Showing posts with label செல்வம். Show all posts
Showing posts with label செல்வம். Show all posts

Friday, December 8, 2023

பசு மாட்டின் பின்புறத்தில் மலர்மகள் குடியிருக்கிறாராம்!!

(மேலுள்ள, மாட்டின் பின்புறத்தை தொட முயற்சிப்பது துர்கா இசுடாலினாம்! 🤭)

🤦🏽 கொஞ்சமாவது அறிவு என்று ஒன்றிருந்தால்...

அசுரனோ, உளுத்தறிவனோ, மெக்காலே மண்டையனோ யார் சொன்னாலும், சிந்திக்கவேண்டும்.

பசு மாட்டின் பின்புறம் சிறுநீரும் & சாணியும் வெளிப்படும். அவை நிலத்தில் விழுந்தால், நிலம் வளமாகும். நிலம் வளமானால் விளைச்சல் பெருகும். விளைச்சல் பெருகினால் வருமானம் வளரும். எனில், வருமானம் வளரவேண்டுமானால் பசு மாட்டின் சிறுநீரையும் & சாணியையும் பயன்படுத்தவேண்டும்.

சாணி & சிறுநீர் = வருமானம் = செல்வம் = மலர்மகள்!!

பொருளாதாரத்தில் உழவுத்தொழில் பெரும் பங்கு வகித்த சமயத்தில் உருவான வினைமுறையாகும் (ஆரியத்தில், சடங்காகும்). இன்றைய பொருளாதாரத்திற்கு பொருந்தாது. இன்று, இந்த வினைமுறையை செய்வதாலோ, பார்ப்பதாலோ எந்த பயனும் கிடையாது. மலர்மகள் குறிப்பிடும் செல்வமென்பது எதென்று தெரிந்தால், பலர் இதை மதிக்கக்கூட மாட்டார்கள்! 😏

மலர்மகள் குறிப்பிடும் செல்வமானது மெய்யறிவாகும். காசு, பணம், துட்டு, பிட்காயின்... இல்லை!

இவ்வினைமுறையை உருவாக்கியது ஆரிய->பௌத்த->நாமப்பேர்வழிகளாகும். சைவம் காளையை போற்றுவதால், அதற்கு போட்டியாக, பசுமாட்டை நாமம் போற்றுகிறது. சைவம், கல்லாலான காளையை உடையவருக்கு முன்னே வைத்தால், நாமம், உயிருள்ள பசுமாட்டை பெருமாளுக்கு முன் கொண்டுவந்து, திருப்பி நிறுத்துகிறது.

பெருமாள் சிலைகள் மட்டும் உயிர்பெற்று நகருமானால்... மீண்டும் கோளரி உருவமெடுத்து (ஆரியத்தில், சிங்கம்), "அடேய், என் பொஞ்சாதி குடியிருக்கிற இடமாடா அது?" என்று முழங்கியவாறு (ஆரியத்தில், கர்ஜித்தவாறு), நாமப்பேர்வழிகளின் மீது பாய்வார்!!!

😆😂😂🤣😍

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Thursday, August 26, 2021

நிருவாண பூசை என்றால் என்ன?

"நிருவாண பூசை நடத்தி இளம்பெண்ணை பலமுறை சீரழித்த சாமியார்! உடந்தையாக இருந்த கணவன்!!"

இந்நிகழ்வின் பின்னணியில் கணவனின் அறியாமை, இயலாமை & பொருளாசை மற்றும் சீரழித்தவனின் பெண்ணாசை & பொருளாசை ஆகிய காரணிகள் இருந்தாலும் இதற்கும் ஒரு மெய்யறிவியல் (ஆன்மிகம்) அடிப்படை உண்டு!

நிருவாணம் எனில் உடைகளைக் களைந்துவிட்டு பிறந்தமேனியாதல் அல்ல. "நான் இன்னார்" என்பதிலுள்ள இன்னாரைக் களைதலாகும். நான் ஆண்/பெண், இன்ன படித்தவன், இன்ன நிறுவனத்தில் இன்ன பதவி வகிக்கிறேன், எனது மதிப்பு இவ்வளவு ... இவற்றையெல்லாம் களைய வேண்டும்.

🔹இவற்றைக் களைய முற்படும் பணி தான் நிருவாண பூசை.

🔹அனைத்தையும் களைந்த பின்னர், மீதமிருக்கும் நான் எனும் தன்மையுணர்வாய் மட்டும் இருப்பதுதான் நிருவாண நிலை.

🔹இந்நிலையை அடைவதற்கு முன் (மேற்சொன்ன பூசையின் போது) நமக்கு கிடைக்கும் பலவிதமான துய்ப்புகள்தாம் செல்வம் (லட்சுமி) எனப்படும். இறுதியாக கிடைக்கும் மெய்யறிவு பெருஞ்செல்வமாகும் (மகாலட்சுமி).

பற்றுகளை விட விட மெய்யறிவு பெருகும். பெண்தெய்வ வழிபாட்டைப் பொறுத்தவரை சீவர்கள் அனைவருமே பெண்கள்தாம். எனவே, பெண்கள் (சீவர்கள்) நிருவாண பூசை செய்தால் (பற்றுகளை விட்டால்) செல்வம் (மெய்யறிவு) பெருகும்!!

முழுவதும் மெய்யறிவியலை அடிப்படையாகக் கொண்ட ஓர் உத்தியை எவ்வளவு தவறாக புரிந்து கொள்ள முடியுமோ அவ்வளவு தவறாக புரிந்து கொண்டுள்ளனர். அல்லது, எவ்வளவு தப்பாக பயன்படுத்த முடியுமோ அவ்வளவு தப்பாக பயன்படுத்துகின்றனர். என்ன செய்வது, ஈனவெங்காயங்கள் எல்லாத்துறைகளிலும் பிறக்கத்தானே செய்கின்றன! (ஈனவெங்காயம் - கோணல் புத்தியுடையவன்; சாக்கடை 👊🏽)

நாம் பரவாயில்லை என்றுதான் சொல்லவேண்டும். இங்கு ஈனவெங்காயங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பிறக்கின்றன. மறைந்து தொழில் செய்கின்றன. ஆனால், ஒரு மதமே இப்படியுள்ளது! அங்கு இந்த அநீதியை செய்பவர்கள் துணிவுடன், வெளிப்படையாக, நீதிமன்றங்களின் ஆதரவுடன் செய்கிறார்கள்!!

oOOo

ஒரு பெண்ணைக் கற்பழித்துவிட்டு, அவளது அழகுதான் தன்னை கற்பழிக்கத் தூண்டியது என அவள் மீதே பழியை போடுவான். புண்ணாக்கு நீதிபதியும் இந்த வாதத்தை ஏற்று, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தண்டனையளிப்பான்!

இதற்கும் அடிப்படை மெய்யறிவியல்தான்!!

உலகில் நடக்கும் யாவற்றிற்கும் காரணம் மனம். மனதை பெண்ணாகக் கருதுவது மரபு (நம் சமயத்தில், அன்னை மாயை/காளி) (வைணவம் மாயக்கண்ணன் என்றழைத்தாலும் அடிப்படை பெண்தன்மைதான்.) அழகாகவிருக்கும் ஒரு பெண்ணைத் துய்க்கவேண்டும் என்ற எண்ணத்தை தோற்றுவிப்பது மனம் (பெண்) என்பதால் தனது செயலுக்கு பெண்தான் காரணம் என்று வாதிடுவான். உண்மையில் இவனுக்குள்ளிருக்கும் பெண்தான் (இவனது மனம்) தண்டிக்கப்படவேண்டும். மனம் சொன்னால் அப்படியே கேட்டுவிடுவதா? சீர்தூக்கிப் பார்த்து செயல்பட வேண்டிய புத்தி எங்கே போயிற்று?

கேட்டால், பெண் என்ற படைப்பே புணருவதற்குத்தான் என்பான். பெண்ணைக் கண்டதும் புணரும் எண்ணம் தோன்ற வேண்டும் என்பதற்காகத்தான் அவளுக்கு கருப்பு ஆடை கொடுக்கப்பட்டிருக்கிறது என்பான் (அம்மதத்தில், கருப்பு ஆடை போர்த்திக்கொண்டிருக்கும் பெண் பெண்குறிக்கு சமம்).

கருப்பு ஆடை போர்த்தியிருக்கும் பெண்ணைக் கண்டால் புணரும் எண்ணம் தோன்றவேண்டுமென்று ஈனவெங்காயம் கூட சொல்லியிருக்காது. எனில், உண்மையான பொருள்தான் என்ன?

கருப்பு என்பது அன்னை மாயையைக் குறிக்கும் (கருப்பாயி - கருப்பு + ஆயி - காளி). நம் மனதில் தோன்றும் எண்ணம் முதல் நம் கண் முன்னே விரியும் உலகக்காட்சிகள் யாவற்றுக்கும் இவர் தான் காரணம். நம் மனதில் ஓர் எண்ணம் தோன்றிவிட்டால் அதன் பின்னே சென்றுவிடக்கூடாது. நம் கண் முன்னே தோன்றும் உலகக் காட்சிகளில் சிக்கிக் கொள்ளக்கூடாது. இவை நடந்தால், உடனடியாக, நமது கவனத்தை நம் மீதே திருப்பிக்கொள்ளவேண்டும். இதற்குத்தான் ஓர்தல் / [தன்னைத்தான்] புணருதல் என்று பெயர்.

கருப்பைக் கண்டால் (எண்ணம் தோன்றினால், உலகத்திற்குள் கவனம் சென்றால்) ஓர்ந்துவிடவேண்டும் (கவனத்தை நம் மீது திருப்பவேண்டும்)!!

எளிமையான இவ்வறிவுரை தாெடக்கத்தில் கண்ட நிருவாண பூசையை விட மிகவும் திரிந்துபோய் / திரிக்கப்பட்டு பெண்ணடிமைத்தனத்தில் முடிந்துள்ளது. 😔

oOOo

இருப்பது ஒரு பொருள்தான். அதுவே யாவுமாகியுள்ளது. நிலைத்த பொருளும் அதுவே. நிலையில்லாத பொருளும் அதுவே. எப்போது ஒன்றை ஆண் என்றும், மற்றொன்றைப் பெண் என்றும் அழைக்கத் தொடங்கினார்களோ அப்போதே ஈனவெங்காயங்களுக்கும், காட்டுமிராண்டிகளுக்கும் வித்திட்டுவிட்டனர்! 😔

oOOo

நம் மண்ணும், நம் மண்ணின் மைந்தர்களும் எவ்வளவு தூரம் பண்பட்டவர்கள் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு:

உலகக்காட்சி பற்றி பகவான் திரு ரமண மாமுனிவரிடம் 🌺🙏🏽🙇🏽‍♂️ ஓர் அன்பர் கேட்டார்: உலகக் காட்சி என்பது எதற்காக?

பகவானின் பதில்: [அதைக்] காண்பான் என்றொருவன் இருப்பதை உணருவதற்காக!!

👏🏽👏🏽👏🏽👌🏽🙏🏽😍

oOOo

தன்னை உபாதிவிட்டு ஓர்வது தான் ஈசன்
தன்னை உணர்வதாம் உந்தீபற
தானாய் ஒளிர்வதால் உந்தீபற

-- உபதேச உந்தியார் #25

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Saturday, March 19, 2016

கோ பூஜையின் உள்ளர்த்தம்!!



மேலே இணைக்கப்பட்டிருக்கும் செய்தியை முதலில் படியுங்கள் (தினமலர் - ஆன்மிகமலர் - சென்னை - 15/03/2016).

அதில் விளக்கியபடி கோ பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள்:

- நம் 'பெண்டு' நிமிரும்
- #சாணம் கிடைக்கும் - மாடு மிரள்வதால்
- நீலத்தடி நீர் மட்டம் குறையும்
- சுற்றுப்புற சூழல் கெடும் - இன்று மஞ்சள், குங்குமம், பூ சாகுபடி என அனைத்திலும் அளவுக்கதிகமான ரசாயனங்கள் உபயோகிப்பதால்

😂😂😂

வேறு புண்ணியம் ஏதும் கிடையாது.

வசதியில்லாதோர் இதை செய்யப் போவதில்லை. வசதிபடைத்தோரும் பயம், குடும்ப பாரம்பரியம், சமூக அந்தஸ்து போன்ற காரணங்களுக்காகத்தான் இதைச் செய்வர். அவர்களும் நேரடியாக செய்யப் போவதில்லை. 'மம' சொல்லிவிட்டு வாத்யாரிடம் ஒப்படைத்துவிடுவர்.

பிறகென்ன, வாத்யார் சிறப்பாக பூஜை செய்கிறாரா என எஜமானனும், எஜமானன் மனம் குளிர்ந்தாரா என வாத்யாரும் "பூஜையில்" முனைப்புடன் ஈடுபட்டிருப்பர். இருவருக்கும் புண்ணியம் சேர்த்தாற் போலத்தான்!! 😀

கோ பூஜை விளக்கத்தில் உள்ள மிக முக்கியமான செயல் பசுமாட்டின் பின்புறத்தைத் தொட்டு வணங்குவது. அங்கே மகாலஷ்மி வாசம் செய்வதாகக் கூறுவர்.

அங்கே மகாலஷ்மியா வாசம் செய்கிறார்? சாணமல்லவா வாசம் செய்கிறது!

சாணமே செல்வம்!!
சாணமே மகாலஷ்மி!!!

பசுஞ்சாணத்தில் கோடானகோடி நுண்ணுயிரிகள் வாசம் செய்கின்றன. அதை நிலத்தில் இடுவதால் நிலம் வளம் பெறுகிறது. வளமடைந்த நிலம் அமோக விளைச்சலைத் தருகிறது. அமோக விளைச்சல் செல்வமாகிறது. அதாவது, மகாலஷ்மியாகிறது. சாணமே மகாலஷ்மியாகிறது. செல்வத்திற்கு மூலமாகிய சாணத்தைத் தரும் மாடுகளை சீதனமாகக் கொண்டு வருவதால் மருமகள் மாட்டுப்பெண் ஆனாள். அவளை "எங்க வீட்டு மகாலஷ்மி" என அழைப்பதும் இதன் அடிப்படையில் தான். இதே அடிப்படையில் தான் திருவள்ளுவர் செல்வத்தையும் மாட்டையும் சமமாக்கி எழுதினார். 👍👌👏

(சாணம், நுண்ணுயிரி பற்றிய விரிவான விளக்கத்திற்கு - https://plus.google.com/+SaravananG_Enum_Dhasaman/posts/No1Tpyzsqgf)

இப்பேருண்மை காலத்திற்கும் காப்பாற்றப்பட வேண்டியது, போற்றப்பட வேண்டியது, வாழையடி வாழையாக எடுத்துச் செல்ல வேண்டியது. செழிப்பான குடும்பங்கள் செழிப்பான சமூகத்திற்கும், செழிப்பான சமூகங்கள் செழிப்பான நாட்டிற்கும் அடிப்படை. இத்தனை செழிப்பிற்கும் அடிப்படை பசுஞ்சாணம், அது தரும் பசுமாடுகள். ஆகையால், கோ பூஜைக்கு இவ்வளவு முக்கியத்துவம்.

ஆனால், இத்தனை படிகளை சொன்னால் அதன் மதிப்பு வேண்டுமானால் உயரும். அனைவரையும் சென்று சேராது. அனைவரையும் சென்றடையும் வகையில் எளிதாக்கினால் மதிப்பு போய்விடும். ஆகையால், இருவருக்கும் ஏற்றவாறு விளக்கமளிக்கலாம்.

சுவாமி சிலைகளை வணங்குவது போன்றது தான் பசுவின் பின்புறத்தைத் தொட்டு வணங்குவது. சிலையை வணங்குதல் என்பது அந்தச் சிலை உணர்த்தும் உண்மைகளை நினைத்துப் பார்த்தல், சிந்தித்தல், மதித்தல், செயல்படுத்துதல் மற்றும் அப்பேருண்மையாகவே ஆகுதல் (சாயுஜ்யம் அடைதல்).

அங்ஙனமே, பசுவின் பின்புறத்தைத் தொடுதல் என்பது சாணத்தைப் பற்றிய மேற்கூரிய உண்மைகளை நினைத்துப் பார்த்தல், சிந்தித்தல், மதித்தல் மற்றும் செயல்படுத்துதல்.

"யாவர்க்குமாம் பசுவிற்கொரு வாயுறை" -- திருமந்திரம்

posted from Bloggeroid