மரத்த பிறகு மீதமிருப்பது என்ன? நாம். நமது தன்மையுணர்வு!

இப்படி ஏதாவதொரு உத்தியைக் கையாண்டு நாம் யாரென்று உணரும்போதுதான் புரியும் நாம் என்றுமே நாமாகத்தான் இருக்கிறோம் என்று. வீடுபேறு அடையப்படுவதன்று. உணரப்படுவது.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

Sunday, June 7, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு - பாடல் #38: விழி-மனம் - சிறு விளக்கம்

வேண்டும் அயன்மால் விழிமனத்துக்கு எட்டாமல்
நீண்டு தழல்பிழம்பாய் நின்றமலை - ஆண்ட
கருணைமலை ஒப்புஉரைத்துக் காணஅரி தான
அருணமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #38

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙏🏽

🔸அயன்மால் விழிமனத்துக்கு

அயன்-மால் என்ற சொற்களை ஆசிரியர் பல இடங்களில் பயன்படுத்துகிறார் (இடைக்காட்டுச் சித்தர் 🌺🙏🏽 உணர்ந்து வெளிப்படுத்திய பேருண்மையின் சொல்வடிவு அல்லவா?) இப்பாடலில், அவற்றுடன் விழி-மனத்துக்கு என்ற சொற்களை சேர்த்துக் கொள்கிறார். மேலோட்டமாக காண்கையில், நான்முகன் மற்றும் திருமால் ஆகிய இருவரின் பார்வை மற்றும் மனதிற்கு அப்பாற்பட்டவர் என்ற பொருள் கிடைக்கும். ஆனால், உண்மையில், நான்முகனை விழியாகவும், திருமாலை மனதாகவும் கருதி, காட்சிகளுக்கும் எண்ணங்களுக்கும் அப்பாற்பட்டவர் இறைவன் என்று பொருள் கொள்ள வேண்டும்.

🔹நான்முகன் - நான்கு திசைகள். படைப்பு என்பது என்ன? நான்கு திசைகளிலிருந்தும் வரும் ஒலியும் ஒளியும் தானே! கூத்தப் பெருமானின் மேலிருகைகளில் உள்ள நெருப்பும், உடுக்கையும் உணர்த்துவது இதைத்தான்.

🔹திருமால் - மால் - குழப்பம் - குழப்புவது - இருப்பதை மறைத்து, இல்லாததை இருப்பது போல் காட்டுவது - மனது - எண்ணங்களால் ஆனது.

🔸ஒப்பு உரைத்துக்காண அரிதான அருணமலை

அருணமலை என்பது மெய்ப்பொருளைக் குறிக்கும். எல்லாம் அதுவே. எனில், அதற்கு சமமான இன்னொன்று இருக்க முடியுமா? எனவே, எதனுடனும் ஒப்பிட்டு பார்க்க முடியாத அரிதான பொருளாகிறது.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

Saturday, June 6, 2020

வேண்டாமே சைவ கதைகளைத் திருடுவது!! 😜

மின்னஞ்சலில் தனக்கு வந்து சேர்ந்திருக்கும் கதையைப் படித்துவிட்டு ஆசிரியர் (ஆ) எழுத்தாளரை (எ) தொலைபேசியில் அழைத்துப் பேசுகிறார்:

ஆ: என்னய்யா இப்புடி செஞ்சிருக்க? உன்ன நானு சிறுத்தொண்ட நாயனார் 🌺🙏🏽 கதைய வச்சு தான எழுத சொன்னேன். அப்படியே காப்பி அடிக்க சொல்லலையே.

எ: சார், மன்னிச்சுக்கங்க. வீட்ல இருந்து வேலை செய்றது ரொம்ப கஷ்டமா இருக்கு. பொண்டாட்டி, புள்ளகுட்டிங்க தொல்ல ஒரு பக்கம். 24 மணி நேரமும் ஓடுற டிவி ஒரு பக்கம். பீக் அவர்ல பரனூர் டோல்கேட் மாதிரி ஆயிடுற செல்போன் கனெக்சன் ஒரு பக்கம். என்னால இவ்வளவு தான், சார், முடிஞ்சது. லாக்டவுன் முடியட்டும். பிச்சு ஒதற்ரேன் பாருங்க.

ஆ: கிழிச்ச. 1300 வருசமா வேல செஞ்சும் இன்னும் கட் & பேஸ்ட் லெவல்ல தானய்யா இருக்கோம். இன்னும் எத்தன நாளைக்குத்தான் கட் & பேஸ்ட், லட்டு, வட, தோச, இட்லின்னு வண்டிய ஓட்ட வேண்டியிருக்குமோ? 😣

😂😂🤣🤣🤣

இந்நேரம் பரங்கிப் பாவாடைகள் இந்த கதையை ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்குக் கொண்டு சென்றிருப்பார்கள். இஸ்ரவேலர் யேசுவும், பாரதத்திற்கு வந்தேயிராத தாமஸும் / யேசுவை சந்தித்தேயிராத பவுலும் என்று பிட் தயாரித்து இருப்பார்கள். அந்த பிட்டிற்கு ஒரு பரங்கி காப்புரிமை வேறு கொண்டாடுவான்! 😆

காட்டுமிராண்டிகளின் நிலைதான் தற்போது பாவமானது! 😢 வெட்டு, குத்து, பிடுங்கு, வெடிகுண்டு என்றே கொம்பு சீவப்பட்ட கூட்டத்திடம் இது போன்ற கதைகளைக் கொண்டு சேர்ப்பது மிகக்கடினம்!! 😞 வேண்டுமானால், "சிறுவனை அரியும்போது அங்கு ஒரு ஆட்டை இருக்கச் செய்தான் எல்லாம் வல்ல இறைவன்" என்ற பிட்டை சேர்த்துக்கொள்ளலாம். கறி கிடைக்கும் என்ற காரணத்தினால் மந்தை ஏற்றுக் கொள்ளும் வாய்புள்ளது. 😁

Thursday, June 4, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு - பாடல் #35: சிவபெருமானைத் தம்பிரான் தோழர் தூது அனுப்பியது - சிறு விளக்கம்

பாடல் தனைவிரும்பிப் பாவலர்க்கா கப்பரவை
வீடு தனக்குஇருகால் மேவியே - கூட
இணக்குமலை தன்புகழை எண்திசைகள் தோறும்
மணக்குமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #35

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙏🏽

🔸பாடல் ... இணக்குமலை - சுந்தரமூர்த்தி நாயனாருக்காக 🌺🙏🏽 பரவை நாச்சியாரிடம் இறைவன் தூது சென்று வரலாறு

இது வரையில் பார்த்த 35 பாடல்களில் 2 இடங்களில் சுந்தரமூர்த்தி நாயனாரைக் குறிப்பிடுகிறார் குரு நமச்சிவாயர். 🌺🙏🏽

3வது பாடலில், "ஆரூரன் போற்றச் சிறந்தமலை" என்றார். நாயனார் பல திருத்தலங்களுக்கு சென்றுவந்தாலும், அவர் பெரிதும் விரும்பியது கமலாலயம் எனப்படும் திருவாரூரைத்தான். அதாவது, திருவாரூரில் மூலவருக்கு கீழே சமாதியாகி உள்ள கமலமுனி சித்தரைத்தான் 🌺🙏🏽. ஆகையால், சிறந்தமலை என்பது பொதுவாக சிவபரம்பொருளைக் குறித்தாலும், இங்கு கமலமுனி சித்தரைத்தான் குறிக்கிறது என்பது என் கருத்து. ஏனென்பதை பின்வரும் பத்திகள் உணர்த்தும்.

இந்த 35வது பாடலில், நாயனாரையும் அவர் தம் மனைவியையும் இணைத்த மலை என்று பாடியுள்ளார். உடனே, சடைமுடி, நீல உடல், புலித்தோல், பிறைநிலவு, முத்தலை சூலம் (திரிசூலம்) கொண்ட ஒரு உருவும் பரவை நாச்சியரைச் சென்று சந்தித்தது என்று நாம் கற்பனை செய்து கொள்வோம். 😁 இது உண்மையல்ல. பகவான் ரமணர் 🌺🙏🏽 போன்று நிலைபேற்றிலுள்ள (சிவ நிலையில் உள்ள) முனிவர் (சிவன்) ஒருவர் 🌺🙏🏽 தூது சென்றிருக்கிறார். இவர் போன்று நாயனார் வரலாற்றில் பலர் வருவர். சில எடுத்துக்காட்டுகள்:

🌺🙏🏽 திருக்கச்சூரில் நாயனாருக்காக ஊருக்குள் சென்று உணவு பெற்று வந்தவர். இவரது சமாதி திருத்தல வளாகத்துக்குள் உள்ளது.

🌺🙏🏽 திருப்பேரூருக்கு நாயனார் சென்ற போது நிலத்தை உழுதுகொண்டு இருந்தவர். இவரே திருப்பேரூர் திருத்தல மூலவர்.

(ஏன் திரும்பத் திரும்ப சமாதி விபரங்களை எனது இடுகைகளில் பதிவிடுகிறேன் என்றால் இந்த அடிப்படை உண்மை எல்லோரையும் போய்ச்சேர வேண்டும். கேள்விகள் எழ வேண்டும். சிந்தனை வளமாக வேண்டும். இது ஒன்றே நம் சமயத்தை காக்கும். இந்தப் பாடல் எழுதப்பட்ட காலத்தில், இப்பாடலைக் கேட்டவரும் படித்தவரும் மேற்படி நான் எழுதியிருப்பது போன்று தான் சிந்தித்திருப்பார்கள். ஆனால், இன்று.....? 😔 எனவேதான் திரும்பத் திரும்ப பதிவிடுகிறேன்.)

இந்த வரிகளில் இன்னொரு சிந்திக்க வேண்டிய பொருள் உள்ளது. நாயனார் போற்றிய கமலமுனி சித்தரையும், நாயனாருக்காக தூது சென்றவரையும் சிவபரம்பொருளாகக் கண்ட குரு நமச்சிவாயர், நாயனாரை அப்படிக் காணவில்லை. புலவராகத்தான் காண்கிறார். எனில், "நாயனார் மெய்யறிவாளர் இல்லையா?" என்ற கேள்வி எழும். திருவெண்ணெய்நல்லூரில் முதன் முறையாக சிவநிலையை துய்த்தவர், பின்னர் அவ்வப்போது, வெவ்வேறு திருத்தலங்களில் துய்த்துள்ளார். இறுதியாக, திருவஞ்சைக்களத்தில் நிரந்தர நிலைபேற்றினை அடைந்து சதாசிவமாகியுள்ளார். முனிபெருமானை தூது அனுப்பிய காலத்தில் நாயனார் அலைபேறில் இருந்திருக்க வேண்டும். (முனிபெருமான் நாயனாருக்கும் நாச்சியாருக்கும் நன்கு தெரிந்தவராக இருந்திருக்கவேண்டும்) ஆகையால்தான், அவரை புலவராக மட்டும் காண்கிறார் குரு நமச்சிவாயர்.

இப்படி நான் எழுதுவது நாயனாரின் அருமை பெருமைகளை குறைத்துக் கூறுவதாகாது. மாறாக, நிலைபேறு - அலைபேறு என மாறி மாறி பயணிப்போருக்கு பெரும் ஆறுதலாகவும், உதவியாகவும் இருக்கும். மேலும், இந்த விளக்கம், "நாயனார் தனது சுயநலத்திற்காக சிவபெருமானை தூது அனுப்பியது சரியா?" என்று கேள்வி கேட்கும் பகுத்தறிவு மா-மாக்களுக்குப் பதிலாகவும் அமையும். 👊🏽😌

தம்பிரான் தோழர் அடியார்க்கும் அடியேன்!! 🌺🙏🏽

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

Tuesday, June 2, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு - பாடல் #34: மதராசன், தக்கனார் வேள்வி - சிறு விளக்கம்

பற்றி இமையோர் பகைசெறுவான் வந்துஎதிர்த்த
வெற்றி மதராசன் வேகவே - உற்று
விழித்தமலை தக்கனார் வேள்விதனை முன்நாள்
அழித்தமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #34

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙏🏽

காமனை எரித்தது மற்றும் தக்கனை அழித்தது என இரு உருவகக் கதைகளை குரு நமச்சிவாயர் 🌺🙏🏽 இந்த பாடலில் குறிப்பிடுகிறார். ஆம். இவை "உருவகக்" கதைகளே! உண்மையில் நிகழ்ந்தவை அல்ல.

🔸#இமையோர் - #இமையார் - வானவர் 

உடனே, "தேவர்களுக்கு இமைகள் கிடையாது. அல்லது, நம்மைப் போல அவர்களுக்கு இமைகள் திறந்து மூடாது. அவர்களுக்கு பசி, தூக்கம் கிடையாது. கால்கள் நிலத்தில் பதியாது." என்றெல்லாம் படித்த பிட்டுகள் நினைவுக்கு வரும். 😁 இவையெல்லாம் உண்மையே. ஆனால், தேவர்கள் என்று சொன்னவுடன் நம் நினைவுக்கு வரும் உருவங்கள் தாம் தவறு. இவ்விடத்தில், இமையார் என்பது நிலைபேற்றை அடைந்தவர்களைக் குறிக்கும். திரையில் தோன்றும் காட்சிகள் உண்ணும், உறங்கும், பயணிக்கும், இமைக்கும். ஆனால், திரை உண்ணாது, உறங்காது, பயணிக்காது, இமைக்காது. என்றும் எங்கும் எல்லாமும் ஆகியுள்ள சிவப்பரம்பொருளுக்கு இவை எப்படி பொருந்தும்?

🔸வெற்றி #மதராசன் வேகவே உற்று விழித்தமலை

மதராசன் - #காமன். காமத்தை வெற்றி கொள்வது அவ்வளவு எளிதானதல்ல. எனவே, "வெற்றி" என்ற பட்டம். சிவபெருமானுக்கு ஆசையை உண்டாக்க, காமன் மலரம்பை தொடுத்து, இதனால் கோபமடைந்த பெருமான் காமனைப் பார்வையாலே எரித்ததை "மதராசன் வேகவே உற்று விழித்தமலை" என்று பாடுகிறார். இங்கு காமம் தோற்றதால் காமன் எரிக்கப்பட்டதாக சித்தரித்திருக்கிறார்கள். இதுவே காமம் வெல்லும் போது...? சிவபெருமானை வென்ற காமத்தை சைவத்தில் அன்னை காமாட்சி என்றும், வைணவத்தில் "வெண்ணைத் திருடிய கண்ணன்" என்றும் சித்தரிப்பார்கள்! ☺️

எல்லா பற்றுகளும், வினைகளும் தீர்ந்த பின்னர் தான் சமாதியடைய வேண்டுமென்பதில்லை. சில சமயங்களில், அவரவர் வினைப்படி, முன்னரே சமாதி நிலை கிட்டும். ஆனால், அதில் நிலைத்து நிற்க முடியாது. மாயை எனும் இறையாற்றல் நம்மை வெளியில் தள்ள பல விதங்களில் முயற்சி செய்யும். இப்படி முயற்சி செய்து தோற்ற மாயையின் வெளிப்பாடுகளை காமன், காளி என்று அழைப்பர். வெற்றி பெற்ற வெளிப்பாடுகளை காமாட்சி, வெண்ணைத் திருடிய கண்ணன் என்று அழைப்பர். எல்லாம், வினை மூட்டை காலியாகும் வரை தான். தீர்ந்து விட்டால்? காளி, காமாட்சி, கண்ணன்... யாரும் வர மாட்டார்கள். பிறகு, சதாசிவம் தான்!

அவ்வப்போது நிருவிகற்ப சமாதி கிடைத்து, இப்படி மாயையால் புறம் தள்ளப்படுவதைக் காட்டிலும், சகஜ சமாதியே சிறந்தது. உள்ளும் புறமும் இணைந்த நிலை - அம்மையப்பன், மாதொருபாகன், சங்கரநாராயணன்!! சைவம் என்ற சொல்லின் உண்மையான பொருளே உள்ளும் புறமும் இணைந்ததுதான்!!

அதென்ன, வேகவே உற்று விழித்தமலை? உற்று நோக்கி எரித்தல். எழும் எண்ணங்களைக் கவனியாது இருத்தல். தன்மையுணர்வை விடாதிருத்தல். "ஒவ்வொரு எண்ணம் எழும் போதும், அதை கவனியாமல் (உற்று நோக்காமல்) இருந்தாலே போதும். எழுந்த எண்ணம் அடங்கிவிடும் (எரிந்துவிடும்). மனமும் தனது பிறப்பிடத்திற்கு (தன்மையுணர்வுக்கு) திரும்பிவிடும்." (பகவான் திரு ரமணர் 🌺🙏🏽).

🔸#தக்கனார் வேள்விதனை முன்நாள் அழித்தமலை

இதுவும் மேற்சொன்ன உருவகக்கதை போன்றுதான். இது போன்ற உருவகக்கதைகள் யாவும் பெரும்பாலும் நிலைபேறு, அதை அடைதல், அதில் இருத்தல் மற்றும் அதை இழத்தல் என்ற 4 செய்திகளைப் பற்றியதாகத்தான் இருக்கும்.

இங்கு கவனிக்க வேண்டியது "முன்நாள்" என்ற சொல்லைத்தான். இக்கதை வெகு காலத்திற்கு முன் எழுதப்பட்டது. நம் பாரத கலாச்சாரத்தின் அடிப்படைகள் இந்த கதையில் உள்ளன. நமது திருமுறைகளிலும், திருமறைகளிலும் பல இடங்களில் இந்த கதை அல்லது இதைப் பற்றிய குறிப்பு வருவதை காணலாம்.

எல்லாம் சரி. தக்கனின் வேள்வி என்றால் என்ன என்று கேட்போருக்கு... நாம் வாழும் வாழ்க்கையே தக்கனின் வேள்வி! 😊 தக்கனும், ஆமை திருவிறக்க கதையில் (கூர்ம அவதாரம்) பாற்கடலைக் கடைய பயன்படுத்தப்பட்ட வாசுகி பாம்பும் ஒன்று தான். நமது மூச்சுக்காற்றே அது!!

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽