Showing posts with label காசி. Show all posts
Showing posts with label காசி. Show all posts

Wednesday, October 2, 2024

செஞ்சியை செஞ்சி என்றே அழைப்போம்!


👊🏽 கிழக்கின் டிராய்

👊🏽 பாரதத்தின் மான்செஸ்டர்

👊🏽 பாரதத்தின் டெட்ராய்ட்

👊🏽 பாரதத்தின் ஏதென்ஸ்

👊🏽 பாரதத்தின் நெப்போலியன்

👊🏽 தட்சிண கங்கை

👊🏽 காசிக்கு இணையான திருக்கோயில்

...


இவையெல்லாம் நம்மை தாழ்த்துவதற்காகவும், அடிமை மனப்பான்மையை விதைப்பதற்காகவும், அடி பணிய வைப்பதற்காகவும் இழிபிறவிகள் கையாளும் நுட்பங்களில் ஒன்றாகும்!


டிராய் டிராயாக இருக்கட்டும். செஞ்சி செஞ்சியாக இருக்கட்டும். காசி காசியாக இருக்கட்டும். நமது திருவிடங்கள் நமது திருவிடங்களாக இருக்கட்டும்.


oOo


அதென்ன ஜிஞ்ஜி? நமது திரைப்படமொன்றில் வருவது போன்று, "பப்ளிசிட்டி" எனும் பீட்டர் சொல்லை "பப்ளிக்குட்டி" என்று நாம் சொன்னால், அதை வெள்ளைச்சாத்தான் அப்படியே ஏற்றுக்கொண்டு, திரும்பச் சொல்லி மகிழ்வானா? நாம் மட்டும் ஏன் இன்னமும் அவனது குறையொலிப்பை தொடர்வதில் பெருமையடைகிறோம்?


ஓர் இனத்தை அவ்வினத்தின் பண்பட்டோரே ஆளவேண்டும்; பராமரிக்கவேண்டும். கடந்த 700 ஆண்டுகளாக மாற்று இனங்களின் கைகளில் திருநெறியத் தமிழ்மண் இருப்பதின் விளைவே "கிழக்கின் டிராய்" & "காசிக்கு இணையானது"!! 😡


திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

Saturday, August 12, 2023

பாபத்த அக்னிலேயோ / ஜலத்துலேயோ போக்குவது & பிறந்த ஊரில் / காசியில் மடிவது


அண்மையில், ஒரு தொடரி பயணத்தின்போது, இரு வயதான ஆரியப் பூசாரிகள் பேசுவதை கேட்க நேர்ந்தது. அவர்களது பேச்சிலிருந்து சில பகுதிகள்:

> பாபத்த அக்னிலேயோ, இல்ல ஜலத்துலேயோதான் போக்கமுடியும். அதனாலதான் நம்ம பெரியவா யாகம் பண்ணிண்டிருந்தா. சமுத்துரத்துல ஸ்நானம் பண்ணச் சொன்னா.

> கடைசி காலத்த காசியில கழிக்கலாம்னு இருக்கேன்.

சொந்த ஊர்ல இல்லயா பிராணன் போவணும்னு சொல்லுவா?

அப்படியும் சொல்லுவா. காசிலேயும் போகலாம்னு சொல்லுவா. என்னோட பெரியவாவும் அங்க போயிதான் முடிச்சிண்டா.

oOo

இனி அவர்களது நம்பிக்கைகளின் உட்பொருளை பார்ப்போம்.

🌷 வினைப்பயன்

ஆரியத்தில் பாவமென்பது பாவம், புண்ணியம் என இரண்டையும் குறிக்கும். நம் தமிழில் வினைப்பயன் என்றழைக்கலாம். நல்வினை & தீவினை என இரண்டு பயன்களையும் குறிக்கும்.

வினைப்பயன்கள் எண்ணங்களை தோற்றுவிக்கும். எண்ணங்களை நாம் அனுமதித்தால் செயல்களாக மாறும். செயல்கள் விளைவுகளை ஏற்படுத்தும். விளைவுகள் மீண்டும் எண்ணங்களுக்கு வித்திடும் ...

🌷 வேள்வி செய்தல்


> வேள்விக்குழி (யாகக்குண்டம்) - நமதுடல்
> அதில் எரியும் நெருப்பு - நாம் (நமது தன்மையுணர்வு)
> நெருப்பிலிடப்படும் பொருட்கள் - நமக்கு தோன்றும் எண்ணங்கள்

ஒரு எண்ணம் தோன்றியவுடன் அதன் பின்னே செல்லாமல், அது யாருக்கு தோன்றியது என்று பார்த்தால், எழுந்த எண்ணம் அடங்கிவிடும். இதுவே "பாபத்த (எண்ணத்தை) அக்னில (நமது தன்மையுணர்வில்) போக்குவது" என்பதின் பொருளாகும்.

🌷 கடலில் குளித்தல் (சமுத்திர ஸ்நானம்)


கடல் என்பது ஒரு வகையில் நமதுடலை குறிக்கும்; இன்னொரு வகையில் வையகத்தை குறிக்கும். கடலில் குளித்து "பாபத்தை" போக்குவதென்பது இவ்வையகத்தில் நாம் வாழும் வாழ்க்கையை குறிக்கும்.

எதையும் "நான் செய்கிறேன்" என்ற எண்ணத்துடன் செய்யும்போது, விளைவுகளும் நம்மையே சாரும். இல்லையெனில், சாராது. இக்கண்ணோட்டத்துடன் வாழ்தலே "பாபத்த (எண்ணத்தை) ஜலத்துல (வாழ்க்கையை வாழ்ந்து) போக்குவது" என்பதின் பொருளாகும்.

🌷 காசி

> காசி - ஒளிபொருந்திய / இருளற்ற இடம்.
> இருள் - உடல், வையம் ஆகியவற்றை உண்மையென்று நம்பும் அறியாமை.
> ஒளி - நமது தன்மையுணர்வு. நாமே உள்ளபொருளென்ற மெய்யறிவு.
> காசியில் இறப்பது - உடல் இறக்கும்போது, நாம் நாமாக - நமது தன்மையுணர்வாக (சிவமாக) - இருப்பது.

உடலிறக்கும் போது, நாம் நாமாக இருக்கவேண்டுமெனில், அதற்கு முன்னரே நாம் யாரென்று அறிந்திருக்கவேண்டும். இதற்கு பயிற்சிவேண்டும். இப்பயிற்சியே "கடைசி காலத்த காசியில கழித்தல்" ஆகும்!!

🌷 பிறந்த ஊர்

நமதுடல்தான் பிறந்திருக்கிறது. அதற்குதான் பிறந்த நாளும் பிறந்த ஊரும். நமக்கில்லை. உடல் விலகியபின், நாம் நாமாகிவிடுவோம். உண்மையில் எப்போதுமே நாம் நாமாகத்தான் இருக்கிறோம். ஆனால், இவ்வுண்மையை நாம் உணருவதில்லை. உணராததால், அன்னை மாயை / மாயோனின் தில்லுமுல்லுக்கு (உடல்-வையகக் காட்சிக்கு) இடங்கொடுத்துவிடுகிறோம். இதிலிருந்து தப்பவேண்டுமெனில், நம்மை பற்றி நாம் அறிந்திருக்கவேண்டும். இதற்கு பயிற்சிவேண்டும். இப்பயிற்சியே "கடைசி காலத்த சொந்த ஊரில் (நமது தன்மையுணர்வில்) கழித்தல்" ஆகும்!!

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Monday, June 13, 2022

எது உண்மையான காசி திரு விசுவநாதர் திருக்கோவில்?

ஓரிடத்தில் ஒரு பொருளை புதைத்துவிட்டு, அவ்விடத்தின் மேல் ஓர் அடையாளத்தை நட்டு வைக்கிறோமென்று வைத்துக்கொள்வோம். பல காலம் கழித்து, ஏதோ ஒரு ஏதுவினால் நட்ட அடையாளத்தை வேறொரிடத்திற்கு இடமாற்றம் செய்கிறோம். இப்போது, மண்ணுக்குள் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் பொருள் தானாக இடம்பெயர்ந்துவிடுமா?

அடுத்து, இன்னொரு காட்சி.

பெரும் புகழ் பெற்ற ஒரு மெய்யறிவாளரின் உடல் இறக்கிறது. திருமந்திர வழிகாட்டுதலின்படி ஓரிடத்தில் அவ்வுடலை புதைக்கிறர்கள். அவ்விடத்தின் மேல், அவரது உள்ள நிலையைக் குறிக்கும் சிவலிங்கத்தை அடையாளமாக நிறுவுகிறார்கள். பின்னர், அவ்விடம் புகழ் பெற்ற திருக்கோவிலாக உருமாறுகிறது. காலம் விரைவாக உருண்டோடுகிறது. மெய்யறிவாளர் மறைக்கப்பட்டு, பின்னர், மறக்கப்படுகிறார். அடையாளமே உள்ளபொருளாகிப்போகிறது.

இந்நிலையில், ஆண்குறி போன்று வேடமிட்ட ஆண்களையும், பெண்குறி போன்று வேடமிட்ட பெண்களையும் கொண்ட ஒரு கூட்டம் வந்துசேர்கிறது. "எங்காளு சொல்லியிருக்காக. எங்க புத்தகத்துல சொல்லியிருக்கி." என்று கதை விட்டுக்கொண்டு (பிடுங்கிக்கொள்வதற்கும் நீதியை கடைபிடிப்பவர்கள்! 😉) அட்டூழியத்தில் ஈடுபடுகிறது. ஒரு சமயத்தில், தன் பக்கம் தோற்கிறது என்பதையுணர்ந்த கருவறை பூசாரி, அடையாளத்தை மட்டும் எடுத்து, தன்னுடன் அணைத்தவாறு, ஒரு கிணற்றில் விழுந்துவிடுகிறார். வெற்றி பெற்றக் கூட்டம், திருக்கோவிலை இடித்து தள்ளிவிட்டு, அங்கு ஒரு கலவி நிலையத்தைக்(*) கட்டுகிறது.

சில காலத்திற்கு பின்னர், ஓர் இந்துப் பேரரசி வருகிறார். அடையாளத்தை மீட்டெடுத்து, கலவி நிலையத்திற்கு அருகிலேயே புதிய திருக்கோவிலைக் கட்டி, அதில் அடையாளத்தை நிறுவுகிறார்.

இப்போது, புதிய இடத்தில் அடையாளத்தை நிறுவியவுடன் மெய்யறிவாளர் தானாக இடம் பெயர்ந்துவிடுவாரா?
 

oOo

அந்த மெய்யறிவாளரின் பெயர் திரு நந்திதேவர் 🌺🙏🏽🙇🏽‍♂️ ஆகும். கங்கையாற்றின் குளிர்ச்சியைக் கொண்டே, தன்னை நாடி வந்தோரை மெய்யறிவு பெறச் செய்த பெருமானாவார். "நாம் உடலல்ல" என்ற அறிவை நாம் பெறுவதற்கு நமது மாமுனிவா்கள் எண்ணற்ற வழிகளை காண்பித்திருந்தாலும், இப்பெருமான் காட்டிய "கங்கையில் மூழ்குதல்" எனும் வழியே பாமர மக்களுக்கும் ஏற்ற எளிய வழியாகும்!

oOo

அடுத்து வரும் பகுதி அனைவருக்கும் ஏற்றதல்ல. மதக்குறியீடுகளைப் பற்றி ஓரளவேனும் தெரிந்தவர்களே மேற்கொண்டு தொடரவும். நன்றி.

* - கலவி நிலையத்தின் முன்னே இரண்டு மினார்கள் இருப்பின்:

🔸 இரு மினார்களும் ஒரு பெண்ணின் தூக்கிய இரு கால்களுக்கு சமம்
🔸 நடுவிலிருக்கும் நுழைவாயில் என்பது அப்பெண்ணின் பெண்ணுறுப்புக்கு சமம்
🔸 கட்டிடத்தின் மேல் கவிழ்த்தப்பானை போன்ற அமைப்பு பெண்ணின் கருப்பையின் மேல் பகுதிக்கு சமம்

மொத்தத்தில் அக்கட்டிடம், கலவியின் போது ஒரு பெண் பாங்காக, ஆடவனுக்கு ஏற்றவாறு, கால்களை தூக்கிக் கொண்டு படுத்திருப்பதிற்கு சமம். (அங்கு தினமும் 5 முறை விடுக்கப்படும் அறைகூவலுக்குப் பெயர் "பாங்கு" ஆகும்! பாங்கு = தயார்) அந்த கூட்டத்தை பொறுத்தவரையில் வழிபாடென்பது கலவிக்கு சமம். எனவே, அக்கட்டிடங்களை "கலவி நிலையங்கள்" என்றழைப்பதே சரியாகும்.

(கலவி நிலையத்தை சுற்றி 4 மினார்கள் இருந்தாலோ அல்லது ஒரேயொரு மினார் இருந்தாலோ, மேற்கண்ட விளக்கம் பொருந்தாது)

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Friday, May 29, 2020

காசியில் இறப்பது, இராமாயணத்தில் நடு எழுத்துக்கள் ரா,ம - விளக்கம்

"ராம" என்ற பெயர்ச்சொல்லின் மேன்மையைக் கூறுவதற்காக இரு வெவ்வேறு செய்திகளை இணைத்து ஒரு பெட்டிச் செய்தியை உருவாக்கியிருக்கிறார்கள் (தினமலர் - ஆன்மிகமலர் - 03/04/2020)

#ராம என்பது மரா என்ற ஆரியச் சொல்லின் எதிர் உருவமாகும். மரா என்றால் இறப்பு. எனில், ராம என்பது இறப்பற்றதாகும். உடன், இனிமை, இன்பம், குதூகலம் போன்ற பொருள்களையும் குறிக்கும்.

🌷 "காசியில் இறப்பவர்களின் காதில் ராமநாமத்தை சிவபெருமானே ஓதுகிறார்"

🔥 கமலாலயத்தில் (திருவாரூர்) பிறக்க முக்தி
🔥 தில்லையைக் காண முக்தி
🔥 காசியில் இறக்க முக்தி
🔥 அண்ணாமலையை நினைக்கவே முக்தி

இவையனைத்தும் ஒன்றையே குறிக்கின்றன!

#காசி எனில் காசி மாநகரம் அல்ல. புருவ மத்தியும் அல்ல. காசி எனில் ஒளிமயமான இடம்! அறியாமை என்ற இருள் சிறிதும் இல்லாத இடம். மெய்ப்பொருளே அவ்விடம். (பொருள் எவ்வாறு இடமாகும்? துய்த்தால் தான் புரியும்! 😊) அவ்விடத்தில் இறப்பது என்பது நமது தனித்துவத்தை இழப்பது. "நான் இன்னார்" என்பதிலுள்ள இன்னார் தொலைந்து, நாம் நாமாக இருப்பது. இதுவே கமலாலயத்தில் பிறப்பது, தில்லையைக் காண்பது மற்றும் அண்ணாமலையை நினைப்பது!! (பகவான் திரு ரமணரது 🌺🙏🏽 வாக்கு)

காசியில் இறந்த பின்னர் - அறியாமை இருள் விலகிய பின்னர் - நான் என்ற தன்மையுணர்வை அடைந்த பின்னர், நாம் துய்ப்பது எல்லையில்லா, முடிவில்லா பேரின்பத்தை!! இந்தப் பேரின்பத்தையே "#ராமநாமம்" என்றும், இந்தப் பேரின்பம் தன்மையுணர்வை அடைந்த அடுத்த கணம் வெளிப்படுவதால், "சிவபெருமான் ஓதினார்" என்றும் உருவகப் படுத்தியிருக்கிறார்கள்.

🌷 "இராமாயணத்தை எல்லோருக்கும் பிரித்துக் கொடுத்துவிட்டு மீதமிருந்த இரண்டு எழுத்துக்களை சிவபெருமான் எடுத்துக்கொண்டார்"

இதுவும் மேற்சொன்னது போலத்தான்!!

இங்கு இராமாயணம் குறிப்பது நமது பற்றுகளை - பற்றுகளால் நிறைந்த வாழ்க்கையை!! அனைத்தையும் விட்டால் தான் நிலைபேறு கிட்டும் - சிவமாக முடியும். சிவமானால் தான் ராமநாமம் உச்சரிக்க முடியும் - பேரின்பத்தை துய்க்கமுடியும். இந்த பேரின்பத்தை (ராமனை) சிவத்திலிருந்து (தன்மையுணர்விலிருந்து) பிரிக்கமுடியாது. எனவே தான், "மீதமிருந்த இரண்டு எழுத்துகளை சிவபெருமான் வைத்துக் கொண்டார்" என்று உருவகப்படுத்தி இருக்கிறார்கள்.

அனைத்து பற்றுகளையும் துறந்து, சிவநிலையை அடையும் போது தான் உணருவோம் "நாம் என்றுமே சிவம் தான்" என்று!! எனவே தான் சிவபெருமான் இராமாயண சுவடிகளையும், எழுத்துகளையும் பிரித்துக் கொடுத்தார் என்று உருவகப்படுத்தி இருக்கிறார்கள்.

"பற்றுகளை விடுவது", "அனைத்தையும் துறப்பது" என்பது பாடுபட்டு பல காலம் சேர்த்ததை எல்லோருக்கும் தூக்கிக் கொடுத்து, நாமே நமக்கு நாமம் போட்டுக்கொள்வதல்ல! இதோ, இதற்கும் உள்ளது பகவானது அருமையான விளக்கம்: ஆத்மாவோடு அநாத்மாவை சேர்க்காமல் இருப்பதே துறவு!! 👌🏽👏🏽🙏🏽

"நான் இன்னார்" என்பதிலுள்ள நான் என்பது ஆத்மா, இன்னார் என்பது அநாத்மா - உயிரற்றது - நமது விருப்பு, வெறுப்பு, நம்பிக்கை, குறிக்கோள், அடையாளம் என அனைத்தும். இவற்றைத் துறந்தாலே போதும்.

கருணாகர முனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

🌸🌼🌻🏵️💮

வட பாரதத்திலிருந்து வந்த சமண, பௌத்த மொட்டைகள் காலத்திலிருந்து இன்றைய பகல் கொள்ளை... 🤭 மன்னிக்கவும்... மக்களாட்சி & உலகமயமாக்கம் வரை நாம் பறி கொடுத்தது & பறி கொடுத்துக் கொண்டிருப்பது ஏராளம்!! சாங்கியம், சடங்கு, சம்பிரதாயம், கடமை, நியாயம், தானம், தர்மம், உறவுகள், தீர்த்த யாத்திரை, மெக்காலே கல்வி, சொந்தக் காசில் சூனியம் (இட ஒதுக்கீடு, 100 நாள் திட்டம்), வழிப்பறி (வரிகள், எரிபொருள், நெடுஞ்சாலை சுங்கம்) 🥵... இவையெல்லாம் போதாது என்று இருக்கும் கோவணத்தை தேவர்கள், முனிவர்கள், அசுரர்களுக்கு பிரித்து தர வேண்டுமாம்!!

👊🏽 அனைத்தையும் துறந்தவர்களே முனிவர்கள். அவர்களுக்கு மேலும் எதற்கு?
👊🏽 முப்பத்து முக்கோடி தேவர்களில் பெரும்பாலானவை நுண்ணுயிரிகள் மற்றும் உடலையும் உலகையும் இயக்கும் தத்துவங்கள். இவைகளுக்கு ஏன் காசு தேவைப்படுகிறது?
👊🏽 அசுரர்கள் தான் இன்று அரசியல்வியாதிகளாக ஆட்சியில் உள்ளனர். சங்க நிதி, பதும நிதி தோற்றுப்போகும் அளவிற்கு பணம் வைத்திருப்பவர்களுக்கு எதற்கு இந்த சில்லறை?

மேற்சொன்ன முடி இறக்குதல், காது குத்துதல், காதுல பூ சேவைகள் எல்லாம் நடக்கும் என்பதாலோ என்னவோ துறவுக்கு, அருமையான துல்லியமான விளக்கத்தை கொடுத்திருக்கிறார் பகவான்!!

(பாலைவன மதங்களிலும் இதே கோவணத்தை உருவும் கதைதான்!! நம் சமயத்தில் நம்மவர்களின் கோவணத்திற்கு மட்டும் குறி வைப்பார்கள். பாலைவன மதங்களில், அவர்களது கோவணத்தை கையில் வைத்துக் கொண்டு, மற்றவர்களின் கோவணத்திற்கு குறி வைப்பார்கள். ஊரான் கோவணத்தை உருவுவதற்கு அவர்களுடைய டுபாக்கூர் கையேடுகளில் இருந்து மேற்கொள் வேறு காட்டுவார்கள்!! 😁)

Friday, May 15, 2020

காசி அன்னை அன்னபூரணி 🌺🙏🏽 - சிறு விளக்கம்



முன் குறிப்புகள்:

1. சிவபெருமான் 🌺🙏🏽 தனது கபாலத்தைக் கொண்டு அன்னை அன்னபூரணியிடம் பிச்சை பெறுவது போன்ற படத்தைத் தான் தேடினேன். ஏதேச்சையாக, இணைப்பு படம் கிடைத்தது. சிவபெருமான் அமர்ந்திருப்பது போன்றும், கபாலத்திற்கு பதில் அவர் முன் இலையில் உணவு பரிமாறப்பட்டு இருப்பது போன்றும், அவருக்கு அன்னை அன்னபூரணி கொற்றவை கோலத்துடன் பரிமாறுவது போன்றும் காட்சிபடுத்தி இருக்கிறார்கள். ஆனால், பொருள் ஒன்று தான்.

2. அண்ணாமலை வெண்பா திரட்டின் 17வது பாடலுக்கு நான் எழுதிய விளக்கத்தை சற்று மாற்றியும், இன்னொரு விளக்கத்தை சேர்த்தும் இந்த இடுகையை உருவாக்கியிருக்கிறேன்.

🌸🌼🌻🏵️💮

இந்த இணைப்பு படத்தில் இல்லாவிட்டாலும், அன்னை அன்னபூரணியுடன் இணைந்து பெருமான் உள்ள படங்களில் கையில் திருவோடு வைத்திருப்பார். அத்திருவோடு பிரம்மகபாலம் எனப்படும். அது நான்முகனிடமிருந்து பறிக்கப்பட்ட ஒரு தலை (இது தனி கதை). அதில் எவ்வளவு போட்டாலும் நிறையாது! அதாவது, எவ்வளவு எண்ணங்களைப் போட்டாலும், எத்தனை பிறவிகளாகப் போட்டாலும் நிறையாது. எனில், வாழ்வு முடிவற்றது என்று பொருள்!!

அதை முடிவுக்கு கொண்டு வர - கபாலத்தை நிரப்ப - ஒரே வழிதான் உண்டு: புறமுகமாகச் சென்று கொண்டேயிருக்கும் கவன ஆற்றலை நம் மீது - தான் என்ற இருப்புணர்வின் மீது - திருப்புவது ஒன்றே வழி! இதைத்தான் #பகவான் திரு #ரமணர் 🌺🙏🏽 #தன்னாட்டம் (#ஆத்மவிசாரம்) என்றழைத்தார்!

இப்பேருண்மையை காசி மாநகரிலிருந்த பெரியோர்கள் உணர்ந்து உலகிற்கு வெளிப்படுத்திய விதம் தான் அன்னை அன்னபூரணி!! அன்னையின் கையிலுள்ள கரண்டியிலிருக்கும் உணவு சிவபரம்பொருளுக்கானது - "நீயே அது!" என்பது!!! "உன் மீதே கவனத்தை திருப்பு" என்பது!!! தன்னாட்டம் எனப்படுவது!!!

பல்லாயிரம் பிறவிகளாக தொடர்ந்து கொண்டிருக்கும் வாழ்வு என்னும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதால், அன்னையின் கரண்டியிலிருக்கும் உணவை (தன்னாட்ட எண்ணத்தை) "பூர்த்தி செய்யும் உணவு" என்றனர்! உணவு+பூர்த்தி - அன்னம்+பூரணம் - அன்னபூரணி!! 😍

🌸🌼🌻🏵️💮

இன்னொரு விளக்கம்.

சிவமென்பது உயிர். சக்தி என்பது உயிரற்றது. எண்ணம் முதற்கொண்டு காணும் அண்டம் வரை அனைத்தும் உயிரற்றவையே. எனில், உயிரற்றது எவ்வாறு உயிருக்கு உணவிடும்?

நாம் இன்னார் என்பது நமது கருத்து. இன்னாருக்குள் பாலினம், வயது, மெக்காலே படிப்பு, வேலை, சொத்து, பதவி, புகழ் என அனைத்து காற்றடைத்த பந்துகளும் அடங்கும். கொடுப்பினை இருந்து, தேடுதல் வேட்கைத் தோன்றி, பகவான் திரு ரமணர் போன்ற மாமுனிவர்களின் தொடர்பு ஏற்பட்டு (நேரடியாகவோ அல்லது அவர்களது அறிவுரைகளுடனோ), தவமாய் தவமிருந்து, இறுதியில் அவர்களது சொல், செயல், பார்வை என ஏதேனும் ஒன்று நமது அறியாமையை அழித்துவிடும். அந்த ஒன்று - உயிரற்ற ஒன்று - நமது மெய்யறிவை வெளிப்படுத்திய ஒன்று - அன்னை அன்னபூரணி எனப்படும்!!

இப்போது கேள்வி எழும்: மெய்யறிவை வெளிப்படுத்தியது அன்னை எனில், பெற்றுக் கொண்ட நாம் எப்படி சிவமாவோம்? பெறும் போது நாம் பொய்யறிவினர் தானே. பெற்று, மெய்யறிவு வெளிப்பட்ட பின்னர் தானே சிவமானோம்.

இதற்கு பதில் பகவான் அளித்திருக்கிறார்: நாம் எப்போதுமே ஆன்மாவாகத் (சிவமாக) தான் இருக்கிறோம்!! 

(இங்கே, பாம்பு போல தோன்றிய கயிறு, ஆற்றைக் கடந்த 10 பேர், தனது தோளிலேயே கிடந்த ஆட்டுக்குட்டியைத் தேடியவன் போன்ற கதைகளை நினைவு கூர்ந்தால் பகவான் சொல்வது விளங்கும்.)

மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தன பார்முதல் பூதம்
பரத்தில் மறைந்தன பார்முதல் பூதமே

-- திருமந்திரம் 8:21

கருணாகர முனி ரமணாரியன் அடிபோற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽